search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 129867"

    • வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது.
    • கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது.

    ராய்பூர்:

    சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், தேர்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் குறிப்பாக தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து 14-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பலர் தேர்தல் ஆணையத்திடம் சந்தேகம் எழுப்பியதாகவும், ஆனால் அதற்கு தக்க பதில் கிடைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

    மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறியதாவது;

    "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து. கட்சியின் நிலைப்பாடு வேறாக இருக்கலாம். அது குறித்து என்னால் பேச முடியாது. நான் துவக்கத்தில் இருந்தே இதை வலியுறுத்தி வந்திருக்கிறேன். வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றிருக்கிறோம். வாக்குப்பதிவு இயந்திரமானது நெட்வொர்க் தொடர்பு இன்றி தனித்து இயங்கக்கூடியது. அதன் செயல்திறன் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை இருக்கிறது." இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    • வாக்குரிமை பெற்ற பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்
    • வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் . நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் என்ன நடக்க போகுது என்று யாரும் எண்ணக்கூடாது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூ ரியில் 13-வது தேசிய வாக் காளர் தினத்தை முன்னிட்டு இளம் வாக்காளர் களை கண்டறிந்து வாக் காளர் பட்டியலில் சேர்ப்பது மற்றும் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் "வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக் களிப்பேன்" என்ற கருத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில், கலெக்டர் அரவிந்த் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட வாக்குரிமை பெற்ற பொதுமக்கள் அனைவரும் தவறாது தங்கள் வாக்குகளை பதிவு செய்து, ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 18 வயது பூர்த்தியானவர்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் , தகுதியற்றவர்களை பெயர் நீக்கம், தொகுதி, முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக கோரிக்கை மற்றும் ஆட்சே பனைகளுக்கான படிவங்க ளான 6 , 6A , 6B, 7 மற்றும் 8 பெறப்பட்டும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது .

    குறிப்பாக, புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ள, கல்லூரி மாணவ, மாணவிகள் அனை வரும் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஜன நாயக உரிமையாகிய வாக்குரி மையை நிறைவேற்றும் வகையில் , நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களிலும் 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும்.

    மேலும், மாணவ, மாணவியர்கள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சுற்றத்தாரிடமும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த வேண்டும் . மேலும் , 18 வயது நிரம்பிய மாணவ , மாணவியர்கள் அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யாத மற்றும் இடம்பெறாத மாணவ, மாணவியர்கள் , பொதுமக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிக்குட்பட்ட தாலுகா அலுவல கங்கள், நகராட்சிகள், மாநகராட்சி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் அலுவலகம் உட்பட மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அலுவலகங்க ளுக்கு சென்று படிவம் 6-ஐ பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பித்துக் கொள்ள முன்வர வேண்டும்.

    வாக்களிப்பது ஒவ்வொருவரின் கடமையாகும் . நான் ஒருவன் வாக்களிக்காமல் இருந்தால் என்ன நடக்க போகுது என்று யாரும் எண்ணக்கூடாது. ஒவ்வொருவாக்கும் மக்களாட்சியில் சரியான நபரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய மானதாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    18- வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் பணத்திற்காக வாக்க ளிப்பதை தவிர்த்து தங்க ளது ஜனநாயக் கடமை யினை நிலைநாட்ட முன்வ ருவதோடு, "வாக்களிப்பது போல் எதுவுமில்லை நான் நிச்சயமாக வாக்களிப்பேன்" என்பதில் அனைவரும் உறுதி யாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

    கன்னியாகுமரி:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி. ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சுசீந்திரம் கீழ ரதி வீதியில் நடந்தது.

    கூட்டத்துக்கு அகஸ் தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் ஜெஸீம் தலைமை தாங்கி னார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடைவள்ளல் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் உருவாக்கிய இயக்கம்தான் அ.தி.மு.க. இந்த இயக்கத்தின் நிறுவனரான எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் இந்த இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் இருந்து பணியாற்றி வந்த மூத்த கழக முன்னோடிகளுக்கு இன்று பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லாத அரசியல் கட்சித் தலைவர்களே கிடையாது. இப்போது இருக்கிற முதல்-அமைச்சர் கூடதான் ஒரு எம்.ஜி.ஆரின் ரசிகர் என்றும் எம்.ஜி.ஆர். எனது பெரியப்பா என்றும் சொல்லி இருக்கிறார். அந்த அளவுக்கு ஒரு மாமனிதராக எம். ஜி.ஆர். திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் அளித்த வாக்குறுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என்று சொன்னார்கள். இதுவரை கொடுக்கவில்லை. அதேபோல ஊராட்சிகளை போல் பேரூராட்சிகளில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வருவோம் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை அந்த திட்டமும் நிறைவற்றப்படவில்லை.

    வருகிற பாராளு மன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் பாரதிய ஜனதாவுடன்தான் அ.தி.மு.க. தொடர்ந்து கூட்டணி வைத்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க. என்றும் யாருக்கும் துரோகம் செய்யாது. இவ்வாறு அவர் பேசி னார்.

    கூட்டத்தில் கன்னியா குமரி சட்டமன்ற தொகுதியில் உள்ள அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 மூத்த கழக முன்னோடிளுக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி கவுரவப்படுத்தினார்.

    கூட்டத்தில் அகஸ தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பித்தங்கம் வரவேற்றுப் பேசினார். முன்னாள் அமைச்சர் பச்சைமால், மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், தோவாளை பஞ்சாயத்து யூனியன் தலைவி சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், பேரூர் கழகச் செயலாளர்கள் குமார், ராஜபாண்டியன், மணிகண்டன், தாமரை தினேஷ், சீனிவாசன் மனோகரன், ஆடிட்டர் சந்திரசேகரன், ஊராட்சி செயலாளர்கள் செல்லம்பிள்ளை, லீன், தேரூர் பேரூராட்சி தலைவி அமுதாராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுசீந்திரம் நகர செயலாளர் குமார் நன்றி கூறினார்.

    • தேர்தல் கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டிய அவசியமில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
    • 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பர பாராளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

    பேச வேண்டிய அவசியமில்லை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 6 பேர் எதிர்த்து, மத்தியஅரசு மறுசீராய்வு மனுதாக்கல் செய்தது எதிர்பார்த்த ஒன்றுதான். இது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திவிடாது. அந்த 6 பேர் சார்பிலும் வககீல்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி சட்டப்படி எதர்கொள்ளப்படும். இதனால் 6 பேரின் விடுதலை ரத்து செய்யப்படாது என நம்புகிறோம்.

    த மிழக அரசின் மழைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசலாம். இப்போது பேச வேண்டிய அவசியமில்லை. தி.மு.க.கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது.

    மத்திய அரசு பிடிவாதம்

    திருமாந்துறை, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடிகளின் ஊழியர்களின் போராட்டம் குறித்து, ஏற்கனவே சம்பந்தப்பட்ட மத்திய இைண மந்திரியிடம் மனு கொடுத்திருக்கிறோம். கூட்டத் தொடரின்போது சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை சந்தித்து பேச உள்ளோம்.

    பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், வழக்கில் இருந்து வெளியே வர முடியாதபடி வழக்கை விரைந்து நடத்தி தண்டணை பெற்று தர தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்.

    மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் பிடிவாதமாக உள்ளது, மாநில அரசு ஒன்றுக்கு இருமுறை சட்ட மசோதா அனுப்பியும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்கு அடிப்படை வசதிக்கு தேவையான நிதி பாராளுமன்ற உறுப்பினர்களின் நிதி போதவில்லை இருந்தாலும் தமிழக அரசு மூலம் வலியுறுத்தி அடிப்படை வசதி செய்து தருவேன்.

    • கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
    • ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அம்மாப்பேட்டை:

    அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அம்மாபேட்டையில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், கொத்தட்டை நடராஜன், குட்டி தெட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர்கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு கட்சி தொண்டர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வார்டு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது
    • ஆலங்குடி தாலுகாவில் நாளை நடக்கிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட் சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 48 ஊராட்சிகளில் பாசன பகுதிகளான அக்கினி ஆறு, அம்புலி ஆறு தெற்கு வெள்ளாறு என மொத்தம் 2812 ஹெக்டர் நீர் பாசன வசதி உள்ளது. பாசன குளங்கள் மற்றும் ஏரிகளில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் 34 சங்கங்கள் உள்ளது. பாசன குளங்களை இணைத்து நீரினை பயன்படுத்துவோர் சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இந்த சங்கங்களுக்கு தலா ஒரு தலைவர் என 34 தலைவர் மற்றும் 91 ஆட்சி மண்டல குழு உறுப்பினர் பதவிகள் மொத்தம் உள்ளன. இந்த சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. மனு வாபஸ், தள்ளுபடி, போட்டியின்றி தேர்வு போக மீதம் 9 இடங்களுக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.

    இதில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று விவசாயிகளை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பொது தேர்தலை மிஞ்சும் வகையில் பிரச்சாரம் களை கட்டி உள்ளது. இந் த தேர்தலில் விவசாயிகள் வாக்காளர்களாக உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி 9 இடங் களில் நடக்கும் தேர்தலை யொட்டி பள்ளிகளில்அனைத்து வசதிகளும் இருக்கிறதா என மேலாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சோபா- புஷ்பராஜ் முன்னிலையில் ஆய்வுமேற்கொண்டார்.

    ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு பிற்பகல் 2 மணியுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

    • சட்டசபைத் தேர்தலையொட்டி இரு மாநிலங்களிலும் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை.
    • மது, போதை பொருட்கள், பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்தமுறை மிக அதிகமான அளவில் கணக்கில் வராத பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 10.11.2022 வரை குஜராத்தில் மட்டும் 71 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணமும், பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலின் போது ஒட்டுமொத்த காலத்தில் ரூ. 27.21 கோடி அளவில் அங்கு பணம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

    இதேபோல இமாச்சலப் பிரதேசத்தில் 50 கோடியே 28 லட்சம் ரூபாய் தேர்தல் ஆணைய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. கடந்த தேர்தலின் போது இந்த மாநிலத்தில் ரூ. 9.03 கோடி கைப்பற்றப்பட்டது. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள தொகை இதைவிட ஐந்து மடங்கு அதிகம்.மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக மது, போதைப் பொருட்கள், விலை மதிப்புள்ள உலோகங்கள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க சி விஜில் என்ற செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றும், அதன் மூலம் பணம் விநியோகிக்கப்படுவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    • தேர்தல் விழிப்புணர்வு போட்டிகள் நடந்தன.
    • தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இணைந்து ''எனது வாக்கு, எனது உரிமை-ஒரு வாக்கின் சக்தி'' என்ற தலைப்பில் சுவரொட்டி தயாரித்தல் போட்டியை நடத்தியது. முதல்வர் அப்பாஸ் மந்திரி, தாசில்தார் அசோக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பாக சுவரொட்டி தயாரித்த மாணவ-மாணவிகளை பாராட்டினர். சிறந்த சுவரொட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரால் பரிசு வழங்கப்பட உள்ளது. போட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முஹம்மது, அப்ரோஸ் ஆகியோருடன் இணைந்து தலையாரி லட்சுமணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன்.
    • கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    தரங்கம்பாடி :

    மயிலாடுதுறையில் மாமனிதன் வைகோ ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி ஏற்பாட்டின் பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார்.

    தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இதில் தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்று ஆவணப் படத்தை கண்டு ரசித்தனர்.

    பின்னர் துரை வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    தி.மு.க.வின் ஆட்சி தங்களுக்கு திருப்தி அளிக்கிறது.

    கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்தால் அவர்களது முடிவிற்கு நான் கட்டுப்படுவேன் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ. வுமான நிவேதா முருகன், ம.தி.மு.க நகர செயலாளர் மார்க்கெட் கணேசன், செம்பை ஒன்றிய செயலாளர் குளஞ்சிநாதன், மற்றும் கூட்டணி கட்சி பொருப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொன்டனர்.

    • நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 29ந் தேதி சைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.
    • 25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    சைமா சங்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் 29ந்தேதிசைமா வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் சைமா சங்க தேர்தலில் மாற்றத்திற்கான அணி சார்பில் போட்டியிடும் பாலச்சந்தர் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. அதில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாலச்சந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டுகளாக தொழில் சூழ்நிலைகளில் நடைபெற்று வரும் மாற்றங்களும்ஏற்படும் சிக்கல்களையும் களைவதற்கு சங்கத்தில் முனைப்புடன் கூடிய செயலாற்றும்திறன் அதிகமாக தேவைப்படுகிறது. இந்நிலையில் தொடர்ந்து பல ஆண்டுகளாகசங்கத்தில் பதவி வகித்து வரும் மூத்த உறுப்பினர்களில் பலர் தொழில் நிலையில் இருந்துவிலகி உள்ள காரணத்தினால் மாற்றம் செய்து அவர்களுக்கு பதிலாக புதிய இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு வேண்டும் என்று எங்கள் அணி சார்பாக வேண்டுகோள்வைக்கப்பட்டது.

    ஆயினும் சங்கத்தின் செயற்குழு கூடி வழக்கம்போல் ஏற்கனவே உள்ளஅனைவரும் தங்கள் பதவியிலேயே தொடர்வார்கள் என தீர்மானித்தனர். எனவே நாங்கள்தேர்தலை எதிர்கொள்வதற்காக வலியுறுத்தி கேட்டுக்கொண்டதன் பேரில் ஏறத்தாழ25 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுகிறது.

    முன்னாள் இருந்த நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதாவது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவர்களது செயல்பாட்டில் திருப்தி இல்லை என்பதை முன்வைத்தும் பலர் தொழிலை விட்டு வெளியேறிய சூழ்நிலையிலும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வருவது தொழிலுக்கு தேவையான நன்மைகளை நிர்வாகிகளால் கோரிப் பெற முடியாது என்ற கோரிக்கையின் அடிப்படையில் மாற்றத்திற்கான அணியை உருவாக்கி தற்போது தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தலைவராக நியமன அடிப்படையில் வைக்கிங் ஈஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் துணைத்தலைவர் உள்ளிட்ட பிற பொறுப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.இவர் அவர் கூறினார்.

    • 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா சங்கம் செயல்படுகிறது.
    • 29ந் தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    திருப்பூர் :

    உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர் 692 பேரை உறுப்பினராக கொண்டு சைமா எனப்படும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் செயல்படுகிறது.இச்சங்கத்தில் ஒரு தலைவர், துணை தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள், 2 இணைச் செயலாளர் பதவி, 21 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன.தேர்தல் நடத்தி மட்டுமே 2022 -25க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என ஒருதரப்பு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். கடந்த 10ந் தேதி கூடிய சைமாவின் அவசர செயற்குழுவில் வக்கீல் ராமமூர்த்தி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.வருகிற 29ந்தேதி சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    நாளை 19-ந்தேதி முதல் ஹார்வி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் வேட்பு மனு வழங்கப்படுகிறது.மனு தாக்கலுக்கு 21ந் தேதி கடைசிநாள். 25-ந் தேதி வரை மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்பட்டு, 26-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது.போட்டி உள்ள பதவிகளுக்கு மட்டும் 29ந் தேதி சைமா அலுவலகத்தில் காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் நடத்தப்படும்.

    வேட்பு மனு பூர்த்தி செய்து 2 நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். ஒரு நகலில் தேர்தல் அதிகாரியின் ஒப்புகை பெற்றுக்கொள்ளவேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்பவர், முன்மொழிபவர், வழிமொழிபவர்கள் சங்கத்துக்கு எந்த நிலுவை தொகையும் வைத்திருக்க கூடாது. புதிய உறுப்பினர் எனில் சந்தா தொகை செலுத்திய நாளில் இருந்து ஓராண்டு உறுப்பினராக இருத்தல் வேண்டும். சங்க ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான உறுப்பினர்கள் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது.ஒருநபர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிடமுடியும். போட்டி இல்லாத பதவிகளுக்கு நியமனம் செய்யப்படுபவரும், வேட்பு மனு கட்டணம் செலுத்த வேண்டும்.தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து சைமா சங்க தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.  

    • 2ந் தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.
    • 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் 2022 - 2025க்கான புதிய நிர்வாகிகளை தேர்வுசெய்வதற்கான தேர்தல் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.கடந்த 2ந்தேதி துவங்கிய வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. கே.எம்., நிட்வேர் சுப்பிரமணியத்தை தலைவராக கொண்ட அணியினர் 7 நிர்வாக பதவி, 20 செயற்குழு உறுப்பினர் என சங்கத்தின் 27 பதவிக்கும் மனு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு எதிராக 12 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சுப்பிரமணியம் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு இளங்கோவன், ராஜ்குமார், இணை செயலாளர் பதவிக்கு சின்னசாமி, குமார் துரைசாமி,பொருளாளர் பதவிக்கு கோபாலகிருஷ்ணன் களமிறக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு எதிராக துணை தலைவர் பதவிக்கு, செந்தில்குமார், பொருளாளர் பதவிக்கு கொண்டசாமி, இணை செயலாளர் பதவிக்கு செந்தில் போட்டியிடுகின்றனர்.

    தலைவர் பதவிக்கு சுப்பிரமணியம் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் போட்டியின்றி சங்க தலைவராகிறார். சக்திவேல், ராஜாசண்முகம் ஆகியோரை தொடர்ந்து சங்கத்தின் 3-வது தலைவராக சுப்பிரமணியம் பொறுப்பேற்கிறார்.இவரது அணியில் உள்ள திருக்குமரனும் போட்டியின்றி பொதுச்செயலாளராகிறார். இவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தேர்தல் பொறுப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.வருகிற 14-ந்தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள். 15-ந்தேதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியிடப்படுகிறது.கூடுதல் நபர்கள் போட்டியிடும் பதவிகளுக்கு மட்டும் வருகிற 30-ந் தேதி காலை, 'நிப்ட்-டீ' கல்லுாரியில் தேர்தல் நடைபெறும். சங்க உறுப்பினர்கள் பங்கேற்று ஓட்டளிப்பர். உடனடியாக ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.

    ×