search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • மாணவர்களுக்கான சாப்ட்வேர் பயிற்சியை அமெரிக்க பல்கலைக்கழக பேராசிரியர் அளித்தார்.
    • சுமார் 250 மாணவ-மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறையின் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங மெஷினரி'' (ஏ.எல்.எம்.) என்ற அமைப்பும் மின்னனு மற்றும் தொலைத் தொடர்பியல் துறையின் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பும் இணைந்து 2 பயிற்சி பட்டறையை ''கிரியேட்டிவ் கோடிங்- ஜாவா ஸ்கிரிப்ட்'' என்ற தலைப்பில் நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிச்சாமி, கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் துறைத் தலைவர் வளர்மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக அமெரி க்காவின் டாலஸ் மாகா ணத்தின், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் துறையின் இயக்குநர் ஜெய்வீராசாமி கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். ஜாவா ஸ்கிரிப்ட் என்ற புேராகிராமிங் மூலமாக கோடிங் எழுதுவதற்கான எளிய வழிமுறைகளை எடுத்து கூறினார்.

    இதில் சுமார் 250 மாணவ-மாணவிகள், 50-க்கும் மேற்பட்ட பேராசி ரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்ரமணியன், பேரா சிரியர்கள் அருண்சண்முகம், கார்த்திகேயன், பேராசி ரியை தனம் மற்றும் கணிப்பொறியியல் துறை மற்றும் மின்னனு ெதாலைத் தொடர்பியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரியின் உணவக மேலாண்மை மாணவர்கள் கத்தார் நாட்டில் சேவை புரிந்து திரும்பியுள்ளனர்.
    • இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது.

    மதுரை

    கத்தார் நாட்டில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவக மேலாண்மை மற்றும் விருந்தோம்பல் துறை மாணவர்கள் சென்றனர்.

    அக்டோபர் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் கத்தாரில் தங்கி சேவை புரிந்து திரும்பியுள்ளனர். இதன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும், அனுபவமும் கிடைத்தது. இதில் 80 மாணவர்களுடன் துறைத் தலைவர் பால்ராஜ், உதவிப்பேராசிரியர்கள் கங்காதரன், ஷாஜகான் ஆகியோர் பங்கேற்றனர்.

    பயிற்சியில் பங்கேற்ற தமிழ் நாட்டைச் சேர்ந்த 3 கல்லூரிகளுள் அன்னை பாத்திமா கல்லூரியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு பாராட்டிற்குரியதாக இருந்தது. இதன் மூலம் சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்றனர் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது.
    • தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பாராட்டினர்.

    விளாத்திகுளம்:

    அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி வருகிற 28-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான வீரர்களை சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் தேர்வு செய்தார். இதில் விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியை சேர்ந்த கிருத்திக் சர்வான், நளீன் கிரிஷ், ஹர்ஷத் ராஜ், சமர்ஜித், மிதுலா, ரவிசங்கர், பிரகதீஸ், சொகித், கிருஷ், ஆதேஷ், நவீன், டெனில்சன், தினேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர். தேர்வு பெற்ற மாணவர்களை ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி நிர்வாகி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., தாளாளர் விமராஜ், செயலாளர் சுப்பா ரெட்டியார், இயக்குனர் இந்திரா ராமராஜூ, முதல்வர் ஆபிரகாம் வசந்தன், கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.

    • மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்காத தனியார் பஸ்களுக்கு டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரை சுற்றி சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேற்படிப்புக்காக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பஸ்கள் மூலம் தேவகோட்டை வந்து செல்கின்றனர்.

    தற்போது அரையாண்டு தேர்வு முடிவடைந்து பள்ளிகள் நேற்று திறக்க ப்பட்டன. திருப்பத்தூர் சாலை ராம்நகரில் உள்ள மாணவ- மாணவிகளும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளும் விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக தேவகோட்டை பஸ் நிலையத்திற்கு நேற்று வந்தனர்.

    அந்த மாணவ-மாணவிகளை தனியார் பஸ்களில் ஏற்றாமல் காரைக்குடி பயணிகளை மட்டும் பயணம் செய்ய அனுமதித்தனர். இதனால் திரளான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்களில் படிகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்தனர். இதுகுறித்து பஸ் நிலைய காப்பாளர் சந்தியாகு கொடுத்த தகவலின் பேரில் தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தார்.

    மாணவ-மாணவிகளை பயணம் செய்ய மறுத்த தனியார் பஸ்களின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை எச்சரித்து அனுப்பினார். இதே நிலை தொடருமானால் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் என்றும் டி.எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார்.

    • சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது.
    • விஜய் மற்றும் எமிலி ஆகியோர் சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றனர்.

    சாயர்புரம்:

    சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி அந்தமானில் நடந்தது. இதில் சாயர்புரம் கோல்டு ஸ்டார் சிலம்பாட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் சாயர்புரம் கூட்டுறவு சங்க தலைவர் புளியநகர் அறவாழி, சாயர்புரம் பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்மி ஆகியோரின் மகன் விஜய் மற்றும் க.சாயர்புரம் ஆறுமுகம், கவுசல்யா என்பவர்களது மகள் எமிலி ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றி பெற்ற 2 பேருக்கும் சாயர்புரம் மெயின் பஜாரில் பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டாளங்குளம் பஞ்சாயத்து தலைவர் சங்கரேஸ்வரி ஏசுவடியான் கலந்து கொண்டு மாணவ, மாணவிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் பயிற்சி அளித்த கோல்டு ஸ்டார் சிலம்ப மாஸ்டர் சண்முகசுந்தரம், மாஸ்டர் மணிகண்டன் ஆகியோரை கட்டாளங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஏசுவடியான், சாயர்புரம் வட்டார நடைபயிற்சி குழு தலைவர் பிச்சைமுத்து மற்றும் பட்டுபுதியவேல், ராஜா, அசோக், பரமசிவம், தங் ராஜ் மற்றும் ஊர் பொது மக்கள் பாராட்டினார்.சாயர்புரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி நன்றி கூறினார்.

    • பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் கலைத் திருவிழாவில் இடம் பெற்றன.
    • குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கலைத் திருவிழாவில் 34 வகையான தனிநபர் போட்டிகளும், 4 வகையான குழு போட்டிகளும் நடைபெற்றன.

    பரதநாட்டியம், கரகாட்டம், கோலாட்டம், தவில் இசை, புல்லாங்குழல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் இந்த கலைத் திருவிழாவில் இடம் பெற்றன. மாவட்ட அளவில் முதலிடம் பெற்று தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இடையேயான போட்டிகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரம், குன்றத்தூர் ஆகிய 2 இடங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன. 34 தனிநபர் போட்டிகளில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒருவர் வீதம் தலா 38 பேர் பங்கேற்றனர்.

    குழு போட்டிகளில் ஒவ்வொரு குழுவில் இருந்தும் 10 பேர் என 2500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மொத்தம் 3 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஜனவரி 12-ந்தேதி நடை பெறும் பரிசளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

    • இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
    • வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    பூதலூர்:

    செங்கிப்பட்டி-பூதலூர் சாலை புதுப்பட்டியில் இயங்கி வரும் ரம்யா சத்தியநாதன் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் இளைஞர்ளுக்கான உதவித் தொகையுடன் லேத் ஆபரேட்டர், சிஎன்சி ஆபரேட்டர், டர்னிங் ஆகிய இலவச தொழிற்பயிற்சிகள் 3 மாத காலம் நடைப்பெற்றது.

    தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு, பயிற்சியில் தேர்ச்சிப் பெற்ற 51 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

    முதல் கட்ட பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை கல்லூரியின் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், கல்லூரியின் செயலர் ஜெனட் ரம்யா, பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் குமரன், பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் மோகன், திறன் மேம்பாட்டுக் கழக பயிற்சியாளர் பேராசிரியர் சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

    இந்த இலவச தொழிற்பயிற்சியில் ஒவ்வொரு பிரிவுக்கும் 30 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 8-ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் லேத் ஆபரேட்டர் பயிற்சியிலும், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்சின்சி ஆபரேட்டர் டர்னிங் பயிற்சியிலும் சேரலாம்.

    இதற்கான வயது வரம்பு 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    பயிற்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் அவர்களுக்குரிய உதவித்தொகை வரவு வைக்கப்படும்.

    பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் வேலைவாய்ப்புப் பெற்றுத் தர வழிவகை செய்யப்படும் என்று கல்லூரி தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தெரிவித்தார்.

    • 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை ஏ வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.
    • தாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்கள் பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களில் சிலரையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள கார்மல் மேல் நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது.

    இப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ள நிலையில் இப்பள்ளியில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை ஏ வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் இன்று ஒன்று கூடும் நிகழ்வு நடந்தது.

    இதில் ஒரே வகுப்பில் படித்த சுமார் 35 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பலர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் தங்கி இருந்தனர்.

    இவர்களில் சிலர் வாட்ஸ் அப் குரூப் மூலம் ஒன்றிணைந்தனர். கார்மல் மேல் நிலைப்பள்ளியில் படித்து முடித்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த இவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே பள்ளியில் ஒன்று சேர முடிவு செய்தனர்.

    இதையடுத்து இன்று காலை அவர்கள் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று கூடினர். அவர்களில் சிலர் தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்திருந்தனர்.

    தாங்கள் படித்த பள்ளிக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகு வந்தவர்கள் பள்ளியில் தாங்கள் படித்த வகுப்பறை மற்றும் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களில் சிலரையும் அழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி மரிய பாஸ்டின் துரை, அருட்பணி ஏசுநேசன் மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது படிக்கும் போது நடந்த பல்வேறு சுவையான சம்பவங்களை பலரும் பகிர்ந்து கொண்டனர். இன்று ஒன்று கூடிய பலரும் சுமார் 60 வயதை எட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் பள்ளி பருவத்தை பற்றி பகிர்ந்து கொண்ட போது அவர்களின் கண்ணில் இளமையும், பூரிப்பும் தென்பட்டது. சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட போது கண்கலங்கினர்.

    இன்றைய நிகழ்வுக்கு வந்தவர்களில் பலர் மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்தனர். இது தவிர மும்பை, பெங்களூரூ, திருவனந்தபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும் பலர் தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்றனர்.

    முன்னாள் மாணவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் ெகாண்டனர். தொடர்ந்து தங்களது உறவுகளை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து மகிழ்ந்தனர். இது பற்றி முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற திருவனந்தபுரம் ஐ.எஸ்.ஆர்.ஓ. கூடுதல் இயக்குனருமான ஜெகன்லால் கூறுகையில், என்னுடன் படித்த பலரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களது பொன்விழா ஆண்டு.

    தற்போது பணி ஓய்வு பெற்ற நாங்கள் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளோம். மாலையில் அனைவரும் சங்குத்துறை பீச் சென்று பேச்சு, கட்டுரை, பீச் வாக் போன்ற போட்டிகளில் பங்கேற்க உள்ளோம் என்றார்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் வழங்கல்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் 10-ம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்க போட்டி கபிஸ்தலத்தில் நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலாளர் பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    போட்டியை முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி தொடக்கி வைத்தார். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற 80 பேருக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் ஆகியவை வழங்கி பாராட்டினார்.

    பாபநாசம்அரசு வழக்க றிஞர் வெற்றிச்செல்வன், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர்கள் செந்தில்நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வினோத், செயலாளர் சந்தோஷ், திருச்சி மாவட்ட செயலாளர் தினகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கணேசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    விழாவில் சதுரங்க வீரர்கள், பெற்றோர்கள், மாவட்ட, தாலுகா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • ஆலங்குளத்தில் இருந்து சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது.
    • இந்த பஸ் மூலம் அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் இருந்து குருவன்கோட்டை, குறிப்பன்குளம், கிடாரக்குளம், அகரம், வீராணம், கருவந்தா, பரன்குன்றாபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக சுரண்டைக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தடம் எண் 18 என்ற பஸ் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு இது, தடம் எண் 42 ஏ ஆக மாற்றப்பட்டு, இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் மூலம் வழியோர கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் ஆலங்குளம் மற்றும் சுரண்டைக்கு சென்று வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இந்த தடத்தில் வேறு பஸ்களும் இயக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். கிராம மக்கள், மாணவ, மாணவிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாணவர்கள் தன்னம்பிக்கை பெற புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர்.
    • இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 647 மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பள்ளிகள் தோறும் நூலகம் அமைத்து மாணவர்களிடம் புத்தகங்கள் வாசிப்பதை பரவலாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தனியாக வகுப்பறை ஒதுக்கி நூலகம் அமைத்து அதற்கென வளர்மதி என்ற ஆசிரியரை பொறுப்பாசிரியராக நியமித்து மாணவர்களிடம் புத்தகம் படிப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். இந்த பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மொத்தம் 647 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நூலகத்திற்கு நாவல்கள், சிறுவர் நூல்கள், வரலாறு, தமிழ், ஆங்கிலம், அறிவியல் மற்றும் போட்டித் தேர்வுக்குரிய புத்தகங்களை அரசு வழங்கியுள்ளது.

    இங்கு உயிரியல் ஆசிரியராகப் பணிபுரியும் சங்கரகோமதி, இந்தாண்டு பணி ஓய்வு பெற உள்ளதை முன்னிட்டு, மாணவர்கள் படித்துப் பயன்பெறவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் வகையில்,

    ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள அப்துல்கலாம், இறையன்பு, சைலேந்திரபாபு, கவிஞர் முத்துக்குமார் உள்ளிட்டோர் எழுதிய 30 புத்தகங்களை பள்ளி நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கினார். அவற்றை தலைமையாசிரியர் யுனைசி, நூலகப் பொறுப்பாசிரியர் வளர்மதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    • நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
    • சில பஸ்கள் காலை நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகிறது.

    இங்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

    அனைத்து வழித்தடங்களில் இருந்தும் நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    சில நேரங்களில் ஒரு சில வழித்தடங்களில் அதுவும் இயக்கப்படுவதில்லை.

    அதிலும், கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மனவெளி, சேங்கனூர், அச்சுதமங்கலம், வடக்குடி ஆகிய நிறுத்தங்களில் சில பஸ்கள் காலை நேரங்களில் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இதனால், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை- மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×