என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
- ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
- இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
அதில், சசெக்ஸ் - லீசெஸ்டர்ஷையர் அணிகள் மோதின. அப்போட்டியில் , லீசெஸ்டர்ஷையர் வீரர் லூயிஸ் கிம்பர், ஆலி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரி, ஒரு சிங்கிள் உடன் 43 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.
ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டாவதாக இறங்கிய 27 வயதான கிம்பர் 62 பந்துகளில் தனது இரண்டாவது கவுண்டி சாம்பியன்ஷிப் சதத்தை எட்டினார். 18 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 191 ரன்கள் எடுத்துள்ளார்.
இதன்மூலம் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்தார்.
இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.
2 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக ஒரு ஓவரில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
- இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
டிரினிடாட்:
டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அசாதாரண திறமையை வெளிப்படுத்த வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பால் காலிங்வுட் தெரிவித்தார். இதுதொடர்பாக காலிங்வுட் கூறியதாவது:
இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதிலும் பும்ரா முழுமையான ஃபார்மில் உள்ளார்.
வேகம், துல்லியம் மற்றும் உயர்மட்ட செயல்திறனை பும்ரா வெளிப்படுத்தி வருகிறார். எந்த அணியும் அவரது செயல்பாட்டுக்கு விடைதர முடியாத வகையில் விளையாடி வருகிறார்.
இன்னிங்சில் 120 பந்துகள் மட்டுமே கொண்ட போட்டியில் பும்ரா மாதிரியான வீரர்கள் வீசும் அந்த 24 பந்துகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றன.
சவாலான, கடினமான அமெரிக்க ஆடுகளத்தில் இந்திய அணி நன்றாக விளையாடியதைப் பார்க்க முடிந்தது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி கேப்டன் ரோகித் சர்மா தனது திறமையை நிரூபித்துள்ளார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது இந்த முறை இந்தியாவை வீழ்த்த இங்கிலாந்து அணி அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
- இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
டி20 உலகக் கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது, இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
அதே நாளில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து போட்டி நடைபெறும் கயானா மைதானத்தில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்ய 88% வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள 2வது அரையிறுதி போட்டியில், மழை குறுக்கிட்டு ஆட்டம் முழுவதுமாக தடைப்பட்டு ரத்தானால் புள்ளிப் பட்டியலில் முதலாவதாக இருக்கும் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்போட்டிக்கு ரிசர்வ் டே இல்லாததால் இந்த விதி கடைப்பிடிக்கப்படுகிறது.
- மகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததை பார்த்து அவரது தாய் வேதனை அடைந்தார்.
- பல இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் பலன் அளிக்கவில்லை.
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள சோமட்செட்டில் வசித்து வருபவர் ஜஸ்டின். இவரது மகன் ஓரான் நோல்சன் ( வயது 13). 3 வயதில் இருந்து இவர் தீராத கை,கால் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் தினமும் தாங்க முடியாத வேதனையை அனுபவித்து வந்தார்.
இதன் காரணமாக அடிக்கடி சுய நினைவு இல்லாமல் சென்று விடுவார். மூச்சு விடவும் சிரமப்பட்டார். எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்பதால் இரவு தூங்கும் போதும் யாராவது ஒருவர் ஓரானை அருகில் இருந்து கண்காணித்தபடி இருக்க வேண்டும். மகன் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்ததை பார்த்து அவரது தாய் வேதனை அடைந்தார்.
பல இடங்களில் அவருக்கு சிகிச்சை அளித்த போதும் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் ஸ்ட்ரீட் மருத்துவ மனையில் ஓரான் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் குழுவினர் அறுவை சிசிச்சை செய்து நியூரோ ஸ்டிமுலேட்டர் என்ற வலியை குறைக்கும் புதிய சாதனத்தை பொருத்த முடிவு செய்தனர்.
கடந்த அக்டோபர் மாதம் சிறுவன் ஓரானுக்கு டாக்டர் குழுவினர் மிகவும் சவாலான இந்த ஆபரேஷனை மேற்கொண்டனர். இந்த ஆபரஷேன் மூலம் 3.5 சென்டிமீட்டர் சதுரமும், 0.6 செ.மீ. தடிமனும் கொண்ட புதிய சாதனத்தை மண்டை ஓட்டில் பொருத்தினார்கள். சிறுவனின் மண்டை ஓட்டில் உள்ள ஒரு இடைவெளியில் ஒரு எலும்பு அகற்றப்பட்டு இந்த சாதனம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சுமார் 8 மணி நேரம் இந்த ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது. இந்த சாதனம் மூளையுடன் தொடர்பில் இருந்து வலியை குறைக்கும் வகையில் இயங்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
உலகில் முதல் முறையாக இந்த ஆபரேஷனை செய்து லண்டன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது சிறுவன் ஓரான் நன்றாக குணம் அடைந்து வலி குறைந்து மகிழ்ச்சியாக இருந்து வருவதாக அவரது தாய் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது 6 மாதங்களுக்கு முன்பு என் மகனுக்கு இப்படி ஒரு மாற்றம் வரும் என நான் கனவில் கூட நினைக்க வில்லை.
புதிய சாதனம் மூலம் என் மகன் மிக மகிழ்ச்சியாக இருக்கிறான். எல்லோரிடமும் அரட்டை அடித்து வருகிறான். இனிமேல் எங்களுக்கு கவலை இல்லை. அவனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
- நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
- க்ரிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் முறையே 12 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹர்மீத் சிங் 21 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய க்ரிஸ் ஜோர்டான் 2.5 ஓவர்களில் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இவர் தவிர சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டோப்லெ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.
எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 117 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய அமெரிக்கா 115 ரன்களில் சுருண்டது.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் பார்படாசில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்த் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 18.5 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் குமார் 30 ரன்னும், கோரி ஆண்டர்சன் 29 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.
- இங்கிலாந்து அணியில் புரூக் அரை சதம் விளாசினார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டி காக் 56 ரன்களும் மில்லர் 43 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர்- சால்ட் களமிறங்குகினர். சால்ட் 11, பட்லர் 17, பேர்ஸ்டோவ் 16, மொயின் அலி 9 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்நிலையில் புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை உயர்த்தினர். புரூக் நிதானமாக விளையாட லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாடினார். அவர் 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து புரூக் அரை சதம் விளாசினார். கடைசி ஓவரில் இங்கிலாந்துக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது.
அந்த ஓவரை நோர்க்யா சிறப்பாக விசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ரபாடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 163 ரன்களை எடுத்தது.
- டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் குவித்தார்.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினர். டி காக் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் அவுட்டானார். டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கிளாசன் 8 ரன்னிலும், மார்கிரம் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
- ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் குரூப் 'சி' பிரிவில் உள்ள டென்மார்க் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் டென்மார்க் அணி வீரர் மோர்டன் ஹூல்மண்ட் ஒரு கோல் அடித்தார்.
இதனால் ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் கடைசி வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக ஒரு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
- இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:-
இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-
478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)
423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)
422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)
420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)
390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)
இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)
32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்
26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து
25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா
24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா
இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-
116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014
101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021
99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012
87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024
86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022
- நிக்கோலஸ் பூரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- பில் சால்ட் 87 ரன்களை விளாசினார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.
இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.
பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
அதன்படி, இன்று வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரூதர்போர்டு சில பவுண்டரிகள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்