search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாசா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • இதில் கிடைக்கும் அனுபவம், இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    பெங்களூரு:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    மனித விண்வெளி விமான மையமும், அமெரிக்காவின் ஆக்சிம் விண்வெளி நிறுவனமும் விண்வெளி விமான ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. இந்தியா-அமெரிக்கா மிஷன் திட்டத்தன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல 4-வது திட்டத்திற்காக இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்திற்காக இந்தியாவின் தேசிய திட்ட நிர்ணய வாரியம், 2 விண்வெளி வீரர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. அதாவது விண்வெளி வீரர்கள் குழு கேப்டன் சுபான்சு சுக்லா (முதன்மை) மற்றும் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அவர்களுக்கான பயிற்சி இந்த வாரத்தில் தொடங்கும். இதில் கிடைக்கும் அனுபவம், இந்தியாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

    விண்வெளி வீரர்கள் சுபான்சு சுக்லா, பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் இந்தியாவின் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களாக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது.
    • நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் 'நோபில் கிரேட்டர்' என்ற பகுதியில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா? நிலவில் பனி அடுக்குகள் எங்கு இருக்கின்றன? அதில் என்ன மூலக்கூறுகள் இருக்கின்றன? எவ்வளவு அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

    இதற்காக, 433.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,625.18 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு 'வைபர் ரோவர்' என்ற திட்டத்தின் மூலம் ரோவர் ஒன்று நிலவுக்கு அனுப்பப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு நாசா முறைப்படி அறிவித்தது.

    நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை (நிலவில் ரோவர் தரையிறங்க உதவும் கருவி) உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முழுமையடையும் என்றும், கூடுதலாக 176 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 1,473.52 கோடி) தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ஆனால் காலதாமதம் மற்றும் அதிக பட்ஜெட் ஆகியவற்றை காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிடுவதாக நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறி உள்ளார்.

    இதுகுறித்து இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, 'நாசா, தன் வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, அமெரிக்க அரசால் இந்த ஆண்டு நாசாவிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 24.875 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் கோடி). ஆனால் இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 சதவீதம் குறைவு. இதனால் பல்வேறு முன்னோக்கு திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆய்வுக்கான வேகமும் குறையும் என்பது கவலை அளிக்கும் செயலாகும்' என்றார்.

    • ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
    • செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட 'பெர்சிவியரன்ஸ்' (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.

    இந்த நிலையில் அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான 'நெரெட்வா வாலிஸ்'-ன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும் போது அம்பு முனை வடிவ பாறையை பெர்சிவியரன்ஸ் கண்டெடுத்ததாக நாசா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

    அந்த பாறையை எக்ஸ்-ரே மற்றும் லேசர்களை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் அந்த பாறையில் வெள்ளை கால்சியம் சல்பேட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளை பிளவுகள் இருப்பது தெரியவந்ததாக நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

    • நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி கடந்த ஆண்டு அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட போது, இந்திய விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவித்தார்.

    இந்த நிலையில் 2 இந்திய விண்வெளி வீரர்களுக்கு அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அடுத்த மாதம் தொடங்குகிறது.

    பயிற்சி பெறும் வீரர்களில் ஒருவர் ஏற்கனவே ரஷியா மாஸ்கோவின் யூரி ககாரின் விண்வெளிப் பயிற்சி மையத்தில் அடிப் படைப் பயிற்சி பெற்றவர் ஆவார். டெக்சாசில் பயிற்சியை முடித்த பிறகு, இந்த இரண்டு விண்வெளி வீரர்களில் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் இந்திய-அமெரிக்க விண்வெளி பயணத்தில் சேருவார்.

    இந்த விண்வெளிப் பய ணம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது. அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனங்களான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் அக்சியோம் ஆகியவை இந்திய விண்வெளி வீரர்களுக்கு தேவையான நிபுணத்துவத்தை பெற உதவும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நாசா பயிற்சி மற்றும் இந்திய-அமெரிக்க மிஷன் ஆகியவை இந்தியாவின் ககன்யான் விண்வெளி திட்டத்திற்கான ஆயத்தப் படிகளாகும்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "விண்வெளிப் பயணத்திற்கான பொதுவான பயிற்சியை இந்திய வீரர்கள் பெற்றிருந்தாலும், இந்தியாவில் அவர்களது பயிற்சியின் பெரும்பகுதி ககன்யான் மாட்யூல்களில் கவனம் செலுத்தியது.

    எனினும் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலைய மாட்யூல்கள் மற்றும் நெறிமுறைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்" என்றார்.

    மேலும் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.சிவன் கூறும்போது, "இந்த திட்டம் இந்திய விண்வெளி வீரர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தை வெளிப்படுத்தும். இது ககன்யான் திட்டத்தை நோக்கிய ஒரு மிக முக்கியமான படியாகும்" என்றார்.

    • விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.
    • விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, கடந்த 2021-ம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.

    இந்த தொலைநோக்கி விண்வெளியில் இருந்து அரிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு உதவி இருக்கிறது.

    இந்த நிலையில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் முதல் படங்கள் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாசா புதிய படத்தை வெளியிட்டு உள்ளது. இரண்டு விண்மீன் திரள்கள் இணையும் படத்தை நாசா வெளியிட்டுள்ளது.

    பெங்குயின் மற்றும் எக் என அழைக்கப்படும் விண்மீன் திரள்கள் 326 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் ஹைட்ரா விண்மீன் தொகுப்பில் அமைந்து உள்ளன. இந்த விண்மீன் திரள்கள் இணைவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து உள்ளது.

    இதுகுறித்து நாசா விஞ்ஞானி ஜேன் ரிக்பி கூறும்போது,ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படத்தில் நாம் இரண்டு விண்மீன் திரள்களைக் காண்கிறோம், ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பாகும்.

    விண்மீன் திரள்கள் ஒன்றிணைக்கும் செயல்பாட்டில் உள்ளன. சிறிய விண்மீன் திரள்களில் இருந்து வளர இதுபோன்ற நிகழ்வு பொதுவானதாகும் என்றார்.

    நாசா தலைமையக வானியற்பியல் பிரிவு இயக்குனர் மார்க் கிளம்பின் கூறும்போது, இந்த பணி இதுவரை கவனிக்கப்படாத மிக தொலைதூர விண்மீன் திரள்களைத் திரும்பிப் பார்க்கவும், ஆரம்பகால பிரபஞ்சத்தை புதிய வழியில் புரிந்துகொள்ளவும் உதவும். இந்த ஆரம்பகால விண்மீன் திரள்கள் நாம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளோம் என்றார்.

    • நிலவு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது.
    • ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நிலவின் தென் துருவத்தில் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அங்கு மனிதர்கள் தரையிறங்கக்கூடிய இடங்களை கண்டறிந்துள்ளது.

    சந்திரனின் தென் துருவம் என்பது சூரியனில் இருந்து விலகி நிரந்தரமாக நிழலாக இருக்கும் ஒரு பகுதி. இங்கு மனிதர்கள் கால் பதிக்க வசதியான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    கடந்த 1969-ம் ஆண்டு நாசா தனது அப்போலோ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்தது. அதன்பின், தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவுசெய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தத் திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை நடத்த உள்ளது.

    இந்நிலையில், நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை ஒன்றில், நிலவின் நேரம் பூமியை விட வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. நிலவின் நேரம் ஒரு நாளைக்கு 57 மைக்ரோ விநாடிகள் வேகமாக ஓட தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

    ஆர்டெமிஸ் பயணத்திற்கு முன் சந்திரனின் நேரத்தை துல்லியமாகக் கணிக்க நாசா முடிவெடுத்துள்ளது.

    52 ஆண்டுகளுக்கு முன் விண்வெளி வீரர்கள் கடைசியாக சந்திரனில் கால் பதித்தனர். அப்போதிருந்த நேரத்துடன் ஒப்பிடும்போது நிலவின் நேரம் சுமார் 1.1 வினாடிகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    சாதாரணமாக பார்க்கும்போது இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. பூமி மற்றும் சந்திரனின் நேரம் சரியாக இருந்தால் தான் நேவிகேஷன் அமைப்புகள் போன்ற செயற்கைக்கோள்கள் துல்லியமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
    • நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

    விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து  தற்காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பை இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்றும் பீதியைக் கிளப்பியிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

     

    அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில்,அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036 இல் மீண்டும அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை

     

    பூமித்த தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் தயாராக இருக்க வேண்டும். நடக்க உள்ளதை எதிர்க்க நாம் மாற்று வழிகளை யோசித்தாக வேண்டும். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகிறது. ஆபத்துகளை கண்டறிய நாம்  இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும். விண் கற்களை குறித்த புரிதலை நாம் மேம்படுத்தியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
    • சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    நாசா:

    இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்த இவர், 1998-ம் ஆண்டு நாசா விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து 2006 மற்றம் 2012-ம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

    இதன்மூலம் அதிகநேரம், அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் கடந்த 5-ந்தேதி சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொண்டார்.

    அவருடன் புட்ச் வில்மோர் என்பவருடன் விண்வெளி பயணம் மேற்கொண்டிருந்தார். இருவரும் அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் கடந்த 7-ந்தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். இதன்மூலம் மூன்றாவது முறையாக விண்வெளி நிலையத்தை சுனிதா வில்லியம்ஸ் அடைந்தார்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு கடந்த 13-ந்தேதி பூமிக்கு திரும்பும் வகையில் பயண திட்டம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் திரும்ப இருந்த பயணம் திடீரென 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு அந்த தேதியிலும் அவர்கள் புறப்படவில்லை. அவர்கள் இருந்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அவர்கள் திரும்பி வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஸ்பேஸ் ஷிப்பை தயாரித்திருக்கிறது.

    'ஸ்டார் லைனர்' என்றுபெயரிடப்பட்ட இந்த ஸ்பேஸ் ஷிப் சர்வதேச விண்வெளி மையத்திற்கு விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு வரை இந்த பணிகளை நாசா தான் மேற்கொண்டு வந்தது. ஆனால் விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் விதமாக போயிங் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

    போயிங் நிறுவனம் ஏற்கனவே எலான் மஸ்க்கின்ஸ் ஸ்பேஸ் ஷிப்களை வடிவமைத்திருக்கிறது. எனவே போயிங் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 'ஸ்டார் லைனர்' என்கிற ஸ்பேஸ ஷிப்பை வடிவமைத்தது. அதிலேயே சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளிக்கு பயணித்தனர்.

    இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. போயிங் 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது. 5 முறை கசிவு ஏற்பட்டதன் காரணமாக விண்கலத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் திரும்பி வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விண்கலத்தில் உள்ள 28 த்ரஸ்டர்களில் பழுதடைந்த 14 த்ரஸ்டர்களை மீட்டெக்க வேண்டும். 'ஸ்டார் லைனர்' விண்கலத்தில் 45 நாட்கள் வரை தங்கியிருக்க முடியும், அதே நேரத்தில் பல்வேறு காப்பு பிரதி அமைப்புகளால் 75 நாட்கள் வரை இணைக்கப்பட்டிருக்கும்.

    இந்த விவகாரத்தில் சிக்கலை சரிசெய்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு விண்கலம் திருப்பி அனுப்பப்படும் என்று நாசா நம்புகிறது. 'ஸ்டார் லைனர்' விண்கலம் மூலம் பத்திரமா திரும்ப முடியாவிட்டால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் காப்பாற்ற 'எலான் மஸ்க்' கேட்கப்படலாம் என்று தெரிகிறது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பும் திட்டம் நேற்று இரவு இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அதுவும் கைவிடப்பட்டது. அது ஜூலை 2-ந்தேதிக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    • இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.
    • இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும்.

    பூமிக்கு அதிக ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று என்று அஞ்சப்படும் விண்கல் ஒன்று  பூமியைத் தாக்க 72% சதவீத வாய்ப்புகள் இருபதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விண்கல் பூமியில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பை தடுக்க இன்னும் நாம் தயாராகாவில்லை என்று நாசா எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     

    கடந்த ஏப்ரல் மாதம் நாசாவால் ஒருங்கிணைக்கப்பட்டு, மாரிலாந்தில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட, கிரகங்களின் பாதுகாப்பு தொடர்பான சோதனையில், பூமிக்கு விண்வெளியிலிருந்து ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பான அறிக்கையை கடந்த ஜூன் 20 ஆம் தேதி நாசா வெளியிட்டுள்ளது.

     

     

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 'உலகுக்கு வருங்காலங்களில் விண்கற்களால் அதிக ஆபத்து இருந்து வரும் நிலையில் அதிலிருந்து தற்காத்துக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பதற்கு இந்த ஆராய்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விண்கலின் எடை, அளவு மற்றும் தன்மைகள் குறித்து ஆய்வில் தெரிந்துகொள்ள முடியவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இந்த ஆய்வானது நாசாவின் DART (Double Asteroid Redirection Test) எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட முதல் ஆய்வாகும். விண்கற்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பூமியைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமே DART. இதற்கிடையில், விண்கற்களை தொலைவில் இருந்து பார்க்க NEO Surveyor (Near-Earth Object Surveyor). எனப்படும் இன்பிராரெட் தொலைநோக்கியை நாசா உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஜூன் 6 அன்று சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார்.
    • சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார்.

    போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஜூன் 5 அன்று புறப்பட்டுச் சென்றது.

    25 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 6 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.

    இந்த சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார். மீன் குழம்புடன், ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

    இந்நிலையில், அந்த சர்வேதேச விண்வெளி நிலையத்தில் சூப்பர்பக்' என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா விண்வெளி வீரர்களது சுவாச மண்டலத்தை பாதித்து உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

    இவை வேற்று கிரக பாக்டீரியாக்கள் அல்ல. பூமியில் உள்ள பாக்டீரியாதான். ஆனால் பூமியிலிருந்து பயணித்த இந்த பாக்டீரியாக் விண்வெளியில் மூடிய சூழலில் மிகவும் ஆபத்தானவை என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    • நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 6 அன்று விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
    • ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்யவுள்ளனர்.

    போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஜூன் 5 அன்று புறப்பட்டுச் சென்றது.

    25 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 6 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.

    இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.

    மீன் குழம்புடன், ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றுள்ளார். இவர் கடந்தமுறை பகவத் கீதையின் பிரதியையும் சமோசாவை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.
    • இந்தியாவை பூர்வீகமாகள் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி நேற்று முன் தினம் (ஜூன் 5) புறப்பட்டுச் சென்றது.

    25 மணி நேர பயணத்திற்குப் பிறகு நேற்று (ஜூன் 6) (நாளை) அவர்கள் விண்வெளி நிலயத்தை சென்றடைந்தனர்.சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூலை 14-ந்தேதி பூமிக்கு திரும்புகிறார்கள்.

    இந்நிலையில் விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் அந்தரத்தில் மிதந்தபடி நடமாடும் வீடியோவை  போயிங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் தனது சாகாக்களுடன் சுனிதா குதூகலமாக காற்றில் தவழ்ந்தபடி நடனமாடுவது பதிவாகியுள்ளது.

    இந்தியாவை பூர்வீகமாகள் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் இதற்கு முன்னதாக இரண்டு முறை விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரின் 3 வது பயணம் ஆகும்.

    முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு விண்வெளி வீரர்கள் இல்லாமல் ஸ்டார்லைனர் சோதனைக்கு உட்படுத்தபட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    2022-ல் சோதனை வெற்றி பெற்ற நிழையில் பாராசூட் உள்ளிட்ட சில பிரச்சனைகள் உருவாகின. இந்த நிலையில்தான் இரண்டு முறை முயற்சி தோல்வியடைந்த நிலையில் 3-வது முயற்சியில் வெற்றிகரமாக பறந்துள்ளது. 

    ×