search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    • தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    • தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கலெக்டரிடம் மனு

    நாகர்கோவில், ஜூலை.10-

    குளச்சல் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையில் மேற்பார்வை யாளராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற போது, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த கோபாலகிருஷ்ணன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்க ளின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் நடேசன் தலைமை யில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    குளச்சல் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வை யாளர் கோபாலகிருஷ்ணன் பணி முடிந்து வீடு செல்லும் வழியில் மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கைகள் வெட்டப்பட்டு விரல் துண்டிக்கப்பட்டது. தலையி லும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. எனவே கோபாலகிருஷ்ணன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

    மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்க (தொ.மு.ச.) மாவட்ட தலைவர் மரிய செல்வன் மற்றும் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அதில், குளச்சல் மதுக்கடை மேற்பார்வையாளர் கோபால கிருஷ்ணனை தாக்கிய மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    • பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது.
    • இந்த ஏ.டி.எம்.மிற்கு கடந்த 29-ந் தேதி பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், பணம் வராததால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்று விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் செயல்படுகிறது. இந்த ஏ.டி.எம்.மிற்கு கடந்த 29-ந் தேதி பணம் எடுக்க வந்த நபர் ஒருவர், பணம் வராததால் சிறிது நேரம் காத்திருந்து விட்டு சென்று விட்டார்.

    ஆனால் அதன் பின்னர் பணம் வந்துள்ளது. இந்த நிலையில், அவருக்கு பின்னால் பரமத்திவேலூர் அருகே குப்பிச்சிப்பாளை யத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் அரசு, அவரது நண்பர் நவீன் (22) ஆகியோர் ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றனர்.

    அப்போது, அந்த ஏ.டி.எம்-ல் ரூ.20 ஆயிரம் பணம் இருப்பதை பார்த்து, அதை வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் இந்திராணியிடம் ஒப்படைத்தனர். இதை யடுத்து ஏ.டி.எம்-ல் பணத்தை விட்டுச் சென்ற வர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில், வங்கியில் பணத்தை தவற விட்டது பரமத்திவேலூர் பள்ளி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலா ளராக பணிபுரிந்து வரும், அனிச்சம்பாளை யத்தை சேர்ந்த கருப்பண்ணன்(65) என்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து, அவர் ஏ.டி.எம்-ல் தவற விட்ட ரூ.20 ஆயிரத்தை வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணி கருப்பண்ணனிடம் நேற்று ஒப்படைத்தார். பணத்தை பெற்றுக் கொண்ட அவர், போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்த மாணவர் அரசு மற்றும் நவீன் ஆகியோ ருக்கும் இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

    • கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
    • நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில்-ராஜபாளையம் மெயின் சாலையில் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் நிர்வாண சாமியார் ஒருவர் 30 நாள் புனித யாத்திரையாக ராமேஸ்வரம், கன்னியா குமரி செல்வதற்காக வந்த வழியில் இந்த கடைக்குள் சென்றுள்ளார்.

    அவர், கடை உரிமையாளரிடம் தான் ஹரித்துவாரில் இருந்து வருவதாகவும், இந்த பகுதியை கடக்க முயன்றபோது திடீரென எனக்கு கடவுள் அருள்வாக்கில் கேட்டதாகவும், அதில் உங்கள் நகைக்கடைக்கு சென்று உங்களை ஆசீர்வாதம் செய்துவிட்டு போ என கூறியதாகவும், அதனாலே தங்களது கடைக்கு தங்களை ஆசீர்வாதம் செய்வதற்காக வந்ததாகவும் கூறியுள்ளார்.

    இதனால் உரிமையாளரும், பணியாளர்களும் செய்வது அறியாது திகைத்துப் போய் நின்றனர். தொடர்ந்து நிர்வாண சுவாமியை கும்பிட்டு வரவேற்று அமர செய்தனர். அப்போது கடைக்குள் வந்த ஒரு சிலர் நிர்வாண சாமியாரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

    தொடர்ந்து கடையின் உரிமையாளர், நிர்வாண சாமியாரின் வழிச் செலவுக்காக சிறிய தொகையை கொடுக்க, அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமி இது தனக்கு பூஜைக்கு உண்டான செலவு என்றும், என்னுடைய ஆசீர்வாதம் கிடைத்தால் நீ மிகப்பெரிய ஆளாய் வருவாய் எனக்கூறி நான் உனக்கு ஆசீர்வாதம் செய்கிறேன் என்று சொல்லிக்கொண்டே கடையின் உள்ளே நகைகள் இருக்கும் பகுதிக்கு உரிமையாளரை போகுமாறு கூறினார். பின்னர் இருக்கையில் இருந்து எழுந்து வந்து உரிமையாளரின் தலையில் கை வைத்து மீண்டும் ஒரு முறை ஆசீர்வாதம் செய்தார். தொடர்ந்து, நிர்வாண சாமியார் தனது கழுத்தில் அணிய ஒரு தங்க செயின் வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறி உரிமையாளரிடம் சொல்லச் சொன்னார். அதைக் கேட்ட உரிமையாளர் சில நொடிகள் அதிர்ச்சி அடைந்தாலும் சுதாரித்துக் கொண்டு ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை நிர்வாண சாமியாரிடம் கொடுப்பதற்காக எடுத்தார். அந்த செயின் வேண்டாம் பெரிய செயின் எடுங்கள் என்று நிர்வாண சாமியார் கையசைத்து கூறினார்.

    ஆனால் கடையின் உரிமையாளர் ஒரு பவுன் மதிப்புள்ள தங்க செயினை மட்டும் நிர்வாண சாமியாரின் கழுத்தில் அணிவித்தார். அதனை பெற்றுக்கொண்ட நிர்வாண சாமியார் தங்க செயின் மற்றும் பணத்தோடு வெளியே சென்றார். வட இந்திய சாமியார் தமிழகத்திற்கு வந்து பணம் மற்றும் நகையை லாவகமாக வாங்கிக் கொண்டு சென்ற சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
    • கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள மேலவெளி ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஞானஅருள் நேசன் (வயது 47).

    விவசாயியான இவர் அவருடைய உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வீட்டை பூட்டி விட்டு கோயம்புத்தூருக்கு குடும்பத்தினருடன் சென்று இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அவருடைய வீட்டின் ஞான அருள் பேசின் வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்து விட்டு அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வீட்டிற்கு வந்த ஞான அருள் நேசன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.

    அதிலிருந்து 2 பவுன் தங்க நகையும் மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

    அது சிறிது தூரம் வரை ஓடி சென்று விட்டு நின்றது.

    தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கினார்.
    • சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜன் வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் வில்பிரிட் மோகன் (வயது 62). இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று ராஜன் வில்பிரிட் மோகன், தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கினார்.

    வாயில் நுரை தள்ளியபடி கிடந்த ராஜன் வில்பிரிட் மோகனை, மனைவி உஷாகுமாரி மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜன் வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.

    ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.

    அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.

    கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர். 

    • கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
    • சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    தக்கலைஅருகே கீழ மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் சகாயராஜன் (வயது 50). இவர் சென்னை அடையாறு பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் கீழமூலச்சலில் வசிப்பதால் அடிக்கடி அவர் சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

    அதன்படி ஊருக்கு வந்த சகாயராஜன், தக்கலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தார். அன்று அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் அவர் போதையில் அ ங்கேயே மயங்கி விழுந்து விட்டார். அப்போது அவரது கையில் அணிந்து இருந்த 20 பவுன கைச்சங்கி லியை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டார். இதுபற்றி சகாயரா ஜன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப் பதிவு செய்தார்.போலீசார், சகாயராஜன் தூங்கிய போது யாராவது அவருடைய பக்கத்தில் சுற்றி வந்தார்களா? எனவிசாரித்தனர்.

    இதில் ஒரு வாலிபர் சந்தே கப்படும்படியாக சுற்றி திரிந்ததாக அங்குள்ள கடைக்காரர் தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின் படி சம்பந்தப்பட்ட நபரை கண்காணித்தனர். அந்த வாலிபரை பிடித்து விசாரி த்த போது அவரிடம் சகாயராஜனுக்கு சொந்தமான கைச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் தக்கலை மக்காயி பாளையம் பகுதியை சேர்ந்த செய்யது முகம்மது (28) என்பதும், இறைச்சி வியா பாரி என்பதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில், நான் மதுகுடிக்க டாஸ்மாக் கடைக்கு சென்றேன். அப்போது அருகில் உள்ள ஒரு கடையின் திண்ணையில் மது போதையில் ஒருவர் படுத்திருந் ததை பார்த்தேன். அவர் கையில் தங்க கைச்சங்கிலி அணிந்திரு ந்ததை பார்த்து அதனை திருடலாம் என முடிவு செய்தேன். அதன்படி நைசாக அதனை கையில் இருந்து பறித்து விட்டு தப்பி விட்டே ன். பின்னர் அந்த நகையை விற்க முயன்றபோது சிக்கி விட்டேன் என தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும்போது, தன்மீது அடிதடி வழக்கு ஒன்று கோர்ட்டில் நடந்துவருகிறது. அதற்கு செலவு செய்ய பணம் இல்லாமல் தவித்து வந்தேன். கைச்சங்கிலியை அடகு வைத்து கிடைக்கும் பணத்தில் வழக்கை நடத்த முடிவு செய்திருந்தேன் என்றும் கூறினார்.இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து 20 பவுன் கைச்சங்கிலியை மீட்டனர்.

    • போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
    • பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது.

    அந்த படத்தில் ரமேஷ் சந்திர சஹானியின் மனைவி மற்றும் குழந்தைகள் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போஸ் கொடுத்தவாறு இருந்தனர்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் பணம் என்று தெரிவித்தார்.

    மேலும், அவர் தன்னை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அந்த படம் கடந்த 2021 நவம்பர் மாதம் 14-ந்தேதி எடுக்கப்பட்டது என்றும், அது முறைகேடாக சம்பாதித்த பணம் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

    ஆனாலும் பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது.

    விசாரணை நிறைவில் போலீஸ் அதிகாரியான ரமேஷ் சந்திர சஹானி காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ்காரரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நோட்டு மூட்டைகளுடன் உள்ளனர்.

    இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண் டுள்ளோம், அந்த போலீஸ் காரர் காவல் துறையின் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

    • ஓட்டலில் சாப்பிட்டு பணம் பறித்த கும்பல் தப்பி ஒட்டம்
    • உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மிளகனூரை சேர்ந்தவர் பாண்டி (வயது31). இவர் கீரைத்துறை சிந்தாமணி ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு 6 வாலிபர்கள் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றனர்.

    அவர்களிடம் உரிமை யாளர் பாண்டி பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை ஆபாசமாக பேசி கத்திமுன்னையில் மிரட்டி ஓட்டல் கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து உரிமையாளர் பாண்டி கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் பணம் பறித்த வாலிபர்கள் ஆவாரங்காட்டை சேர்ந்த லட்சுமணன் அகிலன், கண்ணன் என்ற கேடி கண்ணன், நிதீஷ் குமார், கோலிகுமார், தனுஷ் என்று தெரியவந்தது. அவர்கள் 6பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • வீடு புகுந்து நகை-பணம் திருடப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள துரைச்சாமி புரம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது58). பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை காணாமல் போயிருந்தது.

    யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து மாரனேரி போலீஸ் நிலையத்தில் அருளப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்தது. இதனால் ரூ.100, 50 என வைத்து சோதித்து பார்த்த போதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்துள்ளது.

    இதையடுத்து பணம் காணாமல் போவதை கண்டுபிடிக்க கடையில் சிசிடிவி., கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தார். இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிசிடிவி., காட்சிகளை பார்த்த போது அவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார்.

    அதிகாலை 4 மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று கல்லா பெட்டியில் பிளாஸ்டிக் கூடையில் இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை வெளியேற்றி பார்த்த போது எலி தங்கியிருந்த இடத்தை கண்டறிந்தார். அதில் இது நாள் வரையில் எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இன்றி அங்கு கிடந்துள்ளது. அதனை எண்ணி பார்த்த போது 1500 ரூபாய் இருந்துள்ளது. எல்லோரும் பழத்தை திருடும் எலியை தான் பார்த்திருப்போம். ஆனால் திருப்பூர் பழக்கடையில் எலி பணத்தை திருடி சேதப்படுத்தாமல் பதுக்கி வைத்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நடிகர்கள் முரளி, வடிவேல் நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலியின் சேட்டைகளால் முரளியும் வடிவேலும் படாதபாடுபடுவார்கள். அது போல் திருப்பூர் பழக்கடையில் தினமும் பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எலி பணத்தை திருடும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் மணி(வயது 29). இவர் பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை - நாரணாபுரம் ரோட்டில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அவரது கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், மணியை அடித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரொக்கம் ரூ.4,500ஐ பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இதையடுத்து மணி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் சுற்றித்திரிந்த மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகே வசிக்கும் சந்திரசேகர் என்பவரது மகன் நாகேந்திரன் என்கிற முத்துப்பாண்டி(36) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×