search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
    • அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதில், இடைத்தரகர்கள் மூலம் ரூ.360 கோடி லஞ்ச பணம் இந்தியர்களுக்கு கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கான பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். பிறகு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சிறையில் உள்ள கிறிஸ்டியன் மைக்கேல் தன்னை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான மனுவில் தான் கைது செய்யப்பட்ட வழக்கில் அதிகபட்ச தண்டனை ஐந்து ஆண்டுகள் தான். அந்த வகையில், இந்த வழக்கில் தான் இதுவரை ஐந்து ஆண்டுகள் மூன்று மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தன் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிலையில், வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடையும் முன்பே ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

    • அமலாக்கத் துறையின் சம்மன்களுக்கு கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.
    • டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவால் நேரில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக கூறி, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்னும் ஆஜராகவில்லை.

    அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார்.

    இதற்கிடையே விசாரணைக்கு ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிடக்கோரி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கில் மார்ச் 16-ம் தேதி ஆஜராகும்படி கோர்ட் உத்தரவிட்டது. நேற்று அவர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமின் பெற்றார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 7-வது மற்றும் 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
    • இதனைத் தொடர்ந்த நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

    டெல்லி மாநில முதல்வராக கெஜ்ரிவால் இருந்து வருகிறார். டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரனை நடத்த அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

    ஆனால் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டது சட்ட விரோதம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து நேரில் ஆஜராவதை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். 7-வது மற்றும் 8-வது முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய பிறகு, நீதிமன்றத்தை நாடியது. அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடும்படி கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

    இந்த நிலையில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரேஸ் அவென்யூவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது 8-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்ததற்காக கைது செய்யப்படுவதை தவிர்க்க ஜாமின் வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.

    அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு ஜாமின் வழங்கியது. ரூ.15,000 பத்திரம் மற்றும் ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன்  அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

    இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் மணிஷ் சிசோடியா (துணைமுதல்வர்), மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னும் ஜாமின் கிடைக்கவில்லை. அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையைில் கெஜ்ரிவால் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.

    • மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டனர்.
    • கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினார்கள்.

    புதுடெல்லி:

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இதில் ஆம் ஆத்மி ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகினர்.

    இதற்கிடையே, தெலுங்கானா முதல் மந்திரியும் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவருமான கே.சந்திரசேகரராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. கவிதாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் கவிதாவிடம் 3 முறை விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரியின் மகளும், பி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.சி.யுமான கவிதாவை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளனர் என தகவல் வெளியானது.

    இதையடுத்து, அவரது வீட்டின் முன் பி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் குவிந்தனர். அக்கட்சி எம்.எல்.ஏ. ஹரீஷ் ராவ் அங்கு வந்து தொண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கவிதா வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண்களுக்கு எதிராக நில அபகரிப்பு, கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டு.
    • சோதனையின்போது அமாலாக்கத்துறை அதிகாரிகளை ஆதரவாளர்கள் தாக்கிய வழக்கில் ஷேக் ஷாஜகான் கைது.

    மேற்கு வங்காளம் சந்தேஷ்காளி பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்றச் செயலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிகுந்த ஷேக் ஷாஜகான் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெண்களின் சொத்துகளை அபகரித்தல், பெண்களுக்கு எதிராக கூட்டு பாலியல் பலாத்காரம், அரசு நலத்திட்ட நிதிகளை பறித்தல் போன்ற குற்றச்சாட்டுகளை அங்குள்ள பெண்கள் இவர் மீது முன்வைத்தனர்.

    மேலும், வீதிகள் இறங்கி ஆயுதங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் திரணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஷேக் ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது, அவர்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஷேக் அகமது கைது செய்யப்பட்டார்.

    அவரை மத்திய அமைப்பினர் ஒப்படைக்க மேற்கு வங்காள போலீசார் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

    இந்த நிலையில் ஷேக் ஷாஜகானுக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேஷ்காளியின் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ஷேக் ஷாஜகானால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என அம்மாநில ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், தனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது. அந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
    • ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.

    சென்னை:

    சூடோபெட்ரின் என்னும் போதைப்பொருளை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்திய வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி டெல்லியில் கைது செய்தனர்.

    அவர் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது.

    இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜாபர் சாதிக் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவர் மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பதிவு செய்துள்ள வழக்குகள் உள்பட பல முதல் தகவல் அறிக்கைகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளன.

    இந்த வழக்கு தொடர்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியர்கள், சில முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜாபர் சாதிக் பணம் கொடுத்த அரசியல் பிரமுகர்கள் ஆகியோரை கண்காணித்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    போதைப்பொருள் கடத்தல் மூலம் ஜாபர் சாதிக் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அந்த பணத்தை சினிமா, ஓட்டல் தொழில் ஆகியவற்றில் முதலீடு செய்ததும், அரசிய லில் உயர்ந்த இடத்துக்கு வருவதற்காக பணத்தை வாரி இறைத்துள்ளதும் தெரியவந்துள்ளது.

    ரூ.7 லட்சம் பணத்தை அவர் ஒரு அரசியல் பிரமுகருக்கு கொடுத்துள்ளார். அந்த பணத்தை ரூ.5 லட்சம், ரூ.2 லட்சம் என 2 தவணைகளில் கொடுத்துள்ளார்.

    மேலும் இன்னொரு அரசியல் பிரமுகருக்கு ரூ.1 கோடி பணம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜாபர் சாதிக்கை அரசியலில் உயர்ந்த பதவிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்து அந்த பிரமுகர் பணத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. அவர்கள் யார்-யார்? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் ஜாபர் சாதிக் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளராக வருவதற்கும் சிலர் முக்கிய காரணமாக இருந்துள்ளனர். அதனால் அவர் ஒரே நேரத்தில் 3 படங்களை தயாரித்து இருக்கிறார். அவர் சினிமா தயாரிப்பாளராக மாற யார் யார் உறுதுணையாக இருந்துள்ளனர் என்கிற பட்டியலையும் அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.

    திரையுலகில் ஜொலிக்க ஜாபர் சாதிக் பல வகைகளில் பணம் வாரி வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் ஒருவரிடம் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. மேலும் நடிகர்கள் சிலரும் ஜாபர் சாதிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளிலும் ஜாபர் சாதிக் கலந்து கொண்டுள்ளார்.

    அடுத்த கட்டமாக போதைப்பொருள் கடத்தலில் ஜாபர் சாதிக்குடன் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அமலாக்கத்துறையினர் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றை வைத்து எந்தெந்த வகையில் பண பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. முறைப்படி வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுக்கப்பட்டு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கொடுத்து உள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதன் மூலம் பணம் வாங்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பி டெல்லிக்கு வரவழைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து ஜாபர் சாதிக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை அடுத்தடுத்த நாட்களில் இன்னும் வேகம் எடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.
    • ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டம்.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

    டில்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வரப்படுவதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி, ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக அமலாக்கத்துறை இனி விசாரிக்க தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வி.சி.க துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
    • ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது.

    இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.

    பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம்.

    என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.

    இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
    • ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 10 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் தொழில் அதிபர் மகாவீர் இரானி வசித்து வருகிறார். கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் அவரது வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ராஜா அண்ணாமலைபுரம் முதல் தெருவில் அரசு ஒப்பந்த அதிகாரி செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேசன் கடைகளுக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் சப்ளை செய்து வருகிறார். அவரது வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    தேனாம்பேட்டையில் அரசியல் கட்சி பிரமுகர், தொழில் அதிபர் ஒருவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் புறப்பட்டுச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து பா.ஜ.க.-வில் இணைகின்றனர்
    • டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைகின்றனர்

    மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தபாஸ் ராய். பல்வேறு மோசடிகள்  சம்பவம் தொடர்பாக கடந்த ஜனவரி 12 -ல் இவரது வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடந்தது.

    அப்போது திரிணாமுல் கட்சி சார்பில் அவருக்கு ஆதரவாக யாரும் உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை தபாஸ் ராய் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

    ஆளும் திரிணாமுல் காங்கிரசின் தவறான ஆட்சி மற்றும் அட்டூழியங்களை எதிர்த்து போராடப்போவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நேற்று அவர் பா.ஜ.க.-வில் சேர்ந்தார். கடினமான சூழ்நிலையில் திரிணாமுல் காங்கிரசை (டிஎம்சி) விட்டு வெளியேறியதாக அவர் கூறினார்.

    இது குறித்து திரிணாமுல் கட்சி தலைவர் சாந்தனு சென் கூறியதாவது:-

    தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கொள்கை, சித்தாந்தங்களை மறந்து தபாஸ் ராய் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளார். பதவி ஆசைக்காக கட்சியை விட்டு விலகிய தபாஸ் ராய் போன்ற துரோகிகளை மேற்கு வங்காள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.

    அவருக்கு அனைத்து வித பதவிகளையும் திரிணாமுல் கட்சி கொடுத்தது. ஆனால் அவர் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார். அவருக்கு கொள்கை, சித்தாந்தம் கிடையாது. அமலாக்கத் துறை (ED)சோதனைக்கு பயந்துதான் பா.ஜ.க.-விடம் சரணடைந்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான அசோக் சவான் சமீபத்தில் பா.ஜ.க.-வில் இணைந்தார்.குஜராத் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அர்ஜுன் மோத்வாடியா நேற்று முன்தினம் பா.ஜ.க.-வில் இணைந்தார்.

    கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணைந்துள்ளனர்.

    அமலாக்கத்துறை, சி.பி.ஐ.-க்கு பயந்தும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காத அதிருப்தி காரணமாகவும் பாஜகவில் ஏராளமான தலைவர்கள் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×