search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிந்தது"

    வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு லாரி லாரியாக வெங்காயம் வருவதால் கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #Onionprice
    சென்னை:

    மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில்தான் வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. நாட்டின் மொத்த வெங்காய தேவையில் 50 சதவீதம் நாசிக் மாவட்டத்தில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் அதிகம் விளைகிறது.

    நாசிக் மாவட்டத்தில் சந்திரகாந்த் பிகான் தேஷ்முக் என்பவர் தனது வயலில் அறுவடை செய்த வெங்காயத்தை வேளாண் விளைபொருள் சந்தை கமிட்டிக்கு கொண்டு சென்றார். அங்கு கடந்த 5-ந்தேதி ஏலம் விட்டதில் 1 கிலோ வெங்காயத்துக்கு வெறும் 51 பைசா மட்டுமே விலை நிர்ணயிக்கப்பட்டது. வேறு வழியின்றி தான் கொண்டு சென்ற வெங்காயத்தை விற்றார்.

    மொத்தம் 545 கிலோ வெங்காயத்தை விற்றதில் வேளாண் சந்தை கமிட்டி கட்டணம் போக அவருக்கு வெறும் ரூ.216 மட்டுமே கிடைத்தது. இதனால் மிகவும் வேதனை அடைந்த தேஷ்முக் அந்த பணத்தை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிற்கு அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

    என்னுடைய வெங்காயம் தரமானதாக இருந்தும் நல்ல விலை கிடைக்கவில்லை. அதனால் அந்த பணத்தை முதல்வருக்கு அனுப்பி விட்டேன். இனி என் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன், வாங்கிய கடனை எப்படி அடைப்பேன் என்று வேதனையில் கேள்வி கேட்கிறார் தேஷ்முக்.

    இதே போல் 750 கிலோ வெங்காயத்தை ரூ.1064-க்கு விற்ற மற்றொரு விவசாயி சஞ்சய் சாத்தோ அந்த பணத்தை பிரதமர் மோடிக்கு மணியார்டரில் அனுப்பி உள்ளார்.

    சென்னையில் கடந்த சில நாட்களாக வெங்காயம் விலை நாளுக்கு நாள் இறங்கி வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 1 கிலோ வெங்காயம் ரூ.12 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது.

    ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்படும் நடுத்தர அளவு வெங்காயம் கிலோ ரூ.12-க்கும், நாசிக் வெங்காயம் கிலோ ரூ.15-க்கும் விற்கப்படுகிறது.

    மளிகை கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் கிலோ ரூ.20 வரை விற்கிறார்கள். சின்ன வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்கப்படுகிறது. #Onionprice
    கூடலூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் மரம், பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதேபோல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அப்பர் பவானியில் அதிகபட்சமாக 144 மி.மீட்டரும், தேவாலாவில் 107 மி.மீட்டரும், அவலாஞ்சியில் 100 மி.மீட்டரும் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரு நாளில் சராசரியாக 39.37 மி.மீ. மழை பெய்தது.



    மழையுடன் கடுங்குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதேபோல் பச்சை தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் என்ற இடத்தில் நேற்று காலை 7 மணிக்கு ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு துறையை சேர்ந்த அனில்குமார், ரமேஷ் உள்ளிட்ட வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் மழையை பொருட்படுத்தாமல் ராட்சத மரத்தை மின்வாள்கள் கொண்டு வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணிக்கு மரம் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கூடலூர்- மைசூரு இடையே போக்குவரத்து சீரானது.

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் கூடலூரில் இருந்து பார்வுட் வழியாக கிளன்வன்ஸ், எல்லமலை, பெரியசோலைக்கு அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு கருதி ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் ஆர்.டி.ஓ. முருகையன், தாசில்தார் ரவி, நெடுஞ்சாலைத்துறை ஆய்வாளர் அனிபா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் கிடந்த பாறைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. பின்னர் பல கட்டங்களாக போராடி பாறைகள் அகற்றப்பட்டது.

    இதனால் காலை 11 மணிக்கு கூடலூர்- பெரியசோலை இடையே போக்குவரத்து தொட ங்கியது. இருப்பினும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் எல்லமலை, சூண்டி உள்பட பல இடங்களில் மண் சரிவு அபாயம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓவேலி பேரூராட்சி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவை முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தகவல்களை பரிமாற முடியாமல் சிரமம் அடைந்து உள்ளனர். பந்தலூர் தாலுகா பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து உள்ளன. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது.அம்பலமூலா பகுதியில் சிவஞானம் என்பவரது வீட்டின் மீது மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதில் வீட்டின் மேற்கூரை மற்றும் சமையல் அறை சேதம் அடைந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், உதவியாளர் பிரேம் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை வெட்டி அகற்றினர். இதேபோல் அய்யங்கொல்லி, கோழிச்சால் உள்பட பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்தன. இதனால் விடிய விடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கொட்டும் மழை யில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைன்பாரஸ்ட் பகுதியில் நேற்று மாலை மரம் ஒன்று வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வாகனங்கள், கூடலூரில் இருந்து ஊட்டி வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். மரம் விழுந்ததால் ஊட்டி-கூடலூர் சாலையில் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதித்தது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. 
    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் சரிந்து கொண்டே வருகிறது.
    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

    நேற்று முன்தினம் 808 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை இது 611 கன அடியாக குறைந்தது. இன்று மேலும் குறைந்து 433 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்து. நேற்று மாலை 6 மணி முதல் நீர்திறப்பு வினாடிக்கு 1500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தைவிட தண்ணீர் திறப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதால் நீர்மட்டமும் சரிந்து கொண்டே வருகிறது.

    நேற்று முன்தினம் 34.62 அடியாக இருந்த நீர் மட்டம் நேற்று 34.33 அடியாக சரிந்தது. இன்று காலை இது 34.06 அடியாக குறைந்துள்ளது.

    ×