என் மலர்
நீங்கள் தேடியது "slug 152997"
- கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் முன்பாக படிக்க வேண்டும்.
- முன்னதாக அவர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியம், ஆச்சாள்புரம் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட கலெக்டர் லலிதா கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
கிராம சபை கூட்டம் என்பது அனைத்து கிராம மக்களும் வருகை தந்து கடந்த 3 மாதத்தில் என்னென்ன செய்யப்பட்டன மேலும் எப்பணிகள் மேற்கொள்ள ப்படவுள்ளது என்பது போன்ற முக்கிய பொருட்கள் தெரியப்படுத்தப்படும்.
இதுவரை கிராம சபைக் கூட்டம் குடியராசு தினம் ஜனவரி 26, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினம் ஆகஸ்ட் 15, காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 என வருடத்திற்க்கு 4 முறை நடைபெற்று வந்ததை முதலமைச்சர் தற்போது கூடுதலாக உலக தண்ணீர் தினம் மார்ச் 22 மற்றும் உள்ளாட்சி தினம் நவம்பர் 1 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்திரவிட்டுள்ளார்கள்.
ஆக மொத்தம் வருடத்திற்க்கு 6 முறை கிராம சபைக் கூட்டம் நடைபெறும்.
கிராம சபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கம் ஊராட்சியில் நடைபெற்ற எல்லா வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் முன்பாக படிக்க வேண்டும்.
மக்களிடம் எடுத்துச் சொல்லப்படும் அரசின் முக்கிய திட்டங்களை பற்றி நன்கு அறிந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்.
பெண் கல்வியை ஊக்கப்படுத்த முதலமைச்சர் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்தார்கள்.
எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை அக்கறை கொண்டு பள்ளிக்கு அனுப்பிவைத்து உயர் கல்வி பயில ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்பேசினார்.
முன்னதாக அவர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.
இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர்உமாமகேஸ்வரி சங்கர், இணை இயக்குநர் (வேளாண்மை)சேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஸ்ரீதர், கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரெஜினா ராணி, அருண்மொழி, ஆச்சாள்புரம் ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்புவனேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்தை யல்நாயகி கலியமூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது.
- முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருப்பூர் :
பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வினீத் பங்கேற்றார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, பொங்கலூர் பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் சார்பில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத் பேசியதாவது:-
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள படி உலக முதியோர் தின விழா ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாட ப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும் மரியாதை செய்யவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் விதத்தில் அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்காக அரசு 2007-ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2009-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தீர்ப்பாயம் அமைத்து இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தீர்ப்பாயம் மூலம் (திருப்பூர், தாராபுரம்,உடுமலை) இதுவரை 324 மனுக்கள் பெறப்பட்டு 303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் 89 மேல் முறையீடு மனுக்கள் பெறப்பட்டு, அதில் 83 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமரச அலுவலரிடம் ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை 27 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் முதியோர்களு க்காக இலவச அரிசி திட்டம், ஓய்வூதியம், அரசு மருத்துவமனைகளில் தனி படுக்கை வசதி அமைக்கப்ப ட்டுள்ளது. ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்காக அவர்களை பராமரிக்கும் பொருட்டு அரசு முதியோர் இல்லங்களை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ன் கீழ் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.12 முதியோர் இல்லங்களில் 250 ஆண் மற்றும் பெண் முதியோர்கள் தங்கி உள்ளனர். மேலும் மத்திய அரசு முதியோருக்காக 14567 என்ற உதவி எண்ணை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் உலக முதி யோர் தின விழாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி உலகம் முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட 13 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வழங்கி சிறப்பு செய்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதியோர் இல்லங்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.
இவ்விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எஸ் சௌமியா, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, யூனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் நிறுவனர் ராஷ்ரிய ரத்னா குருஜி.சிவாத்மா சர்வாலயம் முதியோர் இல்ல தலைமை நிர்வாக அதிகாரி ஆர் ராஜம்மாள், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சேவையர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருச்சி மாவட்டத்தில் நாளை அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற உள்ளது.
- இதில் ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினமான நாளை 2-ந்தேதி அன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது :
திருச்சி மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள அனைவருக்கும் மேம்பட்ட வாழ்க்கை சூழல், வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்துதல், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல்நலத்துடன் நலவாழ்வு வாழத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்,
ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல்,
வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் மறு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்க (ஊரகம்), நம்ம ஊரு சூப்பரு பிரச்சார இயக்கம்,
ஜல் ஜீவன் இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணை சார்ந்த சாராத தொழில்கள், கிராம ஊராட்சி வளர்ச்சி அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்கு உள்ளதால் அவர்களை முழு உத்வேகத்துடன் முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்துதல், உள்ளிட்ட இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டங்களில் சம்மந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பயிர்காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
- கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்தெரிவித்துள்ளதாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி சிறப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெல் (சம்பா), மக்காச்சோளம், பருத்தி மற்றும் சின்ன வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய அரசின் புதிய வழி காட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் கீழ் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு வரும் 15-ந் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டுமென நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து விவசாயிகளும் உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெற கேட்டுக்கொ ள்ளப்படுகிறது.
நெல் (சம்பா) பயிருக்கு காப்பீடு செய்வதற்கான பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.564-ம், மக்காச்சோளத்திற்கு ரூ. 311-ம் மற்றும் பருத்திக்கு ரூ. 532 ஆகும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் நெல் (சம்பா), மக்காச்சோளம் மற்றும் பருத்தி பயிருக்கு இத்திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் நடப்பில் உள்ள சேமிப்பு கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, நடப்பு பருவ அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக உரிய பிரீமியத் தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம் என தெரிவித்தார்.
- நெல்லை மாவட்டத்தில் 204 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
- பொதுமக்களுக்கு விவரங்களை அளித்திட அனைத்து துறை அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியான நாளை (2-ந்தேதி) நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபைக்கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணிக்கு நடத்தி அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறை வெண்வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நெல்லை மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஓன்றியங்களுக்குட்பட்ட 204 கிராம ஊராட்சிகளிலும் நாளை காலை இக்கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள், ஊராட்சியின் முந்தைய ஆண்டுக்கான அறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
மேலும் , அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்கு தேவை யான விவரங்களை அளித்திடவும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் இக்கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்என்று மகேந்திரன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார். மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரன் தனது கட்சியினருடன் கலெக்டர் வினீத்தை சந்தித்து கொடுத்த ஒரு மனுவில் கூறியிருப்பதாவது:-
உடுமலை கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ரூ.40 கோடி மதிப்பில் நவீன முறையில் மேம்படுத்தி, கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொமரலிங்கம்-ருத்ராபாளையம் இடையே ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். தளிஞ்சி மலைவாழ் மக்களின் வசதிக்காக கூட்டாற்றின் குறுக்கே ரூ.1 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும்.
மடத்துக்குளத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து புதிதாக நீதிமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும். திருமூர்த்தி அணையில் பொழுதுபோக்குடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும். அமராவதி அணைப்பூங்காவை மறுசீரமைப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மடத்துக்குளத்தில் தக்காளி கூழ் தயாரிக்கும் ஆலையை அமைத்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனையை 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
- URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and Children (Regulation) Act 2014-ன் கீழ் பதிவு செய்ய தெரிவிக்கப் பட்டுள்ளது.
18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் (அறை எண் : 35-36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண் : 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23), பதிவு செய்ய அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட பிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் பிரிவு 12ன் உட்பிரிவு 1, 2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட பிரிவுகள் 5, 6 மற்றும் 12-ன் கீழ் எந்த விதிகளுக்கும் இணங்க தவறிய எந்த ஒரு நபரும் வழக்கில் தண்டிக்கப்படுவார். முதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம்அபராதமும், இரண்டாவது அல்லது அதை தொடர்ந்து குற்றமாக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் .
அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and children (Regulation) Act 2014-ன் கீழ் 30.9.2022க்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- மின்சாரம் தடைபட்டதால் பரபரப்பு
- மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பு
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்தளத்தில் இருந்த மின்இணைப்பில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பொறிகள் வந்தது.
இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்வாரிய ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
உயர் மின்னழுத்தத்தின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு சில அலுவலகங்களில் இன்று காலை மின்சாரம் தடைப்பட்டது.
மதியம் வரை மின்சாரம் இல்லாததால் ஊழியர்கள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். மின் இணைப்பை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
- பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
- வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரவுவது குறித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கினர்.
திருப்பூர் :
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் கல்வீச்சு சம்பவங்களால் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீசார் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பா.ஜ.க, உட்பட இந்து அமைப்பு நிர்வாகிகளுடன், மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. பின் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது.கலெக்டர் வினீத், போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி., சசாங் சாய் ஆகியோர், சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரவுவது குறித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கினர்.
இது குறித்து கலெக்டர் கூறியதாவது:- வாட்ஸ் ஆப் , சமூக வலைதளங்கள் வாயிலாக , சம்பவம் நடந்தது போல் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். தகவல் உண்மையா என்று தெரிந்து கொள்ளாமல் சிலர் போராடுவதால் வீண் பதற்றம் ஏற்படுகிறது.சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினை மற்றும் அச்சுறுத்தல் இருந்தால், கட்சி நிர்வாகிகளும், அமைப்பினரும் போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும். வருவாய்த்துறைக்கும் உடனடியாக தகவல் கொடுக்கலாம்.பிரச்சினைகள் இருப்பதால் உரிய பாதுகாப்பு தேவையென்றாலும் முன்கூட்டியே போலீசில் தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான, சட்டம் ஒழுங்கு கூட்டம் வாயிலாக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளோம்.
மாவட்டத்தில், பொதுமக்கள் அச்சமின்றி வாழ வசதியாக வருவாய் கோட்ட அளவிலும் தாலுகா அளவிலும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார்.
- பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
வாழப்பாடி:
சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த மின்னாம்பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்கத் திட்டத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மரக்கன்று நட்டு நேற்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து, காரிப்பட்டியில் பொது வினியோக கூட்டுறவு அங்காடியை ஆய்வு செய்த அவர், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டடத்தை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி அரசினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் மாணவர் விடுதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியையும், சர்க்கார் வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தையும் திடீர்ஆய்வு செய்தார்.
வாழப்பாடி பேரூராட்சியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த மீட்கப்பட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்ட, பல லட்சம் விலைமதிப்புள்ள 2 ஏக்கர் தரிசு நிலப்பகுதியை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். இந்த நிலம் தொடர்பான ஆவணங்களை வாழப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு சென்றுஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சி யர் விஷ்ணுவர்த்தினி, வாழப்பாடி தாசில்தார் (பொ) ரவிக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் செல்வராஜ், காரிப்பட்டி வருவாய் ஆய்வாளர் சந்தரகேசன், கிராம நிர்வாக அலுவலர்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது.
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது.
திருப்பூர் :
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையின் கீழ் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் ஆண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கிபேசினார்.
அப்போது அவர் கூறியதாவது :- திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 5 ஆயிரத்து 504 பேர் ரூ.5 கோடியே 57 லட்சத்து 86 ஆயிரத்து 907 மதிப்பில் மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக பெற்றுள்ளனர். இந்த திட்டத்தை பற்றி அறிய 14555 அல்லது 1800 425 3993 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1,451 வகையான மருத்துவ சிகிச்சைகள், 151 வகையான தொடர் சிகிச்சைகள், 38 வகையான பரிசோதனைகள், மற்றும் இதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஞ்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை, காது நுண்திறன் கருவி பொருத்துதல் என உயர்ரக சிகிச்சைகளும் அடங்கும் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.
இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்த 8 பேருக்கு நினைவுப்பரிசு, புதிதாக சேர்க்கப்பட்ட 5 பேருக்கு அடையாள அட்டை, சிறப்பாக செயல்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பகுதி மேலாளர்கள், காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் என 8 பேருக்கு பாராட்டு நற்சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரேமலதா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம் கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.
- ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள, கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் போது, பள்ளியில் அனைத்து வகுப்பறைகளுக்கும் சென்று மாணவ, மாணவிகளின் வருகைப்பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டார்.
மேலும், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை குறித்தும், ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்கள் விபரம் குறித்தும், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் வருகை பதிவு குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.
மேலும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து கேட்டு, அந்த மாணவர்களின் பெற்றோரிடம் வகுப்பாசி–ரியர்கள் பேசினார்களா என்றும், ஏன் அவர்கள் வரவில்லை என்றும், அவர்களை பள்ளிக்கு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவரம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்கள் தொடர்ந்து பள்ளிaக்கு வர தக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், கருமகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்தில் பரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்து அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுடன் கலந்துரையாடி கல்வி தரத்தை ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து உயர்நிலை பள்ளி சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்க சமைக்கப்பட்ட சத்துணவினை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். மேலும் சத்துணவு மையத்தில் உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளை பார்வையிட்டு உணவு பொருட்களின் அளவு மற்றும் முட்டைகளின் எண்ணிக்கையை சரிபார்த்தார்.
பின்னர், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வரகூராம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நில ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் போது விரைந்து ஆவணங்கள் சரிப்பார்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்க வேண்டுமென கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும், வரகூராம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
முன்னதாக திருச்செங்கோடு வட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் வாழ்வாதார சேவை மைய அலுவலகத்தை திறந்து வைத்து, மகளிர் சுயஉதவி குழுவினரின் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டார். ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, டேவிட் அமல்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.