search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 152997"

    • அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் உள்ளதா என ஆய்வு செய்யப்படடது.
    • ஆய்வின் போது, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், ரேஷன் கடை பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நொண்டிமேடு, பாம்பே கேசில் பகுதியில் உள்ள கூட்டுறவு நிறுவனம் ரேஷன் கடைகளில், மாவட்ட கலெக்டர்அம்ரித் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வரும் பொது விநியோகத் திட்டத்தினை வலுப்படுத்துவதின் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு நேரடியாக உதவ முடியும் என்பதின் அடிப்படையில் தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

    இதுகுறித்து, மாவட்ட கலெக்டர், ஊட்டி நொண்டிமேடு மற்றும் பாம்கே கேசில் பகுதியில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை மற்றும் ரேஷன் கடையில் விற்பனை முனைய எந்திரத்தில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்ட எண்ணிக்கை, மீதமுள்ள அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, ராகி, பாமாயில், பொருட்கள் இருப்பு மற்றும் பொருட்களின் தரம், எடை அளவு ஆகியவற்றினை நேரில் பார்வையிட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது, ஊட்டி வட்டாட்சியர் ராஜசேகர், ரேஷன் கடை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • மதுபோதையில் வாகனத்தை இயக்குவது.
    • நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம்- ஒழுங்கு தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் பேசியதாவது:- சாலை விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளாா். இதனடிப்படையில் திருப்பூா் மாவட்டத்தில் சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணம் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பது, மதுபோதையில் வாகனத்தை இயக்குவது, வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியைப் பயன்படுத்துவது, நான்கு சக்கர வாகனங்களில் சீட்பெல்ட் அணியாததுமாகும்.ஆகவே சாலை விபத்து தொடா்பாக போக்குவரத்து அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி விபத்தில்லாத மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

    இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், திருப்பூா் சாா்ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், துணை காவல் கண்காணிப்பாளா் வனிதா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது.
    • பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மதுசூதனன் பேசியதாவது:- அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை, மஞ்சள், சோளம், மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இவர்களின் விவசாய பம்பு செட்டுகளுக்கான மும்முனை மின்சாரம் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும் என 14 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இப்போது தினமும் 9 முதல் 10 மணி நேரம் மட்டுமே குறிப்பிட்ட நேரமில்லாமல் வினியோகிக்கப்படுவதால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். பயிர்களுக்கு போதிய நீர்ப்பாய்ச்ச முடியாமல் அவதிப்படுகிறார்கள். முன்பு போல் 14 மணி நேரம் முறைப்படி மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

    அவினாசி தாலுகாவுக்கு உட்பட்ட சேவூர், பாப்பான்குளம், காசிலிங்கம்பாளையம் பகுதிகளில் மழை பெய்தபோது ஏற்பட்ட சூறாவளிக்காற்றால் வாழை மற்றும் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துவிட்டன. இதுபோல் பல்லடம் தாலுகாவுக்கு உட்பட்ட தெற்கு அவினாசிபாளையம், அலகுமலை, பொங்கலூர் ஊராட்சிகளில் ஏராளமான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்துவிட்டன. இதன்காரணமாக விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையாக கணக்கெடுப்பு செய்து உரிய இழப்பீடு மற்றும் இன்சூரன்சு தொகை பெற்றுத்தர வேண்டும். பயிர்களுக்கு இன்சூரன்சு செய்வதை விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குளத்தில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

    வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜமாபந்தி அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பட்டா, சிட்டா, ,பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டது. நெடுங்குன்றம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு, தலா ரூ.12ஆயிரம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 38பேருக்கு தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.10.72 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.

    • கலெக்டர் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
    • கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, காங்கயம் மண்டல துணை தாசில்தாராக இருந்த மோகனன், தாராபுரம், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியிடத்தில் இருந்த ஜெகதீஸ்குமார், திருப்பூர் 'டாஸ்மாக்' கிடங்கு, மேலாளாராக மாற்றப்பட்டார். கலெக்டர் அலுவலக (டி.என்.ஆர்.எஸ்.பி., நிலை - 2) துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும்.
    • எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன் இருப்பிலுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறுதிட்டங்களை அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான வருடாந்திர மழை 618.20 மி.மீ அளவு. மே- 2023ம்மாதம்முடிய சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவு 73.70 மி.மீ., நடப்பு 2023-ம் ஆண்டில் நாளது வரை பெய்த மழையின் அளவு 85.19 மி.மீ ஆகும். இது சராசரி மழை பொழிவை விட 11.49 மி.மீ., அதிகமாகும். பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்கள், விதைகள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

    அதன்படி நெல் 0.099 மெட்ரிக் டன், சிறுதானிய பயிறுகள் 7.11 மெட்ரிக் டன், பயிறுவகை பயிறுகள் 41.37 மெட்ரிக் டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள் 3.83 மெட்ரிக் டன்இருப்பிலுள்ளது. அமராவதி அணையிலிருந்து நீர் வரத்து தொடங்கியதால் உடுமலை,மடத்துக்குளம், தாராபுரம் வட்டாரங்களில் நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தங்களுடையவிவசாய நிலங்களை தயார் செய்து உள்ளனர். மேலும், கீழ் பவானி பாசன பகுதிகளானகாங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் நெல் சாகுபடி சம்பா பருவத்தில் தொடங்கப்படவுள்ளது. நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா, பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள்தேவையான அளவு இருப்பில் உள்ளது. யூரியா 2240 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1331 மெட்ரிக் டன்,காம்ப்ளக்ஸ் 5103 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 665 மெட்ரிக் டன் அளவு இருப்பில்உள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் கால தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாரயணன் , இணை இயக்குநர் (வேளாண்மை) மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின்இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, துணை ஆட்சியர்கள் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், விவசாயசங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • புகார்களின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதி செய்யவேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர்விநியோகப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, 6நகராட்சிகள் 15 பேரூராட்சிகள் 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவற்றில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நமக்கு நாமே திட்டம்,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதிமேம்பாட்டுத்திட்டம், கலைஞரின் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டுப்பணிகளை விரைந்து முடித்துபொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    மேலும் கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகார்களின் அடிப்படையில்உடனடியாக நேரில் களஆய்வு மேற்கொண்டு குடிநீர் வழங்கி வருவதை உறுதிசெய்யவேண்டும். பழுது ஏற்படும் போது உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கவேண்டும்.

    பொதுமக்களுக்கு கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாதவகையில் பழுது நீக்க பணிகள் மற்றும் பழைய மோட்டார்களை அகற்றி புதியமோட்டார்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டது. நடப்பு ஆண்டிற்குள் அனைத்துவீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் அளவினை உறுதி செய்துஒத்திசைவு செய்யும் பொருட்டு, குடிநீர் வடிகால் வாரியம் சம்ப் மூலமாக வழங்கப்படும்அளவினையும், மேலும் ஊராட்சிகள், குக்கிராமங்களிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி மூலம் பெறப்படும் குடிநீர் அளவினையும் கண்காணித்து ஆய்வு செய்து,குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர்கள் மற்றும் மண்டல துணை வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் இணைந்து தினசரி வழங்கப்படும் குடிநீரின் அளவைகண்காணித்து இனிவரும் காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்கமுறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தினந்தோறும் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மற்றும் கிராம ஊராட்சிகளில்விநியோகிக்கப்படும் குடிநீர்அளவினை மின்னணு நீர்உந்து கருவி பொருத்தி கண்காணித்து சீரான குடிநீர் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட ஊராக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (பொறுப்பு ) ஜெகதீஸன், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வளர்ச்சி) வாணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறி யாளர்கள் செல்வராணி, சசிக்குமார், விஜயலட்சுமி, கிருஷ்ணகுமார் மற்றும்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்கள் பெறப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவைஅனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉரிய தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 358 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து அலுவலக வளாகத்தில் கபசுரகுடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) அம்பாயிரநாதன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 3-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் தாலுகா அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் 3-வது நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாமளாபுரம் உள்வட்டம் சாமளாபுரம், இச்சிபட்டி, பூமலூர், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம்,கோடங்கிபாளையம், ஆகியவற்றைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலந்துகொண்டு மனு அளித்தனர். இதற்கிடையே கோடங்கிபாளையம் ஊராட்சி சங்கோதி பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் அருகே காரணம்பேட்டை சங்கோதிபாளையத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனியார் நிறுவனத்தினர் மண் கொட்டி பாதை அமைக்க முயற்சித்ததாகவும், இதனை தடுத்து பொதுமக்கள் புகார் அளித்ததால், அளவீடு பணி மேற்கொண்டு அந்த அரசு நிலம் மீட்கப்பட்டதாகவும், ஆனால் அந்த அரசு நிலத்தை பாதுகாக்க கம்பி வேலி அமைக்க பொதுமக்கள் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அரசு நிலத்தை மீண்டும் தனியார் ஆக்கிரமிக்காமல், அந்த இடத்தை மீட்டு கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கரடிவாவி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில். கரடி வாவி சின்ன குட்டை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டது. ஆனால் கட்டிட இடிப்பாடுகள் முறையாக அகற்றப்படாமல் உள்ளதால், குட்டையில் மழை நீர்தேங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே கட்டட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதே போல பல்லடம் பச்சாபாளையம் விநாயகர் கோவில் அருகே உள்ள பொதுக் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் மனு அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஜமாபந்தியில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு சான்று, பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச் சான்று என மொத்தம் 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றது. அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் .இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராஜ்,பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பல்லடம் துணை தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில் அவை துண்டிக்கப்பட்டு தனியார் கேபிள் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
    • அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.

    திருப்பூர் :

    அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டருக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அறிவொளி நகர் மற்றும் ஆறு முத்தாம்பாளையம் பகுதியில் அரசின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது.ஏற்கனவே இப்பகுதியில் அரசு கேபிள் இணைப்புகள் இருந்த நிலையில் அவை துண்டிக்கப்பட்டு தற்போது தனியார் கேபிள் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அரசு கேபிள் பதிக்க மறுப்பு தெரிவிப்பதோடு உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.

    • தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
    • மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு பொதுச்செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இது தொடா்பாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனா். தனியாா் பள்ளிகள் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.

    ஆகவே, நேரடியாக கள ஆய்வு செய்து விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×