search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 133626"

    ஊட்டி அரசு கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்களை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாக உயர் கல்விதுறைக்கு தொடர்ச்சியாக புகார் சென்றது.

    புகாரின் அடிப்படையில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களின் பணி பதிவேடு, சான்றிதழ் ஆகியவற்றின் உண்மை தன்மை சரிபார்க்க உத்தரவிடப்பட்டது.

    மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இதனை ஆய்வு செய்தனர். அப்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும் நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முனைவர் பட்டம் முடித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கல்லூரி கல்வி இயக்குனர் அறிவுறுத்தலின் பேரில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்கள் மீது ஊட்டி அரசு கலை கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியாவிடம் புகார் அளித்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்த 2 பேராசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    இதனையடுத்து நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் போலி சான்றிதழ் சமர்ப்பித்த நாகேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews
    புதுவை அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கல்லூரி குடியிருப்பில் வசிக்க தடை விதிக்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை குரும்பாபேட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் அங்குள்ள ஆசிரியர் குடியிருப்பிலேயே வசித்து வந்தார். இதன் அருகே மாணவிகள் விடுதி உள்ளது. அந்த மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    அந்த கல்லூரியில் மும்பையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். அவர் நடந்து சென்றபோது பேராசிரியர் ஆபாச சைகை செய்தார். இதை ரகசியமாக படம் பிடித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.

    இதுசம்பந்தமாக டீன் ராம்குமார் மேற்பார்வையில் விசாரணை நடத்து வருகிறது. இதற்கிடையே பேராசிரியரை குடியிருப்பில் இருந்து வெளியேறும்படி நிர்வாகத்தினர் உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.

    இந்த நிலையில் சம்பவம் பற்றி அறிந்து மாணவியின் பெற்றோர் மும்பையில் இருந்து வந்துள்ளனர். அவர்களும் பேராசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டனர்.

    தவறு செய்தது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அவரை சஸ்பெண்டு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேற்கொண்டு போலீசில் புகார் கொடுப்பதா? இல்லையா? என்பது பற்றியும் முடிவு எடுக்க உள்ளனர்.

    இதுபற்றி டீன் ராம்குமாரிடம் கேட்டபோது, இது சம்பந்தமாக ஸ்ரீகுமார் தலைமையில் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அறிக்கை வந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதற்கிடையே மேலும் சில ஆசிரியர்கள் மீதும் மாணவிகள் புகார் கொடுத்திருப்பதாக தெரிகிறது. அதன்மீதும் விசாரணை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews
    மாணவிகளை தொடர்ந்து பேராசிரியைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக பேராசிரியர் மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பணியாற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஒருவர், சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    இதையடுத்து, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதன்பிறகு, பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது.

    பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் கடந்த 8-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, பல்கலைக்கழக விசாரணைக்குழு நேற்று கல்லூரியில் விசாரணையை தொடங்கியது. முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மூலம் தான் பாலியல் புகார் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மாணவி மற்றும் சக மாணவிகளிடம் பல்கலைக்கழக குழு தனித்தனியாக விசாரணை நடத்தியது.

    இதில் ஆங்கிலத்துறை பேராசிரியர் மீது 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் புகார் கூறினர். பேராசிரியைகள் சிலரும், பேராசிரியர் மீதான குற்றச்சாட்டு உண்மைதான். பேராசிரியர் தங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியதால் விசாரணை குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.

    கல்லூரியில் 2-வது நாளாக இன்றும் விசாரணை நடந்து வருகிறது. முழு விசாரணைக்கு பிறகு, பல்கலைக்கழக துணைவேந்தரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பிறகு, பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    அரக்கோணத்தில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவள்ளுவர் பல் கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,342 மாணவ, மாண விகள் படித்து வருன்றனர்.

    கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியர் ஒருவர் மாணவிகள் சிலருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வேலூர் கலெக்டர் ராமனுக்கு புகார் சென்றது.

    இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் முருகன் கடந்த மாதம் 28-ந் தேதி கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினார். அதன் பிறகு, பேராசிரியர் மீதான பாலியல் புகார் விசாரணை கிடப்பில் போடப்பட்டது.

    மேலும், பேராசிரியை காப்பாற்றுவதற்காக மாணவ, மாணவிகளை சமரசப்படுத்தும் முயற்சியில் கல்லூரி நிர்வாகம் தீவிரமாக களமிறங்கியது. பாலியல் தொல்லை விவகாரத்தை பெரிதுப்படுத்தினால், கல்லூ ரியில் இருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்படுவீர்கள் என்று மாணவ-மாணவிகள் அச்சுறுத்தப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தவுடன் ஒன்றாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு ஊர்வலமாக சென்று காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் உள்ள சேந்தமங்கலம் ரெயில்வே கேட்அருகில் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர்.

    தகவலறிந்துவந்த நெமிலி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லிங்கம் மற்றும் போலீசார், கல்லூரி முதல்வர் கவிதா ஆகியோர் மாணவ, மாணவிகளை கலைந்து கல்லூரிக்கு செல்லுமாறு எச்சரித்தனர்.

    போராட்டத்தை கைவிட மறுத்தால், கல்லூரியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீண்டும் எச்சரித்தனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர், மாணவிகளுக்கு ஆதரவாக திரண்டு போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர்.

    பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவிகளை மிரட்டுவதில் அர்த்தமில்லை. உங்கள் வீட்டு பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினை என்றால் ‘சும்மா விட்டு விடுவீர்களா’ என்று கேள்வி எழுப்பிய பெண்கள், புகார் சம்பந்தமாக பேராசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் அரசு கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீதான புகார் குறித்து துணைவேந்தர் முருகன் விசாரணை நடத்தினார்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த ஆட்டுப்பாக்கத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    இக்கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் ‘வாட்ஸ் அப்’ மூலமும், நேரிலும் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த மாணவி அதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்துள்ளார்.

    மாணவியின் புகார் குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் அந்த பேராசிரியர் தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த மாணவி திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் முறையிட்டுள்ளார்.

    இதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் முருகன், ஆட்டுப்பாக்கம் கல்லூரிக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    இதுகுறித்து துணைவேந்தர் முருகன் கூறியதாவது:-

    பேராசிரியர் மீது கூறப்பட்ட புகார் குறித்து முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு பல்கலைக்கழக கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்றார்.

    வகுப்பறையில் அனைவரின் முன்பும் பேராசிரியர் கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள ஆதனக் குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தட்சிணாமூர்த்தி (வயது 18). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 6-ந்தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருமணத்தில் பங்கேற்று விட்டு 7-ந்தேதி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் பெற்றோருக்கு போன் எதுவும் பண்ணவில்லை. பெற்றோர் தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. 

    இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொழுதூர் கல்லூரிக்கு சென்று பார்த்த போது அங்கும் தட்சிணா மூர்த்தியை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணாடம் பஸ் நிலையத்தில் தட்சிணா மூர்த்தி நிற்பது தெரியவந்தது. அங்கு சென்ற உறவினர்கள் அவரை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து சென்றனர். 

    இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தட்சிணாமூர்த்தி திடீரென விஷம் குடித்து விட்டார். உயிருக்கு   போராடிய அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு  ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தட்சிணாமூர்த்தி இறந்தார்.
     
    இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி தளவாய் போலீசில் புகார் செய்தார். புகாரில், கல்லூரி பேராசிரியர் தாக்கியதால் தட்சிணா மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி கல்லூரிக்கு சென்ற தட்சிணாமூர்த்தியிடம் அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர்  6-ந் தேதி ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளதோடு, கன்னத்தில் மாறி மாறி அறைந்ததாக கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் மத்தியில் தன்னை அடித்ததால் மனமுடைந்து தட்சிணாமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக என கூறப்படுகிறது. 

    இந்த காரணத்திற்காகத் தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவரும் சென்னையை சேர்ந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    விடுதி காப்பாளர்களாக உள்ள பேராசிரியைகள் மைதிலி, புனிதா பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்ததாக மாணவி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் 5 பேர் குழு கடந்த மாதம் 24-ந் தேதி திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் விசாரணை நடத்தியது.

    கல்லூரி முதல்வர், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியைகள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் விசாரணை நடத்தி வீடியோக பதிவு செய்தனர்.

    பின்னர், விசாரணை அறிக்கையை வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமியிடம் சமர்பித்தனர். முதற்கட்ட விசாரணையின் போது பாதிக்கப்பட்ட மாணவியை ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு அழைத்தது.

    அப்போது, மாணவி நீதிமன்ற அனுமதிபெற்று விசாரணையில் பங்கேற்பதாக தெரிவித்தார். இதனால், மாணவியிடம் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக மாணவிக்கு 31-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு சம்மன் அனுப்பியது.

    நீதிமன்ற அனுமதி பெற்று மாணவி நேற்று மதியம் 1 மணிக்கு வேளாண் கல்லூரி வளாகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு ஆஜரானார். மாலை 5.30 மணிவரை சுமார் 4 மணி நேரம் மாணவியிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணை முழுவதும் ஒழுங்கு நடவடிக்கை குழு வீடியோவில் பதிவு செய்தது. தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து மாணவி விரிவாக விளக்கமளித்தார். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை, துணை வேந்தரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது.

    இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரியை விட்டு வெளியேறுமாறு கோ‌ஷம் எழுப்பினர். இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

    தனது வகுப்பறைக்கு சென்று அமர்ந்தார். அப்போது, வகுப்பறையில் இருந்த சக மாணவ, மாணவிகளை பேராசிரியைகள் ‘வாருங்கள் வெளியே போகலாம். அந்த மாணவி மட்டும் தனியாக இருக்கட்டும்’ என்று கூறி அனைவரையும் வெளியே அழைத்து சென்றனர்.

    இதேபோல் மற்ற வகுப்புகளில் இருந்த மாணவ, மாணவிகளையும் பேராசிரியைகள் வெளியே அழைத்து செல்வதாக கூறினர். மாணவி மட்டும் தனது வகுப்பறையில் தனியாக அமர்ந்திருந்தார். பாலியல் புகார் கூறிய மாணவியை வகுப்பறையில் இருந்து வெளியேற்றினால் தான் நாங்கள் உள்ளே வருவோம் என்று பேராசிரியைகளும், மாணவ, மாணவிகளும் கூறினர்.

    இதையடுத்து, மாணவி வலுகட்டாயமாக கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால், அவருடைய படிப்பு கேள்வி குறியாகியுள்ளது. மாணவி கூறியபோது, பாதிக்கப்பட்ட எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பமுடியவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

    இதையறிந்த வாழவச்சனூர் கிராமமக்கள் ஏராளமானோர் மாணவிக்கு ஆதரவாக கல்லூரி முன்பு திரண்டனர். கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்களை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
    வழக்கை வாபஸ் பெற பணம் தருவதாக பேராசிரியர் தரப்பினர் மிரட்டுகின்றனர் என்று திருவண்ணாமலை கல்லூரி மாணவி குற்றம் சாட்டியுள்ளார். #ChennaiStudentharassment #AgriCollege

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வரும் சென்னை மாணவி, உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    விடுதியின் பெண் காப்பாளர்களான பேராசிரியைகள் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். இது சம்மந்தமாக நீதிபதி மகிழேந்தியிடம் மாணவி வாக்கு மூலம் அளித்தார். அதன் அடிப்படையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழகம் சார்பிலும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வருமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த மாணவி தனது பெற்றோருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா விசாரணை நடத்தினார். அப்போது பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளனர்.

    மேலும் மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்தும் போலீசார் அந்த மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக புகார் வாங்கினர். விசாரணை முடிந்து அந்த மாணவி மற்றும் அவரது பெற்றோர் சுமார் 5 மணி நேரம் கழித்து அங்கிருந்து வெளியே வந்தனர்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி நிருபர்களிடம் கூறுகையில்:-

    பாலியல் தொந்தரவு தொடர்பான புகாரில் போலீஸ் விசாரணை தனக்கு திருப்தி அளிக்கவில்லை, இது ஒருதலைப்பட்சமாக உள்ளது. என் மீது தவறு உள்ளது போலவே என்னை குறிவைத்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர். உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சார்பில் இருந்து வழக்கை வாபஸ் பெறக்கோரியும், இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் மிரட்டுகின்றனர் என்றார்.

    ‘‘முதலில் இந்த சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை மறைப்பதற்காக போலீசார் செயல்பட்டனர். ஆனால் இதில் நீதிமன்றம் தலையிட்ட பிறகு தான் போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரம் காட்டி உள்ளனர். இதனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

    இந்நிலையில், இது குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    5 பேர் கொண்ட குழுவினர் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் விடுதி வார்டன்கள் உதவி பேராசிரியர்கள் மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    பின்னர், கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளிடமும் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடித்து வெளியே வந்த உதவி பேராசிரியர் தங்க பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் எந்த தப்பும் செய்யவில்லை. என்னை ஊடகங்கள் தவறாக சித்தரித்து விட்டதால் நான் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளேன் என்றார்.

    மாணவி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதாவிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பேராசிரியர் தங்கபாண்டியன் மற்றும் பேராசிரியைகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. #ChennaiStudentharassment #AgriCollege

    ×