search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு சென்றார்.
    • கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 3 பேரையும் விடுவித்தனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் எம்.வி.வி.சத்தியநாராயணா. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மக்களவை எம்.பி.யாக உள்ளார்.

    இவர் ஐதராபாத் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சில மர்ம நபர்கள் எம்.பி.யின் மகன் சரத் (35) என்பவரை கடத்தி சென்றனர்.

    அதன் பின்னர் எம்.பி.யின் மனைவி ஜோதிக்கு. போன் செய்து உங்கள் மகனை கடத்தியுள்ளோம் உடனடியாக தங்கள் இருப்பிடத்துக்கு ரூ.50 கோடி பணத்துடன் வரும்படி செல்போனில் தகவல் அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து எம்.பி.யின் மனைவி ஜோதி (55) அங்கு சென்றார். அவரையும் கடத்தல்காரர்கள் பிடித்து வைத்துக்கொண்டனர்.

    பின்னர் எம்.பி. சத்யநாராயணாவின் ஆடிட்டர் கன்னமனேனி வெங்கடேஸ்வராவுக்கு மர்மநபர்கள் போன் செய்தனர். எம்.பி.மனைவி, மகன் கடத்தப்பட்டதை கூறி தங்கள் இடத்திற்கு ரூ.50 கோடி கொண்டு வருமாறு மிரட்டினர்.

    இதையடுத்து ஆடிட்டர் வெங்கடேஸ்வரராவ் தன்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு கடத்தல்காரர்கள் கூறிய இடத்திற்கு சென்றார்.

    அதற்குள் இந்த கடத்தல் குறித்து அறிந்த எம்.பி. சத்தியநாராயணா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் டி.ஜி.பி. ராஜேந்திரநாத் தலைமையில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு 3 பேரையும் விடுவித்தனர்.

    இந்த கடத்தலுக்கு ரூ.50 கோடி பணம் கேட்டு பேரம் நடைபெற்றதை அறிந்த போலீசார் 3 பேரும் பாதுகாப்பாக உள்ளதை முதலில் உறுதி செய்து கொண்டனர்.

    பின்னர் விசாரணை நடத்தினர். அதில் அவர்களை கடத்தியது பிரபல ரவுடி ஹேமந்த் என்று தெரியவந்தது. கடத்தலில் ஈடுபட்ட ஹேமந்த் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
    • 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியல் திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை, துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உண்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.6 லட்சத்து 52 ஆயிரத்து 53 பணம் மற்றும் 37 கிராம் தங்கம், 19.400 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. உண்டியல் திறப்பின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கேயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    வெள்ளக்கோவில் வீரக்குமாரசாமி கோவில் தேங்காய் பழக்கடை ஒரு ஆண்டிற்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை, திருப்பூர் துணை ஆணையர் செந்தில்குமார் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.2023ம் ஆண்டு ஜூலை 1 ந்தேதி முதல் 2024ம் ஆண்டு ஜூன் 30 ந்தேதி வரை தேங்காய் பழம் கடை நடத்தும் உரிமம் ரூ.4 லட்சத்து 52 ஆயிரத்து 500 க்கு ஏலம் விடப்பட்டது. அதே போல் கோவில் வளாகத்தில் ஒரு ஆண்டிற்கு சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம் ரூ.19 ஆயிரத்து 500க்கு ஏலம் விடப்பட்டது. ஏலத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை காங்கயம் ஆய்வாளர் சுமதி, வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் செயல் அலுவலர் ராமநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பணத்தை ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஜெயபிரகாஷ் ஒப்படைத்தார்.
    • தம்பதியின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 35). இவர் நேற்று இரவு நெல்லை-தென்காசி 4 வழிச்சாலையில் ஆலங்குளத்தை அடுத்த நல்லூர் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த சாலையில் ரூ.500 நோட்டுகள் சிதறிக்கிடந்தன. உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திய ஜெயபிரகாஷ் அந்த ரூபாய் நோட்டுகளை மனைவியுடன் சேர்ந்த சேகரித்தார். தொடர்ந்து அந்த பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.

    இதையடுத்து அந்த பணத்தை ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எழுத்தர் முருகனிடம் ஜெயபிரகாஷ் ஒப்படைத்தார். அந்த தம்பதியின் நேர்மையை அங்கிருந்த போலீசார் பாராட்டினர். மேலும் இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து சம்பந்தப்பட்டவர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • மணிபர்சில் ஒரு செல்போனும், ரூ.2,300 ரொக்கமும் இருந்தது
    • திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் இதுதொடர்பாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இரு க்கும். இந்த கூட்டத்தை பயன்படுத்தி நகை, பணம், செல்போன் உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அண்ணா பஸ் நிலை யத்தில் நேற்று மதியமும் கூட்டம் அதிமாக இரு ந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இந்திரா ராணி (வயது 46) என்பவர் வௌ்ளிச்சந்தைக்கு வந்தார். வடசேரியில் இருந்து மினி பஸ்சில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து இறங்கினார்.

    அப்போது பார்த்தபோது இந்திரா ராணியின் மணிபர்சை காணவில்லை. அந்த மணிபர்சில் ஒரு செல்போனும், ரூ.2,300 ரொக்கமும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் நிலையத்திலும், அவர் வந்த மினி பஸ்சிலும் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்திரா ராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் இதுதொடர்பாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பேக்கரி உரிமையாளரிடம் நகை-பணம் மோசடி செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் கீழக்கரை தெருவை சேர்ந்தவர் மகேந்திரன், பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியை வளர்மதி (வயது51). இவர்க ளது பேக்கரியில் விருதுநகர் ஆவலப்ப கோவில் தெருவை சேர்ந்த முத்து கணேஷ் (37) என்பவர் 17 வருடங்களாக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் வீடு கட்டுவதற்கு உதவி செய்யும்படி மகேந்தி ரனிடம் கேட்டார். அவர் பல தவணைகளில் ரூ.10 லட்சம் கொடுத்தார். மீண்டும் உதவி கேட்டபோது வளர்மதி 24 பவுன் நகை களை கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பேக்கரிக்கு சரக்கு வாங்க கொடுத்த பணத்திற்கு சரியாக கணக்கு தராமல் முத்து கணேஷ் இருந்துள்ளார். மேலும் வீடு கட்டுவதற்கான பணிகள் எதனையும் அவர் செய்த தாகவும் தெரியவில்லை.

    இதைத்தொடர்ந்து வளர்மதி அவரிடம் பணம் மற்றும் நகையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார். இந்த நிலையில் அவர் வேலையை விட்டு சென்று விட்டார்.

    அதன் பின்பும் பலமுறை பணம்-நகையை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை. இதையடுத்து விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் வளர்மதி புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளம்பெண்ணை கடத்தி சென்று செக்ஸ் டார்ச்சர் செய்து பணம் பறிக்கப்பட்டது.
    • 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு தெற்கு மடத்தை சேர்ந்தவர் கண்ணன் என்ற மண்எண்ணை கண்ணன் (வயது44). இவர் இளம்பெண் ஒருவருக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டி வந்துள்ளார்.இதற்கு சிலர் உடந்தையாகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில் கண்ணன், அவரது மனைவி பிரேமா, உறவினர்கள் செல்வி, பாலா, காதர், அருள், மணி சங்கையா ஆகிய 7 பேரும் அந்த பெண்ணை கடத்திச்சென்று அவரிடம் இருந்து ரூ. 6 ஆயிரத்து 500-யை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கடத்தி பணம் பறித்த 7 பேரையும் கைது செய்தனர்.

    • மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
    • சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுக்க அவ்வப்போது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் 'திடீர்' சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மது பானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க அண்டை மாநிலமான கேரளா போன்று கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    இது தொடர்பாக டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. மதுபானங்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்வது குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சமீப காலங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகளில் முறைகேட்டில் ஈடுபட்ட 1,967 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இருந்தபோதிலும் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கணினி மயமாக்கப்பட்ட பில்லிங் முறையை கொண்டுவர அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    அதன்படி வாடிக்கையாளர்கள் மதுபானத்துக்கு உரிய தொகையை செலுத்தி முதல் கவுண்டரில் கணினி மயமாக்கப்பட்ட பில்களை பெற்றுக் கொள்வதற்கும், 2-வது கவுண்டரில் அந்த பில்லினை கொடுத்து மதுபானம் வாங்கிக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்படும்.

    மேலும் அனைத்து கடைகளிலும் கம்ப்யூட்டர் பில்லிங் முறைகளை கொண்டு வருவதா அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் முதலில் அமல்படுத்துவதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கேரளாவில் கம்ப்யூட்டர் பில்லிங் முறை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

    இந்த முறையை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவை கேரளாவுக்கு அனுப்ப டாஸ்மாக் அதிகாரிகள் அரசிடம் அனுமதி கேட்க இருக்கிறார்கள் என்றார். மேலும் அவர் கூறுகையில், கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் மெஷின்களை பயன்படுத்த அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தி இருக்கின்றோம்.

    நகரங்களில் உள்ள கடைகளில் எந்திரங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. அதனை கிராமப்புறங்களில் விநியோகிக்கவும் முயற்சிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் கியூ ஆர் குறியீடு மற்றும் கூகுள்பே போன்ற டிஜிட்டல் முறையில் தொகையை செலுத்தி மதுபானம் பெறுவதற்கான நடவடிக்கைகளிலும் டாஸ் மாக் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இதனை இறுதி செய்ய வங்கிகளுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றார்.

    கம்ப்யூட்டர் பில் முறை மற்றும் டிஜிட்டல் வசதிகள் செயல்படுத்தப்படும் பட்சத்தில் பரிவர்த்தனைகளில் வெளிப்படை தன்மை மேம்படும். மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
    • கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.

    திருப்பூர்:

    தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஆன்லைன் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி வருகின்றனர்.மோசடி நபர்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு ஏமாற்றும் செயலில் ஈடுபடுகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி, தங்கள் அனுப்பிய பார்சலில் சட்டவிரோத பொருள் உள்ளது.தடையின்மை சான்று பெற பணம் கட்டவும் என்று சொல்லி மோசடியில் ஈடுபடலாம். நேரில் வருவதாக கூறி, போலீஸ் உதவியை உடனடியாக பொதுமக்கள் நாட வேண்டும்.

    தங்கள் துறை சார்ந்த உயர் அதிகாரி போல் சமூக வலைதளங்களில் தங்களை தொடர்பு கொண்டு, தான் அவசர வேலையாக இருப்பதாக கூறி, கிப்ட் கார்டுவாங்கி அனுப்புமாறு கேட்டு மோசடியில் ஈடுபடலாம்.ஆன்லைனில் ஆர்டர் செய்யாத உணவுகள் தங்களுக்கு வந்திருப்பதாக கூறிஅதை திருப்பி அனுப்ப தங்கள் மொபைல்போனுக்கு வந்த ஓ.டி.பி., கூறுமாறு கேட்டு மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பே லேட்டர் வசதியை பயன்படுத்தி ஆன்லைனில் தங்களது கணக்கில் மற்ற நபர்கள் பொருட்களை வாங்கிவிட்டு அந்த நிறுவனத்தால் பணம் கேட்டு தங்களுக்கு அறிக்கை வரலாம். ஆன்லைன் ஷாப்பிங் ஆப்களை மிக கவனமாக கையாள வேண்டும்.ஏ.டி.எம்., மற்றும் கிரெடிட் கார்டு விபரங்களை எந்த வங்கியும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. வங்கி கணக்கு சம்பந்தமான தகவல்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது.லோன் ஆப் வாயிலாக குறைந்த வட்டிக்கு உடனடியாக பணம் பெறலாம் என விளம்பரப்படுத்தி உங்களது அனைத்து தனிப்பட்ட விபரங்களையும் பெற்று சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டக் கூடும்.

    அங்கீகாரம் இல்லாத லோன் ஆப்களில் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும்.உங்கள் மொபைல் போனில் உள்ள ப்ளூடூத்தை நீங்கள் ஆப் செய்யாமல் இருக்கும்போது, அதை குற்றவாளிகள், அவர்களுக்கு சாதமாக பயன்படுத்தி, உங்கள் மொபைல் போனில் உள்ள தகவல் மற்றும் போட்டோக்களை திருடுகின்றனர். தேவையற்ற நேரங்களில் ப்ளூடூத் ஆப் செய்து வைத்தல் நல்லது. பொது இடங்களில் கிடைக்கும் இலவச 'வைபை' வசதியை நீங்கள் பயன்படுத்தும் போது, உங்களுக்கு தெரியாமல், உங்களது மொபைல் போனில் உள்ள வங்கி சம்பந்தமான தகவல்களை இணைய வழியாக திருடர்கள் திருட வாய்ப்பு உள்ளது. சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளை தொடங்கி அதன் வாயிலாக நட்பு அழைப்புகளை அனுப்பி பேசி பழகி ஏமாற்றும் நபர்களிடம், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகம் தெரியாத நட்பு வேண்டாம்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    சைபர் குற்றங்களில் பொதுமக்கள் சிக்கி பணத்தை இழந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைத்து, தங்களது புகாரை பதிவு செய்யவும். கால தாமதம் இன்றி பதிவு செய்யப்படும் புகார் மீதான நடவடிக்கை விரைவானதாக இருக்கும் என்றனர்.

    சென்னை ஐ.டி. எ.எஸ்., துணை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் தனசேகர் கூறியதாவது:-

    ஸ்பார்ஸ் என்பது தேசிய அளவில் முப்படையின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு சிக்கல்கள் இன்றிஒற்றை சாளரமுறையில் ஓய்வூதியம்செல்வதற்கு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளம்.இதில் 35 லட்சம் ஓய்வூதியதாரர்களில் 12 முதல் 13 லட்சம் பேரை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இணைக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ளவர்களையும் இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்கள் நாமினியுடன் தற்போதேஇருவரும் இணைந்த வங்கிக்கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.

    தற்போது அனைத்தும் டிஜிட்டல்மயம் ஆகியுள்ளதால், அதில் நடக்கும் மோசடிகளில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.ஓ.டி.பி., தகவலை, எக்காரணம் கொண்டும் செல்போன் வாயிலாக ஒருவருக்கும் தெரிவிக்கக்கூடாது. செல்போன் வாயிலாக ஒரு போதும் தரக்கூடாது என்றார்.

    • இரட்டிப்பு மோசடி வழக்கில் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தார்.
    • ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார். அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்றிருந்ததை நம்பிய அவர் 16 தவணைகளாக ரூ.82 ஆயிரத்து 400-ஐ அனுப்பினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து இழந்த தொகை ரூ.82 ஆயிரத்து 400-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அந்த தொகை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.

    • செல்போன்-பணம் திருடியவர்கள் சிக்கினார்கள்.
    • அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    மதுரை

    மதுரை மணி நகரம் மணி அய்யர் சந்தை சேர்ந்த கண்ணன் மகன் ராஜசேகர் (வயது33). இவர் தமிழ் சங்கம் ரோட்டில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அவரிடம் இருந்த செல்போனை ஒரு வாலிபர் திருட முயன்றார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் கையும் களவுமாக பிடித்து போலீ சில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தேனி மாவட்டம் ஆண்டிப் பட்டி கொண்டமநாயக்கன் பட்டி என்.ஜி.ஓ. நகரைச் சேர்ந்த ரத்தினம் மகன் பிரசாந்த் (26) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தம்பிபட்டி கிழக்கு தெருவை சேர்ந்த தங்கமணி மகன் காளி (20).இவர் மதுரை புதூர் 20 அடி ரோட்டில் நின்று கொண்டி ருந்தார். அந்த வழியாக வந்த 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் காளியை கல்லால் தாக்கி செல்போனை பறித்து தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    செல்போன் பறித்த 17 வயது சிறுவனுடன் சம்பக்குளம் மச்சக்காளை மகன் சக்திவேல் (22), வைரவன் மகன் ஊர்க்காவலன் என்ற பாண்டி (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதில் தொடர்புடைய மலைச்சாமியை தேடி வருகின்றனர்.

    மதுரை கீழ வைத்திய நாதபுரம் 5-வது தெருவை சேர்ந்த அழகுவேல் மகன் தினேஷ் குமார் (29). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.அவரிடம் இருந்த ரூ.500-ஐ ஒரு வாலிபர் திருடிக்கொண்டு தப்ப முயன்றார். தினேஷ்குமார் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டிப்பிடித்து கரிமேடு போலீசில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பருத்தி கன்மாய் ரோட்டை சேர்ந்த சேதுபாண்டியன் மகன் முருகன்(36) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    செல்லூர் முத்துராம லிங்கபுரம் முதல் தெரு 60 அடி ரோட்டை சேர்ந்த ராஜசேகர பாண்டியன் மகன் விஜய் சுதர்சன் (26). இவர் தல்லாகுளம் பிள்ளை யார் கோவில் தெருவில் செ ன்று கொண்டி ருந்தார்.

    அவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மிரட்டி ரூ.3 ஆயி ரத்தையும், செல்போ னையும் பறித்து தப்பியது. இதுகுறித்த புகாரின்பே ரில் தல்லா குளம் போ லீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளின் அடிப்படையில் நிலையூர் கைத்தறிநகர் செந்தில் மகன் கார்த்திக் என்ற சுள்ளான் கார்த்திக் (26), நெல்லை மாவட்டம் நான்குநேரி தேன்ராஜ் மகன் அலெக்ஸ் பாண்டியன் (23), மீனாம்பாள்புரம் பள்ளிவாசல் தெரு சங்கர் மகன் பிரவீன் குமார் என்ற சிரிப்பு பிரவீன் (26), செல்லூர் மீனாட்சிபுரம் வ.உ.சி.தெரு முனியாண்டி மகன் பிரவீன் என்ற மிட்டாய் பிரவீன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    • பார் சூப்பர்வைசரை தாக்கி பணம் பறிக்கப்பட்டது.
    • தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.

    மதுரை

    உத்தப்பாளையம் அனுமந்தம்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை. இவரது மகன் நிவாஸ் (28).இவர் பழைய அக்ரகாரம் தெருவில் செயல்பட்டுவரும் பாரில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த போது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரத்து பறித்து சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து நிவாஸ் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கோரிப்பாளையம் சம்புரோபுரம் 3-வது தெருவை சேர்ந்த கிஷோர் (21), விக்னேஸ்வரன் என்ற விக்கி (23), மருதுபாண்டி (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    ×