search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது.
    • மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தாராபுரம் :

    மின் சிக்கன வார விழாவையொட்டி தாராபுரம் கோட்ட மின் வாரியம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி நடத்தப்படுகிறது.

    இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- தாராபுரம் கோட்ட மின் வாரியம் சார்பில் மின் சிக்கன வார விழா ஒருவார காலம் நடத்தப்படுகிறது. மின்சாரத்தை சேமிக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை கொண்ட மின் சாதனங்களான எல்.இ.டி. விளக்குகள், மின் விளக்குகள், மின் சாதனங்கள், குளிா்சாதனப்பெட்டி, வாஷிங்மிஷின் ஆகியவற்றை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். டி.வி, கணினி உள்ளிட்ட மின் சாதனங்களை சுவிட்ச் மூலம் நிறுத்த வேண்டும்.

    மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் இணையதளம் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மின் சிக்கனம் குறித்த கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி 19-ந் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மின் சிக்கன வார விழாவான 20-ந் தேதி பரிசுகள் வழங்கப்படும்.

    கட்டுரை போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டு தலைப்புகளில் எழுதி அனுப்ப வேண்டும். ஆங்கில போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/GMDToAAfehTNGLkZ6. மின்னாற்றல் சேமிப்பில் என் பங்கு, மின்னாற்றல் ஆடம்பரத்திற்கா? அத்தியாவசியத்திற்கா?, மின்னாற்றல் சேமிப்பின் அவசியம்.

    அதே போன்று ஓவியப்போட்டிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு தலைப்பு தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். போட்டியில் கலந்துகொள்வதற்கான இணையதள முகவரி https://forms.gle/gNFcYtxZaASBXVe8 .மின்னாற்றல் சேமிப்பும் பசுமை உலகமும், நாளைய இருளை தடுப்போம், இன்றே விழிப்புணர்வு பெறுவோம், இயற்கை முறை மின்சாரம் காலத்தின் கட்டாயம், மின் சிக்கனம் மற்றும் சேமிப்பு குறிப்புகள், மின்சாரத்தை அளவோடு பயன்படுத்தி வளமோடு வாழ்வோம், சூரிய ஒளி இருக்க மின் ஒளி எதற்கு? மின்சாரம் நாட்டின் ஆதாரம். மின் சிக்கனம் தேவை இக்கணம் ஒரு யூனிட்டு சேமிப்பு இரண்டு யூனிட்டு உற்பத்திக்குச் சமம், 6 நட்சத்திர குறியீடு கொண்ட மின் உபகரணங்களை பயன்படுத்தி மின் விரயம் தவிர்த்து மின் தேவையினை குறைப்போம், இன்றைய மின் சேமிப்பு வரும் சந்ததிக்கு வழிகாட்டி, மின் சிக்கனம் செய்வோம் இயற்கை வளங்களைக் காப்போம். திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம் உள்ளிட்ட தலைப்புகளில் இணையதளத்தில் பதிவிடலாம்.

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கீேழ விழுந்தது.
    • மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் இன்று நடந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்.

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இன்று தேர்வு நடை பெற்றது.

    இதைத் தொடர்ந்து இந்த கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வு எழுதி விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    அவர்கள் கல்லூரியில் இருந்து மன்னம்பந்தம் சாலையில் சென்ற போது நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது. உடனே மோட்டார் சைக்கிளை ஒட்டிய மாணவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதனால் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் தாறுமாறாக ஓடி கீேழ விழுந்தது.

    இந்த சாலை விபத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரையபுரம் நடுத்தெருவை சேர்ந்த சுப்ரமணியன் மகன் லோகேஸ்வரன் (வயது 17) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுாயம் அடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரித்து வருகிறார்கள். சாலை விபத்தில் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ரசிகர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடினர்.
    • மாணவ, மாணவிகளுக்கு ரஜினி ரசிகர்கள் கல்வி உபகரணங்களை வழங்கினர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் 73-வது பிறந்த நாளை ரசிகர்கள் கல்வித் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வேலாயுதபுரம் அன்னை பத்திரகாளி அம்மன், காளியம்மன், கோவில் முன்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கி ரசிகர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் நகர ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற ஜோதி காமாட்சி வரவேற்றார். விழாவிற்கு நகர ரசிகர் மன்ற நிர்வாகியும் தொழிலதிபருமான சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    நகர இணைச் செயலாளர் சந்திரசேகரன் ஒன்றிய ரசிகர் மன்ற பாண்டியராஜ், வேலாயுதபுரம் முருகன், புதுக்கிராமம் மகேஷ் பாலா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் தவமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கோவில்பட்டி நகர ரஜினிகாந்த் ரசிகர் மன்ற ஜெயக்கொடி, ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர் பொன்முருகன் ஆகியோர் அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் ரசிகர் மன்ற இந்து ராஜ், கனிராஜன், சண்முகராஜ், ஆறுமுகசாமி, மேரி, நிர்வாகிகள் முருகன், மகாலிங்கம், பாலமுருகன், ஆறுமுகசாமி, கனகவேல், ஜெயராம், குமார், பாண்டியராஜன், அண்ணாமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாண–விகள் படித்து வருகின்றனர்.
    • சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 2 அரசு பள்ளிகள் உள்ளது.

    இந்த இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் பள்ளி தொடங்கும் காலை மற்றும் முடியும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.

    இது குறித்து காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் கூறியதாவது:-

    மதுக்கூரில் உள்ள 2 அரசு பள்ளிகளிலும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதோடு படிக்கட்டில் தொங்கியடி செல்லும் நிலையும் உள்ளது.

    இது போன்ற சூழ்நிலையில் மதுக்கூர் காவலர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    • அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
    • முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , சீர் மரபினர் மாணவ- மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலி டெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவியர்க ளுக்கான கல்வி உதவித் தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது. அதே போல் புதிய இனங்களுக்கு இணையதளம் வருகிற 15-ந் தேதி முதல் செயல்படத் தொடங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

    மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார்.
    • மாணவர்களுக்கு எளிய முறை அறிவியல் சோதனைகளை செய்து மகிழ்வித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட அளவிலான வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான கூட்டம் மற்றும் செயல்முறை விளக்கம் அம்மையப்பன் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆனந்தன், வானவில் மன்ற முதன்மை பயிற்றுனர் சங்கரலிங்கம், மேலராதாநல்லூர் பள்ளி தலைமையாசிரியர் சரவணராஜன், குடவாசல் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வானவில் மன்ற செயல்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் ரேவதி, மாவட்ட தலைவர் பொன்முடி, மகேந்திரன், சந்திரமோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.முன்னதாக பள்ளி அறிவியல் ஆசிரியர் அமுதா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் பட்டதாரி ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். விழாவில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வானவில் மன்ற கருத்தாளர்கள் மாணவர்களுக்கு எளிய முறை அறிவியல் சோதனைகளை செய்தும், மாணவர்களை செய்ய சொல்லியும் மகிழ்வித்தனர்.

    • தேசிய கராத்தே போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய அளவிலான கராத்தே மற்றும் குங்பூ போட்டிகள் நடந்தன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சோகாய் கராத்தே தோ பள்ளியை சேர்ந்த ராமநாதபுரம் மாணவர்கள் கட்டா மற்றும் ஷாய் பிரிவுகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

    சென்சாய் விமல சண்முகவேல் மேற்பார்வையில் பயிலும் ராமநாதபுரம் ஷ்ரமல் அகாடமி மாணவர்கள் மற்றும் உச்சிப்புளியை சேர்ந்த மாணவர்கள் பதக்கங்களை வென்றனர். குமிதே பிரிவில் பிரசன்னா, கருனேஷ் கார்த்திகேயன், மிர்திக்கா, ஜெயஜீத், அக்ஷிதா, கட்டா பிரிவில் பிரசன்னா, மிர்திக்கா தங்க பதக்கமும், ஷ்ரவன், பிரிதம், யோகேஷ் மகிபாலன், ஸ்ரீஹரன், நுதர்ஷன், முவிஸ் குமார், ஹரி பிரனவ், பிரஜீத், கருனேஸ் கார்த்திகேயன் ஆகியோர் வெள்ளி பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    இவர்களுடன் சோகாய் கராத்தே தோ பள்ளியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பாக்கியராஜ், ஷிராமல் ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் நிறுவனர் தில்லை பிரகாஷ் உடனிருந்தனர்.

    • கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்
    • குத்துச் சண்டை போட்டி

     கரூர்:

    பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட குத்துச் சண்டை போட்டியில் கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையிலான குத்து சண்டை போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரியில் இருந்து 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப் பதக்கம் பெற்று ஒட்டு மொத்த ஆண்கள் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர், உடற்கல்வித்துறை இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் பாராட்டினர்.

    • சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
    • புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவியருக்கு இலவச கல்விதி ட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமென்றி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவி த்தொகை இணையதளம் செயல்படுகிறது.

    புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    அதே போல் புதிய இனங்களுக்கு இணையதள 15.12.2022 முதல் செயல்படத் துவங்கும். புதிய இனங்களுக்கான விண்ணப்பங்கள் 20.01.2023-க்குள் இணையதளம் மூலம் கேட்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகவும்.

    அரசு இணையதளம் https://www.bcmbcmw.tn.gov.in/ welfschemes.htm//scholarship schemes-யிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும்விண்ண ப்பபடிவங்கள் உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டனர்.
    • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் வந்து செல்வது வழக்கம். இவருடன் அவரது சகோதரியும் பஸ்சில் வந்து செல்வார்.

    சகோதரி நாகர்கோவிலில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். அந்த மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் தொடர்பாக பாராமெடிக்கல் கல்லூரி மாணவன் தங்கையை காதலித்து வந்த வாலிபரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர் மாணவியை காதலித்த வாலிபருக்கு ஆதரவாக பேசினார். இதனால் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மாணவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டனர்.

    இதில் நர்சிங் கல்லூரி மாணவரை மற்ற 3 மாணவர்கள் சாவியாலும் குத்தினார்கள். சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் நாகர்கோவில் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த கல்லூரி மாணவனை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் பாரா மெடிக்கல் கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

    இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

    இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

    இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • 52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை.
    • மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது மற்றும் வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது

    சென்னை:

    தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) சமீபத்தில் நாடு முழுவதும் ஒரு ஆய்வை நடத்தியது. 86 ஆயிரம் மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் 336 பள்ளிகளை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர்கள் 2,937 பேர் கலந்து கொண்டனர்.

    3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அடிப்படை கற்றல் ஆய்வு குறித்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ள 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாதி பேருக்கு தமிழ் சரியாக படிக்க தெரியாது என்று தெரிய வந்துள்ளது.

    மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே 3-ம் நிலை தமிழ் உரையை புரிந்து கொள்வதில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதேபோல தமிழ்நாட்டில் 23 சதவீதம் மாணவர்கள் மட்டுமே எண்களை கண்டறிதல், பெருக்கல், வகுத்தல், எண்கள் மற்றும் வடிவங்களை கொண்ட அடிப்படைகளை கண்டறிதல், காலண்டர்களில் தேதிகள் மற்றும் மாதங்களை கண்டறிதல் போன்ற குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    52 சதவீத மாணவர்களால் நாட்காட்டியில் தேதி மற்றும் மாதத்தை கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. இதற்கு நேர்மாறாக தென்மாநிலங்களை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் எண்ணிக்கையில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    என்.சி.இ.ஆர்.டி. தனது அறிக்கையில் 46 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 முதல் 100 எழுத்துக்களை தமிழில் சரியாகவும், சரளமாகவும் படிக்க முடிந்தது என்று கூறியுள்ளது. 47 சதவீத மாணவர்களால் மட்டுமே 80 சதவீத ஆங்கில வார்த்தைகளை சரளமாக படிக்க முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில், தொற்று நோய் பரவலால் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இதற்கு முக்கிய காரணம் ஆகும். மேலும் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் கற்பித்தல், கற்றல் நடவடிக்கைகளில் கண்காணிப்பு இல்லாதது ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும் என்றனர்.

    பள்ளி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர்களுக்கு கடிதங்கள் வாசிப்பது மற்றும் வார்த்தைகளை படிப்பது ஆரம்ப நிலையில் ஒரு பிரச்சினையாக உள்ளது. எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களின் இந்த பிரச்சினையை தீர்க்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    ×