search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152272"

    • பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பெரும்பாலி என்ற இடத்தில் குட்டை ஒன்று உள்ளது.இந்த நிலையில் நேற்று மாலை அந்தக் குட்டை பகுதியில் ஒரு பெண் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டுள்ளதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீக்குளித்த அந்தப் பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் விசாரணையில், அவர் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி கலா(வயது 47) என்பதும், கணவர் இறந்துவிட்ட நிலையில் தற்பொழுது தீக்குளிக்க முயன்றதும் தெரிய வந்தது.

    மேலும் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.
    • தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் உலாஸ் நகரில் நடைபெற்ற வினோதமான சம்பவத்தில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் குளித்து கொண்டு செல்வது போன்று ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோ தானே நகரத்தில் உள்ள உல்காஸ் நகரின் 17-வது பிரிவு பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் வாலிபரும், பெண்ணும் நடுரோட்டில் ஸ்கூட்டியில் அமர்ந்து குளிப்பதை காண முடிந்தது.

    அந்த பெண் தன் முன்னால் ஒரு வாளியை வைத்திருந்தார். மற்ற பயணிகள் பார்த்து கொண்டிருக்கும் போது அந்த ஆண் மீதும், தன் மீதும் அந்த பெண் தண்ணீரை ஊற்றி குளிப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கண்டனம் விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே வீடியோ வைரலானதால் தானே நகர போலீசாரும் சம்பந்தப்பட்ட வாலிபர் மீதும், அந்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக பதில் அளித்துள்ளனர்.

    • இளம்பெண் திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்மாய்பட்டி தெருவை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது மகள் ராஜாஅமராவதி(19). பேஷன் டிசைனிங் படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இந்த நிலையில் வெளியே சென்று வருவதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் ேதடிப்பார்த்தும் விசாரித்து கண்டுபிடிக்க முடியவில்ைல.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஜெயபாலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாஅமராவதியை தேடி வருகின்றனர்.

    • இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள ஏ.முக்குளத்தை சேர்ந்தவர் கருப்பி(வயது38). தூய்மை பணியாளரான இவர் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

    சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கருப்பி அங்குள்ள கண்மாய் கரையில் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கினர்.
    • போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் மங்களத்தை சேர்ந்தவர் 38 வயது இளம்பெண்.

    இவருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவர் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒருமகன் உள்ளார்.

    இளம்பெண்ணின் மாமியார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காரச்சேரியில் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை மாமியார் தொடர்பு கொண்டு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் 4 நாட்கள் இங்கு வந்து தங்கி விட்டு செல்லுமாறு அழைத்தார். இதையடுத்த அந்த பெண், தனது கணவர், மகனுடன் கிணத்துக்கடவில் உள்ள மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

    சம்பவத்தன்று இரவு காற்றுக்காக வீட்டில் கதவை திறந்து வைத்து விட்டு அனைவரும் படுத்து தூங்கினர். நள்ளிரவு அவர்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவர் இளம்பெண்ணின் அருகில் சென்று படுத்தார். பின்னர் அவர் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போட்டார். உடனே அந்த வாலிபர் தப்பி ஓடினார்.

    தனது மனைவியின் சத்தம் கேட்டு எழுந்த கணவர் அந்த வாலிபரை விரட்டி சென்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்தார். பின்னர் தர்ம அடி கொடுத்து கிணத்துக்கடவு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த ஜே.சி.பி. ஆபரேட்டர் கார்த்திக் (வயது 26) என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கணவரை இழந்து வாழ்ந்தவர் வீடு புகுந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நெடுமதுரையை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சங்கீதா(வயது23). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சங்கீதா தனது பெற்றோ ருடன் வசித்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆறுமுகம் (வயது24). இவருக்கு திருமணமாகிவிட்டது. சம்பவத்தன்று சங்கீதாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா சத்தம் போட்டுள் ளார்.

    அவரது சத்தத்தை கேட்டு அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு வந்தனர். இதையடுத்து ஆறுமுகம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் சங்கீதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    • தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுஜிதா தனது அறையில் சென்று கதவை சாத்திவிட்டு படுத்துள்ளார்
    • உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே தளச்சான்விளை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தளச்சான் விளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரகாசின் சில தேவைகளுக்காக சுஜிதாவின் நகையை அடகு வைத்ததாகவும் மேலும் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டை அடகு வைத்து லோன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே நகை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுஜிதா தனது அறையில் சென்று கதவை சாத்திவிட்டு படுத்துள்ளார். பிரகாசும் குழந்தைகளும் பக்கத்து அறையில் தூங்கியுள்ளனர்.

    காலையில் பிரகாஷ் எழுந்து சுஜிதாவின் அறை கதவை தட்டியபோது அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிரகாஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்த போது சுஜிதா மின் விசிறில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பலியான சுஜிதாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுஜிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இளம்பெண்-வாலிபர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை

    இஸ்மாயில்புரம் 6-வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி மகேஸ்வரி (28). இவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோச்சடை கலை சம்பளக்காரர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (46). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார்.
    • இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய சேமூர், வேல் நகரை சேர்ந்தவர் கோபி ராஜா. இவரது மனைவி மோனிஷா (23). இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் கோபிராஜா குடி போதைக்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இவ்வாறு சண்டை வரும் போதெல்லாம் மோனிஷா கணவருடன் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். இதேபோல் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மோனிஷா கணவருடன் சண்டை போட்டு கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதன் பின்னர் கோபி ராஜாவின் தாய், தந்தை சமாதானம் பேசி மீண்டும் மோனிஷாவை கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோபிராஜா மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோனிஷா இப்படியே குடித்துக்கொண்டு இருந்தால் வீட்டு வாடகை, வண்டி தவணை எப்படி கட்ட முடியும் என்று கணவரிடம் கேட்டுள்ளார்.

    இப்படியே செய்து கொண்டிருந்தால் நான் செத்து விடுவேன் என்று கூறி மோனிஷா வேகமாக வீட்டின் பின்புறம் சென்றார்.

    அங்கு இருந்த தின்னரை எடுத்து உடம்பில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபிராஜா தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மோனிஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 ஆண்டுக்குள் ஆவதால் இது குறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்தவர் கோமதி. இவரது மகள் மகேஸ்(28). இவருக்கும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த பாக்கியராஜூக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஆண் குழந்தையும், 5 மாத பெண் குழந்தையும் உள்ளனர். பாக்கியராஜ் கேரளாவிற்கு சென்று மீன்பிடித்து வந்து வியாபாரம் செய்து வந்தார். கடந்த 6 மாதங்களாக அவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கோமதிக்கு போனில் தெரிவித்தனர். உடனடியாக கோமதி மகள் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.பாக்கியராஜ் குடும்பத்தார் தெரிவித்த தகவல்களில் கோமதிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் மகள் தற்கொலை செய்து கொண்டதில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் கோமதி புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
    • இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த தூக்கியாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). கட்டிடத்தொழி லாளி யான இவரும், அதே பகுதி யைச் சேர்ந்த இளம்பெண் சுபலேகா(18) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவ ருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனமுடைந்த சுபலேகா, நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைக்கண்ட விக்னேஷும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதில் காதலி சுபலேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

    விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அருகே தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்க நாதன்புத்தூர் மண்ட கப்படி தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி சந்தன செல்வி (வயது27). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவர் முத்துபாண்டி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சந்தனசெல்வி வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக தனது தாய் தங்கமாடத்தி வீட்டுக்கு வந்தார். அவர் நகையை திருப்பிவிட்டு வீட்டுக்கு வந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். அவர் விஷம் குடித்தி ருப்பது தெரியவந்ததும் அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தங்கமாடத்தி சேத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து சந்தனசெல்வி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    ×