search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 143253"

    • கருணாநிதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக வாடிப்பட்டி பஸ்நிலையம் வந்தனர்.

    வாடிப்பட்டி

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள், வாடிப்பட்டி பஸ்நிலையத்தில் அண்ணாசிலை முன்பு மதுரைபுறநகர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கருணாநிதி படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பேரூர் செயலாளர் பால்பாண்டியன், ஒன்றியசெயலாளர் பாலராஜேந்திரன், மாவட்ட துணைச்செயலாளர் சேகர், மாநில பொதுக்குழுஉறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டதுணைச்செயலாளர் அயூப்கான், பேரூராட்சிதுணைத்தலைவர் கார்த்திக், மதுசூதனன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தி.மு.க.வினர் பழையநீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு மவுன ஊர்வலமாக பஸ்நிலையம் வந்தனர்.

    • கருணாநிதியின்4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
    • 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின்4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்லடம் கொசவம்பாளையம் பிரிவில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடந்த கலைஞர் 4-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் பி.ஏ.சேகர், ராமமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் ருக்மணி சேகர், சவுந்தர்ராஜன், மற்றும் சம்பத், விஜயலட்சுமி, மலர்க்கொடி, மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல பல்லடம் பஸ் நிலையம் முன்பு நகர தி.மு.க. சார்பில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு, நகர செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ராஜசேகரன்,சுகன்யா ஜெகதீஸ்,வசந்தாமணி தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் குட்டி பழனிச்சாமி,கவுஸ்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடத்தில், ஒன்றிய தி.மு.க.சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது. பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் சோமசுந்தரம் தலைமையில், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,பல்லடம்,ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, வேலம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜ், வைஸ் முத்துக்குமார், என். எஸ். கே. நகர் கிட்டுசாமி, இளைஞரணி கௌதம், மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க.அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு, ஒன்றிய பொறுப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி,மற்றும் விமல் பழனிச்சாமி, எஸ்.எம்.பழனிச்சாமி,சாமிநாதன், பாலகுமார் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகர்மன்ற தலைவர் மத்தீன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்த மரியாதை செலுத்தினர்.

    உடுமலை :

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி உடுமலை நகர தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி குழந்தைகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    மாவட்ட செயலாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன், நகர செயலாளர் சி.வேலுச்சாமி, நகர மன்ற தலைவர் மத்தீன், நகர மன்ற துணை தலைவர் எஸ்.கலைராஜன் , வக்கீல் எஸ்.செந்தில், ரேணுகா, டி ஜவகர்,அப்பாசாமி, யு .என். பி.குமார், டி.ஆறுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை நகர தி.மு.க. சார்பாக 32,33-வது வார்டில் கருணாநிதியின் உருவ படத்துக்கு உடுமலை நகர செயலாளர் வேலுச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் உடுமலை நகராட்சி துணைத் தலைவர் கலைராஜன், யு. என். குமார் ,வக்கீல் செந்தில், 33 வது வார்டு செயலாளர் ,முருகேசன் ,ஜவகர் மற்றும் உடுமலை நகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம் ,முன்னாள் அமைப்பாளர் குமார் ,சந்திரன் ,ஆர் .டி .எஸ் .ரேணுகா ,தனபால் ,நகராட்சி கவுன்சிலர்கள் ஆறுச்சாமி ,ரீகன், சாந்தி ,கிருபாகரன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகாலையில் நடந்த மாரத்தான் போட்டியை கலாச்சார விழா போல் மாற்றி இருந்தனர்.
    • வீரர்களின் ஓடு பாதையில் 10 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    சென்னை:

    தமிழக இளைஞர்கள் இடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்துவதற்காக கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கினார்.

    இந்த அமைப்பின் சார்பில் 3-வது ஆண்டு கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி சென்னையில் இன்று நடந்தது.

    அதிகாலை 4 மணிக்கு பெசன்ட்நகரில் ஆல்சாட் பள்ளியில் இருந்து போட்டி தொடங்கியது. 42.2 கிலோ மீட்டர் தூர போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 4.30 மணிக்கு 21.1 கிலோ மீட்டர் தூர போட்டியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

    10 கிலோ மீட்டர் தூர போட்டியை காலை 5 மணிக்கு அமைச்சர் கே.என். நேருவும், 5 கிலோ மீட்டர் தூர போட்டியை காலை 7.15 மணிக்கு உதயநிதி ஸ்டாலினும் தொடங்கி வைத்தார்கள். போட்டியில் ஓடியவர்கள் மெரினா கடற்கரை கண்ணகி சிலையில் திரும்பி பெசன்ட்நகரில் நிறைவு செய்தார்கள்.

    போட்டியில் 9 வெளிநாடுகளை சேர்ந்த 86 பேர் 19 மாநிலங்களை சேர்ந்தவர்கள். மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் வந்து குவிந்தவர்கள் ஓடினார்கள்.

    43 ஆயிரம் பேர் திரண்டதால் அதிகாலையிலேயே பெசன்ட்நகர் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. பெசன்ட்நகரில் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி தம்பதியின் துள்ளல் கிராமிய இசை கச்சேரி நடந்தது. போட்டியில் ஓடி முடித்த பிறகும் இசை நிகழ்ச்சியை ரசிக்க கூட்டம் திரண்டு இருந்தது.

    அதிகாலையில் நடந்த இந்த போட்டியை கலாச்சார விழா போல் மாற்றி இருந்தனர். வீரர்களின் ஓடு பாதையில் 10 இடங்களில் மேடை அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    சென்னை வாசிகள் இதுவரை அறிந்திராத கிராமங்களில் மட்டுமே ஒலித்த விதவிதமான மேளங்கள் இந்த மேடைகளில் அரங்கேற்றப்பட்டு நகரை அதிர வைத்தது. திருவண்ணாமலை பெரிய மேள ஒலியும் பெரிதாக அந்த பகுதியை அதிரவிட்டது.

    காரமடை துடும்பாட்ட குழுவினரின் துள்ளல் இசை கலந்த ஆட்டம் காண்போரையும் ஆட்டம் போட வைத்தது. திருப்பத்தூர் பம்பை மேளம் கிராமத்து ஒலி இசையை நகரத்து வீதிகளில் மிதக்க விட்டது.

    நெல்லை உறுமி மேளமும், நையாண்டி மேளமும் கிராம திருவிழாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது. ராமநாதபுரம் ஜிம்பலா மேளம் ரசிக்க வைத்தது. அலங்காநல்லூர் பறையாட்டம் ஆட்டம் போட வைத்தது.

    இசைகளின் சங்கமத்தோடு இணைந்து ஓடிய பல்லாயிரக்கணக்கான வீரர்கள் ஓடிய களைப்பு தெரியாமல் கிராமங்களில் திருவிழாக்களை பார்ப்பது போல் ரசித்து மகிழ்ந்தபடியே ஓடினார்கள்.

    முக்கிய பிரமுகர்கள் பலரும் ஓடினார்கள். தமிழக போலீஸ் டி.ஜி.பி.சைலேந்திர பாபு, கடற்படை அதிகாரிகள், இங்கிலாந்து துணை மேயரான தமிழ் பெண் மோனிகா தேவேந்திரன் உள்பட பலரும் ஓடினார்கள். அனைவரும் ஒரேநிறத்தில் பனியன், கழுத்துப்பட்டை அணிந்து ஓடியது பெசன்ட்நகர் முதல் மெரினா வரை பார்வையாளர்களை கவர்ந்தது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கினார்.

    பஞ்சாபை சேர்ந்த மாரத்தான் வீரர் சாவ்லா பார்வையற்றவர். அவரும் மாரத்தான் ஓடினார். அவருக்கு பரிசு வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டினார். போட்டியில் கிடைக்கும் பதிவுக்கட்டண தொகைகளை அரசின் நிவாரண பணிகளுக்கே அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகள் நடந்த போட்டியில் கிடைத்த தொகை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு வசூலான ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ எழும்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

    அதேபோல் இந்த தொகையை சுகாதாரத்துறை செயலாளரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் அமெரிக்கா, பிரிட்டீஷ், ஜப்பான், பிரான்ஸ் நாட்டு தூதர்கள், அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான், பெரிய கருப்பன், மேயர் பிரியா, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    இவ்வளவு அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டு ஓடியது ஆசிய அளவிலான சாதனையாக மாறி இருக்கிறது. இதற்கான சான்றிதழை ஆசிய புக் ஆப் ரெக்கார்டு நிறுவனம் முதல்-அமைச்சரிடம் வழங்கியது.

    நிகழ்ச்சியில் கலைஞரின் மார்பளவு வெண்கல சிலையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சிலையை சைதாப்பேட்டையில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நிறுவ திட்டமிட்டுள்ளார்.

    • வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.
    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    வடவள்ளி, 

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவை மாநகர் மேற்கு மாவட்டம் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் வடவள்ளி பஸ் முனையத்தில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்ப்ட்டது.

    நிகழ்ச்சியில் மேற்கு மண்டல் தலைவர் தெய்வானை தமிழ்மறை, மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் விஸ்வநாதன், விஷ்ணுபிரபு, வக்கீல் சுந்தர்ராஜன், வக்கீல் மோகன சுந்தரம். வட்ட செயலாளர்கள் வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர்கள் லட்சுமி , பத்மாவதி , மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் சதாசிவம், சின்னசாமி, சிடிசி துரைசாமி , மகேஷ், ராஜ்குமார், ரவி, ஞானசேகர், ஆறுமுகம் , ஜனகராஜ், முன்னாள் துணைத்தலைவர் சிவசாமி , மகளிரணி துணை அமைப்பாளர்கள் முத்துலட்சுமி, சின்னதங்கம், பகுதி நிர்வாகிகள் வி.எஸ்.ரங்கராஜ், மணி , பாபு, பகுதி ஐடிவிங் கமல்ராஜ், ஆனந்த பாரதி, ஆவின் குருசாமி, பகுதி இளைஞர்கள் அணி நிரஞ்சன் , சக்திவேல் பூபதி, ராஜீவ்காந்தி நகர் கலைச்செல்வி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • தி.மு.க.வினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.
    • பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    திருப்பூர் :

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் தி.மு.க. தலைவருமான கலைஞர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தினர்.

    திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பெரியார் மற்றும் அண்ணா சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் டி. கே. டி. நாகராஜன், 3வது மண்டல தலைவர் சி.கோவிந்தசாமி, இளைஞர் அணி அமைப்பாளர் தங்கராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் எம். எஸ் .ஆர். ராஜ், தெற்கு மாநகர இளைஞர் அணி பிஆர்.செந்தில்குமார், வடக்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்துக்குமார், 22வது வார்டு கவுன்சிலர் ராதாகிருஷ்ணன்,36 -வது வார்டு கவுன்சிலர் திவாகர் மற்றும் அமைப்பாளர் ,கவுன்சிலர்கள் ,நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருணாநிதி நினைவு நாள் மவுன ஊர்வலம் நடந்தது.
    • மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில்முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருமங்கலம் நகராட்சி முன்பு மதுரை சாலையில் தெற்கு மாவட்ட செய லாளர் மணிமாறன் தலைமையில் மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக முக்கிய வீதிகள் வழியாக தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் திமுக அலுவ லகத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லதா அதியமான், முத்துராமலிங்கம், சாமி நாதன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பாச பிரபு மதன்குமார், விமல், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்க பாண்டியன், உசிலம்பட்டி நகர செயலாளர் தங்க பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், கப்பலூர் சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மவுன ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரியாதை
    • கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர செயலாளர் சுபிகான், மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், நகர அவைத் தலைவர் அருள் சோபன், பொறியாளர் அணி வீர வர்கீஸ், ஆல்வின் வினோ, ஜமீல் குமார், ஸ்ரீ குமார், பிளசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைதி ஊர்வலம் தொடங்கியது.
    • இந்த ஊர்வலம் மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது.

    திருவனந்தபுரம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர்.

    கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியின் நிறைவில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

    இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக, பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது. அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ளார்.

    • அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு.

    பல்லடம் :

    மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு பல்லடம் தி.மு.க. சார்பில் கொசவம்பாளையம் ரோட்டில், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர்கள் பி. ஏ. சேகர், ராமமூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் சம்பத், மலர்கொடி, திண்டு பாலு, பாஸ்கரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக அமைதிப் பேரணி நடைபெறாமல் இருந்தது.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

    இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் இன்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைதிப் பேரணியும் நடத்தப்பட்டன. சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

    இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலை அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    அந்தப் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி வணங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

    பேரணியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தயாநிதி மாறன் எம்.பி., ஆ.ராசா, மு.க.தமிழரசு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி சா.மு.நாசர், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம்.

    வில்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் ஜெ.கருணாநிதி, இனிகோ இருதயராஜ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.பி.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல்.

    பகுதிச் செயலாளர், கே.ஏழுமலை, சேப்பாக்கம் மதன் மோகன், மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் சிதம்பரம், புழல் நாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரான குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், தாம்பரம் துணை மேயர் காமராஜ், பல்லாவரம் மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாத்துரை, பல்லாவரம் மு.ரஞ்சன், நித்யா, பாக்கியராஜ், தி.நகர் பி.மாரி, சோமசுந்தரம், உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அமைதிப் பேரணியில் நடந்து வந்தனர்.

    இவர்களில் ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். தொண்டர்கள் பலர் தி.மு.க. கொடி ஏந்தி அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.

    அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தை அடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி வணங்கி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த கருணாநிதியின் மார்பளவு சிலைக்கும் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.

    பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி வணங்கினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக அமைதிப் பேரணி நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற அமைதி பேரணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர் பல்லாயிரகக்கணக்கில் பங்கேற்றனர்.

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயராமகிருஷ்ணன் அழைப்பு.
    • காலை 9.30 மணிக்கு பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் வரை நடைபெற உள்ளது.

    மடத்துக்குளம் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4-ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி நாளை 7-ந் தேதி காலை 9 மணியளவில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும்.ஆட்சியில் இருந்த நேரங்களில் பல உன்னத சட்டதிட்டங்களை நிலை நாட்டிய தமிழினத் தலைவர், நம்மை விட்டுப் பிரிந்தாலும் அவர் மீது கொண்ட கொள்கையாலும், சரித்திர சாதனைகளாலும், கலாச்சார நினைவுகளோடு நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

    கலைஞரின் நினைவு நாளையொட்டி ஏழை, எளிய பொதுமக்களுக்கும், ஆதரவற்றோர், முதியோர்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள், பொறுப்பாளர்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், மற்றும் கிளை கழக செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஏற்பாடு செய்திட வேண்டும்.மேலும் அவரவர் பகுதிகளில் வீட்டு முன்பு கலைஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நாளை காலை 9.30 மணி அளவில் உடுமலைப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அமைதிப் பேரணியாக சென்று புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள், துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ×