search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜய்யை, காதலி சவுந்தர்யா தனது மற்றொரு கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.
    • இதையடுத்து சவுந்தர்யா, பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    போரூர்:

    சென்னை, சாலிகிராமம், சாரதாம்பாள் தெருவில் வசித்து வருபவர் சவுந்தர்யா. கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 132-வது வார்டில் துப்புரவு பணியாளராக உள்ளார். இவர் கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும் அவர்களுடன் சவுந்தர்யாவின் அக்காள் மகன் ஒருவரும் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் சவுந்தர்யாவுக்கு, கணவரின் நண்பரான விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கடந்த சில மாதங்களாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

    நேற்று இரவு சவுந்தர்யாவின் வீட்டில் விஜய் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தகவல் அறிந்ததும் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் சவுந்தர்யாவுக்கு பிரபு என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததும், இதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரிந்தது. ஒரு பெண்ணுக்கு 2 பேர் போட்டியிட்டு உள்ளனர்.

    இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விஜய்யை, காதலி சவுந்தர்யா தனது மற்றொரு கள்ளக்காதலன் பிரபுவுடன் சேர்ந்து தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சவுந்தர்யா, பிரபு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சவுந்தர்யா ஏற்கனவே விஜய்யுடன் கள்ளக்காதலில் இருந்து வந்த நிலையில் தன்னுடன் வேலை பார்த்து வரும் பிரபு என்பவருடன் கடந்த ஒரு மாதமாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விபரம் தெரிந்து ஆத்திரமடைந்த விஜய் சவுந்தர்யாவை கண்டித்தார். மேலும் "சவுந்தர்யாவுடன் பழகுவதை நிறுத்திக்கொள். இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவேன்" என்று வாட்ஸ்அப் மூலம் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்து வரும் விஜய்யை தீர்த்துக்கட்ட சவுந்தர்யாவும், பிரபுவும் சேர்ந்து திட்டமிட்டனர். அதன்படி நேற்று இரவு வீட்டில் மதுபோதையில் விஜய் இருந்தபோது பிரபுவும் வந்தார்.

    அப்போது அவர்களுக்கிடையே சவுந்தர்யாவிடம் பழகுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் பிரபு மற்றும் சவுந்தர்யா ஆகிய இருவரும் சேர்ந்து விஜய்யை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு வெளியே சென்றது தெரியவந்தது.

    கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து கைதான 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

    • ஆத்திரமடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார். அவர் உடல் முழுவதும் வேகமாக தீ பரவி பற்றி எரிந்தது.
    • திலகவதி ரமேசை வெளியே விடாமல் தீவைக்க முயன்றார். கதவை ஓடிச்சென்று பூட்டி ரமேசை கட்டிப்பிடித்தார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். வேலூர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரமேஷ் துணி வியாபாரம் செய்து வந்தார்.

    கள்ளக்காதலியை அடிக்கடி சந்திப்பதற்காக ரமேஷ் முள்ளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினார்.

    இருவரும் அந்த வீட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். நேற்றுமுன்தினம் கணவர் இல்லாத நேரத்தில் திலகவதி ரமேஷ் வீட்டுக்கு சென்றார். இருவரும் அங்கு தனிமையில் இருந்தனர்.

    நேற்று காலையில் இருவருக்கும் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார்.

    அவருடைய உடலில் தீப்பற்றியது மேலும் ரமேஷ் மீதும் தீப்பற்றி எரிந்தது.

    இருவரும் அலறி சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கதவை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் திலகவதியின் உடலில் 90 சதவீதத்திற்கு மேல் தீ பற்றி உடல் கருகியது.

    ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடி வெளியே வந்தார். ஆட்டோ மூலம் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயற்சி செய்தார். வழியில் உடல் எரிச்சல் அதிகமானதால் கோட்டை அகழியில் குதித்தார். அவரை பொதுமக்கள் மீட்டனர்.

    வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் இருவரையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ரமேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திலகவதிக்கும் ரமேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக ரமேஷ் தனியாக வீடு வாடகைக்கு எடுத்தார்.

    அங்கு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். நேற்று முன்தினம் திலகவதி ரமேஷ் அறைக்கு வந்தார். இருவரும் தனிமையில் இருந்தனர். நேற்று காலையில் திலகவதி அவரது மகள்களுக்கு வயது அதிகமாகி வருகிறது.

    எனவே கள்ளத்தொடர்பை விட்டுவிடலாம் என கூறியுள்ளார். உன்னால் தான் நான் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என ரமேஷ் கூறியுள்ளார். அதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ஆத்திரமடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார். அவர் உடல் முழுவதும் வேகமாக பரவி பற்றி எரிந்தது.

    அப்போது அவர் ரமேசை வெளியே விடாமல் தீவைக்க முயன்றார். கதவை ஓடிச்சென்று பூட்டி ரமேசை கட்டிப்பிடித்தார்.

    இதில் அவரது உடலில் தீ பற்றியது. இருவரும் கூச்சலிட்டனர். பொதுமக்கள் ஓடி வந்து கதவை உடைத்தனர். ரமேஷ் உயிர் பிழைப்பதற்காக வெளியே ஓடி சென்றார்.

    வழியில் உடல் எரிச்சல் அதிகமாக இருந்ததால் கோட்டை அகழியில் குதித்துள்ளார்.

    இந்த சம்பவத்தில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார்.
    • இமாம் பீ கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்து, தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கம்பம் மாவட்டம், சித்தகானி பகுதியை சேர்ந்த ஷேக் ஜமால் சாயபு. இவரது மனைவி ஷேக் இமாம் பீ (வயது 46). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இமாம் பீ-க்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. இமாம் பீ, மோகன் ராவுடன் வீட்டில் தனிமையில் இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்தார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என கள்ளக்காதலன் மோகன் ராவிடம் இமாம் பீ தெரிவித்தார். இதையடுத்து இமாம் பீ கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்த அவர்கள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வந்தனர்.

    இமாம் பீயிடம் ஒரு ஊசியும், மோகன் ராவிடம் ஒரு ஊசியும் வைத்துக்கொண்டனர். இமாம் பீயால் கணவருக்கு விஷ ஊசி போட முடியாத சூழ்நிலை நிலவியது. இதையடுத்து இமாம் பீ தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து கணவருக்கு போன் செய்து நாளை மகள் வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

    இதுகுறித்து மோகன்ராவிடம் தெரிவித்த இமாம் பீ அவர் வரும் வழியில் லிப்ட் கேட்டு பைக்கில் ஏறிக்கொண்டு விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என திட்டம் போட்டு கூறினார்.

    மோகன்ராவ் தனது நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோருடன் சேர்ந்து மதிகொண்ட மண்டலம் அருகே பைக்கில் காத்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஷேக் ஜமால் சாயபு பைக்கை நிறுத்தி லிப்டு கேட்டு வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டார். செல்லும் வழியில் ஷேக் ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை செலுத்திவிட்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றார்.

    இதில் மயங்கி சரிந்த ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இமாம் பீ செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து ஷேக் இமாம் பீ, அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ், அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • செல்வியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது.
    • அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டை திறந்து பார்த்தபோது செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே உள்ள மலையாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் சோலைக்காடு பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 46). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். தச்சுவேலை பார்க்கும் அந்த சிறுவன் கணேசனை மாமா என்று உரிமையோடு அழைத்ததால் அவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை.

    ஆனால் அந்த சிறுவனுடன் செல்விக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 4 வருடங்களாக இவர்கள் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். கணேசன் இரவு நேரங்களில் தோட்டத்தில் வன விலங்குகள் வருதை தடுக்க பாதுகாப்புக்கு சென்று விடுவார்.

    அந்த சமயங்களில் செல்விக்கு துணையாக சிறுவன் இருந்துள்ளான். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கும் இவர்கள் தொடர்பில் எந்த சந்தேகமும் ஏற்படவில்லை.

    நேற்று செல்வியின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டை திறந்து பார்த்தபோது செல்வி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெள்ளையன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ், எஸ்.எஸ்.ஐ. ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பன்றிமலையில் பதுங்கி இருந்த சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில் தான் கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். தொடர்ந்து செக்ஸ் உறவுக்கு தன்னை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் இதனால் தான் செல்வியை தள்ளி விட்டதாகவும் தெரிவித்தார்.

    அப்போது அங்கிருந்த கல்லின் மீது அவரது தலை பட்டு மயங்கி விழுந்ததாகவும், அதன் பிறகு குழவிக் கல்லால் தாக்கி கொலை செய்ததாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சிறுவனை கைது செய்தனர். பேரன், பேத்தி எடுத்த நிலையில் சிறுவனுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார்.

    கோவை 

    பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்த 30 வயது இளம்பெண். இவ–ருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஆனாலும் இளம்பெண் வாலிபருடனான கள்ளக்கா–தலை தொடர்ந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் மகனுடன் வெளியில் சென்றார். அதன்பின்னர் வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இதுகுறித்து இளம்பெ–ண்ணின் கணவர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனது மனைவிக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றிய தகவல் எனக்கு தெரிந்ததும், நான் எனது மனைவியை கண்டித்தேன். இதனால் எனது மனைவி எனது மகனுடன் அந்த வாலிபருடன் சென்றி–ருக்கலாம் என சந்தேகமாக உள்ளது. எனவே எனது மனைவி மற்றும் மகனை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மகன்களின் படிப்பிற்காக லலிதா கவரப்பட்டு கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்.
    • மூத்த மகன் என்ஜினீயரிங் முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    சமூக ஊடகங்களில் அபரிமிதமான வளர்ச்சி சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகவே அமைந்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஒருபுறம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், மற்றொருபுறம் பண்பாடு, கலாச்சாரத்தை மறந்து ஆடம்பரத்தை விரும்பி உண்மைத்தன்மையை அறியாமல் வாழ்வை தொலைக்கும் இளம்பெண்கள் என நாளும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில், திருமணம் செய்து கொடுக்க வயதில் உள்ள மகன்களை வைத்துக்கொண்டு, தனக்கு மற்றொரு புது வாழ்வை தேடிச்சென்ற தாயின் செயல் அந்த குடும்பத்திற்கே பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கவரப்பட்டு கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி லலிதா (வயது 40). இந்த தம்பதிக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். உள்ளூரில் பார்த்து வந்த வேலையால் வருங்காலத்தில் குடும்பம் நடத்த முடியாது என்று எண்ணிய அய்யப்பன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார். அங்கு மகன்களின் படிப்பு உள்ளிட்ட எதிர்காலத்திற்காக தன்னை வருத்தி பணம் சம்பாதித்து வீட்டிற்கு அனுப்பினார்.

    மகன்களின் படிப்பிற்காக லலிதா கவரப்பட்டு கிராமத்தில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். மூத்த மகன் என்ஜினீயரிங் முடித்துவிட்டு கடந்த சில மாதங்களாக அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார். இளைய மகன் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். கணவர் வெளிநாட்டில், மகன்கள் வேலை, படிப்பு என்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த லலிதா பேஸ்புக் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஆரம்பித்தார்.

    நட்பு பலருடன் இருந்தாலும், நெருங்கிய பழக்கம் என்பது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வாலிபருடன் ஏற்பட்டது. தன்னை அழகாய் காண்பிப்பதற்காக விதவிதமாக ஈர்க்கும் ஆடைகளை அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட லலிதா, தான் திருமணமாகி, திருமண வயதில் 2 பிள்ளைகளாக கொண்டுள்ளார் என்பதையே மறந்து விட்டார். பிரி கேர், கவர்ச்சியான படங்களுக்கு தன்னை சொந்தக்காரராக்கிய லலிதா அதனை ரகசிய காதலனான கடலூர் வாலிபருக்கு அனுப்பி வந்தார்.

    இதனை பார்த்து மெய் மறந்த அந்த வாலிபர் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் புகைப்படம் மூலமாக பேசிக்கொள்வது, நேரில் சந்திப்போம் என்று முடிவெடுத்து உள்ளனர். இதற்கு எந்தவித தயக்கமும் இன்றி பச்சைக் கொடி காட்டிய லலிதா அவரை கண்களால் பேசி மயக்கியுள்ளார்.

    ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து கடலூரில் இருந்து ஒரத்தநாட்டிற்கு வந்த வாலிபர் அங்கு தெரிந்த நபர் மூலம் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு ஓட்டி பிழைப்பும் நடத்தினார். ஆட்டோ ஓட்டிய நேரம் போக மற்ற சமயங்களில் லலிதாவுடன் கலந்தார். தன்னை கண்டிக்க ஆளின்றி ஆட்டம்போட்ட லலிதா, தொழிலுக்கு கொடுத்த ஆட்டோவில் தொலைதூரம் சென்று தனிமையில் இருந்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பலன் தற்போது லலிதா 4 மாத கர்ப்பிணியானார். கள்ளக்காதலை மறைத்தாலும், கருவில் வளரும் குழந்தையை மறைக்க முடியாது என்று எண்ணிய லலிதா, அவருடன் குடும்பம் நடத்தவும் முடிவு செய்தார்.

    மகன்களுக்கு விபரம் தெரியும் முன்பு வீட்டைவிட்டு வெளியேற பல நாட்கள் திட்டம் வகுத்த அவர் கடந்த 13-ந்தேதி வாயை கட்டி, வயிற்றை கட்டி கணவர் அனுப்பி வைத்த பணம் மூலம் வாங்கி வைத்திருந்த 20 பவுன் நகைகளை அள்ளிக் கொண்டு அர்த்த ராத்திரியில் கள்ளக்காதலனுடன் மாயமானார்.

    விடிந்ததும் இதனை அறிந்த மகன்கள் சிங்கப்பூரில் உள்ள தந்தைக்கு கனத்த இதயத்துடன் தகவலை கூறினர். மேலும் தாயாக இருந்தாலும் இப்படி ஒரு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டு சென்ற அவரை கண்டித்தே ஆகவேண்டும் என்ற வகையில், ஒரத்தநாடு போலீசில் புகாரும் கொடுத்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள கள்ளக்காதல் ஜோடியை தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே கணவர், மகன்களை மறந்து உல்லாச வாழ்க்கையை தேடிச்சென்ற லலிதா, தனது கணவருக்கு தான் கடலூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து கள்ளக்காதலனான 22 வயது வாலிபருடன் எடுத்துக்கொண்ட திருமண புகைப்படங்களையும், அதனுடன் சேர்த்து ஒரு ஆடியோ பதிவையும் அனுப்பியுள்ளார். அந்த பதிவில், தான் கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டேன். அவருடன் குடும்பம் நடத்தப் போகிறேன், நான் தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தன்னுடன் மாலையும் கழுத்துமாக இருக்க வேண்டிய மனைவி, மாற்றானுடன் கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தையும், ஆடியோ பதிவையும் கேட்டு ஆடிப்போன அய்யப்பன் மனதை திடமாக்கிக் கொண்டார். தனது மகன்களை தொடர்பு கொண்டு இனிமேலும் அப்படியொரு அம்மா நமக்கு வேண்டாம். அவர் திரும்பி வந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று ஆறுதல் கூறியுள்ளார். இனி எப்படி வேலைக்கு செல்வேன் என்று மூத்த மகனும், எப்படி கல்லூரிக்கு செல்வேன் என்று இளையமகனும் கண்ணீருடன் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர்.

    • கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா தவறான சகவாசத்தால் தற்போது வாழ்க்கையையே தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
    • தனது 2 மகன்களும் சிகிச்சை பெற்று வரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கவிதா தவியாய் தவித்து வருகிறார்.

    சென்னை:

    சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் எச். பிளாக்கில் வசித்து வருபவர் கவிதா. 32 வயதான இவருக்கும் ரசூல் என்ற வாலிபருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 9 வயதில் ஸ்டீபன், 7 வயதில் ஆல்பர்ட் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கவிதாவும், ரசூலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

    கவிதாவின் சொந்த ஊர் புழல் அருகே உள்ள வடபெரும்பாக்கம் ஆகும். தாய் வீட்டுக்கு அடிக்கடி சென்ற வந்த போது கவிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதை தொடர்ந்து ரமேஷ் கொருக்குப்பேட்டையில் உள்ள கவிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வரத் தொடங்கினார். அப்போது இருவரும் வீட்டில் குழந்தைகள் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த உறவு மிகவும் நெருக்கமானது.

    இதன் பின்னர் நினைத்த போதெல்லாம் ரமேஷ் கள்ளக்காதலி கவிதாவின் வீட்டுக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

    இந்த நிலையில் மகன்கள் இருவரும் பெரியவர்களாகி விட்டதால் ரமேஷ் அடிக்கடி வீட்டுக்கு வருவதை கவிதா விரும்பவில்லை. ரமேசுடனான கள்ளக்காதல் தொடர்பை கைவிட அவர் முடிவு செய்தார். இது தொடர்பாக ரமேசிடம் பேசிய கவிதா, எனக்கு மகன்களின் வாழ்க்கைதான் முக்கியம். நீ இனி வீட்டுக்கு வராதே. வந்தால் நன்றாக இருக்காது என எச்சரிக்கும் தொணியில் கவிதா கூறி இருக்கிறார்.

    ஆனால் ரமேஷ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நன்றாக பழகி விட்டு என்னை கழற்றிவிட நினைக்கிறாயா? என்று ரமேஷ் கவிதாவுடன் சண்டை போட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் பின்னர் ரமேசுடன் உல்லாசமாக இருப்பதை கவிதா தொடர்ந்து தவிர்த்து வந்தார்.

    அது ரமேசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கவிதாவின் 2 மகன்களையும் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்ய வேண்டும் என்கிற விபரீத எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

    கவிதாவின் மகன்களான ஸ்டீபன், ஆல்பர்ட் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது கவிதா எண்ணூரில் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அவரது 2 மகன்களையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்ட ரமேஷ், குளிர்பானத்தில் விஷம் கலந்து அதனை எடுத்துக்கொண்டு கவிதாவின் வீட்டுக்கு சென்றார்.

    அங்கு விஷம் கலந்த குளிர்பானத்தை ஸ்டீபன், ஆல்பர்ட் இருவருக்கும் ஊற்றிக் கொடுத்தார். அதில் கலந்திருப்பது விஷம் என்று தெரியாமல் சிறுவர்கள் இருவரும் வாங்கி குடித்தனர். அப்போது விஷம் கலந்த குளிர்பானத்தை ரமேசும் குடித்துள்ளார். இதில் 3 பேரும் மயங்கி விழுந்தனர்.

    இதனை பார்த்து குடியிருப்பில் இருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக 3 பேரையும் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நள்ளிரவு 2.30 மணிக்கு உயிரிழந்தார்.

    ஸ்டீபன், ராபர்ட் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதை தொடர்ந்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கவிதா தவறான சகவாசத்தால் தற்போது வாழ்க்கையையே தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். தனது 2 மகன்களும் சிகிச்சை பெற்று வரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அவர் தவியாய் தவித்து வருகிறார். மகன்கள் இருவரும் உயிர் பிழைத்து விடுவார்களா? என்கிற ஏக்கத்துடன் கவிதா கண்ணீர் மல்க காத்திருக்கிறார்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார்.
    • வெளிநாட்டுக்கு சென்ற பிறகும் சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    வேப்பூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த இறைஞ்சி பகுதியை சேர்ந்தவர் முனியன். இவரது மகன் சிரஞ்சீவி (வயது 35). இவருக்கும், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடியை சேர்ந்த கணவரை இழந்து தனியாக வசித்து வரும் 30 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி, அந்த பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகும் அவர், அந்த பெண்ணிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.

    மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால், உன்னுடைய ஆபாச புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அந்த பெண், பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, தனது கள்ளக்காதலியின் ஆபாச புகைப்படத்தை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டார்.

    இதற்கிடையே முகநூலில் வந்த ஆபாச புகைப்படத்தை காண்பித்து, சிரஞ்சீவியின் தந்தை முனியன், தாய் அங்கம்மாள், மனைவி ரஞ்சிதகுமாரி மற்றும் இறைஞ்சியை சேர்ந்த காசியம்மாள், மணிகண்டன் ஆகியோர் அந்த பெண்ணிடம் பணம் மற்றும் நகை கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பெண், வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சிரஞ்சீவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா கொலை திட்டத்தை வகுத்துள்ளார்.
    • தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பா நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது 52). இவர் தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    இவரது கணவர் ராஜேந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி ரஞ்சிதம் தனது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் தலைமையில் போலீசார் சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் நெடுமரம் கிராமத்தை சேர்ந்த சூர்யா (24) என்பதும், அவர் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக அவரிடம் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட தலைமை ஆசிரியை ரஞ்சிதத்துக்கு பாண்டி வேல்முருகன் என்ற தம்பி உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி நதியா (31) மற்றும் அவர்களது குழந்தைகள் 3 பேர் நெடுமரத்தில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாண்டி வேல்முருகன் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்தை தனது அக்காள் ரஞ்சிதத்துக்கு அனுப்பி வந்துள்ளார். அவரிடம் நதியா செலவுக்கு பணம் வாங்கி கொள்ள ஏற்பாடு செய்திருந்தார். இது நதியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே நதியாவுக்கும், நெடுமரத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் நதியா கள்ளக்காதலன் மூலம் ரஞ்சிதத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி சூர்யாவிடம் தனது திட்டத்தை தெரிவிக்க நதியா அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி இரவு சூர்யா தலைமை ஆசிரியை ரஞ்சிதம் வீட்டுக்கு சென்று பின்புற சுவர் ஏறி குதித்து மறைந்து இருந்துள்ளார். இரவில் ரஞ்சிதம் பாத்ரூம் செல்வதற்காக வெளியே வந்தபோது சூர்யா அவரது முகத்தையும், வாயையும் பொத்தி கீழே தள்ளி உள்ளார். இதில் அவர் மயங்கி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து வீட்டுக்குள் புகுந்த சூர்யா பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது ரஞ்சிதம் முனங்கும் சத்தம் கேட்டதால் கத்தியை எடுத்து ரஞ்சிதத்தின் கை, கால் நரம்புகளை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் கொள்ளையடித்த நகை மற்றும் பணத்தை நதியாவிடம் சூர்யா கொடுத்துள்ளார்.

    நகை-பணத்துக்காக கொள்ளையர்கள் தலைமை ஆசிரியை ரஞ்சிதத்தை கொலை செய்துவிட்டு சென்றதுபோல் காட்டுவதற்காக நகை-பணத்தை சூர்யா எடுத்து சென்றுள்ளார்.

    இந்த நிலையில் போலீசாரின் பிடியில் சூர்யா சிக்கியதை தொடர்ந்து அவருக்கு மூளையாக செயல்பட்ட நதியாவையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 60 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த கொலை வழக்கில் போலீசார் 5 நாட்களில் குற்றவாளிகளை பிடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவர் தனது சம்பள பணத்தை தன்னிடம் கொடுக்காமல் ஆசிரியையிடம் கொடுத்து வந்ததால்தான் நதியா இந்த கொலை திட்டத்தை வகுத்துள்ளார். இதில் அவரது கள்ளக்காதலனை ஏவி அவரையும் கொலையாளி ஆக்கிவிட்டார்.

    தலைமை ஆசிரியை கொலை வழக்கில் அவரது தம்பி மனைவியே முக்கிய குற்றவாளியாக சிக்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். திருமணமான இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பூமிகா என்பவர் அறிமுகமானார்.

    இவர் கணவரை இழந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். பண்ருட்டியில் உள்ள பேக்கரிக்கு வேலைக்கு செல்லும் போது சக்திவேலின் ஆட்டோவில் பூமிகா செல்வது வழக்கம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது.

    சக்திவேலின் நண்பர் சுமன். இவர் களத்துமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆவார். இவரும் அடிக்கடி பூமிகாவை ஆட்டோவில் அழைத்து சென்று பேக்கரியில் விடுவதுண்டு.

    அப்போது பூமிகாவை, சுமன் விரும்பினார். ஆனால், பூமிகா, ஆட்டோ டிரைவர் சக்திவேலுடன் நெருங்கி பழகுவதை சுமன் அறிந்தார். இது குறித்து நேரடியாக சுமன், தனது நண்பர் சக்திவேலிடம், நான்தான் பூமிகாவை விரும்புகிறேன் என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

    நேற்று இரவு சுமன், தனது நண்பர் சக்திவேலிடம் வந்து என்னை மன்னித்து விடு, இருவரும் முன்புபோல் பழகுவோம் என கூறினார். இந்த மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக மது அருந்த போகலாம் என அழைத்தார்.

    இதனை நம்பிய சக்திவேல், அவருடன் சென்றார். பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளி கோவிலின் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் இருவரும் மது குடித்தனர். போதை தலைக்கு ஏறியதால் அப்போது சுமன் தனது நண்பர் சக்திவேலை பார்த்து இனி, பூமிகா விவகாரத்தில் நீ தலையிடக்கூடாது என்று கூறினார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு சுமனின் நண்பர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சுமனுக்கு ஆதரவாக பேசினர். ஆத்திரம் அடைந்த அவர்கள் சக்திவேலை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். இன்று காலை காளி கோவில் பகுதியில் சக்திவேல் பிணமாக கிடந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிந்த போலீஸ் டி.எஸ்.பி. சபிபுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்தனர். சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் கைது செய்தனர்.

    இதனையறிந்த சக்திவேலின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் பண்ருட்டியில் உள்ள தட்டாஞ்சாவடி-சித்தூர் சாலையில் மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்தனர்.

    அப்போது, சக்திவேலின் உறவினர்கள் கூறுகையில், இந்த கொலையில் 4-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். அதோடு பூமிகாவையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    உடனே போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். என்றாலும் அங்கு பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனை கண்டித்தார்.
    • இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள பூலாவரி அக்ரஹாரம் சின்ன ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 48). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி மல்லிகா (45).

    கள்ளக்காதல்

    இந்தநிலையில் மல்லிகா, கணவரை பிரிந்து ராஜபாளையம் அரிமா நகர் பகுதியில் தனியாக வசித்து வருகிறார். ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி சோலைகவுண்டர்காடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முருகேசன் (45) என்பவருக்கும் மல்லிகாவுக்கு இடையே கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே தனது மனைவி மல்லிகா தன்னை விட்டு பிரிந்து செல்ல முருகேசன்தான் காரணம் என எண்ணிய மாணிக்கம், முருகேசனை கண்டித்தார். இருப்பினும் முருகேசன் தொடர்ந்து மல்லிகாவுடன் பழக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முருகேசன் நைனாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மாணிக்கம், முருகேசனை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் அரிவாளால் முருகேசனின் தலையில் வெட்டினார். இதை பார்த்த பொதுமக்கள் சண்டையை விலக்கிவிட்டு, முருகேசனை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ெஜயிலில் அடைப்பு

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். பின்னர் போலீசார், அவரை சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் ரவியை தீர்த்துக்கட்ட பாண்டியம்மாள் முடிவு செய்தார்.
    • ஊருக்கு ரவி வந்திருப்பதை அறிந்து பாண்டியம்மாள், கள்ளக்காதலன் குமார், அவரது நண்பர் கூத்தப்பன்பட்டியை சேர்ந்த பிச்சைக்கனி ஆகிய 3 பேர் சம்பவத்தன்று இரவு ரவி வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்துள்ளனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அருக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 52), விவசாயி. இவரது மனைவி பாண்டியம்மாள் (45) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். திருப்பூரில் உள்ள ஒரு தோட்டத்தில் ரவி வேலை பார்த்து வந்தார்.

    மேலூரில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்த பாண்டியம்மாள் அங்கு பூ வியாபாரம் செய்து வந்தார். அப்போது பாண்டியம்மாளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதை அறிந்த ரவி மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் பாண்டியம்மாள் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஊர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ரவி சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அருக்கம்பட்டியில் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள அவரது வீட்டில் சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த போது மண்வெட்டியால் கொடூரமாக தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ரவியின் மனைவி பாண்டியம்மாள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருந்ததால் அவரை தீர்த்துக்கட்ட பாண்டியம்மாள் முடிவு செய்தார். அதன்படி ஊருக்கு அவர் வந்திருப்பதை அறிந்து பாண்டியம்மாள், கள்ளக்காதலன் குமார், அவரது நண்பர் கூத்தப்பன்பட்டியை சேர்ந்த பிச்சைக்கனி ஆகிய 3 பேர் சம்பவத்தன்று இரவு ரவி வீட்டுக்கு சென்று அவரை கொலை செய்துள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து போலீசார் பாண்டியம்மாளை கைது செய்தனர். கள்ளக்காதலன், அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×