search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 141057"

    • 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
    • தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், தென்காசி மாவட்ட சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் உள்ள எஸ்.டி.கே. ரைஸ் மில் வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன், செயலாளர் சுதர்சன், துணைத் தலைவர் ஜெயராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் பிரஜித்குமார், முத்தையா, சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய முயற்சியில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, மருதப்பபுரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    • கல்வி அழியாத செல்வம் என்றும் விழிப்புணர்வு வாசங்களை ஏந்தி சென்றனர்.
    • பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர்.

    மதுக்கூர்:

    தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்று வருகின்றது.

    இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காடந்தகுடி ஊராட்சியில் கோட்டைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை அடுத்து மாணவர் சேர்க்கை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

    இந்த பேரணியில் பள்ளியின் தலைமை ஆசிரியை வாசுகி வரவேற்பு உரையாற்றினார்.

    உதவி தலைமை ஆசிரியை அற்புதமேரி வழி மொழிந்தார்.

    இதனை அடுத்து ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா பேரணியை துவங்கி வைத்தார்.

    இந்த பேரணி பள்ளியிலிருந்து துவங்கி வடக்கு கோட்டை காடு, தெற்கு கோட்டை காடு என சிரமேல்குடி ரோடு வழியாக மறுபடியும் திரும்ப பள்ளியை வந்து அடைந்தது.

    இதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கல்வி அனைவருக்கும் முக்கியத்துவம் பற்றியும் குழந்தைகளை பெற்றோர்கள் சேர்க்க வேண்டும் என்றும் கல்வி அழியாத செல்வம் என்றும் பல்வேறு வகைகளில் முன்மொ ழிந்தபடி சென்றனர்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கைலாசம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வடிவேல், எஸ் எம் சி தலைவி சங்கரி, உதவி தலைவி சுபாதிகா என பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் இதில் பெற்றோர்கள் ஊர்மக்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • 400-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
    • பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சீர்காழி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்தியா மாவட்ட விளையாட்டு மையம் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளியை மயிலாடுதுறை வருவாய் மாவட்ட மையமாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அழைப்பினை ஏற்று சீர்காழி நகரம் மற்றும் சீர்காழி சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்தும் ஆக்கூர் மற்றும் வைத்தீஸ்வரன்கோயில் போன்ற பகுதிகளில் இருந்தும் 400க்கு மேற்பட்ட 6 முதல் 11 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவிகள் பளுதூக்குதல் பயிற்சியில் பங்குப்பெற கலந்து கொண்டனர்.

    அதிலிருந்து 50 மாணவர்கள், 50 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இவர்களுக்கு தினசரி காலை 6 மணி முதல் 8மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் 6.30 வரை பயிற்சியளிக்க தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.

    இப்பயிற்சிக்காக அகில இந்திய பளுதூக்குதலில் பதக்கம் வென்ற சிவா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட விளையாட்டு அலுவலர் அப்துலாஷா பங்கேற்று முகாம் விதிகளை பற்றியும் பயிற்சி முறைகளை பற்றியும் விளக்கினார்.

    மேலும் ஆக்கூர் ஓரியண்டல் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷாஜகான், வைத்தீஸ்வரன் கோயில் அரசு மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் ஷங்கர், மற்றும் ஆசிரியர் ராதாகிருஷ்ணன், எஸ். டி. ஏ. டி அலுவலகர் ஏ.பிருந்தா, எம். விக்னேஷ் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் தேர்வாளர்களாக பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் டி. முரளி, பி. மார்கண்டன், எஸ். சக்தி வேல், ச.ஹரிஹரன், ரா. ராகேஷ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

    நிறைவாக, பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் எஸ். முரளிதரன் நன்றி கூறினார்.

    • மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி தொடங்கி வைத்தார்
    • மாணவ-மாணவிகள் சமரசம் மையம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம்

    கன்னியாகுமரி :

    சென்னை உயர்நீதி மன்றத்தால் தமிழ்நாடு சமரசமையம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுகிறது.வழக்குத்தரப்பினர்கள் தம் எதிர்தரப்பினருடன் பேசி சமரசம் செய்து கொள்ள ஏதுவாக நீதிமன்றம் சமரச மையத்துக்கு வழக்குகளை அனுப்புகிறது.

    இங்கு நன்கு பயிற்சிஅளிக்கப்பட்ட சமரசர்கள் வழக்குத்தரப்பினர்கள் தங்கள் வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்ள உதவுவார்கள். நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு வழக்கு தரப்பினர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்ததேவையில்லை. தனிப்பட்ட முறையில் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்த தனி அறைகள்,காத்திருக்க இடவசதி போன்றவை சமரச மையத்தில் உள்ளன. நீதிமன்றத்தின் அனைத்து வேலை நாட்களிலும் நாள் முழுவதும் இந்த சமரசம் மையம் இயங்கும்.குமரி மாவட்டநீதிமன்றத்தின் சமரச மையம் சார்பில் சமரசம் மையம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த "சமரசம் நாடுவீர்" என்ற தலைப்பில் சமரச விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரியில் நேற்று மாலை நடந்தது. கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகில் உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து இந்த பேரணி தொடங்கியது. இந்தப் பேரணியை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதி மாயகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்தப்பேரணியில் முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், 1-வது கூடுதல் சார்பு நீதிபதி முருகன், 2-வது கூடுதல் சார்பு நீதிபதி அசன்முகமது, சமரசம் மையத்தின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான நம்பிராஜன்,சமரச மையத்தின் வழக்கறிஞர்கள் ஜெயராணி, எம்.இ.அப்பன், துரைராஜ், சுபாஷ்,ஸ்டீபன்,உமாசங்கர், சரத்,ஜெகன், சுசீலாதேவி, சுஜாதா மற்றும் படந்தாலுமூடு முகில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்ட னர். கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து புறப்பட் ட இந்த பேரணி மெயின் ரோடு, முக்கோண பூங்கா சந்திப்பு,காந்தி மண்டப பஜார் வழியாக கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு சென்று நிறைவடைந்தது. வழி நெடுகிலும் சுற்றுலா பயணிகள், மற்றும் கடை வியாபாரிகளிடம் நீதிபதிகள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவ-மாணவிகள் சமரசம் மையம் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

    • மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்.
    • விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

    இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி அமைந்துள்ளது.

    இந்த விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு தரமான முறையில் வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து.

    இந்த விடுதியில் திடீரென மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமான முறையில் உள்ளதா? எனறு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    அப்போது சாம்பாரில் சரியான முறையில் காய்கறி இல்லை.

    மோர் மோசமாக இருந்தது கண்டு மாணவர்களுக்கு சாம்பார், மோர் ஆகியவற்றை முறையாக தரமாக வழங்க வேண்டும்.

    சாப்பாடு உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் என்று விடுதி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதற்கு மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும், மின் விளக்குகள் வரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கூறினர்.

    கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

    மேலும் உங்களது தேவைகள் எதுவானாலும் தயங்காமல் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறி தனது மொபைல் எண்ணை தெரிவித்தார்.

    • விரைவில் 2 பேர் ரஷ்யா செல்ல உள்ளனர்.
    • 16 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்ட த்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி தொடக்க விழா பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் மதுக்கூர் மகளிர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

    இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தொடங்கி வைத்து பேசினார்.

    நீட் தேர்வை எவ்வாறு எளிதில் எதிர்கொள்வது என்பது பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    ராக்கெட் அறிவியலில் தேர்வாகி ராக்கெட் ஏவு தளத்திற்கு செல்ல இருக்கும் மாணவன் சந்தோஷை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மாவட்டத்தில் 9 மாணவர்கள் ராக்கெட் அறிவியலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    விரைவில் இரண்டுபேர் ரஷ்யா செல்ல உள்ளனர்.

    அதில் ஒருவர் மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளியை சேர்ந்தவர்.

    இன்னொருவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி என்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

    பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணா மூர்த்தி, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரகாஷ், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் நீட் தேர்வு குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.

    இதேப்போல் தஞ்சாவூரில் அரண்மனை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பழனிவேல், கும்பகோணத்தில் நாச்சியார் கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் அல்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    கடந்த ஆண்டு இப்பயிற்சியின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 16 அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் நீட் தேர்வு பயிற்சி கையேடுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் புனித செபஸ்தியார் உதவிபெறும் நடுநிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி தாளாளரும், பங்குதந்தையுமான காேஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.

    இணை பங்குதந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில் பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர்கள் துரைமுருகன், முத்துமேரி மைக்கேல் ராஜ், பாபநாசம் பெனிபிட் பண்ட் தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆறுமுகம், பாபநாசம் லயன்ஸ் கிளப் செயலாளர் நவநீதகிருஷ்ணன், பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெயமீனா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகன், ஆசிரியர் பயிற்றுனர் அகிலா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.தொடர்ந்து, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிகளை ஆசிரியர் ஆபிரகாம் பாபு தொகுத்து வழங்கினார்.

    விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் ஆசிரியை கேத்ரின் ஆலிஸ் ராணி நன்றி கூறினார்.

    • 1,314 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.
    • வேலை வாய்ப்புத்துறை பேராசிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி குழுமங்களில் படித்த 1,314 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பி.எஸ்.ஆர். கல்விக் குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார்.

    இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் வரவேற் றார். வேலை வாய்ப்பு துறை அதிகாரி காசிராமன் வேலை வாய்ப்பிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.

    சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், கோவை சி.டி.எஸ். இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு 1,314 மாணவ-மாணவிகளுக்கு கிடைத்துள்ளது.

    அதற்கான பணி நியமன ஆணைகளை கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் பல லட்சம் மாணவ-மாணவிகள் பொறியியல் பட் டம் படித்து முடிக்கிறார்கள். இதில் 20 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே என்ஜினீயரிங் தொடர்பான வேலை கிடைக்கிறது. மற்ற 80 சதவீதம் பேர் பல்வேறு துறைகளில் வேலைகள் பெறுகிறார்கள். இதனை தவிர்த்து என்ஜினீயரிங் துறையில் வேலை வாய்ப்புகளை பெற மாணவர்கள் தங்களது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் டீன் மாரிசாமி, பி.எஸ்.ஆர்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரம ணியன், பி.எஸ்.ஆர்.கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுந்தராஜன், பி.எஸ்.ஆர்.பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பரங்கிரி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்புத்துறை பேரா சிரியர் சுதாகர் நன்றி கூறினார்.

    • சூரியனை சுற்றி வரும் கோள்கள் குறித்து மாணவர்களிடம் விளக்கினார்.
    • அறிவியல் வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வடக்கு நாட்டாணிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    நிகழ்ச்சியில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றத்தை சேர்ந்த கலைச்செல்வன் விண்வெளி அறிவியல், தொலைநோக்கி அறிவியல், ராக்கெட் ஏவுதல் குறித்தும் சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

    அறிவியல் வினாடி வினா நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் என்.திருஞானம், கே.கலியமூர்த்தி, தனு.முருகேசன், உஷாதேவி, வேளாங்கண்ணி ஞானதிரவியம், கரோலின் ஆரோக்கியமேரி, தாமரைச்செல்வி, மகேஸ்வரி உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகினர்.
    • நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி பிரணா யோகா பயிற்சி பள்ளியில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் மாவட்ட அளவில் பல்வேறு யோகா போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளனர். கடந்த மாதம் திருப்பூரில் நடந்த யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் மாணவ - மாணவிகள் கந்தராசனம், மயூராசனம், சிரசாசனம், விருச்சிக ஆசனம், ஏகபாத சிரசாசனம், கிருஷ்ண கோகுல் ஆசனம், பத்ம மயூராசனம், ராஜகபட ஆசனம், மனித கோபுரம் என பல்வேறு விதமான யோகாவை செய்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி மே மாதம் சர்வதேச அளவில் தாய்லாந்தில் நடக்கக்கூடிய யோகா போட்டியில் கலந்து கொள்ள 10 பேர் தேர்வாகினர்.

    கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் மாணவ - மாணவிகளை பாராட்டி நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை மாஸ்டர் அருண்குமார் தொகுத்து வழங்கினார். சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத் தலைவர் லட்சுமிராமன் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். தாய்லாந்தில் நடைபெறக்கூடிய யோகா போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற தி.மு.க. மாவட்ட மாணவரணி சுந்தரவடிவேலு, கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, செந்தில்குமார், மருதவள்ளி, ரத்தினராஜ், சித்ராதேவி, பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரணா யோகா பயிற்சி பள்ளி ஆசிரியர் அருண்குமார் செய்திருந்தார்.

    • மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவேண்டும் என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற 10 மற்றும் 24-ந் தேதிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்த திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் பள்ளிகளில் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைவரும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இந்த கூட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவருக்கு தேவையான படிப்பை தொடரும் வகையில் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த ஆலோசனை வழங்குவதே ஆகும்.

    எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று வரும் காலத்தில் இடைநிற்றல் என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தி மாடர்ன் நர்சரி, பிரைமரி பள்ளியின் 17-வது ஆண்டு விழா மற்றும் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர்பாஸ்கர், வட்டார கல்வி அலு வலர்கள் அறிவழகன், பாலசுப்ர மணியன், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டம ளித்து சிறப்புரையாற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக காமெடி நடிகர் போண்டா மணி குழந்தைகளுடன் நடனமாடி, பெற்றோர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.

    விழாவில் திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு உறுப்பினர் செல்வகணபதி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் உஷா சண்முகசுந்தர், மின்னல் கொடி பாலகிருஷ்ணன், பாரதமாதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எடையூர் மணிமாறன், டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் காளி தாஸ், நேஷனல் பள்ளியின் தாளாளர் விவேகானந்தன், மேஜிக் புகழ் அகிலன், கராத்தே முத்துக்குமார், அங்கை ராஜேந்திரன், ஆசிரியர்கள் அருளரசு, வேதரத்தினம், சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தாளாளர் அபூர்வநிலா அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் தீபா ராணி ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் ஆனந்தம் அறக்கட்ட ளையின் நிறுவனர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் விஜயராஜ் மற்றும் ஆசிரியர்கள் வீரலட்சுமி, திரிபுரசுந்தரி, திவ்யா, அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.

    ×