search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    • 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே 50 பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டியிலிருந்து தமிழகப் பகுதிக்கு ஒரு பஸ் வந்தது. இதனை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி தனியார் பஸ் வந்தது தெரிந்தது. இதையடுத்து திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் பஸ்சை நிறுத்தி அபராதம் விகித்தார். மேலும், அதில் வந்த பயணிகள் வேறு பஸ் மூலமாக அனுப்பி வைத்தனர்.

    • கார் ஓட்டி வந்தவர்கள், மாமல்லபுரத்தில் கார் பந்தயம் தொடர்பான நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சில சாலைகளை சுற்றி வந்ததாகவும், தெரிவித்தனர்.
    • அதிநவீன சொகுசு கார்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து கார்களை அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் நேப்பியர் பாலம் வழியாக அதிவேகத்தில் 8 சொகுசு கார்கள் வரிசையாக செல்வதாக, போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு இன்று காலை தகவல் சென்றது.

    இந்த கார்கள் மும்பை, பாண்டிச்சேரி, தமிழ்நாடு பதிவுகள் கொண்டவை என்றும் தெரிய வந்தது. இந்த கார்களை போக்கு வரத்து போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது கார்கள் நிற்காமல் சென்றது.

    மீண்டும் நேப்பியர் பாலம் அருகே அந்த கார்கள் திரும்பி வந்தபோது அதை போக்கு வரத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இந்த கார்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை. இதனால் கார்களை ஓட்டியவர்கள் குடிபோதையில் உள்ளனரா? என்று பரிசோதனை செய்தனர்.

    ஆனால் அவர்கள் மது அருந்தவில்லை. கார் ஓட்டி வந்தவர்கள், மாமல்லபுரத்தில் கார் பந்தயம் தொடர்பான நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னைக்கு வந்து சில சாலைகளை சுற்றி வந்ததாகவும், தெரிவித்தனர்.

    இருந்தபோதிலும்.அதிவேகத்துடன் கார்களை இயக்கியது, உரிய விதிப்படி நம்பர் பிளேட் பொருத்தாதது, அதிக சத்தம் கொண்ட ஒலியை பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பல்வேறு சட்டப்பிரிவுகளின படி அதிநவீன சொகுசு கார்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து கார்களை அனுப்பி வைத்தனர்.

    • ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார்
    • வழக்கு செலவு தொகை சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டம் குளவிளை யைச் ேசர்ந்தவர் நெல்சன். இவர், தனது மனைவியுடன் சேர்ந்து குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றார்.

    அப்போது ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை யும், இன்சூரன்சு பாலிசி யையும் வழங்காமல் வங்கி இழுத்தடித்து வந்து உள்ளது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான நெல்சன், நுகர்வோர் வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி நஷ்ட ஈடாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    மேலும் வழக்கு செலவு தொகை ரூ.ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட இன்சூரன்சு பாலிசியை வழங்க வேண்டும் அல்லது அதற்காக செலுத்தப்பட்ட ரூ. 34 ஆயிரத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    • மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி நெகிழி இல்லா பகுதி என அறிவித்தார்.

    அதோடு மாணவ -மாணவிகளுக்கு சாக்குகள் வழங்கி அதில் பெரிய கோவில் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தால் அதனை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை , துணிபைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் போது துணி பைகளை கொண்டு செல்ல வேண்டும் என்று மாணவ- மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    புகழ் வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிக்கப்பட்டது. தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டது.

    அதுபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் உரிய அனுமதி பெற்று மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு ரூ.25000, துணிக்கடை போன்ற கடைகளுக்கு ரூ.10000 , சிறிய கடைகளுக்கு ரூ.1000 அபராதம் முதல் தவணையாக விதிக்கப்படும்.

    மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் . பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
    • குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காங்கயம் :

    காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனா்.

    அதன்படி, காங்கயம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடத்திய வாகனச் சோதனையில் குடிபோதை, தலைக் கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக 625 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக காங்கயம் போக்குவரத்து காவல் ஆய்வளாா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

    • நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி ஏறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் பினாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

    சென்னை ஐகோர்ட்டு மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பைனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ. 25 ஆயிரமும், துணிக்கடை களில் பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 மும், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
    • சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரியில் பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் தூரத்துக்குள் கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் திட்டச்சேரி மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கிலோ கணக்கில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆய்வின்போது நலக்கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர்கள் மணிமாறன், ஆனந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார், நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
    • தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே வரஞ்சரம் ஊராட்சி மன்ற தலைவராக சுஜாதா சுகுமார் உள்ளார். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள மளிகை கடை, டீக்கடை, உணவகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 4 கடைகளில் பயன்படுத்தியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அவர் கடைகளுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார்.

    அதன்படி கடைகாரர்களிடமிருந்து ரூ.800 வசூல் செய்ய ப்பட்டது. தொடர்ந்து கிராமப் பகுதிகளில் எளிதில் கிடைக்கும் வாழை இலைகளை டீக்கடை மற்றும் உணவகங்களில் பயன்படுத்த வேண்டும் எனவும், மளிகை கடைக்கு வரும் பொதுமக்களிடம் மஞ்சப்பை எடுத்துவர சொல்ல வேண்டும் எனவும் கடை உரிமையாள ர்களிடம் அறிவுறுத்தினார்   மேலும் வரும் காலங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இவ்வாறு கடைகளை ஆய்வு செய்து அதிரடியாக அபராதம் விதித்த பெண் ஊராட்சி மன்ற தலைவரை பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர். அப்போது ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில், ஊராட்சி செயலாளர் ரமேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • தமிழில் பெயர் பலகை இல்லாத நிறுவனங்களுக்கு அபராதம்-வணிக நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யபட்டுள்ளது
    • ஆலோசனை கூட்டம் உதவி ஆணையர் ராமராஜ் தலைமையில் நடைபெற்றது

    கரூர்:

    கரூர், வெண்ணை மலையில் உள்ள தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில், தமிழில் பெயர் பலகை அமைப்பது தொடர்பாக, வணிக நிறுவன உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், உதவி ஆணையர் ராமராஜ் தலைமை வகித்து பேசிய தாவது: கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறு வனங்கள், இதர நிறுவனங் களின் பெயர் பலகைகள் தமிழில், மற்ற மொழிகளை காட்டிலும் பெரிய எழுத்து களில் இருக்க வேண்டும்.

    ஆய்வின்போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் மீது சட்ட விதிகளின் கீழ் அபராதம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும். அவர் இவ்வாறு பேசினார்.தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜோதி, கரூர் முதல் மற்றும் 2ம் சரக தொழிலாளர் உதவி ஆய்வாளர் (பொறுப்பு) சரவணன், குமரக்கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிப்பு.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர்

    சிவக்குமார் உத்தரவின் படி சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், வாகனத்துக்கு உரிய காப்பீடு இல்லாதவர்கள் அதிவேகமாக செல்பவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாதவர்கள் என கண்டறிந்து.

    அந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சீர்காழி நகர்பகுதியில் 30 வாகனங்களுக்கு தலைக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000, லைசென்ஸ் இல்லாதவர்கள், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஒட்டுவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவர்கள் என ரூ.30ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
    • 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள்.

    சென்னை :

    சென்னை போக்குவரத்து போலீசார் போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் போன்ற விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டும் விதிமீறல் குற்றத்துக்காகவும் ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதற்காக போலீசார் நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள். இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிறுவனங்கள் வாரியாக உள்ள புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைக்க வேண்டும்.
    • பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2013 குறித்து அரசு நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தனியார் நிறுவன ங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பயிற்சி நிலைய ங்கள், கல்வி நிறுவனங்கள், பொழுதுபோக்கு இடங்கள், தொழி ற்சாலைகள், நிதி நிறுவனங்கள், விற்பனை கூடங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு பயிற்சி நிறுவனங்கள், விளையாட்டு அரங்கங்கள் ஆகிய நிறுவனங்களில் 10-க்கும் மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் பணிபுரியும் இடங்களில், மகளிர்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கவும், புகார் தெரிவிக்கவும் நிறுவனங்கள் வாரியாக உள்ளக புகார் குழு நாளைக்குள் விதிமுறைப்படி அமைத்திட வேண்டும்.

    பணிபுரியும் இடத்தில் மூத்த பெண் பணியாளரை தலைவராக நியமனம் செய்ய வேண்டும். இல்லாத பட்சத்தில் பணிபுரியும் அலுவலகம், பிறதுறைகள் , பிற கிளைகள் , பிற பணியிடங்களில் இருந்து நியமிக்கலாம்.

    பெண்கள் சார்ந்த பிரச்ச னைகளை முன்னெடுத்து அவற்றை களை ந்திட விருப்பம் உடையவர் (அல்லது) சமூக பணிகளில் அனுபவம் (அ) சட்ட அறிவு பெற்ற இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான சமூக பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனம் /மகளிர் சங்கங்களை சார்ந்த அல்லது

    பாலியல் வன்கொடு மைகள் குறித்தவிழிப்பு ணர்வுடைய நபர்களில் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும். புகார் குழு அமைத்த நிறுவனங்கள் அதன் விவரத்தை வருகிற 28-ந் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்.203, 3-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த புகார் குழு அமைக்காத நிறுவனத்திற்கு பணியிடத்தில் பாலியல் வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 பிரிவு 26 இன் கீழ் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×