search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
    • மதுபான கொள்கை குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து அவரை சிறைக்குள்ளேயே கைது செய்து இருந்தது.

    புதுடெல்லி:

    டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம்ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கையில் மாற்றங்களை கொண்டு வந்தார்.

    ஆனால் அவர் மதுபான கொள்கையை மாற்றி அமல்படுத்தியதில் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    குறிப்பாக மதுபான கொள்கை மாற்றம் மூலம் ஆம்ஆத்மி கட்சிக்கு முறைகேடாக ரூ.100 கோடிக்கு மேல் கிடைத்து இருப்பதாக இ-மெயில் தகவல் பரிமாற்றத்தை ஆதாரமாக கொண்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா முதலில் கைது செய்யப்பட்டார்.

    அதன்பிறகு இந்த முறை கேடுகளுக்கு டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. கூறியது. இதையடுத்து பண முறைகேடு தடுப்பு சட்ட வழக்கில் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

    இதற்கிடையே பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என்று கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு இடைக்கால ஜாமினை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது. அதன் அடிப்படையில் அவர் விடுதலையாகி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர் தாமாக முன்சென்று திகார் ஜெயிலுக்கு சென்றார். இதையடுத்து அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமின் கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 26-ந்தேதி சி.பி.ஐ. தரப்பில் அவர் கைது செய்யப்பட்டார். மதுபான கொள்கை குற்றச்சாட்டில் புதிய ஊழல் வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்து அவரை சிறைக்குள்ளேயே கைது செய்து இருந்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்தார். தனக்கு ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்தும் மற்றொரு மனு செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்று வந்தது.

    கடந்த மாதம் இது தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து முடிந்தது. கெஜ்ரிவால் விடுதலை செய்யப்படுவாரா? என்பது செப்டம்பர் 5-ந்தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் அன்று அந்த தீர்ப்பு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு வலைதளத்தில் செப்டம்பர் 13-ந்தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான விசாரணை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நீதிபதி சூரியகாந்த் தீர்ப்பை வெளியிட்டார்.

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்வதாக அவர் தீர்ப்பில் அறிவித்துள்ளார்.

    கெஜ்ரிவாலை விடுதலை செய்த போதிலும் அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து உள்ளது. நீதிபதி தீர்ப்பு விவரம் வருமாறு:-

    கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவர் கைது செய்யப்பட்டபோது குற்றவியல் நடைமுறை சட்டங்கள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளன.

    சிறையில் இருந்து வெளியில் சென்ற பிறகு இது தொடர்பாக கெஜ்ரிவால் யாரிடமும் எதுவும் பேசக்கூடாது. அவர் பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும்.

    அமலாக்கத்துறை வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டபோது எத்தகைய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதோ அந்த நிபந்தனைகள் அனைத்தும் இந்த மனு மீதான தீர்ப்புக்கும் பொருந்தும்.

    இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

    ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து முதல்-மந்திரி கெஜ்ரிவால் 5 மாதங்களுக்கு பிறகு ஜெயிலில் இருந்து வெளியில் வர உள்ளார்.

    • அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் சிபிஐ கைது செய்தது.
    • கடந்த ஆறு மாதம் சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலுக்கு இன்று ஜாமீன் கிடைக்கும் என எதிர்பார்ப்பு.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறையால் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்காக உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கொடுத்தது. பின்னர் கடந்த ஜூன் அமலாக்கத்துறை வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது.

    சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. இந்த சூழலில் தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை நீதிபதி சூர்யா கந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த 5-ந்தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என உச்சநீதிமன்ற இணையதளத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய தீர்ப்பில் ஜாமீன் வழங்கப்பட்டால் சுமார் ஆறு மாதங்கள் கழித்து சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியே வருவார்.

    • டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
    • சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சென்னை:

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இறங்கினார்கள். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதற்கிடையே ஜாபர் சாதிக் உள்பட இந்த வழக்கில் கைதான நபர்கள் மீது டெல்லி சிறப்பு கோர்ட்டில் மத்திய போதைப்பொருள் போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது ஆலீம் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைக்கோர்த்து இந்த வழக்கில் தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ரூ.55.30 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜாபர் சாதிக், சட்டவிரோத பண பரிமாற்றத்தின் மூலம் ஈட்டிய பணத்தை திரைப்பட தயாரிப்பு, ஓட்டல்கள், சரக்கு நிறுவனம் போன்ற தொழில்களில் முதலீடு செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய பெயரில் இருந்த அசையும், அசையா சொத்துகள், மனைவி அமீனா பானு மற்றும் பினாமிகள் மைதீன் கானி, முகமது முஸ்தபா, ஜாமல் முகமது ஆகியோரின் பெயரில் இருந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    ஜே.எஸ்.எம். சொகுசு ஓட்டல் (புரசைவாக்கம்), ஆடம்பர பங்களா வீடு உள்பட 14 அசையா சொத்துகள், 7 சொகுசு கார்கள் உள்பட மொத்தம் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்.
    • அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர்.

    புதுடெல்லி:

    புதுடெல்லியின் ஓக்லா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆம் ஆத்மி கட்சி அமானதுல்லாகான் உள்ளார். இவர் டெல்லி வக்பு வாரியத்தின் தலைவ ராக இருந்த போது சட்ட விரோதமாக ஆள் சேர்ப்பு செய்ததாகவும், ரூ.100 கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்ட தாகவும் புகார் எழுந்தது.

    இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக ஓக்லாவில் உள்ள அமானதுல்லாகான் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். இதையொட்டி அவரது வீட்டு முன்பு டெல்லி போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவரது வீட்டிற்கு செல்லும் சாலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் சோதனை நடத்திய போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய தாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அமானதுல்லாகான் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பா.ஜ.க. அரசு தன்னையும், மற்ற ஆம் ஆத்மி தலைவர்களையும் குறி வைப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று காலை சர்வாதிகாரியின் உத்தரவின் பேரில், அவரது கைப்பாவை யான அமலாகத்துறையினர் என் வீட்டிற்கு வந்துள்ளனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக போலி வழக்குகளை பதிவு செய்து அமலாகத்துறை துன்புறுத்துகிறது. அமலாக்கத்துறை எனக்கு மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சிக்கும் சில பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது. இப்போது தேடல் வாரண்ட் என்ற பெயரில் என்னை கைது செய்ய அமலாகத்துறை எனது வீட்டிற்கு வந்துள்ளது.

    மக்களுக்கு நேர்மையான சேவை செய்வது குற்றமா? இந்த சர்வாதிகாரம் எவ்வளவு காலம் நீடிக்கும்?

    என் மாமியார் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர்கள் என்னை கைது செய்து எங்கள் வேலையை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். எங்களை சிறைக்கு அனுப்புவார்கள். நீதிமன்றத்தில் இந்த முறையும் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன் என கூறினார்.

    இதற்கிடையே அமானதுல்லாகானின் வீட்டு முன்பு ஆம் ஆத்மி தலைவர்கள் திரண்டனர். அவர்கள் கூறுகையில், அமானதுல்லாகானை கைது செய்ய முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டினர்.

    இதுகுறித்து ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.கட்சியின் அரசியல் பழிவாங்கல் காரணமாக அமான துல்லாகான் குறி வைக்கப்படுகிறார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அமானதுல்லாகான் வீட்டில் சோதனை நடத்திய அதே நேரத்தில் அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினர். சுமார் 6 மணி நேரம் வரை விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    • வயதான பெற்றோரை முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.
    • நிபந்தனையை தளர்த்தக் கூடாது என வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    மதுரை:

    திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி தற்போது நிபந்தனை ஜாமினில் உள் ளார். இவர் வாரம் ஒரு முறை திண்டுக்கல் கோர்ட் டில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

    இந்த நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி அங்கிட் திவாரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், வாரம் தோறும் சென்று கையெழுத்திடுவது சிரமமாக உள்ளது. இது உடல் மற்றும் மனரீதியாக அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு, அதிக செலவையும் ஏற்படுத்துவதாக உள்ளது. வயதான பெற்றோரையும் முறையாக கவனித்துக் கொள்ள இயலவில்லை.

    வழக்கு விசாரணை முடியும் நிலையில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறேன். ஆகவே இந்த வழக்கில் வாரம் ஒரு முறை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அங்கிட் திவாரிக்கு நிபந்தனை தளர்வு அளித்தால் அவர் சொந்த மாநிலத்திற்கு சென்று விடுவார். எனவே நிபந்தனையை தளர்த்தக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வாரம் ஒரு முறை திங்கட்கிழமை கையெழுத்திடுவதை 2 வாரத்திற்கு ஒருமுறை திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்து இட உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்து வைத்தார்.

    • அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அமலாக்கத்துறை ஆவணங்களை கைப்பற்றியது.

    புதுடெல்லி:

    அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்து வருபவர் ஜெகத்ரட்சகன்.

    இதற்கிடையே, சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை அரக்கோணம் தொகுதி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் வாங்கி உள்ளார். அதன்பின், இந்தப் பங்குகளை மனைவி, மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார்.

    இந்தப் பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.

    இதுதொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறாமல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தின் கீழ், ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்பு சொத்து முடக்கப்பட்டது. அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கான உத்தரவு கடந்த 26-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.

    • ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது.
    • ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளரான பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மாநில நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, ஜாமின் என்பது விதி... சிறை என்பது விதிவிலக்கு என்ற பொதுவான சட்டக் கொள்கை PMLA சட்டத்திற்கும் பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஜாமின் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (PMLA) கூறப்பட்டுள்ளது. ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. தண்டனைக்கு முன் சிறை தண்டனை என்பது ஒரு விதிவிலக்கே. PMLA சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளில் கூட பொதுவாக ஜாமின் வழங்கப்பட வேண்டும் என்பதே விதி என நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்ததுடன், பிரேம் பிரகாஷ்க்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

    டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வழக்கின்போது தனிநபரின் சுதந்திரம் எப்பொழுதும் விதி மற்றும் சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறையின் மூலம் அதை மறுப்பது விதிவிலக்காகும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    • செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பட்டியலிட்டிருந்தது.
    • செந்தில் பாலாஜி மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் மீண்டும் ஒத்திவைத்தது.

    புதுடெல்லி:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு பட்டியலிட்டு உத்தரவிட்டிருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

    • அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
    • செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

    ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் வழக்காக பட்டியலிடப்படும் என்றும் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், ஜாமின் வழக்கை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

    • 3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை.
    • செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையின்போது அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் சரமாரி கேள்விகள் எழுப்பியதோடு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    3 வழக்கையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா அல்லது சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை மட்டும் விசாரிக்கிறதா என தெளிவு தேவை.

    செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று இன்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. 

    செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை இன்று இறுதி வழக்காக மீண்டும் விசாரிக்கப்படும்.

    • வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள்
    • அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்

    அமலாக்கத்துறை சம்மன் 

    காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     சக்கர வியூகம் 

    தற்போது மீண்டும் ராகுல் காந்தி விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாகக் கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மக்களவையில் மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளதாகத் தான் பேசியது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேஷனல் ஹெரால்டு வழக்கு 

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குக் காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

    அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

    இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசி யேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பங்குகளை பெற்றுக் கொண்டதாக மனுவில் கூறினார். இது தொடர்பாக வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.

    இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடந்த காலங்களில் சம்மன் அனுப்பி பலமணிநேர விசாரணையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.  

    • அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
    • விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை எதிர்த்து அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    சிறையில் இருக்கும் அவரை சிபிஐ மேலும் கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இந்த ஜாமினை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது உயர் நீதிமன்றம் ஜாமினுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

    அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அப்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இந்த நிலையில் விசாரணை நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது டெல்லி மாநில உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் "நான் குழப்பம் அடைகிறேன். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?. அவரை மீண்டும் கைது செய்ய போகிறீர்களா?" என கேள்வி எழுப்பினார்.

    இன்றைய விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் நீதிபதி விவேக் குர்னானி ஆஜரானார். அவர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு இன்று மற்றொரு வழக்கில் ஆஜராக இந்த விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

    அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி "அமலாக்கத்துறையின் இந்த வழக்கு முற்றிலும் துன்புறுத்தலின் ஒன்றாகும்" எனத் தெரிவித்தார்.

    பின்னர் வழக்கு விசாரணை சில மணி நேரம் ஒத்திவைத்தார்.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்பட்ட மதுபானம், தனியார் லைசென்ஸ் பெற்று கடைகளை நடத்தலாம் என்பதுதான்.

    2022-ம் ஆண்டு ஜூலை மாதம் டெல்லி தலைமை செயலாளர் நரேஷ் குமார் இந்த மதுபானக் கொள்கையில் விதிமீறல் மீறப்பட்டதை கோடிட்டு காட்டினார். மேலும் மதுபான லைசென்ஸ்க்காக மறைமுக பலன்கள் பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

    மதுபானக் கொள்கை உருவாக்கத்தில் மதுபான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு 12 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்பதால் அதில் ஈடுபட்டுள்ள்ளனர். இதற்கு பலனாக தெற்கு குரூப் ஆம் ஆத்மி கட்சிக்கு கிக்பேக்ஸ் என்ற முறையில் 100 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அதில் ஒரு பகுதியை பொது ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்டது என சிபிஐ குற்றம்சாட்டியது. கிக்பேக்ஸ் நடைபெற்றுள்ளதால் பணமோசடி என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

    ×