search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமிஷனர்"

    திருப்பூரில் லஞ்ச புகாரில் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து கமி‌ஷனர் உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பகுதிகளில் மிக முக்கிய போலீஸ் நிலையங்களாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த போலீஸ் நிலையங்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் குடும்ப பிரச்சினை, அடிதடி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்காக போலீஸ் நிலையங்களை நாடி வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருப்பூர் பகுதியை சேர்ந்த அக்பர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று புகார் கொடுக்க சென்றுள்ளார்.

    வழக்கை விசாரித்த சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குபதிவு செய்யாமலேயே இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து தருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தன்னிடம் பணம் கேட்டு அலைக்கழிப்பதாக சப்-இன்ஸ்பெக்டர் மீது பாதிக்கப்பட்ட அக்பர், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஊரக போலீஸ் நிலையத்திற்கு பணிமாறுதலில் சென்றார்.

    இதுபோல தொடர்ச்சியாக அவர் மீது புகார் எழுந்துள்ளன. இது குறித்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் விசாரணை நடத்தினார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவியை தர்மபுரி மாவட்டத்திற்கு பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

    இது போன்று ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமி‌ஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #tamilnews
    சேலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செல்போன் பேசிய படி பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்ததாக பெற்றோர் புகார் கூறியதை அடுத்து நர்சு மீது விசாரணை நடத்த கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி குள்ளப்பன் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (28). ஆடிட்டர் அலுவலக உதவியாளர். இவரது மனைவி கலைமணி (26). காதல் திருமணம் செய்த இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    இந்தநிலையில் 2-வதாக கர்ப்பம் தரித்த கலைமணிக்கு தாதகாப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 1-ந் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 2-ந் தேதி குழந்தை உயிரிழந்தது.

    இந்தநிலையில் சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் பிரபாகரன் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததும் மூச்சு, பேச்சு இல்லாமல் குழந்தை இருந்தது. அப்போது பணியில் இருந்த நர்சு செல்வி செல்போனில் பேசியபடி அஜாக்கிரதையாக செயல்பட்டார்.

    இதனால் இயற்கை உபாதை கழிவுகள் குழந்தையின் வயிற்றுக்குள் சென்று உயிரிழந்து விட்டது. அவர் துரிதமாக செயல்பட்டிருந்தால் குழந்தையை காப்பாற்றி இருக்கலாம்.

    ஆனால் மறுநாள் போனில் பேசிய அந்த நர்சு குழந்தையின் உடல் நிலை பற்றி எதுவும் கேட்காமல் பிரசவம் பார்த்ததற்கு 8 ஆயிரம் தரும்படி கேட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இந்த சம்பவம் நேற்றிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து மாநகராட்சி கமி‌ஷனரிடம் கேட்டபோது, இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சேலம் மாநகர நகர் நல அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்ததும் நர்சு மீது தவறு இருப்பது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். #tamilnews
    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர், கமி‌ஷனர் ஆய்வு செய்தனர்.
    வேலூர்:

    பலத்த மழை எச்சரிக்கையொட்டி வேலூர் மாநகராட்சி பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடக்கிறது.

    தமிழகத்தில் பலத்த மழை செய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவிப்பு விடுத்துள்ளது. இதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தபட்டு தயார் நிலையில் இருக்குமாறு வலியுறுத்தபட்டுள்ளது.

    இதையடுத்து வேலூர் மாநகராட்சி பகுதியில் பணிகள் முன்னேற்பாடு துரிதபடுத்தபட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரை வாகனங்கள் மூலம் அகற்றி வருகின்றனர்.

    பலத்த மழை பெய்தால் நிக்கல்சான் கால்வாயில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதில் அடைப்பு ஏற்பட்டால் முள்ளிப்பாளையம், இந்திராநகர் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரும். இதனை தவிர்க்க நிக்கல்சன் கால்வாய் தூர்வாரப்பட்டது.

    பெங்களூர் ரோட்டில் மங்காய் மண்டி அருகே கால்வாயில் இருந்த அடைப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரப்பட்டது.

    பழைய பைபாஸ் ரோடு பகுதிகளில் உள்ள கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. பணிகளை கலெக்டர் ராமன், சப்-கலெக்டர் மெகராஜ், கமி‌ஷனர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். உதவி கமி‌ஷனர் மதிவாணன், மணிவண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    இதேபோல காட்பாடி, சத்துவாச்சாரி, தொரப்பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைவெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. #tamilnews
    கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பாராட்டியுள்ளார்.

    கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் நேற்று மாலை தடாகம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வேலாண்டிப் பாளையத்தை சேர்ந்த ஆனந்த்(35) என்பவர் பாக்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் 4 இருந்தது. அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர துணை கமி‌ஷனர்(தலைமையிடம்) தர்மராஜன் நேரடி மேற்பார்வையில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளர்கள் சோமசேகர், சோமசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வேலாண்டிப்பாளையம் மருதப்பகோனார் வீதியில் வெங்கிடசாமி என்பவருக்கு சொந்தமான கடையில் சோதனை நடத்தினர்.

    அங்கு 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் மொத்தம் 5904 இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 18 லட்சத்து 8 ஆயிரமாகும். அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மிஷின், ஹார்டுடிஸ்க், கம்ப்யூட்டர் மானிட்டர், கீபோர்டு, கட்டிங் மெஷின், ஒரு செல்போன், இரு சக்கர வாகனம் ஒன்று ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் கடையை மாதம் ரூ.2,700-க்கு வாடகைக்கு எடுத்து இங்கு கள்ளநோட்டு அச்சடித்து கோவை மாநகர பகுதியில் உள்ள கடைகளில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் மூலமாகவும், தெரிந்த நபர்கள் மூலமாகவும் கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்தது தெரியவந்தது.

    பண மதிப்பு இழப்புக்கு பின் வந்த புதிய கரன்சிநோட்டில் கள்ளநோட்டு தயாரித்து புழக்கத்தில் விட இருந்த கும்பலை துரித நடவடிக்கை எடுத்து பிடித்த குற்றப்பிரிவு போலீசாரை கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா பாராட்டினார். #tamilnews
    ×