search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை சமையல் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பாக ராஜா முத்து திருத்தங்கள் பகுதியில் உள்ள உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி களை சமையலுக்கு பயன்படுத்த வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது 46 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சில ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 ஓட்டல்க ளுக்கு தலா ரூ.2000 அபரா தமும்,5 ஓட்டல்களுக்கு ரூ.5000 ஆயிரம் என மொத்தம் ரூ.39 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து கூறும் போது, ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
    • கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார்.

    பீஜிங் :

    சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே இந்த தவறுக்கு மன்னிப்பு கோரிய லீ ஹாவ்ஷி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்த போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ததாக சியாகுவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் `இது காமெடியை மேலும் ஒடுக்க வழிவகுக்கும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார்.
    • பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் கடந்த ஒரு வாரமாகவே வெயிலின் உக்ரம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் , பெரியகோவில் பகுதியில் கடும் வெயிலின் தாக்கத்தை உணர்த்தும் விதமாக வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் முன் பக்கம் வாளியில் தண்ணீர் வைத்து, குளித்துக் கொண்டே ஓட்டினார். இதை மற்றொரு வாலிபர் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்தார்.

    இந்த வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இந்நிலையில், ஆபத்தை விளைவிக்கும் விதமாக வாகனத்தை ஓட்டியதாக, இருவர் குறித்து மேற்கு தஞ்சை போலீஸ் நிலையத்தினர், போக்குவரத்து ஒழுங்கு பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    இதில், வாகனத்தை ஓட்டியவர் தஞ்சை கீழவாசல் குறிச்சி வடக்கு தெருவைச் சேர்ந்த அருணாசலம் (வயது 23), இதை வீடியோ எடுத்தவர் குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்த பிரசன்னா (24) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து, அருணாசலம், பிரசன்னாவுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இருவரையும் இதுபோன்று பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். 

    • ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.
    • அரசு வாகனங்களில் 'அ', 'ஜி' என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு துறையினருக்கும் அறிவுறுத்தி வருகிறோம்.

    சென்னை:

    போக்குவரத்து விதி மீறல்கள், வாகன நெரிசல், விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் குறைக்க சென்னை போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகன பந்தயத்தில் ஈடுபடுவது, அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான மோட்டார் வாகன சட்ட விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் விதி மீறலுக்கு ஏற்ப, அபராதம் விதிக்கப்படுகிறது.

    நேரடியாக களத்தில் நின்றும், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையிலும், ஏ.என். ஆர்.பி. வகை கேமராக்கள் மூலமாகவும் விதிமீறல் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர்.

    இதுதவிர, நிலுவை அபராதமும் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் கடந்த 4 மாதங்களில் ரூ.5.84 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதே கால கட்டத்தில், போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து சுமார் ரூ.12 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, விதிகளை மீறும் அரசு வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, விதிமீறும் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து அரசு வாகனங்களுக்கும் தற்போது போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கின்றனர். ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது.

    அரசு வாகன பதிவெண் பலகையில் (நம்பர் பிளேட் அரசு வாகனம் என்று குறிக்கும் வகையில் 'அ' என தமிழிலும், 'ஜி' என ஆங்கிலத்திலும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும். இது விதிமீறல் என சுட்டிக்காட்டி பொதுமக்கள் பலர் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் புகைப்படத்துடன் புகார் தெரிவித்தனர்.

    இவ்வாறு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதை ஆதாரமாக வைத்து சம்பந்தப்பட்ட வாகனத்தை பயன்படுத்தும் அரசு அதிகாரிகளுக்கு தற்போது ரூ.500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சென்னை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொதுமக்கள், அரசு பணியாளர்கள், அதிகாரிகள், தனியார் வாகனம், அரசு வாகனம் என்ற பாகுபாடின்றி, விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

    'அ' 'ஜி' பயன்படுத்த கூடாது

    அரசு வாகனங்களில் 'அ', 'ஜி' என்று குறிப்பிடுவதை தவிர்க்குமாறு அனைத்து அரசு துறையினருக்கும் அறிவுறுத்தி வருகிறோம். சில அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனத்திலும் இதுபோல எழுதியுள்ளனர். அதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தி உள்ளோம்.

    விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது உறுதி. எந்த வகையான வாகனங்கள் விதிமீறலில் ஈடுபட்டாலும், அதுதொடர்பாக போக்குவரத்து போலீசாரின் சமூக வலைதள பக்கத்தில் பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அதன் அடிப்படையில், உரிய மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

    இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி மெதுவாக பந்துவீசியதாக அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகி றார்கள்.
    • வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை களை வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் மேற்கொண்டு வருகி றார்கள். இதையொட்டி அவர்கள் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    அதன்படி, சேலம் சரகத்திற்கு உட்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முறையான பர்மிட்டுடன் இயக்கப்படுகிறதா? என்றும், விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அபராதம்

    அந்த வகையில் கடந்த மாதத்தில் அந்தந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றி சென்ற வாகனங்க ளுக்கும், விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றி சென்ற வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது, விதிமுறைகளை மீறி இயக்கிய 1,557 வாகனங்களிடம் இருந்து ரூ.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 56 லாரிகள், 20 ஆட்டோக்கள் உள்பட 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்ப ட்டுள்ளதாக போக்கு வரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லைசென்ஸ் ரத்து

    இதுதவிர, கடந்த மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 31 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் தற்காலி கமாக ரத்து செய்யப்ப ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது.
    • துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை விடுமுறை காரணமாக ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனை தொடர்ந்து உணவகங்களில் வழங்கப்படும் உணவு பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்களின் அடிப்படையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு செய்து உணவு தரத்தினை உறுதி செய்யுமாறு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறைக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார்.

    இதன் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகுமார் மற்றும் சிவராஜ் ஆகியோர் அடங்கிய குழு ஊட்டி கமர்சியல் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண் டனர்.

    இந்த ஆய்வில் சுகாதாரமற்ற மற்றும் கெட்டுப்போன சிக்கன் சுமார் 15 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த 6 உணவகங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் என மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. உணவுப் பாதுகாப்புத்துறையின் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கூறிய உணவகங்கள் தங்கள் சமையலறை உள்ளிட்ட இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியினை தொடர்ந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகங்களில் அனைத்தும் தூய்மையான குடிநீர் மற்றும் நல்ல தரத்துடன் கூடிய உணவு பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அனைத்து உணவகங்களும் தங்களது உணவுப் பொருட்கள் தயாரிக்கும் இடத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். துருப்பிடிக்காத பாத்திரங்களை மட்டுமே சமையலுக்காக பயன்படுத்த வேண்டும். மேலும், சமையலுக்காக பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெயை ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார்.

    உணவு பொருட்களை பரிமாறுவதற்கு செய்தி தாள்களை பயன்படுத்து வதை தவிர்க்குமாறும், இறைச்சி கடைகளில் பொட்டலமிட நெகிழி பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தினார். மேலும் தவறு செய்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு தரங்கள் நிர்ணய சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.
    • கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த 53-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

    பின்னர் 180 ரன் இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 11-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணி 5-வது வெற்றியை ருசித்து அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிப்பதுடன் முந்தைய லீக்கில் பஞ்சாப்பிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. பஞ்சாப் அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.

    இந்த நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீச வழங்கப்பட்ட நேரத்தைவிட, கூடுதலாக நேரம் எடுத்துக் கொண்டதால் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    • கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்
    • எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிம வளங்கள் அனுமதியின்றி கொண்டு செல்லப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் சில வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசாரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் அவ்வப்போது சில வாகனங்கள் சிக்கி உள்ளன. அவற்றுக்கு அபராதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக எம்சாண்ட், ஜல்லி பாரம் ஏற்றிக்கொண்டு 3 டிப்பர் லாரிகள் வந்தன. அந்த லாரிகளை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து 3 டிப்பர் லாரிகளுக்கும் ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

    • சந்தன மரத்தை கடத்தியதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
    • வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள கூடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் புதிய கட்டுமானம் கட்டுவதற்கு அங்கிருந்த பல இன மரங்களை வெட்டும்பொழுது, அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்தி விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றது நியூ ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த திருமலைசாமி (53), குணசீலன் (40), சுதாகர் (33), சரவணன்(33), ரமேஷ்(28), கோவிந்தசாமி(43), இளவர சன்(33) ஆகிய 7 பேரையும் பிடித்தனர்.

    மேலும் சந்தன மரத்தை வெட்டி கடத்திச் சென்ற அவர்கள் மீது கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் வெட்டி கடத்திய மற்ற 5 நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
    • அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோரின் வசதி மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய மாற்றங்களை விரைவில் கொண்டு வர உள்ளது. அதன்படி நுகர்வோர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 7 நாட்களில் புதிய மின் இணைப்பு வழங்கவும், வழங்க தாமதமானால் நுகர்வோர் அபராதம் கோரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது ஒருவர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த காலக்கடுவை 7 நாட்களாக குறைக்க தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

    இந்த புதிய திருத்தங்களின்படி 48 மணி நேரத்திற்குள் தற்காலிக மின் விநியோகத்தை செயல்படுத்த வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் குறைபாடு உள்ள மீட்டர்களை மீண்டும் பொருத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து ஏழு நாட்களை தாண்டினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ரூ.1000 வரை அபராதம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருத்தம் கொண்டு வரவுள்ளது.

    மேலும் கிரிட் இன்டராக்ட் சோலார் (ஜி.ஐ.எஸ்.எஸ்.) நிறுவ தாமதத்திற்கு ரூ.71 ஆயிரம் மற்றும் குறைகளை கையாள்வதில் தோல்வி அடைந்தால் ரூ.250, நுகர்வோரின் புகார்களுக்கு பதில் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.25 முதல் அதிகபட்சம் ரூ.250 வரையிலும் நுகர்வோர் அபராதம் கோரலாம்.

    மேலும் பழுதடைந்த மீட்டர்களை ஏழு நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு அபராதம் விதிக்க ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கடமையாக இருப்பதால் ஆறு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் மின் தடைக்கும் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த நேரிடும் என புதிய திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

    ×