search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம்"

    மத்திய அரசின் 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. #DMK #CentralGovernment

    சென்னை:

    மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப் பிரிவில் இருந்து 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வந்தது.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்து மத்திய அரசு அரசாணையும் பிறப்பித்துள்ளது.

    இந்த நிலையில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது. தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளரும், சட்டத்துறை செயலாளருமான ஆர்.எஸ். பாரதி இதற்கான மனுவை தாக்கல் செய்துள்ளார்.

     


    அதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது முற்றிலும் சட்ட விரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. #DMK #CentralGovernment

    நீதிமன்றம்- போலீசாரை விமர்சித்து பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என்று டி.கே.ரெங்கராஜன் எம்பி தெரிவித்துள்ளார். #hraja
    திருச்சி:

    திருச்சியில் ஓய்வூதியர்கள் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சி எம்.பி., டி.கே.ரெங்கராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசாகவும், வேலை வாய்ப்பு உருவாக்காத அரசாகவும், விவசாயிகளின் நலன் காக்காத அரசாகவும் உள்ளது. பா.ஜ.க. தமிழகத்தில் பெரிய கட்சி கிடையாது. ஆனால் அ.தி.மு.க.வையும், காவல்துறையையும் கைக்குள் வைத்து கொண்டு பெரியார் சிலையை அவமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    சமீபகாலமாக பா.ஜ.க. தேசிய செயலாளர்  எச்.ராஜா, நீதிமன்றம், காவல்துறை பற்றி அவதூறாக பேசி வருகிறார். தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது தவறு. அவருக்கு ஆதரவாக மாநில அமைச்சர்கள் செயல்படுகின்றனர்.  எச்.ராஜாவின் கருத்துக்கள் ஜனநாயகத்தை சீர்குலைப்பதாக உள்ளது . இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள்  ஒன்றிணைய வேண்டும்.

    ஆர்ப்பாட்டம் நடத்தினாலே கைது செய்யும் அரசு, கோர்ட்டு, காவல்துறை பற்றி பேசிய எச்.ராஜாவை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் பொதுமக்கள், லாரி ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

    விலைவாசி உயர்வால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே  வருகிறது. இதனால் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள். எனவே பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #hraja
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான ஊழல் வழக்குகளை அடுத்த 6 வாரத்துக்குள் முடிக்க வேண்டும் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Pakistan #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷரிப் மீது 3 ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. லண்டனில் சொகுசு இல்லம் வாங்கிய வழக்கில், நவாஸ் ஷரிப், மகள் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவர் என 3 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து, நவாஸ் ஷரிப் மீது அல்-அஜீஜியா எஃகு ஆலை உட்பட மேலும் 2 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை முடிக்க இதுவரை 4 முறை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி முகமது அர்ஷத் மாலிக், கால அவகாசம் வேண்டி கடந்த வாரம் எழுத்துப்பூர்வமான மனுவை உச்சநீதிமன்றத்தில் அளித்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று துவங்கியது. இந்த விசாரணையில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்த விசாரணையின் போது, வாரம் ஒருமுறை விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 6 வாரங்களுக்குள் நவாஸ் ஷரிப் மீதான வழக்குகளை விசாரித்து முடிக்குமாறு தலைமை நீதிபதி சகிப் நிசார் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. #Pakistan #NawazSharif 
    அவதூறு வழக்கை முடித்து வைப்பதற்காக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #Karunanidhideathcertificate #Karunanidhi
    சென்னை:

    முரசொலி பத்திரிகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி கடந்த 2015-ம் ஆண்டு ஒரு கட்டுரை எழுதினார்.

    4 ஆண்டு ஆட்சியில் ஜெயலலிதா சாதித்தது என்ன? என்ற தலைப்பில் எழுதிய அந்த கட்டுரையில் ஜெயலலிதா குறித்து சில விமர்சனங்களை செய்திருந்தார். இதையடுத்து அவர் மீது ஜெயலலிதா சென்னை மாவட்ட கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இதுபோல கருணாநிதி மீது ஜெயலலிதா கடந்த 2011-ம் ஆண்டு முதல் 13 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 7-ந்தேதி கருணாநிதி மரணமடைந்தார்.


    இதையடுத்து அவர் மீதான வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் கருணாநிதியின் வக்கீல் குமரேசன் மனு செய்தார். அதற்கு கருணாநிதியின் இறப்பு சான்றிதழை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தபோது வக்கீல் குமரேசன் ஆஜராகி, கருணாநிதியின் இறப்பு சான்றிழை தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கருணாநிதி மீது நிலுவையில் உள்ள 13 அவதூறு வழக்குகளையும் வருகிற அக்டோபர் 1-ந்தேதி விசாரணைக்கு எடுப்பதாக கூறினார். அன்று அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #Karunanidhi
    மத்திய பிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுமியை கற்பழித்த வழக்கை 3 நாட்களில் விசாரித்து குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் தரேட் என்ற கிராமத்தில் 6 வயது சிறுமியை மோதிலால் அஹிர்வால் என்ற 25 வயது இளைஞர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். சம்பவத்தின்போது கையும் களவுமாக சிறுமியின் பெற்றோரிடம் பிடிபட்டார்.

    இதையடுத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மோதிலால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு எதிராக 11 சாட்சியங்களை மிகவும் தீவிரமாக விசாரித்த நீதிமன்றம், மூன்றே நாட்களில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    இதுபோன்று அனைத்து நீதிமன்றங்களும் விரைவாக குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையை வழங்கினால் குற்றங்களை வெகுவாக குறைக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    வருகிற 6-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை வெளியிடாவிட்டால் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது என்று தி.மு.க. வக்கீல் பி.வில்சன் கூறியுள்ளார்.
    சென்னை:

    உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணையை வருகிற 6-ந்தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று தமிழக தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்த வழக்கில் அதிரடி திருப்பமாக இது அமைந்துள்ளது.

    இந்த வழக்கில் தி.மு.க. சார்பில் ஆஜரான வக்கீல் பி.வில்சனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கம் வருமாறு:-


    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் 3 முறை உத்தரவு பிறக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் கோர்ட்டின் உத்தரவை அவமதிப்பு செய்வதாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தி.மு.க. சார்பில் தொடரப்பட்டது.

    இதில் வருகிற 6-ந்தேதி கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடம் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். இது கடைசி வாய்ப்பு என்றும் நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள்.

    உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் ரூ.4000 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போய்விட்டது. இதற்கு யார் காரணம். தேர்தல் ஆணையத்தின் தாமதமான செயல்பாட்டால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் கிடைக்காமல் போய்விட்டது.

    இனியும் தேர்தலை தாமதம் செய்யக் கூடாது கோர்ட்டு உத்தரவின்படி 6-ந்தேதி தேர்தல் அட்டவணையை சமர்ப்பிக்காவிட்டால் மாநில தேர்தல் அதிகாரிகள் நீதிமன்ற தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பாகிஸ்தானில் ஆளும் நவாஸ் ஷரிப்பின் கட்சி வேட்பாளர் ஹனிப் அப்பாஸிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் போட்டியிட்ட தொகுதியில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PakistanGeneralPolls #HanifAbbasi
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நவாஸ் ஷரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த மாதம் 25-ம் தேதி பாகிஸ்தானில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் சார்பில் என்.ஏ 60 என்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஹனிப் அப்பாஸிக்கு போதை மருத்து தயாரித்தல் மற்றும் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நவாஸ் ஷரிப்பின் நண்பருமான அப்பாஸி மீது 2012-ம் ஆண்டு போதை மருந்து தடுப்பு பிரிவு போலீசாரால் வழக்கு தொடரப்பட்டது. சுமார் 500 கிலோ வேதிப்பொருளை போதைப்பொருளாக மாற்றி விற்பனை செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.



    இதையடுத்து, கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு, அப்பாஸி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இவர் நவாஸ் ஷரிப் அடைக்கப்பட்டுள்ள அதே அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அப்பாஸி போட்டியிட இருந்த என்.ஏ 60 தொகுதியில் வாக்குப்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், பொதுத்தேர்தல் முடிந்த பிறகு அந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்படும் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #PakistanGeneralPolls #HanifAbbasi
    கணவர் மீதான வன்கொடுமை வழக்கில் ஆஜராவதற்காக இன்று சூரத் நீதிமன்றத்துக்கு வந்த 27 வயது இளம்பெண் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் லிம்பயாத் காவல்நிலையத்தில் தனது கணவர் கொடுமை செய்வதாக சில்பா லால்சந்த் சிங் என்ற 27 வயது பெண் அளித்திருந்த புகார் மீது இன்று சூரத் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ஆஜராவதற்காக சில்பா லால்சந்த் சிங் நீதிமன்றம் வந்தடைந்தார்.

    அப்போது, தீடீரென நீதிமன்றத்தின் 9-வது மாடியில் இருந்து சில்பா குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அவரது உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    நீதிமன்றத்தின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gujarat
    எட்டு வழி பசுமை சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பா.ம.க. சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். #PMK #Ramadoss #ChennaiSalemGreenExpressway
    கம்பைநல்லூர்:

    அரூர் வட்டம், முத்தானூர் (எம்.தாதம்பட்டி) கிராமத்தில் எட்டு வழி பசுமை விரைவுச் சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

    இந்த மக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் தருமபுரி பா.ம.க. எம்.பி. டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

    பசுமை வழியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு ரூ.40 முதல் ரூ.80 ஆயிரமும், விவசாய நிலங்களுக்கு ஒரு ஹக்டேருக்கு ரூ. 9 கோடி வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    சென்னை அருகேயுள்ள நிலங்களுக்கு கூட அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையிலும் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். காய்ந்து போன தென்னை மரங்களுக்கு தற்போது மாநில அரசு ரூ.105யை வழங்கி வருகிறது. ஆனால் பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவது முற்றிலும் பொய்யானது.

    உளுந்தூர்பேட்டை வழியாக செல்லும் சென்னை சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் பலருக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. ஆனால், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளை மூளைச்சலவை செய்து மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகிறது.



    பசுமை வழிச்சாலை அமைந்தால் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் தான் நிலத்தடியில் சிறு பாலங்கள் இருக்கும். சாலையின் குறுக்கே மக்கள் நடந்து கூட செல்ல முடியாது. சாலையின் இருபுறமும் கம்பி வேலிகள் அமைக்கப்படும்.

    அதேபோல், சென்னை முதல் சேலம் வரையிலும் 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும். இந்த சாலையில் செல்ல வேண்டுமெனில் கட்டணம் செலுத்த வேண்டும். பசுமை வழி விரைவுச் சாலையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. எட்டு வழி பசுமை விரைவுச் சாலையால் ஓரிரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணத் தொலைவில் குறையும். பசுமை சாலையில் சென்னைக்கு சென்றால் 5.30 மணி நேரம் ஆகும். ஆனால், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாக செல்லும் சேலம் முதல் சென்னை வரையிலான சாலையில், சென்னைக்கு சென்றால் 4.30 மணி நேரம் ஆகும். எனவே, எட்டு வழி விரைவுச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, அதற்கு மாற்றாக வாணியம்பாடி வழியாக செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான தார் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம்.

    பசுமை வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துக் கேட்புக்கு பிறகு, எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றார்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMK #Ramadoss  #ChennaiSalemGreenExpressway
    நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று சம்மதம் தெரிவித்துள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings
    புதுடெல்லி:

    வழக்கு விசாரணைகளில் ஒளிவு, மறைவற்ற தன்மைக்காக நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும்.

    குறிப்பாக, டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் விசாரணைகளை நேரடியாகவும், பதிவு செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பவும் மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழக மாணவரான சுவப்னில் திரிபாதி என்பவர்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்து குறித்து விளக்கம் அளிக்குமாறு கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.  

    நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பும் வழக்கம் வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளதாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இதை ஏற்றுகொண்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு, நீதிமன்றங்களிலும் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்புவது தொடர்பாக தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் பரிந்துரைக்குமாறு மத்திய அரசையும், வழக்கு தொடர்ந்தவரையும் அறிவுறுத்தியுள்ளது. #Livestreaming #Livestreamingofcourtproceedings
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy

    மதுரை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனநாயக நாட்டில் போராட்டம் என்பது அறவழியில் நடத்தப்படுவதாகும். மகாத்மா காந்திகூட அறவழியில் போராட்டம் நடத்தியவர்தான்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சுகாதாரகேடு காரணமாக போராட்டம் ஏற்பட்டது. சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்கள் என்ன சமூக விரோதிகளா?

    தமிழக அரசு காவல் துறை மூலமாக மாநிலம் முழுவதும் அராஜகத்தை கட்டவிழ்த்துள்ளது. மத்திய அரசு, தாய் கோழிக்குஞ்சை பாதுகாப்பது போல தமிழக அரசை காப்பாற்றி வருகிறது.

    எங்கள் கட்சிக்காரர்களை தீவிரவாதி போல கைது செய்யும் தமிழக காவல் துறை, எஸ்.வி.சேகரை கைது செய்ய பயப்படுகிறது.

    இரண்டு மந்திரிகள் உள்பட எம்.எல்.ஏ.க்கள் சிலர் எங்களிடம் வருவதாக வரும் தகவல் காற்றில் வரும் செய்தியாகும். இதற்கு நான் பொறுப்பல்ல.

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை பொறுத்தவரை தமிழக அரசு முதலில் நில உரிமையாளர்களிடம் பேசவேண்டும். இந்த திட்டத்தால் அவர்களுக்கு பாதிப்பு இல்லையென்றால் தாராளமாக திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குள் ஏன் இந்த அவசரம்?

    சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக அறவழியில் போராடிய நடிகர் மன்சூர்அலிகான், சமூக ஆர்வலர்கள் வளர்மதி, பியூஸ்மானுஷ் ஆகியோரை கைது செய்ததில் என்ன நியாயம் இருக்கிறது?

    குட்கா வி‌ஷயத்தில் விரைவில் நீதி வழங்கப்பட வேண்டும். இதற்காக அந்த வழக்கை துரிதப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

    தமிழக சட்டசபையில் அம்மாவின் படத்தை முனிசிபாலிட்டியில் திறந்து வைத்தது போன்று திறந்து வைத்தனர். இது அம்மாவை இழிவுபடுத்துவது போன்றதாகும். எனவேதான் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தை பொறுத்தவரை நான் நீதிமன்றத்தை நம்புகிறேன். கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

    ஆர்.கே. நகர் தேர்தலில் நான் (தினகரன்) தோற்று விடுவேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொன்னார். அது நடந்துவிட்டதா என்ன?


    விவசாயி மகன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்து அறவழியில் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழக அரசு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்திருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக டி.டி.வி. தினகரன் மதுரை கீரைத்துறையில் கொலையுண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வட்ட செயலாளர் முனியசாமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். #18mlasdisqualified #dinakaran #edappadipalanisamy

    மாணவிகளுக்கு பாலியல் வரை விரித்த வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை மீண்டும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #AruppukottaiProfessor #NirmalaDevi
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த மாதம் 16-ந் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

    நிர்மலா தேவி கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியையும் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் நிர்மலாதேவி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை 23-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் (எண்2) உத்தரவிட்டுள்ளது.

    நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு இன்று விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, அவருக்கு ஜாமீன்  வழங்க எதிப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    முன்னதாக கருப்பசாமியின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #AruppukottaiProfessor #NirmalaDevi
    ×