search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய்"

    • மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு ஸ்டெம் செல் அருமையான வழிமுறையாகும்.
    • மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

    நீரிழிவு நோய்க்கு தீர்வு காண்பதிலும் ஸ்டெம் செல் சிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணையத்தில் உள்ள செல்களின் வளர்ச்சியை தூண்டுவதற்கும், அந்த செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் நீரிழிவு நோயானது இயற்கையாகவே கட்டுப்படுத்தப்படுகிறது.


    நீரிழிவு நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தருகிறது. சில புற்றுநோய்களுக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை மிகச்சிறந்த தீர்வாக கருதப்படுகிறது.

    ரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட சில புற்றுநோய்களுக்கு இந்த ஸ்டெம் செல் சிகிச்சை ஒரு அருமையான சிகிச்சையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்டெம் செல் சிகிச்சையானது புற்றுநோய் பாதித்த செல்களை பழுதடையச் செய்து புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது.

    மேலும் புதிய நல்ல செல்களையும் உருவாக்குகிறது. இதன் மூலம் சில புற்று நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

    மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை வரலாம். சில நேரங்களில் மார்பகம் வளர்ச்சி அடையாத பெண்களுக்கு மார்பக வளர்ச்சி தேவைப்படலாம். எனவே மார்பக சிகிச்சைக்கும் ஸ்டெம் செல் என்பது மிக அருமையான வழிமுறையாகும்.

    இதன் மூலம் புற்றுநோய் பாதித்த பெண்கள் தங்களுடைய மார்பகத்தை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் மார்பகத்தை அழகாக மாற்றுவதற்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல வழிமுறையாகும்.

    புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு எந்த திசுவில் புற்றுநோய் இருந்தாலும் அதையும் ஸ்டெம் செல் சிகிச்சை சரி செய்கிறது. இது தொடர்பாக பல ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது இதயத்தில் உள்ள திசுக்கள் மற்றும் செல்கள் குறைந்து விடும் அல்லது இறந்து விடும். மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க ஸ்டெம் செல் சிகிச்சை உதவுகிறது.

    ஒருவருக்கு இதய செல்கள் குறையும் போது ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் இதய செல்களை உருவாக்க முடியும். இதன் மூலம் இதயத்தின் செயல்பாடுகளையும் சீராக்கி மாரடைப்பை தடுக்க முடியும்.

    மேலும் மூட்டு பகுதிகளில் உள்ள தேய்மானங்களுக்கும் ஸ்டெம் செல் என்பது நன்மை பயக்கும் சிகிச்சையாகும். மூட்டு தேய்மானம், முதுகெலும்புகளில் ஏற்படக்கூடிய தேய்மானங்கள் இவை அனைத்தையுமே சீராக்கு வதற்கு ஸ்டெம் செல் சிகிச்சை முக்கியமான வழிமுறையாக உள்ளது.


    ஆட்டோ இம்யூன், பக்கவாதம், உடல் பருமனுக்கு தீர்வு:

    நமது உடலில், நோய் தொற்றுக்களை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு அமைப்பானது சிலநேரங்களில் தவறுதலாக ஆரோக்கியமான செல்களை தாக்கி அழிக்கிறது. இந்த பாதிப்புக்கு ஆட்டோ இம்யூன் என்று பெயர். அவர்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை மிகச் சிறந்த பலனை தருகிறது.

    இந்த பாதிப்பானது சமீப காலமாக மிகவும் அதிகரித்து வருகிறது. வைரஸ்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு மரபணு பிரச்சினைகள் உருவாகி அதன் மூலமாக ஆட்டோ இம்யூன் பாதிப்பு ஏற்படுகிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சையானது ஆட்டோ இம்யூன் பாதிப்பு கொண்டவர்களின் செல்களில் ஏற்படும் மாற்றங்களை சீரமைப்பதன் மூலம் அவர்களின் நோயையும் குணப்படுத்துகிறது.

    ஒருவருக்கு வயதாகும்போது மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு பக்கவாதம் வரலாம். அதுபோன்ற பக்கவாதத்துக்கும் ஸ்டெம் செல் சிகிச்சை நல்ல பலனை தரும்.

    ஒவ்வொரு உறுப்புகளில் ஏற்படுகிற சேதம் மற்றும் மீளுருவாக்கத்தை சரி செய்வதற்கு ஸ்டெம் செல் மிகவும் அற்புதமான வழிமுறை என ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடி க்கப்பட்டுள்ளது.

    பெண்களை பொருத்தவரைக்கும் வயதாகும் போது அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்கள் உடல்பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கு உடல் எடை குறைகிறது.

    பெண்களின் உடல் உறுப்புகளில் எந்த வகையான பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதை ஸ்டெம் செல் சிகிச்சை மூலம் சீராக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்டெம் செல் சிகிச்சை என்பது ஒரு எளிய வழிமுறை ஆகும்.

    அந்த வகையில் ஒவ்வொரு திசுவின் உருவாக்கம், பழுதுபார்த்தல், மீளுருவாக்கம் ஆகியவைகளுக்கான அடிப்படையே அந்த திசுக்களில் உள்ள ஸ்டெம் செல் தான். இதனால் ஸ்டெம் செல் சிகிச்சை என்பது பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியதாக அமைகிறது.

    ஸ்டெம் செல் சிகிச்சை பற்றி நிறைய ஆய்வுகள் சமீப காலமாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இதன் சக்சஸ் ரேட் இன்னும் கொஞ்ச காலத்தில் மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.

    • கர்ப்ப காலத்தில் அவருக்கு சாதாரண புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபியை பரிந்துரைக்க முடியவில்லை.
    • தாயும் இரட்டை குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது. இது அரிதான நிகழ்வு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஹீமாட்டாலஜி துறையின் உதவி பேராசிரியர் அக்ஷய் லஹோடி கூறுகையில், அந்த பெண்ணுக்கு நாள்பட்ட மைலோயிட் லுகேமியா, ரத்த புற்றுநோய் இருப்பதாகவும், அத்தகைய சூழ்நிலையில் அவருக்கு சுகப்பிரசவம் நடத்துள்ளதாகவும் கூறினார்.

    அந்த பெண் கர்ப்பமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை (WBC) இயல்பை விட பல மடங்கு அதிகமாக இருந்தது.

    எனவே, கர்ப்ப காலத்தில் அவருக்கு சாதாரண புற்றுநோய் மருந்துகள் மற்றும் கீமோதெரபியை பரிந்துரைக்க முடியவில்லை.

    இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, அந்தப் பெண்ணின் உடல்நிலை மற்றும் அவரது வயிற்றில் உள்ள இரட்டைக் குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பு மருந்துகள் வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.

    மகப்பேறு மருத்துவர் டாக்டர் சுமித்ரா யாதவ் கூறுகையில், அந்த பெண்ணுக்கு ரத்த புற்றுநோய் இருப்பதாக கூறப்படவில்லை. கர்ப்ப காலத்தில் அவரது மனநலம் முற்றிலும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம் என்றார்.

    சுகப்பிரசவத்தின் மூலம் அந்த பெண்ணுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் இரட்டை குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

    இது பெண்ணின் முதல் கர்ப்பம் என்றும், இரட்டை குழந்தைகள் பிறந்தது அவரது குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • புகையிலை மற்றும் மது அருந்துதல் ஆகியவற்றால் வாய் புற்றுநோய் ஆபத்து அதிகரிக்கிறது.
    • வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது.

    இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் பலருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட்டு வருகிறது. வாய் புற்றுநோய் ஆண்களை மட்டுமில்லாமல் பெண்களையும் பாதிக்கக்கூடியது.

    வாய் புற்றுநோய் குறித்து மருத்துவர் அனில் கோலி யூடியூபர் ராஜ் சாமானிக்கு நேர்காணல் ஒன்றை கொடுத்துள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய அவர், "மொத்த புற்றுநோய்களில் 30% வாய் புற்றுநோய் தான். உலகின் வாய் புற்றுநோய் தலைநகரமாக இந்தியா மாறியுள்ளது. புகையிலை மற்றும் மதுவை அதிக அளவில் எடுத்து கொள்வது, ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை உட்கொள்வது ஆகியவற்றால் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
    • இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊற வைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை குறைக்கலாம்.

    இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எல்லா சீசனிலும் டாப் டிரெண்டிங் உணவுகளில் ஒன்றாக இருப்பது கிரில் சிக்கன். சில நாடுகளில் கோடை காலத்தில் விரும்பி சாப்பிடப்படும் உணவாக வறுக்கப்பட்ட கிரில் சிக்கன் (Grilled meat) இருந்து வருகிறது.

    பல்வேறு உலக நாடுகளில் குக்அவுட்கள் மற்றும் பார்பிக்யூ, பர்கர்கள், ஹாட் டாக், ஸ்டீக்ஸ் மற்றும் சிக்கன் ஆகியவற்றை வார இறுதியில் கோடை உணவாக உள்ளன. நம் நாட்டில் சிறுவர்கள், இளைஞர்கள் என பெரும்பாலானோர் கிரில் சிக்கனை விரும்பு உண்கின்றனர். ஆனால் கிரில் சிக்கன் சாப்பிடுவதால் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    மிகச்சிறந்த சமையல் முறை உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்காது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மருத்துவர்களின் கூற்றுப்படி, ஹீட்டோரோசைக்ளிக் அமின்கள் அல்லது HAs மற்றும் பாலிசைக்ளிக் அரோமாட்டிக் ஹைட்ரோகார்பன்கள் அல்லது PAHs ஆகியவை புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் ஆகும்.

    வறுக்கப்பட்ட இறைச்சி எப்படி புற்றுநோயாக மாறுகிறது?

    நீங்கள் அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது மற்றும் நேரடியாக தீயில் சமைக்கும்போது, இறைச்சியின் தோலில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உருவாகத் தொடங்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

    அவற்றில் இரண்டுதான் HCAகள் மற்றும் PAHக்கள். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடும் போது பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இருப்பினும், எப்போதாவது பார்பிக்யூ செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    இறைச்சியில் உள்ள அமினோ அமிலங்கள், சர்க்கரைகள் மற்றும் கிரியேட்டின் ஆகியவை உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து ஹீட்டோரோசைக்ளிக் அமின்களை உருவாக்குகின்றன. HA-கள் மற்றும் PAH-கள் பிறழ்ந்தவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவை உயிரணுக்களின் டிஎன்ஏவில் மாற்றங்களுக்கு வழிவகுத்து அவற்றை புற்றுநோயாக மாற்றும்.

    வறுக்கப்பட்ட இறைச்சியில் புற்றுநோயைக் குறைக்கும் வழிகள்:

    இறைச்சியை வறுப்பதற்கு முன் 20 நிமிடங்கள் ஊறவைப்பதால் ஹெட்டோரோசைக்ளிக் அமின்களின் உருவாக்கத்தை 90 சதவிகிதம் குறைக்கலாம்.

    நிபுணர்களின் கூற்றுப்படி, உணவுகள் குறைந்த வெப்பநிலையில் சமைக்கப்பட வேண்டும். ஆனால், நீண்ட நேரம் சமைக்க வேண்டும்.

    ஒவ்வொரு உணவையும் அதற்கு ஏற்ற பக்குவத்தில் சமைத்து, சூடாகவே அதனை சாப்பிடுவது, சாப்பிடும் முறையில் அவசரம் இன்றி, உணவை முழுமையாக மென்று விழுங்குவது உள்ளிட்டவைகளை பின்பற்றினால் உடலில் ஏற்படும் பாதிப்புகளை பெருமளவுக்கு குறைக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    • தலை மற்றும் கழுத்து புற்றுநோய் குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
    • முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர்.

    இந்தியாவில் தலை, கழுத்து புற்றுநோய் அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    தலை மற்றும் கழுத்து புற்றுநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை நடத்திய ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

    இதில் 1,869 புற்றுநோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் 26 சதவீதம் பேருக்கு தலை மற்றும் கழுத்து புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த கேன்சர் முக்த் பாரத் அறக்கட்டளை, மார்ச் 1 முதல் ஜூன் 30 வரை தனது ஹெல்ப்லைன் எண்ணில் பெறப்பட்ட அழைப்புகளின் தரவுகளைத் தொகுத்து இந்த ஆய்வை நடத்தியது.

     

    இது தொடர்பாக மூத்த புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது:

    இந்தியாவில் அதிக புகையிலை நுகர்வு மற்றும் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக தலை மற்றும் கழுத்து புற்றுநோய், குறிப்பாக இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

    சுமார் 80-90% வாய் புற்றுநோய் நோயாளிகள் புகையிலை அல்லது மெல்லும் புகையிலையை உபயோகிப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    முதல் 2 நிலைகளில் நோய் கண்டறியப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் குணப்படுத்தப்படுகின்றனர். முறையான பரிசோதனை இல்லாததால்தான் இந்தியாவில் மூன்றில் 2 பங்கு பேருக்கு புற்றுநோய் தாமதமாக கண்டறியப்படுகிறது.

    எனவே புகையிலை பழக்கத்தை கைவிடவும், நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கான ஆரம்ப பரிசோதனைகள் அவசியம் என்கிற விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன.
    • நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் துணை கேள்விகளுக்கு சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா பதிலளித்து பேசினார்.

    முக்கியமாக, புற்றுநோய் தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சம் புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

    இதில், ஆண்களில் பெரும்பாலும் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் மார்பக புற்றுநோயும் காணப்படுகிறது.

    புற்றுநோய்க்காக 131 அத்தியாவசிய மருந்துகள் அட்டவணை 1-ல் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவை கண்காணிக்கப்பட்டு அரசால் விலை நிர்ணயிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொதுவாக பயன்படுத்தும் மருந்துகள் ஆகும்.

    இந்த பட்டியலில் இல்லாத 28 கலவைகளும் உள்ளன. தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்தியுள்ளன.

    இவ்வாறு புற்றுநோய்க்கான மருந்துகள் மலிவு விலையில் கிடைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் சுமார் ரூ.294 கோடி வரை புற்றுநோயாளிகளுக்கு மிச்சமாகிறது.

    இதைப்போல குறைந்த செலவில் புற்றுநோய்க்கான சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    நாட்டில் கடந்த 2014-ம் ஆண்டில் 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    மருத்துவக்கல்வி இடங்களின் எண்ணிக்கையும் 51,348-ல் இருந்து 1.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ உயர்கல்விக்கான இடங்களும் 31,185-ல் இருந்து 72,627 ஆகி இருக்கிறது.

    மருத்துவக்கல்வியின் தரத்திலும் அளவிலும் சமநிலை இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களால் முடிந்தவரை விரைவாக செல்ல முயற்சிக்கிறோம். அதே நேரத்தில் மருத்துவர்களின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பவில்லை.

    இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று சிகிச்சை பலனின்றி சவுந்தர்யா உயிரிழந்தார்.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார். தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த சவுந்தர்யாவின் கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் கவனம் ஈர்த்தது.

    இந்நிலையில், கடந்த ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சவுந்தர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகையின் எக்ஸ் பதிவில், "செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அவர்களின் மரணத்தை அறிந்து வேதனையடைந்தேன்; அவர் ஒரு பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார்; அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.
    • சவுந்தர்யா மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல்.

    தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் சவுந்தர்யா.

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த சவுந்தர்யா செய்தித் துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் மீடியாவில் இணைந்தார்.

    இவருடைய கணீர் குரலும், தமிழ் உச்சரிப்பும் ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியதோடு, பிரபலமடைந்தார்.

    இந்நிலையில், கடந்த ஆண்டு சவுந்தர்யாவுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை சீராகாததை அடுத்து, புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதன் முடிவில் சவுந்தர்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியானது. மேலும், 4வது ஸ்டேஜில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

    தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பலரும் இவருடைய சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினர். தமிழக

    முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.

    கடந்த 6 மாதமாக சவுந்தர்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் செய்தித்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இவருடைய மறைவுக்கு தொலைக்காட்சி ஊழியர்கள் மற்றும் செய்தித் துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • குடல் சார்ந்த பல வகை நோய்களை உருவாக்குகின்றன.
    • ரசாயனங்கள் உணவின் சத்துக்களை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.

    உணவுப்பொருட்களை உண்ணும் ஆசையை தூண்டிவிட அவற்றில் கவர்ச்சிகரமான வண்ண நிறமிகள் சேர்க்கப்படுகின்றன.

    பல இடங்களில் பானிபூரியில் கூட கவர்ச்சிகரமாக இருக்கும் வகையில் அவற்றில் நீலம், மஞ்சள் மற்றும் ரசாயன நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் பொதுவாக நீரில் ஒரு சாயமாக பயன்படுத்தப்படுகின்றன.

    இது உயிரணு இறப்பு மற்றும் சிறுமூளை, மூளை தண்டு, சிறுநீரகம், கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மேலும் இது புற்றுநோயை ஏற்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குக்கீஸ்கள், வறுத்து பொரித்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து உணவுகளிலும் இது போன்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களான சோடியம் நைட்ரேட், ஒலெஸ்ட்ரா என்னும் உணவு சத்து குறைக்கும் திரவம், ப்ரோமினேடட் வெஜிடபிள் எண்ணெய் என்னும் நரம்பியல் கோளாறை உருவாக்கும் தாவர எண்ணெய், மாவு பொருட்களை நொதிக்க வைக்க உதவும் பொட்டாசியம் புரோமைடு, குளிர்பானங்களை கெடாமல் வைக்கும் பொட்டாசியம், பியூட்டிலேடட் ஹைட்ராக்சினியால் என்னும் உணவை நீண்ட காலம் கெடாமல் வைக்கும் ரசாயனம் போன்றவை கலக்கப்படுவதாக உணவு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    கண்ணுக்கு தெரியாத இந்த வகை ரசாயனங்கள் மனிதர்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடலில் சேர விடாமல் தடுப்பதுடன் குடல் சார்ந்த பல வகை நோய்களை உருவாக்குகின்றன.

    பல நாடுகள் தற்போது இந்த வகை ரசாயனங்கள் கலந்த உணவுகளை தடை செய்ய வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு மாற்றாக காலிபிளவர், பூண்டு, மஞ்சள், பச்சை காய்கறிகள், தக்காளி போன்றவை புற்றுநோயை தடுக்க உதவுவதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பாதிப்பை தடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

    • நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
    • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.

    மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.

    கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.

    இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கர்நாடகாவில் சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது.
    • 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் அனைவரும் விரும்பும் உணவாக பானி பூரி உள்ளது. முதலில் இந்த உணவு வட மாநிலங்களில் மக்களின் விரும்பப்படும் உணவாக பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த உணவு வட மாநில மக்கள் மூலம் தமிழகத்தில் வந்தது. இதன் மூலம் தமிழகத்திலும் பானி பூரியை மக்களின் விரும்பத்தக்க உணவாக மாறியது.

    பானி பூரி குறித்து தவறான கருத்துக்கள் வந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் மக்கள் அதனை ருசித்து சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பானி பூரி சாப்பிடும் மக்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தியை நேற்று கர்நாடக உணவு பாதுகாப்புதுறை தெரிவித்தது.

    அந்த வகையில் சாலையோரம் உள்ள பானி பூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல புகார்கள் வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில் பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியது.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானி பூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் பானி பூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் ஆணை பிறபிக்கப்பட்டது.

    • சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன.
    • பானிபூரியில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    வட இந்தியாவில் அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருந்த பானிபூரி தற்போது இந்தியா முழுவதும் உள்ளவர்களும் விரும்பி உண்ணும் உணவாக மாறிவிட்டது.

    இந்நிலையில், கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானிபூரிகள் தரமில்லாமல் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பல்வேறு கடைகளில் இருந்து 260 பானிபூரி மாதிரிகளை சோதனை செய்த பின்னர் அதிர்ச்சிகரமான முடிவுகளை கண்டறிந்துள்ளனர்.

    சோதனை செய்யப்பட்ட பானிபூரியில் 22% உண்பதற்கான பாதுகாப்பு தரத்தை மீறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    சோதிக்கப்பட்ட 260 பானிபூரி மாதிரிகளில் 41 மாதிரிகளில் செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உருவாக்கும் கெமிக்கல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    18 பானிபூரி மாதிரிகள் மனிதர்கள் உண்பதற்கு தகுதியற்றவை என்றும், பானிபூரியில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதனையடுத்து உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

    ஏற்கனவே கர்நாடகாவில் கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய்களுக்கு கலக்கப்படும் ரோடமின் பி கெமிக்கலை அம்மாநில அரசு தடை செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×