search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129857"

    உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். #UPGirlMolested
    முசாபர்நகர்:

    உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில், மாணவி ஒருவர் நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 வாலிபர்கள், அந்த மாணவியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி பைக்கில் ஏற்றி வந்துள்ளனர்.

    ஆனால், வீட்டுக்குச் செல்லாமல் பாதியிலேயே வாகனங்களை நிறுத்திய அந்த வாலிபர்கள், மாணவியை கரும்புத் தோட்டத்திற்குள் தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் மாணவியை  4 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். தன்னை காப்பாற்றும்படி மாணவி கூச்சலிட்டுள்ளார்.

    மாணவியின் அலறல் சத்தம் கேட்டதும், அப்பகுதி மக்கள் சிலர் கரும்புத் தோட்டத்திற்குள் சென்றனர். பொதுமக்கள் வருவதைப் பார்த்ததும் 4 வாலிபர்களும் தப்பி ஓடினர். அவர்களில் 2 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #UPGirlMolested
    கோவையில் அரசு பள்ளி ஆசிரியரை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.
    கோவை:

    மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 25). பட்டதாரி.

    இவருக்கு சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ மூலமாக கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.

    அப்போது நான் குரூப்-2 தேர்வு எழுத உள்ளேன், அதற்கு பணம் தேவைப்படுகிறது என ராஜ பிரவீன் கேட்டுள்ளார்.அதற்கு ஆசிரியை நான் உனக்கு உதவி செய்கிறேன் என கூறினார்.

    இதையடுத்து ராஜபிரவீன் கோவை வந்து ஆசிரியையை சந்தித்து பேசினார். அப்போது ராஜபிரவீனுக்கு ஆசிரியை ரூ.38 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் காசோலைகளை கொடுத்தார். பின்னர் ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்து சென்ற ராஜபிரவீன் தண்ணீரில் மயக்க மாத்திரையை கலந்து கொடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் ஆசிரியை மயங்கியதும் அறைக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். மேலும், ஆசிரியையை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த வீடியோவை காட்டி மேலும் 3 முறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜபிரவீன் ஆசிரியையை திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.2 லட்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு ஆசிரியை மறுத்துள்ளார். எனினும் ராஜபிரவீன் நைசாக பேசி ஆசிரியையிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை வாங்கி சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆசிரியை சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜபிரவின் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    கோவையில் காதலிப்பதாக கூறி பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ்.காலனி பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 20). டிப்ளமோ பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    இதையறிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் மாணவியை சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரியில் இருந்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாணவி அளித்த புகாரின்பேரில் மனோஜ்குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    திருவண்ணாமலையில் கற்பழிக்கப்பட்ட ரஷிய இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். #Russiantouristgirl

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலைக்கு கடந்த 12-ந் தேதி சுற்றுலா வந்த ரஷிய நாட்டை சேர்ந்த இளம்பெண் அலினா (வயது 22), செங்கம் சாலை கஸ்தூரிநகரில் உள்ள அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கினார்.

    கோவில், ஆசிரமங்களை சுற்றி பார்த்து லாட்ஜில் தங்கி இருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது.

    பலத்தகாயங்களுடன் அலங்கோலமான நிலையில், மீட்கப்பட்ட ரஷிய பெண் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

    இச்சம்பவம் குகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் அபார்ட்மெண்ட் நிர்வாகிகள், கார் டிரைவர், ஊழியர்கள் உள்பட 15 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில், சென்னையில் உள்ள ரஷிய தூதரகத்தின் குடியுரிமை ஆவண (விசா) ஆய்வு பிரிவு அதிகாரி டென்னிசன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ரஷிய இளம்பெண்ணை நேரில் சந்தித்தார்.

    முகத்தில் வைக்கப்பட்டிருந்த பிராண வாயு மாஸ் எடுக்கப்பட்டு விட்டது. இயல்பாக சுவாசிக்கிறார். பால் மற்றும் ஜூஸ் போன்ற திரவ உணவுகளை உட்கொள்கிறார்.

    அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ரஷிய தூதரக அதிகாரியிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். எஸ்.பி. பொன்னி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    சுயநினைவு திரும்பிய ரஷிய இளம்பெண்ணிடம் தூதரக அதிகாரி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, பலாத்காரம் குறித்து எஸ்.பி. பொன்னி வாக்கு மூலம் பெற்றார்.

    பாதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். பலாத்காரம் செய்தவர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

    உணவு மற்றும் குளிர் பானத்தில் மயக்க மருந்து மற்றும் போதை மாத்திரை கலந்து கொடுத்து தன்னை பலாத்காரம் செய்ததாக ரஷிய இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ரஷிய இளம்பெண்ணின் வாக்குமூலத்தையடுத்து, பலாத்காரம் நடந்த தனியார் அபார்ட்மெண்ட்டுக்கு தாசில்தார் மனோகரன் அதிரடியாக ‘சீல்’ வைத்தார்.

    விசாரணை வளையத்தில் உள்ள 15 பேரிடமும் போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து எஸ்.பி. பொன்னி கூறியதாவது:-

    இந்த வி‌ஷயத்தில் பெண் பாதிக்கப்பட்டுள்ளார். திருட்டு போன்ற மற்ற வழக்கில் உடனடியாக தகவல் தெரிவிப்பது, நடவடிக்கை எடுப்பது போன்று இதில் செய்ய முடியாது.

    இந்த வழக்கு தொடர்பாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றார். #Russiantouristgirl

    ×