search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 128738"

    • விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும் உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.
    • நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பு தமிழ்நாடு அரசால்
    வெளியிடப்பட்டு அதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட
    பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் கொடிகள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தயாரிப்பதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும் மற்றும்உ பயோகிப்பதும் தடை செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தெற்கு மண்டலம்) பிளாஸ்டிக் தடையை கடுமையாக அமல்படுத்தவும், மீறுபவர் களுக்கு எதிராக அடிமட்ட அளவில் நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு தொடர்ந்து உத்தரவுகளை வழங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ததை நிறைவேற்றும் வகையில் அதனை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    முதன்முறையாக வணிக நிறுவனங்களில் பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரமும், துணிக்கடைகளில் பயன்படுத்தினால்
    ரூ.10 ஆயிரமும், மளிகை கடைகள், மருந்து கடைகள், நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000-ம், சிறு வணிக நிறுவனங்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும்.

    எனவே தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினையும் மற்றும் அபராதத்தையும் தவிர்த்து மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      கன்னியாகுமரி:

      குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கேரளாவுக்கு எம்சண்ட், என்சன்ட், ஜல்லி கல் ஆகிய கனிமவளங்களை இரவு நேரங்களில் கொண்டு செல்கிறார்கள்.

      திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட கணரக வாகனங்களில் கனிமவளங்களை வெட்டி ஆரல்வாய்மொழி, சுருளோடு, குலசேகரம், நெட்டா வழியாக கேரளாவுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த வாகனங்கள் எல்லாம் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணிக்குள் சென்றுவிடும். அதிவேகமாக அதிகலோடுடன் இந்த வாகனங்கள் செல்வதால் ரோடுகளில் விரிசல் ஏற்படுகிறது. இதனால் விரைவில் ரோடுகள் பழுதடைந்து விபத்துக்கள் நடைபெறுவது மட்டும் அல்லாமல் உயிர்பலியும் ஏற்படுகிறது.

      இந்நிலையில் நேற்று இரவு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் குலசேகரத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதிவேகமாக வந்த 6 கனரக வாகனங்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்து கொண்டு இருந்தது. அந்த வாகனங்களை மடக்கிபிடித்து சோதனை செய்தபோது அரசு நிர்ணயித்த எடையை விட அதிகளவு இருந்தது தெரியவந்தது உடனே 6 வாகனங்களுக்கு குலசேகரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அதிரடியாக ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தார்.

      • பெரம்பலூரில் 7 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் போக்குவரத்து விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 53 லட்சம் அபராதம் விதிக்கபட்டது
      • 7 நாட்களில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன.

      பெரம்பலூர்:

      பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்லும் மக்க–ளுக்காக சிறப்பு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? அர–சுக்கு வரி செலுத்தாதது, டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் போன்றவை குறித்து கண்காணிக்க உத்த–ரவிடப்பட்டது. இதையடுத்து பெரம்ப–லூர் வட்டார போக்குவ–ரத்து அலுவலர் கணேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பு–சாமி மற்றும் அலுவலர்கள் சிறப்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

      இதில் பெரம்பலூர் திரு–மாந்துறை டோல்பிளாசா, நான்கு ரோடு, மூன்று ரோடு ஆகிய பகுதிகளில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடந்த வாகன சோதனைகளில் 144 ஆம்னி பஸ்களும், 136 இதர வாகனங்களும் சோதனை செய்யப்பட்டன. இதில் ஆம்னி பஸ்க–ளுக்கு 22 சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டு ரூ.65 ஆயிரம் அபராதமும், பிற வாகனங்களுக்கு போக்கு–வரத்து விதிமுறைகளை மீறி வகையில் அதிக பாரம், அதிக ஆட்கள், ஒளிரும் பட்டைகள் இல்லாதது, சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு குறை–பாடுகள் காரணமாக சோதனை அறிக்கைகள் வழங்கபட்டு ரூ.88 ஆயிரம் அபராதமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

      அப்போது வட்டார போக்குவரத்து அலுவலர் கணேசன், வாகன டிரை–வர்களிடம் போக்கு–வரத்து விதிமுறைகளை கடை–பிடித்து வாகனங்களை இயக்கி விபத்துகளை தவிர்க்க வேண்டும். போக்கு–வரத்து விதிமு–றைகளை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் அதன் உரிமையாளர், டிரைவர்கள் மீது நடவ–டிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விதிமுறையை மீறி இயக்கப்படும் வாக–னங்களின் உரிமம் மற்றும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.


      • சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட்டு இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.12.2 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
      • கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5.1 கோடி மட்டுமே அபராதம் வசூலானது.

      சேலம்:

      சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரி கிருஷ்ணன் உத்தரவின் பேரில் தீவிரமாக டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

      டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோர், முறைகேடாக பயணிப்போர், லக்கேஜ் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

      அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

      கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 69 சதவீதமாக அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

      • டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
      • 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது.

      கடலூர்:

      கடலூரில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களை தணிக்கை செய்ய கடலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி சுதாகர் உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையில், போக்குவரத்து துறை அதிகாரிகள் கடலூர் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது டிப்பர் லாரிகளில் அதிக அளவு ஜல்லி, மற்றும் எம்சாண்ட் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கி, ரூ1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

      ஷேர் ஆட்டோக்களில் அதிக ஆட்களை ஏற்றி சென்ற டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு வாக்கு சக்கர வாகனங்களை தணிக்கை செய்தனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஓட்டுவோர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக்கூடாது. வாகனங்களுக்கான உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது போன்ற அறிவுரைகள் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது.

      • தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
      • வருகிற 23-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

      நாமக்கல்:

      மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-

      தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. சாலையோரம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கு வாகனங்களுக்கும், சாலைகளின் முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கும் வாகன பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர்.

      அதில் என்ன குற்றம் என தெரிவிக்காமல் பொதுவான குற்றம் என கூறி அபராதம் விதிக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்க ளுக்கும் தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணிய

      வில்லை உள்ளிட்ட முரணான காரணங்க ளுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

      இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் வாகனத்துக்கான காலாண்டு வரை தகுதி சான்றிதழ் உரிமை பெறும்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

      எனவே ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி அனைத்து

      மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், டி.ஜி.பி ஆகியோருக்கும் ஈமெயில் மூலம் மனு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

      • இறுதி விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.
      • கடந்த வாரம் மற்றொரு வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கான அபராத உத்தரவை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது.

      கூகுள் நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் விதித்த அபராத தொகை உத்தரவுக்கு தடை விதிக்க தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

      பிளே ஸ்டோரில் ஆதிக்கம் செலுத்தியதாக கூகுள் நிறுவனத்திற்கு போட்டி ஆணையம் 936 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், அபராத தொகையில் 10 சதவீதத்தை பதிவாளரிடம் 4 வாரங்களில் செலுத்த வேண்டும் எனவும், இறுதி விசாரணையை ஏப்ரல் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டனர்.

      இதேபோல் கடந்த வாரம், தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மற்றொரு அபராத உத்தரவை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது. அதில் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் தொடர்பான போட்டி எதிர்ப்பு நடைமுறைகளுக்காக கூகுளுக்கு ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

      • அபராதம், இதரக்கட்டணம் உள்ளிட்ட வருவாய் வழியாக ரூ.17 கோடியே 16 லட்சம் பெறப்பட்டுள்ளது.
      • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

      அரூர்,

      தருமபுரி மாவட்டம், அரூர் வட்டார போக்குவரத்து அலு வலகத்தின் மூலம் கடந்த ஆண்டு ரூ.17.16 கோடி வரு வாய் பெறப்பட்டுள்ளது.

      இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      உட்பட்ட அரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்கள் என கடந்த ஆண்டு முடிவில் 8 ஆயிரத்து 515 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

      புதிய ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பித்தல், நகல் மற்றும் இதர பரிமாற்றங்கள் 8 ஆயிரத்து 515 பேருக்கு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் மட்டும் புதிய வாகன பதிவு, ஓட்டுநர் உரிமம், பதிவு புதுப்பித்தல், அபராதம், இதரக்கட்டணம் உள்ளிட்ட வருவாய் வழியாக ரூ.17 கோடியே 16 லட்சம் பெறப்பட்டுள்ளது.

      அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கன் தலைமையில் அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், பொம்மிடி, சாமியாபுரம், தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் வாகனச் சோதனை நடத்தப்பட்டது.

      இதில் கடந்த ஆண்டில் 827 சோதனை அறிக்கைகளின் படி வரி மற்றும் அபராதமாக ரூ.43 லட்சத்து 31 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.

      இது தவிர மற்ற மாவட்டங்களைச்சேர்ந்த வாகனங்களுக்கு ரூ.25 லட்சத்து 67 ஆயிரம் அபராதம் செலுத்த முன்மொழியப் பட்டுள்ளது.

      வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள், கூடுதல் விளக்குகள், பம்பர்கள் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

      இது தவிர சாலை பாதுகாப்பு, விதிமுறைகள் குறித்து வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

      • மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
      • 1939 -ன் படி நீதிமன்ற வழக்கு தொடர்வது உடன் அபராதமும் விதிக்கப்படும்.

      சீர்காழி:

      சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :-

      சீர்காழி நகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீட்டை சுத்தம் செய்து குப்பைகளை போகிப் பண்டிகை நாளில் கொளுத்தக்கூடாது.

      தங்கள் பகுதியில் வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுக்க வேண்டும்.

      வீடுகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் வெளியேற்றப்படும் குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் பொது சுகாதார சட்டம் 1939 -ன் படி நீதிமன்ற வழக்கு தொடர்வது உடன் அபராதமும் விதிக்கப்படும். மேலும் தங்களின் வீடுகள் தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே தர வேண்டும்.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      • நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
      • இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

      நாகர்கோவில்:

      கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ராதிகா என்பவர் தனது குடும்பத்திற்காக ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.

      அதன் பின்னர் அவரது கணவர் உடல்நலக்குறை வால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.

      இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

      வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு சிகிச் சைக்காக ஏற்கனவே செலவழித்த ரூ.59,693, நஷ்டஈடு ரூ.20ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.84,693 ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் உத்தர விட்டனர்.

      • நுகர்வோர் குறை தீர் ஆணையம் உத்தரவு
      • ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும்

      நாகர்கோவில்:

      குலசேகரம் அருகே குளச்ச விளாகம் பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட். இவர் கச்சக்கோட்டுவிளையில் உள்ள ஒரு ஒப்பந்தகாரரிடம் 1,600 சதுர அடியில் ஒரு வீடு கட்டி தர கேட்டுக் கொண்டார். இதற்காக சுமார் ரூ.16,69,000-ஐ ஒப்பந்ததாரரிடம் வின்சென்ட் கொடுத்தார். ஒப்பந்தத்தில் கூறியபடி வீட்டின் கட்டுமானம் இல்லை.

      இதற்கிடையே அந்த ஒப்பந்ததாரா் உரிமம் இல்லாத ஒப்பந்தகாரர் என்றும் தரமில்லாத பொருட்களை கொண்டு வீடு கட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு கட்டிட கலை நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் மேற்படி ஒப்பந்தகாரர் கூடுதலாக ரூ.3,99,000 பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.

      இதனால் மனவேதனை அடைந்த வின்சென்ட் இதுபற்றி சம்பந் தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் கேட்டுள்ளார். ஆனால் சரியான பதில் இல்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் வின்சென்ட், வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பி யும் உரிய பதில் கிடைக்க வில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வின்சென்ட் மாவட்ட நுகர் வோர் குறைதீர் ஆணை யத்தில் வழக்கு தொடர்ந் தார்.

      வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்தகாரரின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட வின்சென்டிடம் அதிகமாக பெற்ற ரூ.3,99,000, அபராதமாக ரூ.25 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் வழக்கு செலவு ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

      • கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
      • முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை தவறுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

      சென்னை:

      வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மலக்கசடு மற்றும் கழிவு நீரை தனியார் லாரிகள் மூலம் அகற்றுவதற்கு புதிய விதிமுறைகள் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

      சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கழிவு நீரை அகற்றும் தனியார் லாரிகள் அவற்றை முறையாக எந்த இடத்தில் வெளியேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பின்பற்றாமல் நீர்நிலைகள், மழை நீர் கால்வாய் பகுதியில் விட்டு விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

      கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது.

      இதன்படி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம் பெற வேண்டும். ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.

      உரிமம் பெற்றவர் தவிர வேறுயாரும் மலக்கசடு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.

      உரிமம் பெற்ற வாகனத்தில் ஜி.பி.எஸ்.களை பொருத்த வேண்டும். கழிவு, கசடுகளை 6 ஆயிரம் லிட்டர் வரை அப்புறப்படுத்த கட்டணமாக ரூ.200-ம், அதற்கு மேல் உள்ள அளவுக்கு ரூ.300-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

      இந்த சட்ட விதிகளை மீறும் தனியார் லாரி உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை தவறுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

      3-வது மற்றும் தொடர்ச்சியாக விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று புதிய சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      ×