search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 140445"

    • விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
    • திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    திருப்பூர் :

    தருமபுரியை சோ்ந்தவா் முருகன் (வயது 38). இவா் திருப்பூா் முருகானந்தபுரத்தில் சொந்தமாக கோழிக் கடை வைத்திருந்தாா். கடந்த 2020 பிப்ரவரி 19ந்தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா். இந்த வழக்கு திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா்.

    இதில் சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்த முருகனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • சிறுமி பாலியல் வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
    • ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்

    புதுக்கோட்டை

    அறந்தாங்கி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன்(வயது 48), தொழிலாளியான இவர், 5 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பளித்தார்.அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் சிறை தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிடடார். மேலும் இந்த அபராத் தொகை மற்றும் அரசு சார்பில் 2.5 லட்சத்தை சிறுமிக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் எனவும் உத்தவில் குறுப்பிட்டுள்ளார்.

    • கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது.
    • பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அக்க ரைவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன். இவருக்கும், நல்லாத்தூர் மேலப்படுகை கிராமத்தை சேர்ந்த துர்காலட்சுமிக்கும் (வயது 35) 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரசவ த்துக்காக துர்காலட்சுமி தாய் வீட்டிற்கு சென்றார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. அங்கு துர்காலட்சுமியில் தாய் தமிழரசி (65), தந்தை பரமசிவம் (75), சகோதரர்கள் ஆண்டவர் (40), நடராஜன் (38), பாட்டி வேதவல்லி (85) ஆகியோர் உள்ளனர்.   இந்நிலையில் கடந்த 26ந் தேதி அதிகாலை, பாலுக்கு அழுத தனது 4 மாத குழந்தையை, கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் தாய், தந்தை, பாட்டி மற்றும் சகோதர்கள் 2 பேர் என 5 பேரை, மண்வெட்டியால் வெட்டிவிட்டு வீட்டின் உள்ளே சென்று சமையல றையில் இருந்த கத்தியை எடுத்து, தன்னைத்தானே கழுத்தில் அறுத்துகொண்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இரத்தவெள்ளத்தில் நடராஜன் பக்கத்து வீட்டு கதவை தட்டி சப்தம் போட்டு நடந்த சம்பவத்தை கூறி உதவிகேட்டுள்ளார்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரை யும் மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 6 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் வேதவல்லி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்         இது குறித்து நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் துர்க்கா லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில்தாய்பால் அதிகம் சுரக்காத காரணத்தால், பால் கொடுக்க முடியாமல் தவியாய் தவித்து வந்தேன். குழந்தை சதா அழுந்துகொண்டே இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் யாரும் இதற்கு உதவவில்லை. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டு குழந்தை, மற்றவர்களை கொலை செய்ய முயன்றேன். என வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொ டர்ந்து, துர்க்காலட்சுமியை கைது செய்த போலீசார் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுச்சேரி சிறையில் அடைத்தனர்.

    • எலக்ட்ரிசன் இளைஞருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டு சிறைதண்டனை
    • கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு

    கரூர்

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தில் மருதாயி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது பேரன் பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவனின் பெற்றோர் தொழிலுக்காக கரூர் காந்திகிராமத்தில் வசித்து வருகின்றனர். சிறுவன் கடந்த 27.03.2022 அன்று மாலை 6.30 மணிக்கு வீட்டருகில் உள்ள கடைக்கு சென்று பேனா, பென்சில் வாங்கி விட்டு திரும்பி வந்த போது அவரது வீட்டருகில் வசித்து வரும் ஆனந்த் (எ) அறிவானந்தன் (வயது 28) சிறுவனை அழைத்து நான் பேனா, பென்சில் வச்சுருக்கேன், நான் தரேன் வா என்று ஆசை வார்த்தை கூறி அழைத்து கொண்டு அருகில் உள்ள பள்ளிக்கு கூட்டிச்சென்று, பள்ளியின் கேட் மூடியிருந்ததால் சிறுவனை பள்ளியின் காம்பவுண்ட் மேல் ஏறி உட்கார வைத்து பின் பள்ளியின் காம்பவுண்ட் சுவர் ஏறி இறங்கி சிறுவனை இறக்கிவிட்டு பள்ளியின் வராண்டாவில் வைத்து 2ம் வகுப்பு மட்டுமே படிக்கும் சிறுவன் என்றும் பாராமல் எதிரி ஆனந்த் (எ) சிறுவனை நுழைத்தலான பாலியல் தாக்குதல் புரிந்துள்ளார். இது பற்றி வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக சிறுவனை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சிறுவன் தனது பாட்டியிடம் கூறி, பின் போன் மூலம் சிறுவனின் தாயாரிடம் சம்பவம் பற்றி கூறியுள்ளனர்.

    சிறுவனின் தாயார் தனது மகனை விசாரித்து பின் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எலக்ட்ரிசன் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்பு அவன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகின்றான்.

    இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, சிறுவனை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 3 ஆயிரம் அபராதம் விதித்தும், தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக 1,50,000 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • நிவாரண தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு தரப்பிடம் இருந்து வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆதித்யா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3½ ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிற்கு நிவாரணத் தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு திரைப்படம் இருந்து வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    • போலீசார் விசாரணை நடத்தி பினுவை கைது செய்தனர்.
    • வழக்கை விசாரித்த நீதிபதி, பினுவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள பிரமாடம் பகுதியைச் சேர்ந்தவர் பினு (வயது 26).

    இவர் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் இருந்து உள்ளார். அப்போது 15 வயது பழங்குடியின சிறுமி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பினு, மிட்டாய் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றபோது தான் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பினுவை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி, பினுவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில் போக்சோ நீதிமன்றம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாலியல் தொல்லை செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 61) இவர், அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு கடந்த, 2020-ம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின், தாய் கொடுத்த புகாரின்பேரில், கரூர் மகளிர் போலீசார், அர்ஜூனனை கைது செய்தனர், இந்த வழக்கு விசாரணை கரூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.விசாரணை முடிந்து வழங்கப்பட்ட தீர்ப்பில் அர்ஜூனனுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு உத்தரவிட்டார்.


    • இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போதகரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்ததையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர்.

    நாகர்கோவில்:

    குளச்சல் அருகே உள்ள பருத்தி விளையில் வசிக்கும் 62-வயதான ஒருவர் வீடு வீடாக சென்று மத போதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    திருமணமாகாத இவர் தாயாருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்து விட்டார். அதன்பிறகு தனியாக வசித்த அவருக்கு முகநூல் மூலம் இந்தோனேசியாவை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கி உள்ளார். இந்த நிலை யில் கடந்த டிசம்பர் மாதம் 21-ந் தேதி இந்தோனேசிய பெண்ணை குமரி மாவட்டம் அழைத்து வந்த அவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தேவா லயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

    வயது கடந்த இந்த திரு மணத்திற்கு மத போதகரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு உணவு வாங்குவதற்காக போதகர் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அந்த நேரம் அவரது உறவினர்கள் இந்தோனே சியா பெண்ணை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு வெளியே சென்ற போதகர் வீட்டிற்கு உள்ளே செல்ல முடியாத அளவில் கதவுகளையும் பூட்டினர். இதனால் போதகர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மனைவி யின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், தன்னையும் மனைவியையும் காப்பாற்று மாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் மூலம் புகார் அளித்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீ சார், போதகரின் உறவினர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் இந்தோனேசிய பெண்ணை வெளியே விட மறுத்ததோடு போத கரையும் வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். இதற்கிடையில் நள்ளிரவு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

    சுமார் 3 மணி நேரமான பிறகும் மத போதகரின் உறவினர்கள் தங்கள் நிலையில் இருந்து மாறவில்லை. எனவே போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல நேரிடும் என எச்சரித்தனர்.

    இதையடுத்து போதகரின் உறவினர்கள் கேட்டை திறந்து போலீசாரின் விசாரணைக்கு சம்மதித்தனர். அதன்பிறகு போலீசார் போதகரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததோடு, இருதரப்பினரும் குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி கூறினர்.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டனர்.

    • சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது
    • பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த வாரியங்காவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் வினோத்குமார்(வயது29). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வினோத்குமாரை கைது செய்தனர்.

    இந்்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளித்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தாரர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.7 லட்சம் வழக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வினோத்குமார் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ராஜா ஆஜரானார்.


    • மாணவியின் பெற்றோர் நாகா்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
    • போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 22). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்த போது, சக மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகி உள்ளார்.

    இந்த நிலையில் மாணவி யிடம் நைசாக பேசிய அபிஷேக், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்து உள்ளார். மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்து மாணவியை அடிக்கடி மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து மாணவி யின் பெற்றோர் நாகா்கோ வில் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அபிஷேக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஆனால் அபிஷேக், துபாய் நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை பிடிக்க போலீசார் நட வடிக்கை எடுத்து வந்த னர். இந்த நிலையில் 2½ ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேக் துபாயில் இருந்து ஊருக்கு வருவதாக நாகர்கோவில் மகளிர் போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அபிஷேக்கை கைது செய்தனர்.

    அப்போது அவர் தனக்கு நெஞ்சு வலிப்ப தாக கூறியதால், ஆசாரி ப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சிகிச்சை நிறைவடைந்ததை தொடர்ந்து, அபிஷேக் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மதுரை சிறையில் கைதி பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    கரும்பாலை பி.டி.காலனியை சேர்ந்த முனியன் மகன் முருகன் (44). இவர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தார். திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிறை அதிகாரி பாலகிருஷ்ணன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி முருகனின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 பேர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • விசாரணை மற்றும் தண்டனை காலதத்துக்குப் பின்னர் அவரவர் தாயகம் அனுப்பி வைப்பது வழக்கம்.

    திருச்சி

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் சிறப்பு முகாமில், இலங்கை, மியான்மர், பல்கேரியா, உகாண்டா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், பயண ஆவணங்கள் தொடர்புடைய பல்வேறு வழக்குகள் தொடர்பாக, விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை மற்றும் தண்டனை காலதத்துக்குப் பின்னர் அவரவர் தாயகம் அனுப்பி வைப்பது வழக்கம்.

    அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த வர்ஷானன், பாய்வா ரீகன், ராஜெம்ட்ராம், உதயகுமார், அருள் வசந்தன், அருண் குரூஸ் உள்ளிட்ட 7 பேரை தாயகம் அனுப்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ஒருவர் மட்டும் தற்போது தாயகம் செல்ல விருப்பமில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து மற்ற 6 பேரும் இலங்கை செல்லும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவர்




    ×