என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 128738"
- போலீசார் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டேனியல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பன்னீர்செல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.
இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.
மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் நாகூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் வாஞ்சூர் மற்றும் நாகூர் பகுதிகளில் உள்ள 7 கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் இரண்டு கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தனர்.
அதனை கைப்பற்றி அந்த இரண்டு கடைகளுக்கும் சீல் வைத்தனர். மேலும் ஒரு கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்ததற்காக ரூ.5000 அபராதம் விதித்தனர்.
இது போன்ற தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் எச்சரிக்கை விடுத்தார்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விதி மீறிய 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. தொழிலுக்கு செல்லும் படகுகள் தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலாக்கம் தொடர்பாக மீன்வளத்துறையினர் நடுக்கடலில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் கடந்த ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தற்போது வரை டோக்கன் பெறாமலும் 109 விசைப்படகுகள், அனுமதியின்றி தொழிலுக்கு சென்ற 7 விசைப்படகுகள், 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் மீன்பிடித்த 21 விசைப்படகுகள் பிடிபட்டன.
இந்த படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்குக் சென்று விதிகளை மீறிய மேலும் 6 படகுகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மீன்பிடி விதிகளை மீறும் படகுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுக்கடலில் சோதனையின்போது விதிகளை மீறியதாக முதல் முறை பிடிபடும் படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், அடிக்கடி பிடிபடும் படகுகளுக்கு ரூ.15 ஆயிரம் என தொடங்கி அந்த படகில் கொண்டு வரப்படும் மீன்களின் எடைக்கேற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் படகுகளுக்கு விசாரணை முடியும் வரை மானிய டீசல், மீன்பிடி டோக்கன் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
- 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோத்தகிரி போக்குவரத்து ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியவர்கள், லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தவர்கள்,உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என 54 பேர் மீது போக்குவரத்து விதிகளை மீறுதலின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்களிடமிருந்து அபராதமாக ரூ.57,500 வசூலிக்கப்பட்டது.
- கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோக்கள், விதிமுறைகளை மீறிய கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்பட்டதில் சுமார் ரூபாய் 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
- ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு உரிய அபராதத்தை செலுத்த அறிவுறுத்திய பிறகு ஆட்டோ டிரைவர்கள் அபராதம் செலுத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக ஆட்டோக்கள் செயல்படுகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டினார்கள். இதையடுத்து கலெக்டர் ஆர்த்தி அறிவுரையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் ஆட்டோக்களின் உரிமம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் 60-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உரிமம் தகுதி சான்று, இன்சூரன்ஸ் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது. அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டன.
பின்னர் ஆட்டோ டிரைவர்கள் வரவழைக்கப்பட்டு அதற்கு உரிய அபராதத்தை செலுத்த அறிவுறுத்திய பிறகு ஆட்டோ டிரைவர்கள் அபராதம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து இன்று மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், அபராதம் செலுத்திய ஆட்டோ டிரைவர்களுக்கு அரசு விதிகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், மறுமுறை வாகனம் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நெரிசலான பகுதி என்பதால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும், பயணிகளிடம் கனிவாக நடந்து கொண்டு மாவட்டத்திற்கு நற்பெயரை கொண்டு வர வேண்டும் என அறிவுரை வழங்கி 24 ஆட்டோ டிரைவர்களின் ஆட்டோக்களை அவர்களிடம் ஒப்படைத்தார். கடந்த ஒரு வாரத்தில் ஆட்டோக்கள், விதிமுறைகளை மீறிய கனரக வாகனங்கள் என அனைத்தையும் ஆய்வு செய்து அதற்கு அபராதம் விதிக்கப்பட்டதில் சுமார் ரூபாய் 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.
- பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது
- மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
தக்கலையில் அமைந் துள்ள காமராஜ் பேருந்து நிலையத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் வந்து செல்கிறது. இந்த பேருந்து நிலையத்தினுள் ஒரு பகுதி பத்மனாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டு சிறுவணிக வளாகம் போல செயல்படுகிறது.இதனால் பயணிகளும், பொதுமக்களும் அதிகமாக வந்து போகின்றனர். மேலும் பயணிகளுக்காக நிழலகமும், ஓய்வறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை பயணிகள் பயன்படுத்தாத வாறு தனியார் வாகனங்கள் அத்துமீறி பேருந்து நிலையத்தினுள் நீண்ட நேரமாக நிறுத்தி செல்கின்றனர். இது போக சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் பேருந்து நிலையத்தில் நிறுத்தி விட்டு உணவருந்த செல்கிறார்கள். பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் தனியார் வாகனங்களால் அங்கு போக்குவரத்து நெரிசலும், சிலநேரங்களில் விபத்துகளும் நேரிடுகிறது.
இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் தக்கலை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போக்குவரத்து போலீசார் கடந்த சில நாட்களாக பேருந்து நிலையத்தினுள் அத்துமீறி நுழைந்த தனியார் வாகனங்கள் அனைத்திற்கும் அபராதம் விதித்தனர்.
அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளிடம் தனியார் வாகன பார்க்கிங்கால் ஏற்படும் மோசமான விளைவு களையும் எடுத்துக் கூறி மீண்டும் இவ்வாறு அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை ஏற்படும் என எச்சரித்தனர்.தக்கலை போக்குவரத்து போலீ ஸாரின் இந்நடவடிக்கை பயணிகள், மத்தியில் வரவேற்பை பெற்றது.
- பண்ருட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படிநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் பண்ருட்டி நகராட்சி பகுதிகளில் ஒரு முறையே பயன்படுத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை வணிக வளாகங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 150 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.
அதோடு கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின் போது துப்புரவு அலுவலர் முருகேசன், துப்புரவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் துப்புரவு மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், தூய்மை இந்தியா திட்டம் மேற்பார் வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும் நகராட்சி பகுதியில் தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொள் ளப்படும் என்று ஆணை யாளர் மகேஸ்வரி அறிவித்தார்.
- மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- கடை உரிமையாளர்களிடம் இருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றிய சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் கூடுதலாக 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களும் தடை செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 28 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
மெரினா கடற்கரையில் 14.09.2022 முதல் 21.09.2022 வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 272 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 14 கடை உரிமையாளர்களிடம் இருந்து 11 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.2,600 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெரினா கடற்கரைப் பகுதியில் குப்பைத் தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 245 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 30 கடை உரிமையாளர்களிடம் இருந்து 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குப்பைத்தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளை கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.3,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 14.09.2022 முதல் 20.09.2022 வரை ஒரு வாரத்தில் மாநகராட்சி சுகாதார அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 7,479 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் நடத்திய சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 2,601 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடை உரிமையாளர்களிடம் இருந்து 1,975 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 72 வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட் பெற்று இயங்குகிறதா? என்றும் விதிமுறைக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்றும் அவ்வப்போது வட்டார போக்குவரத்து மோட்டார்வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில் கடந்த மாதத்தில் விதிமுறையை மீறி அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கும், 72 ஆட்டோக்களுக்கும், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும், அரசு விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிக ஒலி எழுப்பிய 82 வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட 6 சாலை விதிகளை மீறிய 266 பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரையில் ரூ.5.45 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
- வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.66 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர்.
மதுரை
மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மண்டலத்தில் மின் திருட்டு நடப்பதாக புகார் வந்தது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மின்வாரிய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடங்களில் சோதனை நடத்தினர்.
விருதுநகர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட காரியாபட்டி, விருதுநகர், வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, மல்லாங்கிணறு, ஓ.மேட்டுப்பட்டி, கன்னிசேர்வைபட்டி ஆகிய பகுதிகளில், 8 இடங்களில் மின் திருட்டு கண்டறியப்பட்டது.
மின் வாரியத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டும் வகையில், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் ரூ.4 லட்சத்து 79 ஆயிரத்து 764 அபராதம் வசூலிக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ரூ.66 ஆயிரத்தை அபராதமாக செலுத்தினர். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மதுரை மண்டலத்தில் மின் திருட்டில் ஈடுபட்ட வாடிக்கையாளர்களிடம் ஒட்டுமொத்தமாக ரூ.5 லட்சத்து 45 ஆயிரத்து 764 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மதுரை மண்டலத்தில் மின் திருட்டு தொடர்பாக தகவல் தெரிந்தால், மண்டல செயலாக்க பிரிவு பொறியாளர் செல்போன்: 94430-37508 நம்பரில் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
- எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற விளம்பரங்கள் மீண்டும் உருவாகமல் இருக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
கடலூர் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலையோரங்கள், நடைபாதைகள், சாலையின் மையப் பகுதிகள் பொது இடங்கள் மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மீதுள்ள அனுமதியில்லாமல் உள்ள விளம்பர பலகைகள், டிஜிட்டல் விளம்பர தட்டிகள் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதியில்லாமல் விளம்பர பலகைகள் அமைக்கப்படுவதால் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் வாகன ஓட்டுநர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படவும், இதனால் உயிர்ச்சேதங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, முறைகேடான வகையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற அனுமதியற்ற விளம்பரங்கள் மீண்டும் உருவாகமல் இருக்க வேண்டும். விளம்பர பலகைகள் அமைப்பதற்கான விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் சட்டப்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
- திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஆய்வு செய்ததில் 5 பேர்களிடம் இருந்து தலா 100 முதல் 500 ரூபாய் வசூலிக்க பட்டது.
- சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் , சுப்பிரமணியன், கோட்டையன் , பிரகாஷ், அருண்குமார், தினகரன் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் கடைவீதிகளில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி சுகாதார துணை இயக்குனர் ஆணைப்படி திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம் இருவேல்பட்டு அரசு மருத்துவமனை மூலம் நேற்று பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் நபர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் உள்ளனவா என்பது குறித்து மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் மருத்துவர் சுனிதா, திருவெண்ணெய்நல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
மேலும் திருவெண்ணெ ய்நல்லூர் பகுதியில் ஆய்வு செய்ததில் 5 பேர்களிடம் இருந்து தலா 100 முதல் 500 ரூபாய் வசூலிக்க பட்டது. இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் , சுப்பிரமணியன், கோட்டையன் , பிரகாஷ், அருண்குமார், தினகரன் கலந்து கொண்டனர். இதேபோல் மடப்பட்டு கடை வீதிகளில் திருநாவலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், குமார், கோபி ஆகியோர் பொது இடங்களிலும், கடைகளில் புகையிலை விற்றல், புகைப்பிடித்த நபர்களிடம் இருந்து 1500 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்