search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 150704"

    • பள்ளி தோழியான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.
    • இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருேக உள்ள எஸ்.பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), எலக்ட்ரீசியன்.

    கள்ளக்காதல்

    இவருக்கு பூலவாரியை சேர்ந்த பள்ளி தோழியான ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அணுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கணவர் மற்றும் 2 மகன்களை தவிக்க விட்டு அந்த பெண் தனியாக வசித்து வந்தார். இதனால் அந்த பெண்ணின் கணவர் மாணிக்கம், முருகேசன் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

    இதையடுத்து நேற்று நைனாம்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்த முருகேசனை வழி மறித்த மாணிக்கம் அரிவாளால் வெட்டினார். அப்போது தலை மற்றும் கையில் ரத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து முருகேசன், மாணிக்கத்தை மீண்டும் வெ ட்ட முடியாமல் கட்டி பிடித்து கொண்டார்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் முருகேசனை மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தொழிலாளி கைது

    இது குறித்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • ராஜாமணிக்கும், அவரது வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வலையம்பாடியை சேர்ந்த குமார் என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.
    • இதையடுத்து போலீசார் நாகராஜின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள திலகர் வீதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜாமணி(44). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இதையடுத்து கணவன், மனைவி மட்டும் இங்கு வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ராஜாமணி சத்தம் போட்டு கொண்டே வெளியில் ஓடி வந்தார்.

    அவரிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது, எனது கணவர் வீட்டிற்கு அதிக குடிபோதையில் வந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில் சுவரில் மோதி இறந்து விட்டதாகவும் கூறினார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் விரைந்து அங்கு ஓடினர். அப்போது நாகராஜ் பிணமாக கிடந்தார்.

    உடனடியாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் நாகராஜின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது உடல் கருகிய நிலையில் இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இருப்பினும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜாமணிக்கும், அவரது வீட்டில் வசிக்கும் புதுக்கோட்டை மாவட்டம் வலையம்பாடியை சேர்ந்த குமார்(29) என்ற வாலிபருக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நாகராஜின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் போலீசாரிடம், தனது கணவர் சம்பவத்தன்று அதிக போதையில் வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது போதை தலைக்கேறிய நிலையில் சுவரில் தலையை முட்டி கொண்டதாகவும் கூறினார். நான் எவ்வளவோ கூறியும் அவர் கேட்காமல் தொடர்ந்து சுவரில் முட்டியதாகவும், அதில் அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாகராஜின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் நாகராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்திருப்பது தெரியவந்தது. இதனால் அவரை யாரோ மின்சாரம் பாய்ச்சி கொன்றிருக்கலாம் என சந்தேகித்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில், அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகமாடுகிறாரோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    அந்த கோணத்தில் சந்தேகத்தின் பேரில், நாகராஜின் மனைவி ராஜாமணி மற்றும் அவரது கள்ளக்காதலன் குமார் ஆகியோரை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இவர்கள் தான் கொலை செய்தனரா? அல்லது சுவரில் மோதிய போது தான் இறந்தாரா? எனவும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் தான் இந்த சம்பவத்தின் முழு விவரமும் தெரியவரும்.

    இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வனிதாவுக்கும், தமிழரசுவுக்கும் விஜயகுமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது.
    • கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள விஜயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த நகரி ராமாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). இவரது மனைவி வனிதா (30). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    விஜயகுமார் நகரியில் செல்போன் கடை நடத்தி வந்தார். அப்போது அவரது கடைக்கு வந்த சி.ஆர்.கண்டிகையை சேர்ந்த தமிழரசு (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர்.

    விஜயகுமார் தமிழரசுவை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அப்போது தமிழரசுவுக்கும், வனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. விஜயகுமார் கடைக்கு சென்று விட்ட பிறகு தமிழரசு அவரது வீட்டிற்கு சென்று வனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த தகவல் விஜயகுமாருக்கு தெரியவந்ததால் தமிழரசுவை வீட்டிற்கு வரக்கூடாது, வனிதாவுடன் பேசக்கூடாது என கண்டித்தார்.

    இதனால் வனிதாவுக்கும், தமிழரசுவுக்கும் விஜயகுமார் மீது ஆத்திரம் ஏற்பட்டது. கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள விஜயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு ராமாபுரம் அருகே உள்ள கல்குவாரிக்கு விஜயகுமாரை வனிதா அழைத்து சென்றார்.

    அங்கு காத்திருந்த தமிழரசு, நாகராஜ், சந்தோஷ் குமார் ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை கல்குவாரி குட்டைக்குள் தள்ளினர்.

    அப்போது விஜயகுமார் கல்குவாரி குட்டையில் இருந்து நீச்சலடித்து கரைக்கு வர முயன்றார். இதனை கண்ட வனிதா அவரது தலையில் கல்லை தூக்கி போட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த விஜயகுமார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து 4 பேரும் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து வீட்டிற்கு வந்து விட்டனர்.

    நேற்று காலை தனது கணவரை காணவில்லை என நகரி போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை வனிதா ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து போலீசார் வனிதா அவரது கள்ளக்காதலன் தமிழரசு மற்றும் நாகராஜ், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

    • ரமேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார்.
    • போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை 

    கோவை பி.கே. புதூர் அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டனை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). தங்க நகை தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

    இந்தநிலையில் ரமேசுக்கு இளம்பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்த கள்ளக்காதல் விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 25-ந் தேதி கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த அவரது மனைவி கணவரிடம் கோபித்துக்கொண்டு வடவள்ளியில் உள்ள தனது தோழி வீட்டிற்கு சென்றார்.

    மனைவி பிரிந்து சென்றதால் மனவேதனை அடைந்த ரமேஷ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை புலியகுளம் முத்து நாயகம் வீதியை சேர்ந்தவர் கணேசன் (41). இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போத்தனூரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (37). காந்திபுரத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் குடித்து விட்டதால் அவருக்கு அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதல் மனவேதனை அடைந்த ரமேஷ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக ரமேஷை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பொங்குபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணிகண்டன் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • செக்ஸ் டார்ச்சர் செய்ததால் வாலிபரை கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலி கொன்று புதைத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி அபிராமி (வயது 24). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் சிவகாசியில் உள்ள அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் சிவகாசியை சேர்ந்த மணிகண்டன் (35) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது மணிகண்டனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

    இந்தநிலையில் அபிராமி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து மணிகண்டன், தனது தாயார் பஞ்சவர்ணம் மற்றும் 2குழந்தைகளுடன் திருப்பூருக்கு வந்து தியாகி குமரன் காலனியில் வீடு வாடகைக்கு பிடித்து கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த பொங்குபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் மணிகண்டன் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது குறித்து 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது உடல் கிடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் இருந்த அபிராமியின் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டுக்குள் தோண்டி பார்த்தனர். அப்போது அங்கு செல்போனும், சிதைந்த கையும் இருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

    எனவே மணிகண்டனை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த பின்னர் துர்நாற்றம் வீசியதால் உடலை மீ்ண்டும் குழியில் இருந்து எடுத்துச் சென்று எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.

    இதையடுத்து அந்த வீட்டில் இருந்து தலைமறைவான அபிராமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தனது கணவர் பரமசிவத்துடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து பரமசிவம், அபிராமி, அபிராமியின் தாய் பஞ்சவர்ணம் (48) ஆகிய 3பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பரமசிவம், அபிராமி ஆகியோர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இது பற்றி போலீசார் கூறியதாவது:-

    சிவகாசியை சேர்ந்த மணிகண்டனும் , பரமசிவமும் நண்பர்கள். இதனால் மணிகண்டன் அடிக்கடி பரமசிவம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பரமசிவத்தின் மனைவி அபிராமிக்கும், மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதையறிந்த பரமசிவம் 2பேரையும் கண்டித்துள்ளார். மேலும் சிவகாசி போலீஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளார். போலீசார் மணிகண்டனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருப்பினும் 2பேரும் கள்ளக்காதலை கைவிடவில்லை.

    இதையடுத்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அபிராமி தனது 2 குழந்தைகள், தாய் பஞ்சவர்ணம், கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோருடன் திருப்பூருக்கு வந்து விட்டார்.

    திருப்பூர் பொங்குபாளையம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தாங்கள் கணவன் -மனைவி என்று கூறி தங்கியுள்ளனர். மேலும் அபிராமி குடம் வியாபாரம் செய்து வந்துள்ளார். மணிகண்டன் பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    இந்தநிலையில் பரமசிவம் திருப்பூரில் தங்கியிருக்கும் குழந்தைகளுடன் அவ்வப்போது பேசி வந்துள்ளார். இதை மணிகண்டன் கண்டித்துள்ளார். மேலும் மணிகண்டன் தினமும் குடித்து விட்டு வந்து அபிராமிக்கு செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். நாளுக்குநாள் மணிகண்டனின் டார்ச்சர் அதிகரிக்கவே என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அபிராமி தனது கணவர் பரமசிவத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தெரியாமல் மணிகண்டனுடன் வந்து விட்டேன். இனிமேல் அவனுடன் என்னால் வாழ முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி எங்களை சிவகாசிக்கு அழைத்து செல்லுங்கள் என்றார்.

    இதையடுத்து கடந்த 20-ந்தேதி இரவு திருப்பூர் வந்த பரமசிவம், அபிராமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்றார். அங்கு நன்றாக தூங்கி கொண்டிருந்த மணிகண்டனின் கழுத்தில் கத்தியால் குத்திக்கொன்றார். பின்னர் உடலை வீட்டில் உள்ள அறையில் குழி தோண்டி புதைத்தார். பின்னர் மனைவி, குழந்தைகளை அழைத்து கொண்டு சிவகாசிக்கு சென்றார். அபிராமியின் தாய் பஞ்சவர்ணத்தை மட்டும் அங்கு இருக்குமாறு கூறி விட்டு சென்றார். கடந்த 23-ந்தேதி வீட்டில் இருந்து துர்நாற்றம் வரவே பஞ்சவர்ணம் பரமசிவத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே அவர் திருப்பூர் வந்து 23-ந்தேதி இரவு மணிகண்டனின் உடலை தோண்டி எடுத்து சாக்குமூட்டையில் வைத்து கட்டினார்.

    பின்னர் மொபட்டில் உடலை எடுத்து கொண்டு பொங்குபாளையம் பகுதியில் உள்ள காலி இடத்தில் தீ வைத்து எரித்து விட்டு , மாமியாருடன் மீண்டும் சிவகாசிக்கு தப்பி சென்றுள்ளார். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். செக்ஸ் டார்ச்சர் செய்ததால் வாலிபரை கணவருடன் சேர்ந்து கள்ளக்காதலி கொன்று புதைத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருமணத்திற்கு முன்பு முத்துமாரி வேறு ஒருவரை காதலித்துள்ளார்.
    • திருமணம் முடிந்த பின்னும் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் வைரவசாமிக்கு தெரிய வந்தது.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வென்றிலிங்கபுரத்தை சேர்ந்தவர் வைரவசாமி (வயது 30). இவரது மனைவி முத்துமாரி (வயது 23).

    கணவன்-மனைவி இரண்டு பேரும் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    அவர்கள் வீரசிகாமணி அருகே நடுவக்குறிச்சி சமத்துவபுரம் அருகே காட்டுப்பகுதியில் சென்ற போது அந்த வழியாக காரில் வந்த ஒரு மர்ம கும்பல் முத்துமாரி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். இதனை வைரவசாமி தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கல்லால் தாக்கி கொலை செய்தனர்.

    இதுதொடர்பாக சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் முத்துமாரி முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முத்துமாரியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரிய வந்தது.

    வைரவசாமியும், முத்துமாரியும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

    ஆனால் திருமணத்திற்கு முன்பு முத்துமாரி வேறு ஒருவரை காதலித்துள்ளார். திருமணம் முடிந்த பின்னும் அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இது நாளடைவில் வைரவசாமிக்கு தெரிய வந்தது.

    இதனால் மனைவி மற்றும் அந்த வாலிபரை அவர் கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.

    கணவன் உயிரோடு இருந்தால் தங்களால் பழக முடியாது எனக்கருதி அவரை கொலை செய்ய முத்துமாரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் கள்ளக்காதலனுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொலை செய்ய கூறி உள்ளார்.

    இதையடுத்து போலீசார் முத்துமாரியை கைது செய்தனர். அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் பள்ளியில் படிக்கும் போதே வீரசிகாமணி வடக்கு தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கல்லூரியை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது.

    எனது திருமணத்திற்கு பின்னும் இசக்கிமுத்துவிடம் பழகி வந்தேன். இது எனது கணவருக்கு தெரிந்து விட்டது. இதனால் அவர் எங்களை கண்டித்தார்.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக இசக்கிமுத்துவின் உதவியை நாடினேன். நான் வேலை பார்க்கும் நிதி நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் கடன் தொகையை இசக்கிமுத்துவிற்கு வாங்கி கொடுத்தேன்.

    பின்னர் வைரவசாமியை கொலை செய்ய திட்டமிட்டோம். நான் எனது கணவருடன் வழக்கமாக மோட்டார் சைக்கிளில் வேலை முடிந்து வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் செல்லும் போது அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம்.

    அதன்படி இசக்கிமுத்து மற்றும் வீரசிகாமணி வடக்கு தெருவை சேர்ந்த காளிராஜ் (25), அங்கராஜ் (24) ஆகியோர் நடுவக்குறிச்சி சமத்துவபுரம் அருகே தயாராக நின்றனர்.

    அவர்களிடம் என் மீது மயக்க ஸ்பிரே தெளித்துவிட்டு நகையை பறிக்க முற்படுவது போல் எனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.

    சம்பவத்தன்று என்னிடம் நகையை பறிக்க முயன்றபோது அதனை தடுக்க வந்த எனது கணவரை, இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அதே காரில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    தகவலறிந்து வந்த போலீசாரிடம் எனது நகையை பறிக்க வந்த போது கணவர் தடுத்ததால் அவரை மர்ம கும்பல் கொலை செய்து விட்டதாக தெரிவித்தேன். ஆனால் என் மீது சந்தேகம் அடைந்த போலீசார் நடத்திய விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். அந்த கும்பல் சென்னைக்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அவர்கள் விக்கிரவாண்டி சென்னை இடையே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது இசக்கிமுத்து உள்ளிட்ட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். போலீசார் அவர்களை கைது செய்து சுரண்டை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் வைரவசாமியை கொலை செய்ய அவரது மனைவி முத்துமாரி, தனது கள்ளக்காதலன் இசக்கிமுத்துவுடன் சேர்ந்து திட்டம் தீட்டி உள்ளார்.

    இதற்கு உடந்தையாக இசக்கிமுத்துவின் நண்பர்கள் 2 பேரையும் அவர்கள் அழைத்துள்ளனர். பின்னர் கொலை செய்வதற்கான இடத்தை அவர்கள் விவாதித்துள்ளனர்.

    அப்போது, தான் வழக்கம் போல் கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது வைரவசாமியை கொலை செய்ய முத்துமாரி யோசனை வழங்கி உள்ளார். அதன்படி அந்த கும்பல் நிதி நிறுவனம் செயல்பட்டு வரும் வீரசிகாமணி முதல் அவர்கள் வீடு உள்ள வென்றிலிங்கபுரம் வரை உள்ள சாலையில் தங்களுக்கு சாதகமான இடத்தை ஆராய்ந்துள்ளனர்.

    இதற்காக அவர்கள் அந்த பகுதியில் எங்கு எங்கெல்லாம் சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என பார்த்துள்ளனர். அப்போது வைரவசாமி கொலை செய்யப்பட்ட நடுவக்குறிச்சி சமத்துவபுரம் காட்டுப்பகுதியில் கேமிராக்கள் இல்லாததால் அங்கு வைத்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அதன்படி அவர்கள் அந்த வழியாக வரும் போது தங்களது திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.

    போலீசார் கொலையாளிகளை கண்டறிவதற்காக பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன்படி சம்பவம் நடைபெற்ற இடங்களை சுற்றி உள்ள செல்போன் டவர்களில் அதிக நேரம் பேசிய எண்களை குறித்து அதன்மூலமும் விசாரணை நடத்தினர்.

    இதில் முத்துமாரி, இசக்கிமுத்து ஆகியோர் செல்போன் மூலம் நீண்ட நேரம் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன்மூலம் போலீசார் துப்புதுலக்கி கொலையாளிகளை கைது செய்துள்ளனர்.

    • கள்ளக்காதலை கைவிடுமாறு மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்தார். இருப்பினும் வசுந்தரா கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.
    • கள்ளக்காதலை கண்டித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மாமியாரை மிரட்டியுள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் குண்டு பள்ளியை சேர்ந்த வசுந்தரா (வயது 30). என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ராஜா உடல்நிலை சரியில்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    வசுந்தரா அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வசுந்தராவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை கவனிக்காமல் அவருடன் ஊர் சுற்றி வந்துள்ளார்.

    கள்ளக்காதலை கைவிடுமாறு அவரது மாமியார் சுப்பம்மா, வசுந்தராவை எச்சரித்தார். இருப்பினும் வசுந்தரா கள்ளக்காதலை கைவிட மறுத்துள்ளார்.

    மேலும் கள்ளக்காதலை கண்டித்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என மாமியாரை மிரட்டியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த வசுந்தராவுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பம்மா தனது தம்பி சந்திரபாபுடன் சேர்ந்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வசுந்தராவை வெட்டி கொலை செய்தார். ஆத்திரம் தீராத அவர் தலையை தனியாக வெட்டி எடுத்தார்.

    இதையடுத்து வசுந்தராவின் துண்டித்த தலையை ஒரு கையிலும் கத்தியை ஒரு கையிலும் பிடித்தபடி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்து ஆவேசத்துடன் ராய் சோட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

    பெண் ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட துண்டித்த தலையை கையில் பிடித்தபடி செல்வதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.

    துண்டித்த தலையுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்ததை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து சுப்பம்மாவிடம் விசாரணை நடத்தினர்.

    எனது மருமகள் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஊர் சுற்றி கொண்டு குழந்தைகளை கவனிக்காமல் இருந்தாள். கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்த என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.

    மருமகளை கொலை செய்து விட்டால் குழந்தைகள் அனாதையாகிவிடும் என நினைத்து இவ்வளவு நாள் பொறுமை காத்து வந்தேன்.

    இனியும் அவளை உயிருடன் விட்டு வைத்தால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து என்னை கொலை செய்து விடுவாள். இதனால் அவளை முந்திக்கொண்டு கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி வழக்கு பதிவு செய்து சுப்பம்மா, அவரது தம்பி சந்திரபாபு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கார் வியாபாரி கணேசன் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவியுடன் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
    • மனைவி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுப்பதும், அதன் பிறகு சமரசமாகி ஒன்றாக குடித்தனம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    மதுரை:

    மதுரை எச்.எம்.எஸ் காலனி ஜானகி நகரை சேர்ந்தவர் கணேசன் (வயது 34). இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளனர்.

    இந்த நிலையில் கணேசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது. எனவே கணவருடன் கோபித்துக் கொண்டு மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனால் வாழ்க்கையில் விரத்தி அடைந்த கணேசன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக எஸ். எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கணேசன் தற்கொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது தற்கொலைக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    கார் வியாபாரி கணேசன் மீது எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மனைவியுடன் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதன் காரணமாக மனைவி போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுப்பதும், அதன் பிறகு சமரசமாகி ஒன்றாக குடித்தனம் நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் கணேசன் மனைவிக்கும், ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி நேரம் காலம் பார்க்காமல் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்த கணேசன் தனது மனைவியையும், சப்-இன்ஸ்பெக்டரையும் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தொடர்பை கைவிடவில்லை என்பதால் மனம் உடைந்த கணேசன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே தற்கொலை செய்த கணேசன், சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருடன் செல்போனில் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    கணேசன்:-வணக்கம் சார், புகார் கொடுக்க வந்த இடத்தில் இப்படி பண்ணலாமா?'

    கணேசன்:-'பேசுவதில் தப்பு இல்லை. ஆனால் பேசுகிற விஷயம் தப்பாக இருக்கிறதே? 'தண்ணி அடித்தவன் எல்லாம் ஆம்பளை கிடையாது' என்று சொன்னீர்கள். ஆனால் நீங்கள் இப்படி பண்ணினால் என்ன அர்த்தம்?'

    சப்-இன்ஸ்பெக்டர்:-'எதுவும் தப்பாக பண்ணி இருந்தால் மன்னித்துவிடு. இனிமேல் அப்படி நடக்காது'.

    கணேசன்:-"எனக்கு ஒரே ஒரு பிள்ளை. நான் விரும்பி தேர்ந்தெடுத்த வாழ்க்கை. நான் மது அருந்திவிட்டு அவளிடம் சண்டை போட்டேன். அது உண்மைதான். ஆனால் உங்களிடம் புகார் செய்யத்தானே அவள் வந்தாள். அவளிடம் நீங்கள் இவ்வளவு தூரம் பேசி பழகி இருந்தால், எனக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும்? .

    இன்று காலையில் இருந்தே நீங்கள் பேசிக் கொண்டுதான் இருக்கிறீர்கள். நீங்கள் பேசிய அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும். அவள் என்னிடம் இப்போது வரை பொய் சொல்கிறாள். நான் மனதளவில் நொந்து போய் உள்ளேன்.

    சப்-இன்ஸ்பெக்டர்:-"நடந்த விஷயங்களை விட்டு விடு. இனிமேல் அப்படி நடக்காது. சரியா?"

    கணேசன்:-"தயவு செய்து அவளுடன் தொடர்பை விட்டு விடுங்கள். என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம். உங்கள் வீட்டில் யார்-யார்? என்னென்ன செய்கிறார்கள்? என்பது வரை எல்லாமே பார்த்து விட்டேன். நேரில் வந்து பேச ஒரு நிமிடம் ஆகாது. வேண்டாம். கையெழுத்து கும்பிடுகிறேன். இதோடு விட்டு விடுங்கள".

    சப்-இன்ஸ்பெக்டர்:-"சரிப்பா. இனிமேல் அப்படி நடக்காது. நீ உன் குடும்பத்தை சரியாக பார்த்துக் கொள்".

    கணேசன்:-"புகார் கொடுக்க வந்தவளை நீங்கள் இப்படி பயன்படுத்தி இருக்கக் கூடாது".

    கணேசன்:-"நான் இந்த விஷயத்தில் வெளிப்படையாக பேசி அவமானப்பட விரும்பவில்லை. தயவு செய்து இனிமேல் மெசேஜ் எதுவும் வேண்டாம்".

    சப்-இன்ஸ்பெக்டர்:-"இனிமேல் உன் குடும்பத்தை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை மன்னித்துவிடு"

    இவ்வாறு அவர்கள் உரையாடல் ஆடியோவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    மதுரை கார் வியாபாரி-சப்-இன்ஸ்பெக்டர் இடையேயான ஆடியோ உரையாடல் தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, நாங்கள் இது தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடத்தி வருகிறோம். அதில் உண்மை தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.
    • தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா புகார் அளித்திருந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே தென்கலம் கிராமம் அருகே உள்ள குளத்தின் கரைக்கு அருகே கடந்த மாதம் 20-ந்தேதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது.

    இதுதொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து அந்த நபர் யார்? அவரை யார் கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தார்.

    கடந்த ஒரு மாதத்தில் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்கள் குறித்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்த்து அதன்படி விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் ராஜா என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி வினிதா(வயது 35) புகார் அளித்திருந்தார். இதனால் எரித்துக்கொல்லப்பட்ட நபர் ராஜா தானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக அவரது மனைவி வினிதாவிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    கேரளா மாநிலம் மூணாறு பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வினிதாவுடன் திருமணமாகி உள்ளது. ராஜா சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்துள்ளார். அங்கு தொழில் சரியாக இல்லாததால் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜா தனது குடும்பத்துடன் நெல்லையை அடுத்த தாழையூத்துக்கு வந்துவிட்டார்.

    அங்கு கயத்தாறு அருகே உள்ள வலசல் பகுதியை சேர்ந்த தர்மராஜா(25) என்பவரின் நட்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து ராஜாவின் லாரியில் தர்மராஜா கிளீனராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் காரணமாக தர்மராஜா அடிக்கடி ராஜாவின் வீட்டுக்கு சென்றுவந்துள்ளார்.

    அப்போது அவருக்கு ராஜாவின் மனைவி வினிதாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் ராஜா இல்லாத நேரத்தில் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ராஜா அவர்களை கண்டித்துள்ளார்.

    ஆனாலும் 2 பேரும் கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை ராஜா வீட்டில் இல்லாததை அறிந்த தர்மராஜா, அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வினிதாவுடன் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த ராஜா, அதனைப்பார்த்து ஆத்திரம் அடைந்தார்.

    அப்போது ராஜாவுக்கும், தர்மராஜாவுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தர்மராஜா ஆத்திரம் அடைந்து ராஜாவை கொலை செய்தார். பின்னர் வினிதாவின் உதவியுடன் ராஜா உடலை மோட்டார் சைக்கிளில் தூக்கி, மானூர் குளத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு வைத்து ராஜாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு எதுவும் தெரியாதது போல வினிதாவும், தர்மராஜாவும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர். பின்னர் எதுவும் தெரியாததுபோல வினிதா தனது கணவரை காணவில்லை என போலீசில் புகார் கொடுத்தது அம்பலமானது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சபாபதி இந்த வழக்கில் வினிதா, தர்மராஜா ஆகியோரை கைது செய்தார்.

    • கள்ளக்காதல் கசந்ததால் சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • இதனால் சவுடேஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர்.

    இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் சவுடேஸ்வரியின் வீட்டுக்கு தெரிய வரவே அங்கு தகராறு ஏற்பட்டது. இது குறித்து சவுடேஸ்வரி முத்துப்பாண்டியிடம் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நெகமத்துக்கு வந்தனர்.

    பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். முத்துப்பாண்டி காக்கடவில் உள்ள கயிறு மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக 2 பேரும் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர்.

    சம்பவத்தன்று மில் உரிமையாளர் முத்துப்பாண்டிக்கு தொடர்பு கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது சவுடேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    சவுடேஸ்வரி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு ஓடி வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த படி முத்துப்பாண்டி வாழ்க்கையை கொடுக்கவில்லை. இதனால் அவரது கள்ளக்காதல் 10 மாத்தில் கசந்தது. இதன் காரணமாக சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், இங்கும் வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த அருள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் ,பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுசீலா. இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் சுசிலா வேலை பார்த்த நிறுவனத்தின் மேலாளராக இருந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் சுசீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவன் கோபாலுக்கு தெரிந்ததால் அவரை கொலை செய்ய மனைவி சுசீலாவும் கள்ளக்காதலன் மாரீஸ்வரனும் முடிவு செய்தனர்.

    அதன்படி இருவரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கோபாலை கொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக கோபாலின் மனைவி சுசீலா ,கள்ளக்காதலன் மாரீஸ்வரன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த மதன் குமார், மணிகண்டன், வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவு பிறப்பித்தார் .அந்த உத்தரவையடுத்து கோவை சிறையில் உள்ள 7 பேருக்கும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆணையை வழங்கினர்.

    • கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார்.
    • அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம், பில்லால வலசை பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவர் ஆப்பிரிக்காவில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி மிருதுளா (29). தம்பதிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு இருவரும் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு முரளியின் மகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியையும், மகனையும் அவரது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார். விசாகப்பட்டினம் ரிக்‌ஷா காலனியில் முரளி சொந்தமாக வீடு கட்டி அங்கு தனது மனைவி மகனை குடிவைத்தார்.

    பின்னர் ஆப்பிரிக்கா நாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சாய்ராம் நகர் காலனியை சேர்ந்த ஹரிசங்கர் வர்மா என்பவருடன் மிருதுளாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ஹரி ஷங்கர் வர்மா, மிருதுளா இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி ஆப்பிரிக்காவில் இருந்து முரளி விசாகப்பட்டினம் வந்தார். அப்போது அக்கம்பக்கத்தினர் மிருதுளாவின் கள்ளக்காதல் குறித்து முரளியிடம் தெரிவித்தனர்.

    கள்ளக்காதலை கைவிடுமாறு முரளி தனது மனைவியிடம் வற்புறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மிருதுளா இதுகுறித்து அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மாவிடம் தெரிவித்தார். இருவரும் சேர்ந்து முரளியை கொலை செய்ய முடிவு செய்தனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு முரளி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மிருதுளா அவரது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்தார்.

    படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த முரளி கையை ஹரிசங்கர் வர்மா பிடித்துக் கொள்ள, மிருதுளா சமையல் செய்யும் குக்கரால் முரளியின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

    இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்து துடித்து சம்பவ இடத்திலேயே முரளி பரிதாபமாக இறந்தார். முரளியின் பிணத்தை போர்வையால் சுற்றி மறைத்து வலசை பாலத்தின் கீழ் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து விட்டனர்.

    2 நாட்கள் கழித்து சென்று பார்த்தபோது பிணம் அழுகி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து முரளியின் பிணத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தனர்.

    இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவர் பிணத்தை எரித்துக் கொண்டிருந்த மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலன் ஹரிசங்கர் வர்மா ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    முரளி தங்களது கள்ளக்காதலை கண்டித்ததுடன், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்ததாக தெரிவித்தனர்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மிருதுளா மற்றும் அவரது கள்ளக்காதலனை கைது செய்தனர்.

    கள்ளக்காதல் கொலையால் அவர்களது 7 வயது மகன் பெற்றோர் இன்றி தவித்து வருவது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×