search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 157148"

    • இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என டி.எஸ்.பி. பிரீத்தி கூறியுள்ளார்.
    • நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள்.

    ராஜபாளையம்

    மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆயிசா மால்வியா (வயது24) உடற்கல்வி ஆசிரியரான இவர் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை பறைசாற்றவும், பெண்களிடம் விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வர முடிவு செய்தார்.

    இதற்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மத்தியபிரதேசத்தில் இருந்து தன்னந்தனியாக சைக்கிளில் பயணத்தை தொடர்ந்தார். அங்கிருந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கோவா, கர்நாடகா, கேரளா சென்று விட்டு தமிழகம் வழியாக வடமாநிலங்கள் நோக்கி செல்லும் அவர் ராஜபாளையம் வந்தடைந்தார்.

    அவருக்கு ராஜபாளையம் போலீஸ் டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள காவல்துணை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் ஆயிசா மால்வியா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நமது நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.

    வழியில் எந்த விதமான அச்சுறுத்தலோ, இடையூறோ ஏற்பட்டதில்லை. இந்தியா வில் நடு இரவில் பெண்கள் அச்சமின்றி எப்போது நடமாட முடிகிறதோ? அப்போது தான் இந்தியா சுதந்திரம் பெற்ற முழு பயனை அடைய முடியும் என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவரது கனவு நனவாகி விட்டது.

    நான் சைக்கிளில் செல்லும் வழியில் பொதுமக்கள், காவல் துறையினர் எனக்கு நல்ல வரவேற்பு அளித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். இது மகிழ்ச்சியாக உள்ளது. எந்த நோக்கத்திற்காக சைக்கிள் பயணத்தை தொடங்கினேனோ அதில் எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து அனைத்து மாநிலங்களுக்கும் பயணம் செய்ய உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் வழங்கப்பட்டன.
    • 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் காளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    திருவிளக்கு பூஜையில் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, தாலிக்கயிறு உள்ளிட்ட மங்கள பொருட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

    அதனை பூஜித்த பெண்கள், மந்திரங்கள் ஓதி, மனமுறுகி காளியம்மனையும், ஐயப்ப சுவாமியையும் வேண்டிகொண்டனர்.

    பின்னர் உலக மக்கள் நன்மைக்காகவும், கடலில் மீன்வளம் பெருக வேண்டியும், மாங்கல்ய பாக்கியம் வேண்டியும் ஒரே நேரத்தில் அனைத்து பெண்களும் பூஜை மணியை ஒலித்தவாறு சுவாமிக்கு தீபாராதனை செய்து வேண்டிக்கொண்டனர்.

    சகலசௌபாக்கியம் வேண்டி கோவில் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபாடு செய்தது, அனைவரையும் பக்தி மனத்தில் ஆழ்த்தியது.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை குற்ற சம்பவ ஓழிப்புகளை கோலப்போட்டி மூலமாக விழிப்புணர்வு.
    • பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி எண் பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் முழுவதும் நவம்பர் 25 முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் 'பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தியது.

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை ரெத்தினசாமி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் கல்வி அவசியம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்போம், ஆண்- பெண் சமம், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு 1098 என்ற இலவச உதவி எண் பயன்படுத்த வேண்டும், குழந்தை திருமணத்தை ஒழிப்போம்" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை கோலத்தில் எழுதி பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில், தஞ்சை நகர போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநில ஊரக வாழ்வாதார இயக்க (மகளிர் திட்டம்) மாநில வள பயிற்றுனர் நாராயண வடிவு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறந்த கோலம் வரைந்தவர்களை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர்கள் ஆர்த்தி, திருமுருகசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆண்டுகளில் 3.36 கோடி பெண்கள் இலவச பயணம் செய்கின்றனர்.
    • திருக்குறளை திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ராமநாதபுரம்

    முதல்-அமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 5 திட்டங்களை செயல்படுத்து வதற்கு கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவச பயண திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு நிதிசுமை குறைந்து பயனடைவார்கள்.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், அவருடன் ஒரு உதவியாளர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களும் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இலவசமாக பயணம் செய்பவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் கட்டணமில்லா தனி பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கீழ் 6 டெப்போக்கள் செயல்பட்டு வருகின்றன. டவுன் பஸ்கள் ஏறத்தாழ 120 வழித்தடங்களிலும், புறநகர் பஸ்கள் 200க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுநாள் வரை 3 கோடி 36 லட்சத்து 52 ஆயிரத்து 835 பெண்கள், 2 லட்சத்து 32 ஆயிரத்து 613 மாற்றுத்திறனாளிகள், 10 ஆயிரத்து 411 மாற்றுத்திறனாளிகள் உடன் வரும் உதவியாளர்கள், 12 ஆயிரத்து 767 மூன்றாம் பாலினர்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பெண்கள் இத்திட்டத்தின் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் பஸ்களில் கட்டணமில்லாமல் பயணம் செய்து பயனடைந்து வருகின்றனர்.

    அதே போல, தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் உலகப் பொதுமறையாம் திருக்குறளை அய்யன் திருவள்ளுவர் படத்துடன் அனைத்து அரசு பஸ்களிலும் இடம் பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத் தெரிவித்துள்ளார்.

    • கிருஷ்ணா மாளிகா அரங்கம் திறப்பு விழாவில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேச்சு
    • குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறினார்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் அருகே கோட்டகம் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளையால் நவீன முறையில் ஏசி வசதிகளுடன் கூடிய புதிதாக கட்டப்பட்டு இருக்கும் பிருந்தாவனம் ஸ்ரீ கிருஷ்ண மாளிகா அரங்கத்தினை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு பேராசிரியை முனைவர் ஸ்ரீஜா ஸ்டாலின் குத்து விளக்கு ஏற்றினார். சென்னை நேசம் டெக் உரிமையாளர் மோகனகுமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலய தலைவர் கோட்டகம் விஜயகுமார் தலைமை உரையாற்றினார்.

    முன்னதாக கோட்டகம் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பொது மக்களின் நலன் கருதி விமான நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். கிருஷ்ண பகவான் அன்று கூறிய உபதேசங்கள், இன்று உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாடமாக மாணவர்கள் படித்து வருகின்றனர். நமது நாட்டிற்கு எத்தனை பிரச்சனைகள் எத்தனை நெருக்கடிகள், அதையெல்லாம் பிரதமர் மோடி அரசு முறியடித்து வெற்றிக்கொடி நாட்டி வருகின்றது,

    அதேபோல குமரி மண்ணும் பல பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்தித்து வருகிறது. எங்கு பெண்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கே சிறப்பு அதிகமாக இருக்கும், கோவில்களின் அருகாமையில் அனைத்து பகுதிகளிலும் மண்டபங்கள் கட்ட வேண்டும், அப்போதுதான் திருமணம் நடைபெற்ற பின்னர் இறைவனை அருகாமையில் தரிசிக்கலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள், துறவிகள், மடாதிபதிகள், அரசியல் பிரமுகர்கள், இந்து இயக்க தலைவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • புதுமண தம்பதிகள் பங்கேற்று ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தினர்.
    • பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள், மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சமூக நலத் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த ஒரு வாரமாக நடை பெற்று வருகிறது.

    இந்நிலையில் நாகப்–பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவி குழுவினர் சுகாதாரத் துறையினர், மாணவ மாணவிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கலந்து கொண்ட மனித சங்கிலியும், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வண்ண பலூன்களை காற்றில் பறக்க விடும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து புதுமண தம்பதிகள் பங்கேற்ற ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து பெண் சிசுக்கொலைகளை தடுப்பது குறித்து விழிப்–புணர்வு ஏற்படுத்தும் வகையில் வண்ண கோலம் போட்டிகளும் நடத்தப்பட்டன.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ் வழங்கினார். கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், பெண் சிசு கொலையை தடுப்பது குறித்தும் அதிகாரிகள் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

    அதனை தொடர்ந்து பள்ளி மாணவிகள் பங்கேற்ற கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி.
    • மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்று த்திறனாளிகள் நலத்துறை சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்ப ரிசுகள் மற்றும் சான்றிதழினை வழங்கி பாராட்டினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகள் ( உதவி உபகரணங்களுடன்) 12 முதல் 14 வயதுடைய ஆண், பெண் காலிபர் மற்றும் கால் தாங்கி உதவியுடன் நடப்பவர்களுக்கான 50 மீ நடைபோட்டி , 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான சக்கர நாற்காலி ஓட்டப் போட்டி, 15 முதல் 17 வயதுடைய ஆண், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி, செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, நீளம் தாண்டுதல் போட்டி, 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் போட்டி, குண்டு எறிதல், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டி, பார்வைத் திறன் குறையுடையோருக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல்மா நடைபெற்றது.

    மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் விதமாக, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதியை சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாக அறிவித்தது. இதனை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பொருட்டு அந்நாளில் ஊதா நிறத்தில் முக்கிய கட்டிடங்களில் ஒளியூட்டி பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள உரிமைகள் மற்றும் பாதுகாப்புகள் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி பொதுமக்களிடமும் இத்தகைய நிகழ்வின் மூலம் கொண்டு செல்ல இயலும்.

    இந்தியாவில் முதல் முறையாக நமது தமிழ்நாட்டிலும் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 2 நாட்கள் தமிழ்நாடு அரசின் அனைத்து முக்கிய அலுவலகங்களையும் ஊதா நிறத்தில் ஒளியூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஆட்சியர் அலுவலக பணியாளர்களையும் ஊதா நிறப்பட்டை அணிந்து, மாற்றுத்தி றனாளிகளுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்ரெங்கராஜன், எமாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர்சாமிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல வாரியம் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதில் 18- 60 வயதுக்கு உட்பட்டோர் பதிவு செய்து கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை- விபத்து மரண உதவித்தொகை மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றை பெறலாம். இது தவிர பெண் டிரைவர்களுக்கு ஆட்டோ வாங்க மானியம் வழங்கும் திட்டம் அறிமுகப்படு த்தப்பட்டுஉள்ளது.

    எனவே 60 வயது பூர்த்தி அடையாத பெண்கள் நலவாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வருமானவரி சான்றிதழ், விலைப்புள்ளி விபரப் பட்டியல் மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை https://tnuwwb.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மதுரை எல்லீஸ் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வளாகத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்ணில் (0452-2601449) தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை, தொழிலாளர் உதவி ஆணையர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.

    • கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அருள் மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோவிலில் திரு ஏடு வாசிப்பு விழா கடந்த 18-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 நாளான நேற்று வெள்ளிக்கிழமை திருக்கல்யாண விழா நடை பெற்றது.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு குலசேகர விநாயகர் ஆலயத்தில் இருந்து 91 தட்டுகளில் பழங்கள், இனிப்பு, பலகாரங்கள், முறுக்கு, தேங்காய் வைத்து திருக்கல்யாண சீர்வரிசைச் சுருள் கொண்டு வரும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு ஊர்வல மாக எடுத்து வந்தனர்.

    பின்னர் 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. 16-ஆம் நாளான இன்று சனிக்கிழ மை மாலை 6 மணிக்கு திரு ஏடு வாசிப்பும், இரவு 9.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவடையும் நடக்கிறது. 17-ஆம் நாளான நாளை ஞாயிற்றுக்கிழமை பட்டா பிஷேக விழா நடைபெறு கிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு பணிவிடையும், பகல் 11.30 மணிக்கு உச்சிப்படிப்பும், நண்பகல் 12.மணிக்கு பணிவிடையும், பிற்பகல் 2 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடு வாசிப்பும், மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு அலங்கார பட்டாபிஷேக பணிவிடையும் மாலை 6 மணிக்கு ஸ்ரீமன் நாராயண சுவாமி பூச்சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர்கள் கே.எஸ். மணி, எஸ். கருணாகரன், ராேஜந்தர பாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுல கிருஷ்ணன், கணக்கர் ராஜ சேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சேரன்குளம் ஆழ்காட்டியம்மன் கோயில் வளாகத்தில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர், மன்னார்குடி ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதில் பேசிய மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்களா பாலு மனதை நாம் சரியாக வைத்துக்கொண்டால் எந்த பெண்ணையும் யாரும் தொந்தரவு செய்ய முடியாது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் சேரன்குளம் அரசு பள்ளி மாணவர் மாணவிகளின் சிலம்பம், வாள்வீச்சு, கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன்குலம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாணவ மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    • சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.
    • ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள், 40 பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கு மைதானத்தில் 41-வது மாவட்ட சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது . 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியை நேற்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். மாவட்ட சிலம்பா ட்ட கழகம் தலைவர் புனிதா கணேசன், செயலாளர் ஜலேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 560 பேர் கலந்து கொண்டனர். போட்டி யானது ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கு தனித்தனியாக நடைபெற்றது. சப் -ஜூனியர், ஜூனியர், சீனியர், யூத் ஆகிய நான்கு பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.

    இன்று 2-வது நாளாக சிலம்பாட்ட போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து மாலை வரை போட்டி நடைபெறும். முடிவில் ஒவ்வொரு பிரிவுகளிலும் தலா 10 பேர் என 40 ஆண்கள் , 40 பெண்கள் தேர்வு செய்யப்படஉள்ளனர். தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வர்.

    முன்னதாக ஆணையர் சரவணகுமார் சாதனையை பாராட்டி சிலம்பாட்ட கழகம் சார்பில் வரலாற்று பதிவு பட்டயம் வழங்கப்பட்டது.

    • 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.
    • விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சைமாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை தேடும் பெண்களுக்காக ஓசூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்கு பெண் பணியாளர்களை தேர்வு செய்யும் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகர்ப்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இந்த முகாமில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், பட்டப்படிப்பு, டிப்ளமோ முடிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.

    இவர்கள் 18 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

    நாளை காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்பவர்களுக்கு தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நேர்காணல் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 8110919990, 9442557037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×