search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157065"

    • இந்த ரெசிபி இனிப்பு மற்றும் காரசாரமான சுவையில் இருக்கும்.
    • இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.

    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 2 கப்

    ப.மிளகாய் - 2

    பூண்டு - 5 பல்

    வறுத்த வெள்ளை எள் - 1 டீஸ்பூன்

    இஞ்சி - சிறிய துண்டு

    குடைமிளகாய் - 1

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - சிறிதளவு

    செஸ்வான் சாஸ் - 2 டீஸ்பூன்

    எள் - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகு தூள் - அரை டீஸ்பூன்

    வினிகர் - 1 டீஸ்பூன்

    சர்க்கரை 1 டீஸ்பூன்

    உப்பு - 1/2 + 1/2

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து அதில் சூடான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் கலக்கவும்.

    பிசைந்த மாவை மெலிதாக விரல் வடிவில் உருளையாக தேய்க்கவும். தேய்த்த மாவை 1 இஞ்ச் அளவில் வெட்டிக்கொள்ளவும். மாவு அனைத்தையும் இவ்வாறு செய்ய வேண்டும்.

    அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும் செய்து வைத்ததை போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும், பின்னர் அதனை குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். அப்போது தான் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குடைமிளகாயை நீளவாக்கில் மெல்லிதாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் எள்ளை போட்டு பொரிந்த பின்னர் பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    பின்னர் அரை கப் தண்ணீர் ஊற்றவும். அடுத்து அதில் செஸ்வான் சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் , காஷ்மீரி மிளகாய் தூள், மிளகு தூள், வினிகர், சர்க்கரை, உப்பு அரை டீஸ்பூன் சேர்த்து கலக்கவும். பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்துள்ள ஸ்டிக்கை போட்டு 1 நிமிடம் நன்றாக கிளறவும்.

    இப்போது மசாலா நன்றாக சைஸ் ஸ்டிக்கில் சேர்ந்திருக்கும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லி தழை, வறுத்த எள் தூவி பரிமாறவும்.

    • இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • குழந்தைகளுக்கு இது சத்தான ரெசிபி.

    தேவையான பொருட்கள்

    வாழைப்பழம் - 2

    வெண்ணெய் - 3 டீஸ்பூன்

    நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்

    பிரெட் துண்டுகள் - தேவைக்கேற்ப

    செய்முறை

    வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் வெண்ணெய் போட்டு உருகியதும் வெட்டிவைத்த வாழைப்பழம், நாட்டுச்சர்க்கரை போட்டு குழைய வதக்கி இறக்கி ஆற விடவும்.

    பிரெட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி விட்டு சப்பாத்தி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

    தேய்த்த பிரெட் நடுவில் வாழைப்பழ மசியலை வைத்து பிரெட்டை உருட்டி ஓரங்களில் நன்றாக ஒட்டி விடவும். அப்போது தான் வாழைப்பழம் வெளியில் வராது.

    இப்போது மீண்டும் அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும் செய்து வைத்த பிரெட் உருண்டைகளை போட்டு இரு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான வாழைப்பழ பிரெட் டோஸ்ட் ரெடி.

    • பிரெட் வைத்து சூப்பரான கச்சோரி செய்யலாம்.
    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    ப.மிளகாய் - 1

    உருளைக்கிழங்கு - 1

    பிரெட் துண்டுகள் - 10

    கேரட் - 1

    குடைமிளகாய் - 1

    வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்

    கொத்தமல்லி - சிறிதளவு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    சில்லி பிளேக்ஸ் - அரை டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

    கருப்பு உப்பு - கால் டீஸ்பூன்

    ஆம்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்

    தனியா தூள் - அரை டீஸ்பூன்

    சீரகத்தூள்- அரை டீஸ்பூன்

    மைதா மாவு - 1 டீஸ்பூன்

    சோள மாவு - 3 டீஸ்பூன்

    முந்திரி - 10

    பிரெட் தூள் - தேவையான அளவு

    உப்பு, எண்ணெய் - தேவையானஅளவு

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    சோளமாவில் சில்லி பிளேக்ஸ் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து முந்திரியை உடைத்து போட்டு வறுபட்டதும் சீரகம் போட்டு பொரிந்ததும் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் பொடியாக நறுக்கிய கேரட், குடைமிளகாய், வேக வைத்த பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, ஆம்சூர் பவுடர், தனியா தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும் இறக்கி குளிர வைக்கவும்.

    பிரெட் துண்டை பூரி கட்டையால் மெலிதாக தேய்க்கவும்.

    தேய்ந்த பிரெட்டை வட்ட வடிவ கட்டரால் வெட்டவும். இவ்வாறு அனைத்து பிரெட் துண்டுகளையும் செய்து கொள்ளவும்.

    ஒரு வட்ட வடிவில் வெட்டிய பிரெட் துண்டில் மசாலாவை நடுவில் வைக்கவும். மற்றொரு பிரெட்டி துண்டில் ஓரங்களில் மைதா பசையை தடவி மசாலா வைத்த பிரெட்டில் மேல் வைத்து மூடி விடவும். ஓரங்களில் நன்றாக அழுத்தி விடவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    செய்து வைத்தவற்றை சோளமாவு கரைசலில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி வைக்கவும். இவ்வாறு அனைத்தையும் செய்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்துள்ள கச்சோரிகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் கச்சோரி ரெடி.

    • இந்த புட்டிங் செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
    • பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உடனே செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிவப்பு அவல் - 1 கப்

    நாட்டுச்சர்க்கரை - தேவைக்கேற்ப

    தேங்காய் துருவல் - கால் கப்

    செவ்வாழைப்பழம் - 2

    செய்முறை

    சிவப்பு அவலை நன்றாக கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். அவல் நன்றாக குழைய ஊறக்கூடாது.

    ஊறிய அவலை நன்றாக தண்ணீரை பிழிந்து எடுத்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நாட்டுச்சர்க்கரை, தேங்காய் துருவல், செவ்வாழைப்பழத்தை போட்டு நன்றாக பிசைத்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் வாழைப்பழ புட்டிங் ரெடி.

    • குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
    • விருந்தினர் வந்தால் இந்த ரெசிபி செய்து கொடுத்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    பிரெட் - 6 துண்டுகள்

    உருளைக்கிழங்கு - கால் கிலோ

    பன்னீர் - 100 கிராம்

    துருவிய சீஸ் - விருப்பத்ற்கேற்ப

    ப.மிளகாய் - 3

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

    சில்லி ப்ளோக்ஸ் - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - கால் தேக்கரண்டி

    தனியா தூள் - 1 தேக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    ஆரிகானோ - 1 தேக்கரண்டி

    சோள மாவு - கால் கப்

    பிரெட் தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    ப.மிளகாய், கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    சோள மாவில் 1 தேக்கரண்டி சில்லி ப்ளோக்ஸ், சிறிதளவு உப்பு, ஆரிகானோ, சிறிதளவு தண்ணீர் சேர்த்து திக்கான பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், சில்லி ப்ளோக்ஸ் 1 தேக்கரண்டி, தனியா தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து துருவிய பன்னீர், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    எல்லாம் சேர்ந்து ஒன்றாக கலந்து வரும் போது துருவிய சீஸை சேர்த்து வதக்கவும்.

    மசாலா எல்லாம் ஒன்று சேர்ந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும்.

    பிரெட்டில் மேல் இந்த மசாலாவை தடவவும்.

    பின்னர் மசாலா தடவிய பிரெட்டை நீளமான துண்டுகளாக வெட்டவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து வெட்டிய பிரெட் துண்டுகளை சோள மாவு கலவையில் முக்கி பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ஆலு பிரெட் பிங்கர்ஸ் ரெடி.

    • டீ கடையில் வெங்காய போண்டா சாப்பிட்டு இருப்பீங்க.
    • இன்று வீட்டிலேயே இந்த போண்டா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 1 கப்

    பெரிய வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 2

    சோம்பு - 1 ஸ்பூன்

    மிளகாய்தூள் - 1 ஸ்பூன்

    மைதா மாவு - 4 ஸ்பூன்

    அரிசி மாவு - 2 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

    * ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் சோம்பு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, மைதா மாவு, உப்பு, வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.

    * கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் வெங்காய போண்டா ரெடி.

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
    • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டு,

    பெரிய வெங்காயம் - 2,

    பச்சை மிளகாய் - 4,

    உப்பு - தேவையான அளவு,

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,

    காய்கறி - கால் கப்.

    செய்முறை :

    ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.

    காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்துஅதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

    ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது.

    சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.

    சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.

    • பஜ்ஜியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று தக்காளியில் பஜ்ஜி செய்து எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5

    பொட்டுக்கடலைமாவு - 50 கிராம்,

    சோள மாவு - 25 கிராம்,

    மைதா மாவு - ஒரு டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்,

    பெருங்காயத் தூள் - சிறிதளவு,

    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    தக்காளியை கனத்த வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.

    பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி.

    குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.

    • பன்னீரில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஊற வைப்பதற்கு...

    பன்னீர் - 200 கிராம்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    மாவிற்கு...

    மைதா - 3 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    * இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.

    குறிப்பு:

    * அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.

    * உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    ராகி சேமியா - 100 கிராம்,

    உருளைக்கிழங்கு - 3,

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,

    வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 50 கிராம்,

    மைதா - 4 டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிது.

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.

    ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப்பிங் செய்ய:

    உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்),

    பன்னீர் துண்டுகள் - 50 கிராம்,

    தனியா தூள் - ஒரு டீஸ்பூன்,

    கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.

    • மோமோஸ் சீனர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருக்கிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மைதா மாவு - 1 கப்

    பெரிய வெங்காயம் - 1

    குடை மிளகாய் - 1

    கேரட் - 2

    பீன்ஸ் - 6

    முட்டைகோஸ் (சின்னது) - 1/2

    பூண்டு பல் - 3

    இஞ்சி - 1 துண்டு

    மிளகு தூள் - 1 மேஜைக்கரண்டி

    வினிகர் - 1 மேஜைக்கரண்டி

    சோயா சாஸ் - 1 மேஜைக்கரண்டி

    கொத்தமல்லி - சிறிதளவு

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    * வெங்காயம், குடை மிளகாய், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, 2 மேஜைக்கரண்டி எண்ணெய், மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து மூடி போட்டு மூடி 40 லிருந்து ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

    * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    * வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    * இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் குடை மிளகாய், கேரட், முட்டைகோஸ், மற்றும் பீன்ஸை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வதக்கவும்.

    * பின்பு அதில் மிளகாய் தூள், வினிகர், சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு வேக விடவும்.

    * கடைசியாக கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆற விடவும்.

    * மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

    * உருண்டையை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நாம் செய்து வைத்திருக்கும் ஸ்டப்பிங்கை வைக்கவும்.

    * ஸ்டப்பிங்கை வைத்த பின் அவரவருக்கு பிடித்தமான வடிவில் மோமோஸ்ஸை மடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    * இட்லி தட்டை எடுத்து அதில் எண்ணெய்யை தடவி இந்த மோமோஸ்ஸை வைத்து 10 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    * 10 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மூடியை திறந்து மோமோஸ்ஸை எடுத்து சுட சுட பரிமாறவும்.

    * இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.

    ×