search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 132178"

    • உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அலங்காநல்லூர்

    ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்ப ளித்துள்ளது. இதை வரவேற்று கொண்டும் வகையில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் முன்பு ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி, பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தலைவர் மலை சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதி தங்கமணி மற்றும் விழா குழுவினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் காளை களுக்கும், பொதுமக்க ளுக்கும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ் ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதுகுறித்து ஜல்லிக்கட்டு விழா குழுவை சேர்ந்த ரகுபதி, கோவிந்தராஜ் கூறுகையில், பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கு காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை வந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருந்தோம். எங்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. என்றனர்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். #RepublicDay #RepublicDay2019 #TNGovernor
    சென்னை:

    நாட்டின் 70-வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா கடற்கரை சாலையில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். தேசியக்கொடியை ஏற்றி வைத்தபோது விமானப்படை  ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.



    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    சென்னையில் குடியரசு தினவிழாவையொட்டி மெரினா, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்ற பகுதிகளில் கடலோர பாதுகாப்புப் படையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

    மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிபாட்டுத் தலங்கள், ரெயில் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #RepublicDay #RepublicDay2019 #TNGovernor

    ஒடிசாவில் உள்ள காப்பகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட 300 பேர் விளக்கு ஏற்றியும் மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
    புவனேஸ்வர்:

    நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தென் மாநிலங்களைப் பொருத்தவரை  பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். பெரும்பாலான மக்கள் கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். சிலர் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் விடுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.



    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள மிசன் அஷரா என்ற காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 300 பேர் பராமரிக்கப்படுகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்று தீபாவளி பண்டிகையை அனுபவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி மிஷன் அஸ்ரா இல்லம் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு, பிரமாண்டமாக விழா நடத்தப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் விளக்கு ஏற்றியும் மத்தாப்புகளை கொளுத்தியும் மகிழ்ந்தனர். #OdishaDiwali #MissionAshra
    கரூரில் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, படத்திற்கு மாலை அணிவித்து அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
    கரூர்:

    பெருந்தலைவர், கர்மவீரர், ஏழைபங்காளர், கருப்பு வைரம், தமிழக கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட படிக்காத மேதை என எல்லோராலும் போற்றப்படும் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று கரூரில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினத்தை கரூர் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கருதி மாணவ- மாணவிகளுக்கு கருத்துரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த வகையில் கரூர் நகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதன் தலைமை ஆசிரியை சண்முக வடிவு தலைமையில் ஆசிரிய- ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர், தமிழக முதல்- அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை காமராஜர் வகித்தாலும் பொதுவாழ்வில் நேர்மையையும், எளிமையையும் கடைபிடித்து அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுபோட்டியில் காமராஜர் பற்றி பல்வேறு சுவாரசியமான தகவல்களை மாணவிகள் பேசினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் அந்த பள்ளியின் பிளஸ்-2 மாணவி லட்சுமி பிரபா கல்வியில் மட்டும் அல்லாமல் விளையாட்டு உள்ளிட்டவற்றில் திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு அரசு சார்பில் காமராஜ் விருது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் போது அந்த மாணவிக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து கூறி பாராட்டினர். இதேபோல் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தெருக்களிலும் ஆங்காங்கே பொதுமக்கள் சார்பில் காமராஜரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கிடையே கரூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் ஸ்டீபன் பாபு தலைமையில் சுரேகா பாலசந்தர், குமார் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகேயுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கரூர் நாடார் மஹாஜன சங்கம் சார்பில் நாடார் குழும தலைவர் நாடார் பைனான்ஸ் கூடலரசன், மாநில இணைச்செயலாளர் ஜீவிதா ஸ்டோர் சண்முக நாதன், மாவட்ட செயலாளர் நஞ்சை சதீஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமையில் அகஸ்டின் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். கரூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் பி.எம்.குப்புசாமி தலைமையில் அரசியல் உயர்மட்டக்குழு தலைவர் முன்னாள் எம்.பி. நாட்ராயன் உள்ளிட்டோர் காமராஜரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கரூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 
    விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    விருதுநகர்:

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பா.ஜ.க. நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சோலையப்பன், நகர தலைவர் செந்தில் குமார், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர்கள் கஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    நள்ளிச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். சாத்தூர் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பில் நடந்த விழாவில், கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் ஆசனங்களை செய்தனர். கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமை தாங்கினார். ஏற்பாடுகளை என்.சி.சி. தலைமை அதிகாரி கர்னல் அன்சார் முகமது, என்.சி.சி. பொறுப்பாளர் பாண்டியராஜன் செய்திருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. பள்ளியில், பள்ளி தாளாளர் குருவலிங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிர்வாக அலுவலர் அழகர்சாமி, பள்ளி முதல்வர் கமலா, துணை முதல்வர் சித்ரா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் தர்மராஜ் செய்திருந்தார்.

    வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி எஸ்.பி. மாடர்ன் பள்ளியில், பள்ளி தாளாளர் பார்வதி சுந்தரராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இயக்குனர் ஜெயபாரதி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார். மாணவர்கள் பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியை ரமாபிரபா, புஷ்பா, உடற்கல்வி ஆசிரியர் நிக்‌ஷன் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    விருதுநகர் காமராஜ் என்ஜினீயரிங் கல்லூரி நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக அம்பாள் முத்துமணி கலந்து கொண்டு பேசினார். விழாவில் கல்லூரி செயலாளர் மகேஷ்குமார், முதல்வர் ஆனந்த் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் வரவேற்றார். யோகா பயிற்சியாளர் கந்தசாமி மற்றும் பெங்களூரு வாழும் கலை மையத்தின் யோகா பயிற்சியாளர் திவாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு யோகாசனங்களை கற்றுக்கொடுத்தார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகாதேவி, துணை முதல்வர்கள் ஞானபுஷ்பம், சுதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி நாயக்கர் மகமை பண்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் நிர்வாகிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். விழாவில் பள்ளியின் தலைவர் சுப்புராஜ் செயலாளர் ரவி, பொருளாளர் ராஜாராம், இணைசெயலாளர்கள் ராஜப்பன், பாலாஜி மற்றும் ஜே.சி.ஐ. சிவகாசி டைனமிக் தலைவர் திருப்பதிராஜ், செயலாளர் ரவீந்திரன் மற்றும் பொருளாளர் கண்ணபிரான் கலந்து கொண்டனர்.

    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. #YogaDay #NewYork
    நியூயார்க்:

    4-வது சர்வதேச யோகா தினம் நேற்று உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதில் பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராஜ்ய பிரதிநிதிகள், ஆன்மிக தலைவர்கள், குழந்தைகள் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஐ.நா. துணைப்பொதுச்செயலாளர் அமினா முகமது பேசுகையில், “இன்றைய உலகம் நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானது. நமது முக்கிய மதிப்புகள் அழிந்து கொண்டிருக்கிற சவாலை சந்தித்து வருகிறோம். நமது வாழ்க்கையில் பல்வேறு அழுத்தங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதையெல்லாம் கடந்து நின்று இன்றைய தினம் இளைய தலைமுறையினர் யோகாவில் ஈடுபட்டு உள்ளனர். நமது உடல், உள்ள ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அதில் யோகா மிக முக்கியமான, சரியான பங்களிப்பு செய்கிறது” என்று குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன், இந்தியாவில் தோன்றிய யோகா கலையின் பாரம்பரிய பெருமைகளை விளக்கினார். அவரும் யோகா பயிற்சி செய்தார்.

    நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தையொட்டி வெளியிட்டு இருந்த செய்தி கொண்ட வீடியோ திரையிட்டு காட்டப் பட்டது.  #YogaDay #NewYork #Tamilnews
    கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை யொட்டி மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி:

    முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், காவேரிப் பட்டணம், வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை, ராயக்கோட்டை, ஜெகதேவி, மத்தூர், தேன்கனிக் கோட்டை, சூளகிரி, ஓசூர், மத்திகிரி, தளி, அஞ்செட்டி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை அணிந்து உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    கிருஷ்ணகிரியில் ராயக் கோட்டை சாலையில் உள்ள ராஜீவ் நகர், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அதே போல கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் பெண்கள் மட்டும் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.

    ரம்ஜான் பண்டி கையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவரையொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும் வீடுகளில் பிரியாணி சமைத்து, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

    தேன்கனிக்கோட்டையில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினார்கள். இதையொட்டி புத்தாடை அணிந்து தேன்கனிக்கோட்டை அருகே பஜ்ஜேப்பல்லி என்ற இடத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். தொழுகையை தொடர்ந்து ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். முன்னதாக ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் ஊர்வலமாக ஈத்கா மைதானத்தை அடைந்து தொழுகையில் ஈடுபட்டனர். ரம்ஜானை முன்னிட்டு தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதி முஸ்லிம்கள் வீடுகளில் பிரியாணி சமைத்து, உறவினர்களுக்கும், அக்கம் பக்கத்தினர்களுக்கும் வழங்கினார்கள். மேலும் இனிப்பு வழங்கி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார்கள். 
    இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது டிரேடு மார்க் ஸ்டைல் கொண்டாட்டத்தின் பின்னணி குறித்து தெரிவித்துள்ளார். #ShikharDhawan #gabbarstylecelebration

    புதுடெல்லி: 

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். இந்திய அணியில் சில காலம் பார்ம் இல்லாமல் தவித்து வந்த இவர், மீண்டும் வாய்ப்பு பெற்று அணியில் இடத்தை பிடித்தார். 

    சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய இவர் சிறப்பாக செயல்பட்டார். அவரது தொடையை தட்டும் டிரேடு மார்க் ஸ்டைல் கொண்டாட்டத்துக்கு என தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதை வைத்து தான் அவருக்கும் கப்பார் தவான் என்னும் புனைப்பெயர் கிடைத்தது.



    இந்நிலையில் தவான் தனது டிரேடு மார்க் கொண்டாட்டத்தின் ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தவான் கூறுகையில், எனக்கு கபடி விளையாட்டு மிகவும் பிடிக்கும். அதனால் தான் எனது மகிழ்ச்சியை எப்போதும் அந்த ஸ்டைலில் (தொடையை தட்டி) கொண்டாடுகிறேன். முதலில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு போட்டியின்போது கேட்ச் பிடித்து வாட்சனை ஆட்டமிழக்க செய்த போது அவ்வாறு செய்து எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அதுவும் பவுண்டரி கோட்டுக்கு அருகே நிற்கும் போது எனது அந்த ஸ்டைலை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள், என்றார். #ShikharDhawan #gabbarstylecelebration


    தெலுங்கானா உதயமான தின விழாவில் பங்கேற்ற முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், மாநில விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டத்தை அறிவித்தார். #Telangana #FourthFormationDay
    ஐதராபாத்:

    ஒன்றுபட்ட ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இந்தியாவின் 29-வது மாநிலமாக உதயமான தெலுங்கானாவின் முதல் முதல்-மந்திரியாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சித்தலைவர் சந்திரசேகர் ராவ் பதவி வகித்து வருகிறார்.

    இந்த மாநிலம் உதயமான 4-வது ஆண்டு தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    செகந்திராபாத் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு சார்பில் காலையில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் மாநில அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்தும் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தெலுங்கானாவை, தங்க தெலுங்கானாவாக மாற்றும் லட்சியத்தை நிறைவேற்றும் நோக்கில் மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் விவசாயத்தை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், விவசாயிகளின் வளர்ச்சிக்காகவும் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    குறிப்பாக விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதுடன், விவசாயிகளின் டிராக்டருக்கான சாலை வரியும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய ஆட்சிக்காலங்களில் புறக்கணிக்கப்பட்டு இருந்த நீர்ப்பாசனத்துறை, தற்போது கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு உள்ளது.

    மாநில விவசாயிகளுக்கு மற்றுமொரு சிறப்பு திட்டமாக ரூ.5 லட்சத்துக்கான காப்பீடு திட்டம் தொடங்கப்படும். எல்.ஐ.சி.யுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கான பிரிமியத்தை மாநில அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டத்தில் இணைக்கப்படும் விவசாயி இறந்து விட்டால், 10 நாட்களுக்குள் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.

    மாநில அரசு செயல்படுத்தி வரும் ‘கல்யாண லட்சுமி’, ‘ஷாதி முபாரக்’ திட்டங்கள் மூலம் ஏழை பெண்களின் திருமணத்துக்கு தலா ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பீடி தொழிலாளர்களுக்கும், ஆதரவற்ற பெண்களுக்கும் ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    தெலுங்கானாவில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இவ்வாறு சந்திரசேகர் ராவ் கூறினார்.

    இந்த நிகழ்வில், தனது 4 ஆண்டுகால ஆட்சியின் முன்னேற்ற அறிக்கையையும் அவர் வெளியிட்டார். முன்னதாக அவர் தெலுங்கானா பிரிவினை போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களுக்காக கட்டப்பப்பட்டு உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    பஞ்சாரா ஹில்சில் அமைந்துள்ள தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில உள்துறை மந்திரி நயினி நரசிம்ம ரெட்டி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இதைப்போல பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் மந்திரிகள் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தனர்.

    இதற்கிடையே தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘தெலுங்கானா மாநில மக்களின் கனவுகளும், விருப்பங்களும் வருகிற ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.  #Telangana #FourthFormationDay 
    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது செவிலியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
    பெரம்பலூர்:

    மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12-5-1820-ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையில் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12-ம் நாள் உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு செவிலியர்கள் பூக்களை தூவியும், மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர் களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக் கொருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் செவிலியர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சில செவிலியர்கள் ஒன்று சேர்ந்து தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. பின்னர் செவிலியர்கள் கட்டை விரலை உயர்த்தி தங்கள் இலக்கினை அடைவோம் என்று உறுதி எடுத்து கொண்டனர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்காக 251 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருதினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

    அந்த சிறந்த செவிலியர் விருதினை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மும்தாஜ் (வயது 52) என்ற செவிலியர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, சக செவிலியர்கள், மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகின்றனர். மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். 
    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ‘மருத்துவத் துறையில் செவிலியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் செவிலியர்கள் பாலமாக விளங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சேவை மனப்பான்மையோடு செவிலியர்கள் நோயாளிகளைப் பராமரித்து வருகிறதை நான் பாராட்டுகிறேன். மருத்துவமனையின் இதயத் துடிப்பே செவிலியர்கள் தான்’, என்றார்.

    நிகழ்ச்சியின்போது செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின விழா உறுதிமொழி எடுத்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ‘கேக்’ வெட்டி செவிலியர்கள் அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவ நிலைய அதிகார் டாக்டர் இளங்கோ, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
        
    கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்பட்ட புதிய மணல் குவாரிக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து திருமானூரில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    திருமானூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு புதிய மணல் குவாரி தொடங்க உள்ளதாக கடந்த மாதம் அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கிய திருமானூர் ஒன்றியப்பகுதி மக்கள், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி தொடங்க கூடாது என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    ஆனாலும், பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே புதிய மணல் குவாரி கடந்த 4-ந் தேதி போலீசார் பாதுகாப்புடன் தொடங்கப்பட்டது. அன்றே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு இயக்கம், அனைத்து விவசாயிகள் சங்கம், அனைத்து அரசியல் கட்சியினர் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டம், சாலை மறியல், சுடுகாட்டில் குடியேறுதல், கடையடைப்பு, கையெழுத்து இயக்கம், கலெக்டர் அலுவலகம் முன்பு ரேஷன் கார்டுகளை கீழே போட்டும், கலெக்டரிடம் ஒப்படைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

    மேலும், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில், கொள்ளிடம் ஆற்றில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும், எனவே மணல் குவாரியை அமைக்க தடைசெய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இதனை நேற்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் தொடங் கப்பட்ட மணல் குவாரிக்கு ஜூன் 5-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இதையடுத்து கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் திருமானூர் பஸ் நிலையம் முன்பு பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில், தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், ம.தி.மு.க. வாரணவாசி ராஜேந்திரன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல், கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழு பொறுப்பாளர்கள் தனபால், முத்துக்குமரன் உள்பட பலர் கொண்டனர். மேலும் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தர தடை உத்தரவு வரும் வரை எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
    ×