search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கத்துறை"

    • சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது.
    • பா.ஜ.க. செய்த சாதனைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார் கெஜ்ரிவால்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த இதுவரை 4 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனாலும் கெஜ்ரிவால் இதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    இந்நிலையில், என்னை கைது செய்யவேண்டும் என்பதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. என்னை கைது செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம் என டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை வைத்து பாராளுமன்ற தேர்தலில் ஜெயிக்க பா.ஜ.க. நினைக்கிறது.

    சம்மன் அனுப்பும்படி அமலாக்கத்துறைக்கு பா.ஜ.க. அறிவுறுத்துகிறது. இரு ஆண்டுகளாக விசாரணை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் எனக்கு சம்மன் அனுப்பப்படுகிறது.

    தேர்தலுக்கு முன் என்னை கைது செய்வதே பா.ஜ.க.வின் நோக்கம். இதன்மூலம் எனது பிரசாரத்தை தடுத்து விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. பா.ஜ.க. செய்த சாதனைகளை முன்வைத்து அவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என தெரிவித்தார்.

    • மூன்று முறை கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், 4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.
    • தனக்கு சம்மன் அனுப்பப்படுவது சட்டவிரோதம் என கெஜ்ரிவால் தொடர்ந்து கூறி வருகிறார்.

    டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

    இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால் இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

    தனக்கு அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது. அதை திரும்பப் பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த 3-ந்தேதி 3-வது முறையாக சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதனால் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டு, கைது செய்யப்படலாம் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அமலாக்கத்துறை அவ்வாறு செய்யவில்லை.

    இந்த நிலையில் தற்போது 4-வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வருகிற 18-ந்தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்த முறையும் அவர் ஆஜராவாரா? என்பது தெரியவில்லை. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் சம்மன் அனுப்பப்படுகிறது என கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
    • இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3-வது முறையாக ஜாமின் கேட்டு மனு.

    தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களை காட்டி ஜாமின் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

    இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டார்.

    அன்றைய தினம் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதால் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்ததில் முறைகேடு எனப் புகார்.
    • ஏற்கனவே இது தொடர்பாக கொல்கத்தா நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் நகராட்சி அமைப்புகளில் வேலைக்கு ஆட்களை சேர்த்தது தொடர்பான மோசடி வழக்கில் தீயணைப்புத்துறை மந்திரி சுஜித் போஸ்க்கு தொடர்புடைய இரண்டு இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தபாஸ் ராய்க்கு (முன்னாள் நகராட்சி சேர்மன்) தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று காலை 6.40 மணியில் இருந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    நகராட்சி அமைப்புகளில் முறைகேடாக வேலை வழங்கியது குறித்து விசாரணை நடத்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ-க்கு உத்தரவிட்டது. ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்காள அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    அதன்பிறகு அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அமைப்புகள் நகராட்சிகளில் வேலை வாய்ப்பு வழங்கியதில் முறைகேடு நடந்தது குறித்து விசாரணை நடத்தி வந்தது.

    இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 5-ந்தேதி உணவு மற்றும் வழங்கல் துறை மந்திரி ரதின் கோஷ்க்கு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் ரேசன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் 17 மணி நேர சோதனைக்குப்பின் சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டார்.

    • இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை.
    • இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.

    மக்களவை தேர்தல் மார்ச்- ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கியுள்ளது.

    இந்தமுறை பா.ஜனதாவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என 26-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதனால் பா.ஜனதா சற்று அச்சம் அடைந்துள்ளது. என்றபோதிலும் 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என இலக்குடன் தேர்தல் பணியில் இறங்கியுள்ளது.

    இதற்கிடையே மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை தங்களுக்கு சாதகமாக பா.ஜனதா பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் தொடர்ந்து எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பிக் கொண்டே இருக்கிறது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான 86 வயதான பரூக் அப்துல்லாவிற்கு ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் பரூக் அப்துல்லா இன்று ஆஜராகவில்லை.

    இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை தேர்தல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகிவிட்டது என மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-

    எப்போதெல்லாம் மாநில தேர்தல் அல்லது பாராளுமன்ற தேர்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்க தொடங்கிவிடும். ஆகவே, பரூக் அப்துல்லாவிற்கு சம்மன் வழங்கியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

    இன்னும் எத்தனை தலைவர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எங்களுக்கு தெரியவில்லை. இது தேர்தலையொட்டிள்ள தொடர்பு மட்டுமே. இதன் அர்த்தம் எதிர்க்கட்சிகளை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதுதான்.

    இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்குரிய பணம் பல்வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுவலக நபர்கள் அல்லாத நபர்களின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. பணம் எடுத்ததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு அமலாக்கத்துறை பரூக் அப்துல்லா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜாமின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது, கீழ் கோர்ட்டை நாட செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.
    • செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து, ஐகோர்ட்டும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது, கீழ் கோர்ட்டை நாட செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.

    இதன்படி, செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில் இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு வருகிற 12-ந்தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வக்கீல் வருவதால் விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    சென்னை:

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்தையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதனையடுத்து, ஐகோர்ட்டும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்தது, கீழ் கோர்ட்டை நாட செந்தில்பாலாஜி தரப்புக்கு உத்தரவிட்டது.

    இதன்படி, செந்தில் பாலாஜி ஜாமின் கோரி 3-வது முறையாக முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று மனு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் மூத்த வக்கீல் வருவதால் விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    அப்போது கோபமடைந்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள்? என்று அமலாக்கத்துறைக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர் வழக்கின் விசாரணை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

    • அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் செல்கிறார்
    • மக்களவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளை கட்சிகள் துவங்கியுள்ளன

    அமலாக்கத்துறையின் கைது அச்சத்திற்கு மத்தியில் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் நாளை குஜராத் செல்கிறார்.

    புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மூன்று முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், அவர் எந்த நேரத்திலும் கை செய்யப்படலாம் என்ற சூழல் நிழவி வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் அவர் நாளை(ஜன.7) குஜராத் செல்கிறார்.

    மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு குஜராத் செல்லும் கெஜ்ரிவால், அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார். இந்த இரண்டு நாள் சுற்று பயணத்தின் போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம் எல் ஏ சைத்ரா பசவானையும் அவரது குடும்பத்தினரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அமலாக்கத் துறையின் 3 சம்மனுக்கும் ஆஜராகாததால் அரவிந்த் கேஜ்ரிவால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    • வியாழக்கிழமை சோதனை செய்யபோது கும்பலால் அதிகாரிகள் தாக்கப்பட்டனர்.
    • நேற்று தொடர்ந்து சோதனை நடத்திய நிலையில், சங்கர் சத்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேசன் ஊழல் வழக்கு தொடர்பாக பாங்கோன் நகராட்சியின் முன்னாள் தலைவரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சங்கர் ஆத்யா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

    சுமார் 17 மணி நேர சோதனைக்குப்பின் நேற்றி நள்ளிரவு சங்கர் ஆத்யா கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் அழைத்துச் செல்ல விடாமல் தடுத்தனர். மேலும், சங்கர் ஆத்யாவின் ஆதரவாளர்கள் கல்வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் அவர்களை விரட்டியடித்தனர். அதன்பின் அதிகாரிகள் சங்கர் ஆத்யாவை அழைத்துச் சென்றனர்.

    வியாழக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சங்கர் ஆத்யா மற்றும் ஷேக் ஷாஜஹான் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்த சென்றபோது மர்ம கும்பல்களால் தாக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கில் மந்திரி ஜோதிபிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 24 பர்கானா பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்தச் சென்றது. அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பாக சென்றது.

    தகவலறிந்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அதிகாரிகள் சோதனை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தை தாக்கினர். இதில் அவர்களது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் சோதனை நடத்த முடியாமல் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் மேற்கு வங்காளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு அம்மாநில பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறுகையில், தாக்குதல் நடத்தியவர்கள் திரிணாமுல் காங்கிரசின் உள்ளூர் தலைவர்களால் ஆதரிக்கப்படும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருக்கலாம். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தொடர்வது தேசத்துக்கு அச்சுறுத்தல் என தெரிவித்தார்.

    • நேற்று முன்தினம் ஜார்க்கண்ட், நேற்று அரியானாவில் சோதனை நடத்தியது.
    • ஆறு பேர் கொண்ட கும்பல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    பல்வேறு புகார் அடிப்படையில் மத்திய விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.

    நேற்று முன்தினம் ஜார்க்கண்ட், நேற்று அரியானாவில் சோதனை நடத்தியது. பா.ஜனதாவின் தூண்டுதல் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்த நிலையிலும் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    பெரும்பாலான இடங்களில் அதிகாரிகள் பாதுகாப்புப்படை வீரர்கள் பாதுகாப்புடன்தான் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இன்று மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு 23 பர்கானஸ் பகுதியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்காக காரில் புறப்பட்டுச் சென்றனர். கார் சண்டேஷ்காலி என்ற இடத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, திடீரென ஒரு கும்பல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் வந்த வாகனத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது.

    அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் இந்த சம்பவம் குறித்து கூறும்போது "8 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நாங்கள் மூன்று பேர்தான் சம்பவ இடத்தில் இருந்தோம். நாங்கள் வந்தபோது, அவர்கள் எங்களை தாக்கினர்" என்றார்.

    ஏற்கனவே மத்திய அரசுக்கும் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேற்கு வங்காளத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என பா.ஜனதா குற்றம்சாட்டி வரும் நிலையில்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் சுமார் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்த மனுக்களையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதை தொடர்ந்து ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்தது. இதனால், உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்க மறுத்து விட்டது. அதேநேரம், செந்தில் பாலாஜி கீழ் கோர்ட்டை நாடலாம். அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.

    செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் கோரி 14-வது முறையாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதன் வழக்கு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, ஜனவரி 11ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×