search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டு"

    கேரளாவின் கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள பிபிசி நிறுவன விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார். அதன்பின்னர், திருச்சூரில் பா.ஜ.க இளைஞரணியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    கேரள கலாச்சாரத்தை அவமதிக்க இடதுசாரி அரசு எப்படி முயற்சி செய்கிறது என்பதற்கு சபரிமலை விவகாரமே உதாரணமாக விளங்குகிறது.

    சபரிமலை விவகாரம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தது. கேரள மாநிலத்தின் கலாச்சாரத்தை அழிக்க இடதுசாரி அரசு எப்படியெல்லாம் முயற்சி செய்தது என்பதை இந்திய மக்கள் அறிவார்கள். இடதுசாரி அரசு மாநிலத்தின் கலாச்சாரத்தை சிதைப்பது ஏன்? துரதிஷ்டவசமாக கேரளாவின் பண்பாடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இவையனைத்து மாநிலத்தில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் அரசால் ஏற்பட்டது.



    காங்கிரசும், இடதுசாரிகளும் ஜனநாயகம் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கையானது. எதிர்க்கட்சிகள் என்னை எப்படி வேண்டுமென்றாலும் தாக்கி பேசலாம், ஆனால் அவர்களால் விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது. இளைஞர்களுக்கான வாய்ப்புகளில் எதிர்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

    சபரிமலை விவகாரத்தில் கேரளாவிலும், டெல்லியிலும் காங்கிரஸ் முரண்பட்ட நிலைபாட்டில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் விஞ்ஞானி நம்பி நாராயணனை அரசியல் ஆதாயத்துக்காக பொய்வழக்கில் சிக்க வைத்தனர். அரசியல் ஆதாயத்துக்கு தேச நலனை சேதப்படுத்தியதுடன் தேசப்பற்றுமிக்க விஞ்ஞானிக்கும் தொல்லை தந்தனர். வலிமையான இந்தியாவை உருவாக்க உழைக்கும் ஒவ்வொருவரையும் நாங்கள் மதிக்கிறோம் என தெரிவித்துள்ளார். #PMModi #Sabarimalaissue #KeralaLeftgovt
    தேசிய அளவில் காங்கிரசுடன் கம்யூனிஸ்டு கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #SitaramYechury

    கொல்கத்தா:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக தேசிய அளவில் ஒரு அணியை உருவாக்குவதற்காக காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஏன் பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்து சீதாராம் யெச்சூரி கூறுகையில், “அரசியல் சூழ்நிலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முதலில் மாநில அளவில் தொடங்கப்பட வேண்டும்” என்றார்.

    மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசையும், பா.ஜனதாவையும் வீழ்த்துவதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில்தான் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தேசிய அளவிலான கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை என்று சீதாராம் யெச்சூரி மறைமுகமாக கூறியுள்ளார். #SitaramYechury

    திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TTVDinakaran #DMK #Congress #Communist
    சென்னை:

    அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.

    தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவித்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனால் அந்த 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.

    தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி தொடர்பான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த முறை ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரும் அரசியலில் ஈடுபட்டு இருப்பதால் தேர்தலில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வருகிற தேர்தல்களில் தி.மு.க.வுடனோ, பா.ஜனதாவுடனோ நாங்கள் ஒருபோதும் கூட்டணி வைக்க மாட்டோம், அது தற்கொலைக்கு சமமானது. அதே நேரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் அல்லது பிராந்திய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.

    இதன்மூலம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி சேரும் விருப்பத்தை தினகரன் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் அவரை ஏற்கவில்லை. தாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருப்பதாகவும், அதில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறுகையில், தி.மு.க.வுடனான எங்கள் கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. இந்த கூட்டணியில் மற்ற கட்சிகள் சேர விரும்பினால் அதுபற்றிய இறுதி முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் என்றார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “அ.தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மக்கள் பிரச்சினைகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து போராடி வருகிறோம்.

    வருகிற தேர்தலில் பா.ஜனதா, அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து முடிவு எடுக்கக்கூடிய நிலை உருவாகும். தமிழகத்தில் தி.மு.க.வுக்கு முக்கியத்துவம் இருக்கும். புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் மக்கள் பிரச்சினையில் எந்தவிதமான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எனவே தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை” என்றார்.



    இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கூறுகையில், “தினகரன், அ.தி.மு.க. தலைமை பதவிக்கான போட்டியில் மோதிக் கொண்டு இருக்கிறார். அதில் உடன்பாடு ஏற்பட்டு ஒருமித்த கருத்து உருவானால் அவர் அ.தி.மு.க.வில் சேர்ந்து விடுவார். நாங்கள் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும்” என்றார். #TTVDinakaran #DMK #Congress #Communist
    8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாளை நடைப்பயணத்தை தொடங்குகிறது.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலத்திற்கு வெகு சீக்கிரமாக பயணிக்க ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகிறது.

    இத்திட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பசுமை சாலைக்காக தனது நிலத்தை பறிகொடுத்த விரக்தியில் செங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிராக ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் நாளை திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் நடைப்பயணம் தொடங்குகிறது. திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நாளை காலை 10 மணிக்கு நடைப்பயணம் தொடங்குகிறது.

    மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நடைப் பயணத்தை தொடங்கி வைக்கிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விவசாயிகள் கலந்துக் கொள்கின்றனர்.

    அண்ணாசிலையில் தொடங்கும் நடைப்பயணம் காமராஜர் சிலை வழியாக செங்கம் நோக்கி தொடங்குகிறது. செங்கம் சாலையில் உள்ள பாய்ச்சல், எறையூர் கிராமத்தில் விவசாயிகளை சந்திக்கின்றனர். முதல் நாள் பயணம் அங்கு முடிந்தவுடன் 2-வது நாளாக மண்மலை, செங்கத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    3-வது நாள் பள்ளிப்பட்டு, நீப்பந்துறையிலும், பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி சென்று சேலத்தில் 7-வது நாளில் நடைப்பயணம் நிறைவு பெறுகிறது. நடைப் பயணத்தின் போது, 8 வழி பசுமை சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரான அழகேசன் கூறினார்.
    ஜூலை-30 தியாகிகள் நினைவு தினத்தையொட்டி நினைவு சின்னத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    புதுச்சேரி:

    ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-30 தியாகிகள் நினைவு தினமாக கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்து வருகிறார்கள். அதுபோல இன்று ஜூலை 30-ந்தேதி தியாகிகள் நினைவு தினத்தை கம்யூனிஸ்டு கட்சியினர் கடைபிடித்தனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அக்கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சுப்பையாசிலையில் இருந்து ஊர்வலமாக வந்து புதுவை- கடலூர் சாலையில் உள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தேசிய செயற்குழு உறுப்பினருமான அஜிஸ் பாட்சா பங்கேற்றார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன் மற்றும் நிர்வாகிகள் அபிஷேகம், தினேஷ் பொன்னைய்யா, சேது செல்வம், கீதநாதன், துரை.செல்வம், சுப்பையா, பூபதி, மூர்த்தி, மாதர் சங்கம் லதா ஹேமலதா, இந்திய வாலிபர் சங்கம் அந்தோணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் அதன் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. சார்பில் சுதேசிமில்லில் இருந்து ஊர்வலமாக வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் நிர்வாகிகள் சீனுவாசன், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருத்தணியில் கம்யூனிஸ்டு-வி.சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பள்ளிப்பட்டு:

    எஸ்.சி. - எஸ்.டி. பிரிவு வன்கொடுமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். அதனை அரசியல் சாசனத்தில் 9-வது அட்டவணையில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    ரெயில் மறியலில் ஈடுபட்ட அவர்கள் திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே இருந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கோபால், மாவட்டக்குழு உறுப்பினர் மோகனா, மாவட்ட பொருளாளர் நேரு, விடுதலை சிறுத்தை நகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் தலித் மக்கள் முன்னணியினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 50 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதும் டி.எஸ்.பி. சேகர் மற்றும் போலீசார் ஒரு காரில் திருத்தணி ரெயில் நிலையம் நோக்கி சென்றனர்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் பஞ்சாட்சரம் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அவரை உடனடியாக மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×