search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்களவை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லையே ஏன்?
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பாராளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் கேள்வி எழுப்பினார்.

    2019-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டியும் எந்தப் பணிகளும் நடைபெறவில்லையே ஏன்?

    இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதம் மற்றும் கொரோனா பெரும் தொற்று காரணமாகவும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை மறுதினத்துடன் முடிவடைகிறது.
    • நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்றத்தில் இன்று நாட்டின் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

    2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது.

    டெலிகாம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மிகவும் மோசமாக இருந்தது.

    வாராக்கடன் அதிகமாக இருந்ததால் வங்கிகள் பலவீனமாக இருந்தன.

    காமன்வெல்த் போட்டியில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை அதிகரிக்க உள்கட்டமைப்பில் காங்கிரஸ் அரசு முதலீடு செய்யவில்லை.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் முதலீடுகள் குறைந்த அளவிலேயே இருந்தன.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் விட்டுச்சென்ற சவால்களை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றிகரமாக சமாளித்தது.

    இந்தியாவை நிலையான வளர்ச்சிப் பாதையில் வைக்க கடினமான முடிவுகளை எடுத்துள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அப்போது காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

    • ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.
    • பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது என்றார் தயாநிதி.

    புதுடெல்லி:

    இடைக்கால பட்ஜெட் குறித்த விவாதம் பாராளுமன்றத்தின் மக்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது பா.ஜ.க. அரசு. ஆனால், வரலாறு காணாத அளவிற்கு வேலை வாய்ப்பின்மையை உருவாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சூறையாடிவிட்டது.

    10 ஆண்டுகளாக வாயில் வடை மட்டும்தானே சுட்டீர்கள். அதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்?

    சென்னையில் மிச்சாங் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அதி கனமழை பெய்தும் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இதுவரை தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யவில்லை ஒன்றிய அரசு.

    பா.ஜ.க. அரசு பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்கிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை.

    ஒன்றிய நிதி அமைச்சர் பேசுவது எல்லாமே உண்மைக்குப் புறம்பாக தான் இருக்கிறது.

    இடைநிலை நிதிநிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு நல்லது வரவில்லை, நாமம் தான் வந்தது. ஏழைகளுக்கு பயனில்லாத பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

    மொழியை வைத்து மக்கள் வாழ்வை சீரழித்திடும் மோடி அரசை வரும் தேர்தலில் வெளியேற்ற சபதமேற்போம் என காட்டமாக விமர்சித்தார்.

    • நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.
    • நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது.

    மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றியதாவது:-

    இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது. 10 ஆண்டுகால வலிமையான ஆட்சியின் மூலம் வலிமையான பொருளாதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாங்கள் 3வது முறை ஆட்சிக்கு வரும்போது நாடு உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். உலகின் 3வது பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனும்போது எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனர்.

    எதிர்க்கட்சிகள் விரைவில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருப்பார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்தியாவின் ஜிடிபி உலக பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு வந்துள்ளது.

    அடுத்த 30 ஆண்டுகளில் இருந்தியாவின் பொருளாதாரம் 3வது இடத்திற்கு முன்னேறும். 30 ஆண்டு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது 3வது இடத்தில் இந்தியா இருக்கும்.

    எனது மூன்றாவது முறை ஆட்சி காலத்தில் இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

    பாஜக அரசின் வேகத்தை காங்கிரஸ் கட்சியால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நகர்புறத்தில் வாழும் ஏழைகளுக்காக பாஜக அரசு 4 கோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

    பாஜக செய்துள்ள சாதனைகளை காங்கிரஸ் செய்ய 100 ஆண்டுகள் ஆகும். நாட்டின் திறமை மீது காங்கிரஸ் எப்போதும் நம்பிக்கை வைத்தது இல்லை.

    காங்கிரஸ் கொண்டுள்ள மனப்பான்மையால் நாட்டிற்கு பெரும் தீங்கு ஏற்படும். காங்கிரசுக்கு, கடுமையாக உழைக்கும் மனப்பான்மை இல்லை. 

    நாங்கள் 70 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகளை கொடுத்துள்ளோம். இதையே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்வதாக இருந்தால் 70 கோடி இணைப்புகளை வழங்க 60 ஆண்டுகள் ஆகி இருக்கும். நாங்கள் பணியாற்றும் வேகத்திற்கு இணையாக காங்கிரஸ் கட்சியால் பணியாற்றவே முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு குறிப்பிட்ட பொருளை மீண்டும் மீண்டும் அறிமுகம் செய்ய நினைத்து தோல்வியடைந்தது.

    இந்தியாவை பற்றி நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் எண்ணங்கள் மேன்மையாக இல்லை. மக்களை பற்றி சரியாக சொல்லாவிட்டாலும், இந்திரா காந்தி காங்கிரசை பற்றி சரியாக சொல்லி உள்ளார். ஒரு குடும்பத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியால் சிந்திக்கவும் முடியாது, பார்க்கவும் முடியாது.

    காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு தற்போது அவர்களின் கூட்டணியை உடைத்துவிட்டது. எங்களுக்கு தேசத்தின் திறமையின் மீது நம்பிக்கை உள்ளது மக்களின் சக்தியின் மீதும் நம்பிக்கை உள்ளது.

    3வது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை கொண்டுவந்து, நாட்டை வளர்ச்சி பாதையில் வழிநடத்தினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன்.
    • நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள்.

    பாஜக அல்லாத மாநிலங்களுக்கு நிதி பகிர்வில் ஓரவஞ்சனை காட்டப்படுவதாக காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டினார்.

    இதற்கு மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது," ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்பானிப்பது நான் அல்ல, நிதி குழு தான்.

    நிதி குழுவும் தாங்களாகவே, பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி குறித்து முடிவு செய்வதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் நிதிக்குழு நேரில் சென்று கலந்து ஆலோசனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கின்றனர்.

    நிதி குழு பரிந்துரைப்பதை தான் நான் பின்பற்றுகிறேன். நிதிக்குழுவின் பரிந்துரையை தான் ஒவ்வொரு நிதியமைச்சரும் பின்பற்றுவார்கள்.

    பிடித்த மாநிலம், பிடிக்க மாநிலத்திற்கு ஏற்றார் போல நிதியை மாற்றுவதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    • பாராளுமன்ற மக்களவைக்குள் புகுந்து வண்ண புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து இருவர்கள் திடீரென எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இடத்திற்குள் குதித்து புகைக்குண்டுகளை வீசினர். இதனால் மக்களவை அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தன. பின்னர் எம்.பி.க்கள் மக்களவை பாதுகாவர்களுடன் சேர்ந்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதேநேரத்தில் மேலும் இருவர் பாராளுமன்ற வளாகத்திலும் இதேபோன்று தாக்குதலில் ஈடுபட்டனர்.

    நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூடுதல் செசன் நீதிமன்ற நீதிபதி ஹர்தீக் கவுர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் (மனோரஞ்சன், சாகர் சர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே மகேஷ் குவாவாத் ஆகியோர் "தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக தொடர்புள்ளதா ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்றும் தெரிவித்தனர். இதற்காக தங்களுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டதாகவும் நீதிபதியுடன் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் பதில் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இந்த வழக்கின் 6-வது குற்றவாளி நீலம் ஆசாத் ஆவார்.

    • மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
    • மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்யுமாறு அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யாக இருந்த மஹுவா மொய்த்ரா, பாராளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் ஹிரா நந்தானியிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது குறித்து பாஜக எம்.பி., வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை 2023 நவம்பர் 9 அன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது.

    இப்பரிந்துரையை ஏற்ற மக்களவை, மஹுவா மொய்த்ராவை டிசம்பர் 8-ஆம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

    எம்.பி., பதவியில் இருந்து மஹுவா நீக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவை ஜனவரி 7-ஆம் தேதிக்குள் காலி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசு எஸ்டேட் இயக்குனரகம் கேட்டுக்கொண்டது.

    மஹூவா மொய்த்ரா, தனது பங்களாவை காலி செய்யாத நிலையில், இது குறித்து மூன்று நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு எஸ்டேட் இயக்குனரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனால், அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மஹுவா மனு தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், "விதிவிலக்கான சூழ்நிலைகளில் சில சிறப்புக் கட்டணங்கள் பெற்றுக்கொண்டு 6 மாதங்களுக்கு பங்களாவில் உறுப்பினர்கள் தங்க, விதிமுறைகள் அனுமதி அளிக்கின்றன. இவ்விவகாரத்தில் மஹுவாவின் கோரிக்கை மீது எஸ்டேட் இயக்குனரகம் சொந்தமாக முடிவு எடுக்கலாம். குடியிருப்பவர்களை காலி செய்ய கூறும் முன்பு, அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. இவ்விவகாரத்தில் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

    மேலும் தனது மனுவை திரும்பப் பெற மஹுவாவிற்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பல்வேறு மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
    • இரு அவைகளிலும் இந்தியா கூட்டணியின் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.

    மக்களவையில் கலர் புகை குண்டு வீசப்பட்ட சம்பவம் நடப்பு கூட்டத்தொடரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் இன்றுடன் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    மக்களவையில் 3 குற்றவியல் மசோதா, தொலைத்தொடர்பு திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    எதிர்க்கட்சிகள் இல்லாத நேரத்தில் அனைத்து முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்றி பாராளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிராக மோடி அரசு செயல்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், இரு அவைகளிலும் இந்தியா கூட்டணியின் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விதம் துரதிருஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார்.

    • பாராளுமன்ற மக்களவையில் இருவர் வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
    • இது தொடர்பாக இதுவரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பாராளுமன்ற மக்களவை பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை எம்.பி.க்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் இருவர் குதித்து வண்ண புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். அதேபோல் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் புகை குண்டுகள் வீசினார்.

    இந்த நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு மூளையாக செய்யப்பட்டவர் கைது செய்யப்பட்டார். மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சதித்திட்டம் தீட்டியது குறித்து வாட்ஸ்அப், சமூக வலைத்தள உரையாடல்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் மகனை இந்த வழக்க தொடர்பாக போலீசார் பாகல்கோட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கைது செய்யப்பட்டவர் மக்களவையில் தாக்கப்பட்ட டி. மனோ ரஞ்சனின் நண்பர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாக படித்துள்ளனர்.

    வீட்டில் இருந்து வேலைப் பார்த்துக் கொண்டிருந்த எனது சகோதரர் எந்த தவறும் செய்யவில்லை என அவரது சகோதரி தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி போலீசார் வீட்டிற்கு வந்தது உண்மை. எனது சகோதரரிடம் விசாரணை நடத்தினர். நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைப்ப வழங்கினோம். எனது சகோதரரும் மனோரஞ்சனும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். தற்போது எனது சகோதரர் வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார்" என்றார்.

    • மிமிக்ரி செய்கையை ராகுல் படம் பிடிக்கும் வீடியோ வலைதளங்களில் பரவியது
    • வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் நீங்கள் விவாதிக்கவில்லை என்றார் ராகுல்

    கடந்த டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவையில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் அவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் அலுவல் நேரத்தில் கோஷங்களை எழுப்பினர்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடப்பதாக கூறி அவர்கள் கோரிக்கை புறந்தள்ளப்பட்டது. இதனை எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏற்க மறுத்தனர். இதனால் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டனர்.

    இரு அவைகளிலும் ஒவ்வொரு நாளும் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    தற்போது வரை 140க்கும் மேல் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    நேற்று புதிய பாராளுமன்றத்தின் "மகர் துவார்" பகுதியில் பெரும்பாலான எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வந்தனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்யாண் பேனர்ஜி, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தங்கர் பேசுவதை போல் மிமிக்ரி செய்து காண்பித்தார். அதை பல எம்.பி.க்கள் நகைச்சுவையுடன் ரசித்தனர்; சிலர் தங்கள் மொபைல் போனில் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தியும் தனது மொபைல் போனில் படம் பிடித்தார்.

    இவையனைத்தும் சமூக வலைதளங்களில் பரவியது.

    நேற்று மதியத்திற்கு பின் அவை கூடிய போது, தன்னை மிமிக்ரி செய்ததையும் அதனை வீடியோ படம் எடுத்ததையும் குறித்து துணை ஜனாதிபதி மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்தார்.

    அவையில் இருந்த காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரத்திடம் "என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என மூத்த அரசியல்வாதியான உங்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும்" என கூறினார்.

    மேலும், பிரதமருடனும் பேசி தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய ஜக்தீப்பிற்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

    ஆனால், இச்சம்பவம் குறித்து பேசிய ராகுல் காந்தி தனக்கு எதிராக தேவையற்ற விமர்சனங்களை கிளப்புவதாக ஊடகங்களை விமர்சித்தார்.

    ராகுல் இது குறித்து தெரிவித்திருப்பதாவது:

    யாரை யார் அவமானப்படுத்தினார்கள்? எம்.பி.க்கள் அமர்ந்திருந்தனர். ஊடகங்களும் வீடியோ எடுத்தன; நானும் வீடியோ எடுத்தேன். என் வீடியோ எனது மொபைலில்தான் உள்ளது.

    சுமார் 150 எம்.பி.க்கள் அவைக்கு வெளியே தூக்கி எறியப்பட்டுள்ளனர். அதை குறித்து ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    அதானி குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை. ரஃபேல் குறித்தும் விவாதிக்கவில்லை.

    நாடு முழுவதும் பாதித்துள்ள வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது; அது குறித்தும் ஊடகங்கள் விவாதிக்கவில்லை.

    எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடைந்த மனதுடன் வெளியே அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களாகிய நீங்கள் மிமிக்ரி சம்பவம் குறித்து மட்டுமே விவாதிக்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிரடி நடவடிக்கையாக 141 எம்.பி.க்கள் ஒட்டுமொத்தமாக நீக்கப்பட்டனர்
    • சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் நீக்கப்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்

    நடைபெற்று கொண்டிருக்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் டிசம்பர் 13 அன்று மக்களவையிலும், பாராளுமன்ற வளாகத்திலும் நடைபெற்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இச்சம்பவம் குறித்து அவையில் விவாதம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவையிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    ஆனால், அவர்கள் கோரிக்கைக்கு ஆளும் பா.ஜ.க. செவிசாய்க்கவில்லை. மேலும், அவை நடவடிக்கைக்கு எதிராக கண்ணியக்குறைவாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு எதிர்கட்சி உறுப்பினர்கள் இரு அவைகளிலும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார்கள்.

    இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று, ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" உறுப்பினர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிற கூட்டணி கட்சி உறுப்பினர்கள், சஸ்பெண்டு ஆன எம்.பி.க்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

    போராடி வரும் உறுப்பினர்கள் "ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்" (save democracy) என எழுதப்பட்டிருந்த பேனர்களை தாங்கியபடி கோஷங்களை எழுப்பினர்.

    இப்போராட்டம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கே கூறும் போது, "பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும். சஸ்பென்ஷன் நடவடிக்கையை நீக்க வேண்டும். எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும். நான் துணை ஜனாதிபதிக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளேன். அதற்கு விரைவாக பதில் எதிர்பார்க்கிறேன்" என தெரிவித்தார்.


    ×