search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோபியா"

    ஆராய்ச்சி மாணவி சோபியா வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆராய்ச்சி மாணவி சோபியா, “தமிழிசை இந்த விமானத்தில் வருகிறார் நான் சத்தம் போடப்போகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுவிட்டு சத்தம் போட்டுள்ளார். திட்டமிட்டு செய்பவர்களுக்கு எப்படி அறிவுரை கூறமுடியும். எனினும் நான் அறிவுரை கூறத்தான் அவரை அழைத்தேன். ஆனால், அதற்கு அடங்காமல் அவர் சத்தம் போட்டார். அதனால் நான் புகார் தெரிவித்துவிட்டு சென்றுவிட்டேன்.

    பின்னர் அவர்கள் மற்றொரு புகாரை தெரிவித்து இருக்கிறார்கள். அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த நான்(சோபியா) என்று குறிப்பிட்டு இருக்கிறார். எதற்கு என்று ஒரு தொலைக்காட்சி கேட்டதற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் பேரை இணைப்பதற்காகத் தான் குற்றாலம் சென்றோம். அதனால் நாங்கள் அதை பதிவு செய்கிறோம் என்கிறார்கள். எந்த அளவுக்கு உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது. எனவே இதை சட்டப்படி எதிர்கொள்வேன். அதில் எனக்கு எந்த பயமும் இல்லை.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கின் தீர்ப்பில் டி.டி.வி.தினகரனும், தி.மு.க.வினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக பேச ராகுல்காந்திக்கு தகுதி இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆர்ப்பாட்டத்தையே நடத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முடியாது என்று கூறுகிறார். ஆனால், அவர்கள் கட்சியினரால் கோஷ்டி பூசல் இன்றி சும்மா இருக்க முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #Sophia 
    நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று மாணவி சோபியா மற்றும் அவருடைய தந்தை ஆஜராகினர். #Sophia
    நெல்லை:

    தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த கனடா ஆராய்ச்சி மாணவி சோபியா கடந்த 3-ந் தேதி விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார். அப்போது விமானத்தில் வைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக சோபியா கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் சோபியாவின் தந்தை டாக்டர் சாமி மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘பா.ஜ.க. கட்சியினர் அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பலமணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும்’ கூறியிருந்தார்.

    இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட ஆணையம் நெல்லையில் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகும் படி மாணவி சோபியா மற்றும் அவரது தந்தை சாமி, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன் பேரில் மாணவி சோபியா, அவரது தந்தை டாக்டர் சாமி ஆகியோர் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும் அவர்கள் தங்கள் தரப்பு வாதங்களை மனுக்களாகவும் தாக்கல் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் திருமால் இன்று காலை ஆஜராகவில்லை. மாணவி சோபியா தனது தந்தையுடன் ஆஜராக வந்ததால் அரசு சுற்றுலா மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    வள்ளியூர் பகுதியில் ஏராளமான கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பத்திரிகைகளில் சுட்டிக் காட்டப்பட்டது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.

    இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும், ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தில் விசாரணை நடந்து பல்வேறு வழக்குகளில் கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்யாததால் இது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அவர்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், போலீஸ் கமி‌ஷனருக்கு பதிலாக துணை கமி‌ஷனர் சுகுணா சிங் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் பழைய வழக்குகளின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்வதாக கூறினர்.

    மேலும் வள்ளியூர் பகுதியில் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினர். #Sophia
    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    பெங்களூரு:

    பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை கடந்த 31-ந் தேதி முடிவடைந்தது. கோர்ட்டு தினமும் பல வழக்குகளை சந்திக்கிறது. இதனால் தீர்ப்பு எப்போது வரும் என்பதை கூற முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட வழக்கின் தீர்ப்பை கூற வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை. இதை கூற யாருக்கும் அதிகாரமும் இல்லை.

    இருப்பினும் 3-வது நீதிபதி வழங்கும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    சசிகலாவுக்கு பெங்களூருவில் நிலவும் சீதோஷ்ண மாற்றம் தொடர்பான சில பாதிப்புகள் இருந்தன. தற்போது அவர் நலமாக உள்ளார். அவருடைய உடல்நலம் குறித்த தகவல்கள் தவறானவை.

    சிறையில் சசிகலா கன்னடம் மற்றும் இந்தி மொழிகளை கற்பது பற்றி நான் எதுவும் அவரிடம் கேட்கவில்லை.


    தூத்துக்குடியில் தூயக்காற்று, குடிநீர் இல்லை என்று கூறி போராடிய பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் யாரும் தீவிரவாதிகள் கிடையாது. இதனால் உணர்ச்சி வசப்பட்டு குரல் எழுப்பிய சோபியாவை கைது செய்ய காட்டிய வேகத்தை எச்.ராஜா விவகாரத்தில் தமிழக போலீசார் காட்டவில்லை. ஏனென்றால் தமிழகத்தில் அடிமை அரசு உள்ளது.


    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது தவறான முடிவு. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும்.

    சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு செலவாகும் ரூ. 10 ஆயிரம் கோடியை கொண்டு மாநில சாலைகளை சீர்செய்யலாம். கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை சேமிப்பதற்கு திட்டங்கள் தீட்டலாம். அத்துடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற செலவிடலாம். தொழிற்சாலைகள் கொண்டு வருவதாக கூறி புதிய திட்டங்களை கொண்டு வந்தால் தமிழகம் சோமாலியாவாக மாறும். ஒவ்வொரு பொழுதும் இன்று என்ன திட்டத்தை அறிவிக்க உள்ளார்கள் என்ற அச்சத்தோடு தான் விடிகிறது.

    தமிழக மக்கள் இயற்கையிலேயே அமைதியானவர்கள். இதனால் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க போலீசார் எந்த நடவடிக்கை யும் எடுக்க வில்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல் துறையினரால் தான் பிரச்சினைகள் உருவாகிறது. ஸ்டெர்லைட் போன்ற சம்பவங்கள் இதற்கு உதாரணம். இதில் உளவுத்துறை முற்றிலுமாக செயல் இழந்துள்ளது. இந்தியாவில் எங்கேயும் கேள்விப்படாத வகையில் குட்கா முறைகேடு விவகாரத்தில் காவல் துறை தலைவர் (டி.ஜி.பி.) வீட்டிலேயே சோதனை நடைபெற்றது. இவை அனைத்தும் தவறான நிகழ்வாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளராக தம்பிதுறை களமிறங்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த 2 மாதங்களாக வருகிற பாராளுமன்ற தேர்தலை நோக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

    எங்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வயது ஒரு தடை இல்லை.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். அடுத்த மாதம் (அக்டோபர்) 30-ந் தேதிக்குள் இந்த உறுப்பினர்கள் எண்ணிக் கையை எட்டி விடுவோம்.

    வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்திலும், 10-ந் தேதி திருவாரூரிலும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதன் மூலம் சமூக நீதி பாதுகாக்கப்பட்டது. 34 ஆண்டுகளாக பிற்படுத்தப் பட்ட சமூகத்தினர் படித்து நல்ல நிலையை அடைந்து வருகின்றனர்.

    கல்லூரியில் படித்து மருத்துவர்களான பலர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதை ஒடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறுக்கு வழியில் “நீட்” என்ற ஆயுதத்தை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது.

    தமிழகத்தில் நர்சிங் படிப்புக்கு “நீட்” தேர்வு தேவையற்றது.

    ஆர்.பி. உதய்குமார், பாண்டிய ராஜன் ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக ஏதேதோ பேசுவார்கள். இவர்களின் பேச்சுக்கு மக்களிடம் மரியாதை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #18mlas #sasikala #hraja #tngovt

    பா.ஜனதா கட்சியினர் மற்றும் போலீசார் மீது புகார் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சோபியாவின் தந்தை சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #sophiaantipolis #BJP

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்தவர் டாக்டர் சாமி. இவருடைய மகள் சோபியா கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த 3-ந் தேதி தனது பெற்றோருடன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வந்தார்.

    அப்போது விமானத்தில் வைத்து பா.ஜனதாவுக்கு எதிராக சோபியா கோ‌ஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சோபியாவுக்கும், தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் இடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சோபியாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் தனது மகள் மீது வழக்கு பதிந்த போலீசார், தான் கொடுத்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை சாமி குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சோபியாவின் தந்தை சாமி, மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

     


    அதில் சோபியாவை பா.ஜனதா கட்சியினர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், போலீசார் பல மணி நேரம் விசாரணை என்ற பெயரில் போலீஸ் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகார் மனுவை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

    இதைத்தொடர்ந்து வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நெல்லை அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாணவி சோபியாவின் தந்தை சாமிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்பேரில் சாமி, அவருடைய மகள் சோபியா ஆகிய இருவரும் மாநில மனித உரிமை ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க இருப்பதாக, அவர்களின் வக்கீல் ஒருவர் தெரிவித்தார். #sophiaantipolis

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.

    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.
    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும் என மாணவி சோபியாவுக்கு ஆதரவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    புதுச்சேரி:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.

    அதே விமானத்தில் பயணம் செய்த கனடா நாட்டில் பயிலும் முனைவர் பட்ட மாணவி சோபியா பாரதிய ஜனதாவை விமர்சித்து முழக்கமிட்டார். இதுபற்றி விமானம் இறங்கிய பின்னர் அந்த மாணவியிடம் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டார்.

    இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவி சோபியா மீது தமிழிசை சவுந்தரராஜன் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் மாணவி சோபியாவை கைது செய்தனர். கோர்ட்டு அவரை விடுவித்தது.


    மாணவி சோபியாவுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் சோபியா மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சகிப்பு தன்மை வேண்டும். மக்களின் குரலை ஒடுக்க கூடாது. இது ஜனநாயகம் இல்லை. அது சர்வாதிகாரமாகி விடும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார். #Sophia #Narayanasamy
    பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியா கைது செய்யப்பட்டது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் விமர்சனம் செய்துள்ளார். #Sophia #Kamal
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் பயணம் செய்தபோது அவரைப் பார்த்து, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட தூத்துக்குடி பெண் சோபியாவை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சோபியாவை பின்புலத்தில் இருந்து யாரோ இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.



    இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள கருத்து வருமாறு:-

    பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள்  ஏன் வெளியே திரிகிறார்கள்? நானும் அரசியல்வாதிதான்  என்பதை உணர்ந்தே சொல்கிறேன்.

    இவ்வாறு கமல் கூறியுள்ளார். #Sophia #Kamal
    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து இருக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார். #Sophia #TamilisaiSoundararajan
    கோவை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கோவையில் உள்ள மாவட்ட கட்சி அலுலவகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் உரிமையை சூயஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை கண்டித்து வருகிற 18-ந் தேதி சி.ஐ.டி.யூ., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கர், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது.

    இதனை மார்க்சிஸ்டு ஆதரிக்கிறது. கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சனையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத்தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.

    புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக என்.டி.சி. மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.


    தூத்துக்குடி ஆராய்ச்சி மாணவி சோபிகா தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய விவகாரத் தில் பழி வாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை புகார் அளித்துள்ளார். இது தமிழிசைக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.

    இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின் பேரில் மாணவி மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது போல் தமிழிசை மீது மாணவி தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sophia  #TamilisaiSoundararajan
    தூத்துக்குடி மாணவி சோபியா மீது புகார் கூறிய பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #TamilisaiSoundararajan #Sophia
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள். நானும் சொல்கின்றேன். பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக.



    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    தமிழிசையின் புகார் மீது அரசு அவசரம் அவசரமாக நடவடிக்கை எடுத்து, ஆராய்ச்சி படிப்பு முடித்து நாடு திரும்பும் ஓர் இளம்பெண்ணை இரவோடு இரவாக சிறையில் தள்ளி தங்கள் விசுவாசத்தை காட்டியிருக்கிறது.

    ஆனால், தமிழிசையின் தூண்டுதலின் பேரில் பா.ஜனதாவினர் தனது மகளை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினார்கள், தனது மகள், மனைவி மற்றும் தனக்கு தமிழிசையே அத்தனைபேர் மத்தியிலும் கொலை மிரட்டல் விடுத்தார் என்று அவரது தந்தை கொடுத்த புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:-



    பா.ஜ.க.வை எதிர்த்து முழக்கமிட்ட ஒரே காரணத்தினால் மாணவி சோபியா கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த நாடு காலம் காலமாய் அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக கொண்டிருக்கிற கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்டு இருக்கிற கொடும் தாக்குதலாக கருதுகிறேன்.

    முழக்கமிட்டால் கைதா? நடப்பது மக்களாட்சியா? மன்னராட்சியா? இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? என்று கேள்வி எழுகிறது. சகிப்புத்தன்மையற்று, எதிர் கருத்து எதுவும் தோன்றி விடக் கூடாது என்பதான ஏதேச்சதிகார உளவியல் என்பது பாஜக கட்சியின் அடிப்படை குணாதிசயங்களாக மாறி இருக்கின்றன என்பதற்கு இந்த கைது நடவடிக்கை ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இயக்குனர் பாரதிராஜா தனது குரலிலேயே பேசி ஒரு ஆடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘‘நீங்கள் தமிழக பி.ஜே.பியில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள். நாங்களெல்லாம், தேசிய சிந்தனையுடைய இலக்கிய வாதி குமரி அனந்தனின் மகள் என்பதிலும், ஒரு தமிழச்சி என்ற வகையிலும் இதற்காகப் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

    பொது வாழ்வில் ஈடுபடும்போது எதையும் நீங்கள் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் தகுதிக்கு அவரை அழைத்து உங்கள் பக்க நியாயங்களைக் கூறி சமாதானப்படுத்தி விளக்கம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா?

    அதை விடுத்து அந்த வீரமுள்ள தமிழச்சி மீது புகார் கொடுத்து அவளைக் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும் என்பது எவ்வளவு அநாகரிகமான வி‌ஷயம். உங்களை நான் குமரி அனந்தனின் பெண்ணாக நினைக்க முடியவில்லை.

    அந்தப் பெண்ணைப் பற்றி முறையிட்ட வழக்கை வாபஸ் பெற்றுவிட வேண்டும் இல்லையென்றால் வரலாறு உங்களை மன்னிக்காது” என்று பேசியுள்ளார். #TamilisaiSoundararajan #Sophia
    விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையைப் பார்த்து சோபியா முழக்கமிட்டது தவறு என்றும், இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #Shphia #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். அவரைப் பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.



    இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். தமிழிசை சவுந்தரராஜனின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். சிலர் மட்டுமே சோபியாவின் செயலை கண்டித்தனர்.



    இந்த சம்பவம் குறித்து தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராடலாம். ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை யாரும் எதிர்க்கப்போவதில்லை. அதே நேரத்தில் எல்லாவற்றிற்கும் இடம், பொருள், ஏவல் ஒன்று உள்ளது. விமானத்திலோ விமான நிலையத்திலோ ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது.

    கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால், விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? விளம்பரத்திற்காக இதுபோன்று சிலர் கோஷமிடுகின்றனர். இப்படி கோஷமிடுவதை அனுமதித்தால், விமான நிலையத்திற்கு செல்லும் தலைவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேடை அமைத்து தங்கள் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Shphia #MinisterJayakumar
    தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட சோபியா கைது செய்யப்பட்டதையடுத்து, அவர் பெயர் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது. #BJP #TamilisaiSoundararajan #Sophia #சோபியா
    சென்னை:

    தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் நேற்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண், பாசிச பாஜக ஆட்சி ஒழிக என கோஷமிட்டார். இதையடுத்து, தமிழிசைக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சோபியா தனது பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென தமிழிசை வலியுறுத்தினார். ஆனால் சோபியா மறுத்துவிட்டார்.



    இதையடுத்து தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் சோபியாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சோபியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கைது நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

    பாசிச பாஜக_ஆட்சி ஒழிக, சோபியா, பாசிச பாஜக ஒழிக ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகளில் பாஜகவுக்கு எதிராக ஏராளமானோர் டுவிட் செய்துள்ளனர். சோபியாவை அவசர அவசரமாக கைது செய்த போலீசார்,  பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி.சேகரை நீதிமன்றம் உத்தரவிட்டும் கைது செய்யாதது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் சோபியாவுக்குப் பின்னால் யாரோ இருந்து இயக்குவதாக பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர். #BJP #TamilisaiSoundararajan #Sophia #சோபியா
    ×