search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடிக்கணினி"

    அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

    அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும்.

    10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த 1,000 மாணவ- மாணவிகளை மருத்துவ மேல்படிப்புக்கு தேர்வாக வைப்பதே எங்களது இலக்கு.

    அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பிப்ரவரியில் மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்.

    அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உலக அளவில் தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயர அன்றைய வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் செல்போன் மூலமாக ‘‘யூ டியூப்பில்’’ பார்க்கலாம். அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடங்களை படிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan
    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெ.ஜெ.நகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, தானியங்கி வருகை பதிவேடு துவக்க விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வகம் திறப்புவிழா நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

    மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

    வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


    9 முதல் 12-ம்வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு இண்டெர் நெட் வசதி செய்து தரப்படும்.

    8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.

    வரும் காலங்களில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில் ‘ஸ்கில் டிரெய்னிங்’ எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது.

    இன்று ஜி.எஸ்.டி.எனும் வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 135 மக்களில் 25 சதவிதம் பேர் வரி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு ஆடிட்டர் எனும் பட்டயகணக்கர் 10 லட்சம் பேர் தேவை. ஆனால் 2.85 லட்சம் பேர்தான் ஆடிட்டர் என்னும் பட்டயகணக்கர் உள்ளனர். எனவே தமிழக அரசு சார்பில் பிளஸ்-2 முடித்த மாணவர்கள் 5000 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சார்ட்டட் அக்கவுண்ட் எனும் சிறப்பு வகுப்புகள் மூலம் அவர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர்பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பா.பென்ஜமின், மாபா.க.பாண்டியராஜன், அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான வி. அலெக்சாண்டர், மாவட்ட கல்வி அதிகாரி முனைவர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    மேலும் மாவட்ட அவை தலைவர் காசு ஜனார்தனம், பகுதி செயலாளர் என்.அய்யனார், டன்லப் வேலன், கிருஷ்ணன், கே.பி.முகுந்தன், எம்.டி.மைக்கேல்ராஜ், எல்.என்.சரவணன், இ.ஆர்.கே.உமாபதி, கேபிள் ராஜசேகர், முகப்பேர் இளஞ்செழியன், சிமியோன் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர். #TNMinister #Sengottaiyan #Laptops
    திண்டிவனம் அருகே தழுதாளி பள்ளியில் வழங்கப்பட்ட இலவச சைக்கிளில் கர்நாடக அரசு முத்திரை வந்தது எப்படி? என்று கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். #FreeCycles
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தழுதாளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1-ந்தேதி மாணவ- மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.

    மாணவர்களுக்கு வழங்குவதற்காக பள்ளி வளாகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில சைக்கிளின் முன்புற கூடையில் வட்ட வடிவில் இருந்த முத்திரையில் மாணவி ஒருவர் படிப்பதுபோன்ற படம் இருந்தது. கன்னட மொழியில் ‘சார்வசனிகா சிக்சனா இலாகே, கர்நாடக சர்காரா’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் முத்திரையில்லாமல் கர்நாடக மாநிலத்தின் முத்திரையுடைய சைக்கிள்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கர்நாடக அரசு, அந்த சைக்கிள்களை தரமற்றவை என்று கூறி நிராகரித்துவிட்ட நிலையில் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் கூறினர்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 204 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு 59,856 விலையில்லா சைக்கிள்கள் வழங்க ஒப்புதல் பெறப்பட்டது. அவற்றில் இதுவரை 39,542 சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளது. தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 600 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    இவற்றில் 10 சைக்கிள்களில் மட்டும் கர்நாடக மாநில முத்திரை கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கூடை தவறுதலாக பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் சைக்கிள்கள் ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 12 கூடைகள் அடங்கிய 1 பெட்டி வீதம் 15 பெட்டிகளில் 180 கூடைகள் விழுப்புரம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவைகளில் தழுதாளி அரசு பள்ளியில் 10 சைக்கிள்களிலும், தைலாபுரம் அரசு பள்ளியில் 5 சைக்கிள்களிலும், கொந்தமூரில் 66 சைக்கிள்களிலும், கிளியனூரில் 18 சைக்கிள்களிலும், கரசானூரில் 81 சைக்கிள்களிலும் கர்நாடக அரசின் முத்திரை பொருத்தப்பட்டது கண்டறியப்பட்டு அவை உடனே அகற்றப்பட்டது. மற்றபடி கூடையை தவிர சைக்கிளின் மற்ற உதிரிபாகங்கள் அனைத்தும் தரமாக தமிழகத்திற்காக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். தற்போது அந்த சைக்கிள்களில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #FreeCycles
    வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். #TNMinister #Sengottaiyan
    கோபி:

    கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா இன்று நடந்தது.

    மாவட்ட கலெக்டர் கதிரவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார்.

    அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 723 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

    தமிழகத்தில் 11 லட்சத்து 11 ஆயிரம் சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.


    மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும்.

    மேலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது. இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும்.

    தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. யூடிப் மூலம் மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும்.

    மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவர் அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    இன்னும் ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி கற்றுக்கொள்ளாத மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கூறியுள்ளார்.
    காட்மாண்டு:

    நேபாளத்தில் கே.பி. சர்மா ஒளி, கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக பிரதமர் ஆகி உள்ளார். அவர் அந்த நாட்டில் அதிரடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறி உள்ளார். அந்த வகையில் இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம், காகிதம் பயன்படுத்தாத அலுவலகமாக மாறும் என்று அறிவித்து உள்ளார். எல்லாமே கணினிமயமாகி விடும்.

    கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே மடிக்கணினி மூலமாகவே விவாதிக்கப்படுமாம்.

    மடிக்கணினியை இயக்குவது எப்படி என்பதை மந்திரிகள், தங்கள் உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.

    அப்படி 6 மாதங்களுக்குள் மந்திரிகள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டியது (பதவி நீக்கம்) நேரும் என்றும் அவர் வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.
    மத்திகிரி அருகே முகத்தில் மிளகாய் பொடி தூவி தொழில் அதிபரிடம் பணம், மடிக்கணினி திருடிய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    மத்திகிரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு காந்திநகரை சேர்ந்தவர் ரோகித்கோயல் (வயது 42). தொழில் அதிபர். இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக காரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரிக்கு வந்தார்.

    மத்திகிரி அருகே உள்ள பூனப்பள்ளி என்ற இடத்தில் வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர் காரை வழிமறித்தார். இதனால் ரோகித்கோயல் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அப்போது அந்த மர்ம ஆசாமி திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை ரோகித்கோயலின் முகத்தில் தூவினார்.

    இதனால் அவர் அலறி துடித்தார். இதைத் தொடர்ந்து அந்த நபர் காரில் இருந்த ரூ.3 லட்சம், மடிக்கணினி, 3 செல்போன்கள் ஆகியவற்றை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து ரோகித்கோயல் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொழில் அதிபரிடம் திருடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×