search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • ஹூண்டாய் நிறுவனம் முற்றிலும் புதிய வெர்னா மாடலை நாளை அறிமுகம் செய்கிறது.
    • புதிய தலைமுறை வெர்னா மாடல் சர்வதேச வெளியீடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது.

    ஹூண்டாய மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆறாம் தலைமுறை வெர்னா மாடல் டிசைன் ரெண்டர்களை வெளியிட்டு உள்ளது. புதிய வெர்னா மாடலின் சர்வதேச வெளியீடு இந்தியாவில் நாளை (மார்ச் 21) நடைபெற இருக்கிறது. புதிய செடான் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

    டிசைன் ஸ்கெட்ச்களை வைத்து பார்க்கும் போது 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் பெரிய கிரில், ஆங்குலர் வி வடிவ இன்சர்ட்கள், எல்இடி டிஆர்எல்கள், பொனெட் முழுக்க எல்இடி லைட் பார், புதிய பம்ப்பரில் முக்கோண வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன.

    இத்துடன் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், சி பில்லரில் க்ரோம் இன்சர்ட், பூட்-லிப் ஸ்பாயிலர், இன்வர்டெட் எல் வடிவ எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் ரியர் பம்ப்பர் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் நான்கு வேரியண்ட்கள், ஒன்பது வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. புதிய வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

    "முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் டிசைன் ரெண்டர்களை வெளியிடுவதில் இன்று, நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்கால மற்றும் முரட்டுத்தனமான செடான் மாடலை அறிமுகம் செய்வதன் மூலம், நாங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தி, இந்த பிரிவை வாடிக்கையாளர்கள் விரும்ப செய்ய நினைக்கிறோம்."

    "அசத்தலான அளவீடுகள் மற்றும் பாராமெட்ரிக் மொடிஃப்களின் மூலம் முற்றிலும் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் எதிர்கால அனுபவங்களுக்கு புதிய அத்தியாயத்தை உருவாக்கும்," என ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அன்சூ கிம் தெரிவித்தார். 

    • ஹோண்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.
    • புதிய ஹோண்டா எஸ்யுவி மாடல் கியா செல்டோஸ், கிராண்ட் விட்டாரா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் கடந்த மாதம் தனது புதிய எஸ்யுவி மாடலுக்கான டீசர்களை வெளியிட்டு இருந்தது. புதிய எஸ்யுவி மாடல் இந்த ஆண்டு கோடை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என ஹோண்டா நிறுவனம் அறிவித்து இருக்கிறது. பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில் ஹோண்டா மீண்டும் களமிறங்குவது பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகின்றன.

    தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை மட்டும் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் WRV மாடலின் விற்பனை இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட இருக்கிறது.

     

    முன்னதாக ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் CRV மற்றும் BRV மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து இருக்கிறது. அந்த வகையில் ஹோண்டா தற்போது இரண்டு புதிய எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இவை அமேஸ் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

    புதிய சப்-காம்பேக்ட் யுவி மாடல் PF-2 என்றும் மற்றொரு காம்பேக்ட் யுவி மாடல் PF2S என்றும் குறியீட்டு பெயர்களை கொண்டுள்ளன. சிறிய காரில் அமேஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இரு கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், புதிய ஹோண்டா எஸ்யுவி மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களில் உள்ள எஸ்யுவி மாடலில் மல்டி-ஸ்போக் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட வீல் ஆர்ச்கள், முன்புறம் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய எஸ்யுவி-இல் மெஷ்-டைப் லோயர் கிரில், சன்ரூஃப் இடம்பெற்று இருக்கிறது.

    Photo Courtesy: AutoCarIndia

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 75).

    இவர் சம்பவத்தன்றுஇரவு கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்கன்னியாகுமரி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடல்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்யப்பட் டது. இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது கார்களின் ரெட் டார்க் எடிஷனை அறிமுகம் செய்கிறது.
    • புதிய ரெட் டார்க் எடிஷன் மாடல்களில் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களின் ரெட் டார்க் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் புதிய கார்களின் டீசரை வெளியிட்டு உள்ளது. வரும் வாரங்களில் புதிய ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    டாடா நெக்சான், சஃபாரி மற்றும் ஹேரியர் ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் இதே கார்களின் டார்க் எடிஷனை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த கார்களில் முழுக்க முழுக்க ரெட் ஹைலைட்கள் செய்யப்பட்டு இருக்கும். புதிய கார்களில் சஃபாரி மற்றும் ஹேரியர் ரெட் டார்க் எடிஷன் மாடல்கள் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

    ஒபெரான் பிளாக் நிறத்தில் கிடைக்கும் புதிய கார்களில் ரெட் பிரேக் கேலிப்பர்கள், முன்புற கிரில் பகுதியில் காண்டிராஸ்ட் நிற ஹைலைட்கள் செய்யப்படுகின்றன. இவைதவிர அலாய் வீல்கள் பிளாக்-ஸ்டோன் ஃபினிஷ் மற்றும் முன்புற ஃபெண்டர்களில் டார்க் பேட்ஜ் மற்றும் சிவப்பு நிற டிடெயிலிங் செய்யப்படுகிறது. காரின் கேபின் பகுதியில் ரெட் தீம் செய்யப்பட்டு இருக்கும்.

    இந்த எடிஷன்களில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. சஃபாரி மற்றும் ஹேரியர் ஸ்பெஷல் எடிஷன் மாடல்களில் ADAS அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    டாடா நெக்சான் மாடலும் ரெட் டார்க் எடிஷனாக அறிமுகம் செய்யப்படுகிறது. இதில் அட்லஸ் பிளாக் பெயிண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் 16 இன்ச் அலாய் வீல்கள் சார்கோல் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. நெக்சான் ரெட் டார்க் மாடலில் ADAS அம்சங்கள் வழங்கப்படாது என்றே தெரிகிறது.

    • மினி நிறுவனத்தின் புதிய லிமிடெட் எடிஷன் கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய லிமிடெட் எடிஷன் கார் அதன் 3-டோர் ஹேச்பேக் மாடலை விட வித்தியாசமான ஸ்டைலிங் கொண்டுள்ளது.

    மினி கூப்பர் SE எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை தொடர்ந்து கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. ஐரோப்பாவில் அறிமுகமாகி இருக்கும் புதிய கூப்பர் மாடல் லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். இந்த கார் மொத்தத்தில் 999 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை கூப்பர் SE கன்வெர்டிபில் மாடல் அதன் 3-டோர் ஹேச்பேக் மாடலை விட வித்தியாசமாக உள்ளது. புதிய லிமிடெட் எடிஷன் மாடலின் ஃபோல்டிங் ஃபேப்ரிக் ரூஃப் தனித்துவமாக காட்சியளிக்கிறது. இவை தவிர கூப்பர் SE அதன் எலெக்ட்ரிக் மாடல் டிசைனிங் கொண்டிருக்கிறது. இந்த காரின் பின்புறம் E பேட்ஜ் உள்ளது. இத்துடன் பிரத்யேக வீல் டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த கன்வெர்டிபில் மாடலின் ஃபெண்டரிலும் பேட்ஜிங் உள்ளது. கார் கதவின் சில் கார்டுகளிலும் நம்பர் இடம்பெற்று இருக்கிறது. கன்வெர்டிபில் மாடலின் டோர் ஹேண்டில், ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் உள்ளிட்டவைகளில் பிரான்ஸ் டிடெயிலிங் செய்யப்பட்டுள்ளது. மினி லோகோ மற்றும் லெட்டரிங் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது.

    கேபின் டிசைனிலும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் லெதர் இருக்கை மேற்கவர்கள் மற்றும் முன்புறம் ஹீடெட் சீட்கள் ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்படுகின்றன. இத்துடன் ஆம்பியண்ட் லைட்டிங், ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பவர்டிரெயினை பொருத்தவரை கூப்பர் SE கன்வெர்டிபில் மாடலில் 180 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 201 கிலோமீட்டர் வரை செல்லும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.2 நொடிகளில் எட்டிவிடும். இந்தியாவுக்கு லிமிடெட் எடிஷன் மாடலில் சில யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. 

    • ஹூண்டாய் நிறுவனம் 2023 வெர்னா மாடலுக்கான முன்பதிவை சில தினங்களுக்கு முன் துவங்கியது.
    • 2023 ஹூண்டாய் வெர்னா மாடலில் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் 2023 வெர்னா மாடலுக்கான டீசரை வெளியிட்டது. தற்போது புதிய ஹூண்டாய் வெர்னா மாடலின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இந்திய சந்தையில் மார்ச் 21 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

    ஏற்கனவே இந்த காருக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வெர்னா காரை வாங்க விரும்புவோர் அருகாமையில் உள்ள ஹூண்டாய் விற்பனையகம் அல்லது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

     

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX மற்றும் SX (O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா கார் ஏழு மோனோடோன் மற்றும் இருவித டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் இருவித பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 1.5 லிட்டர் டர்போ GDi பெட்ரோல் என்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் வழங்கப்படுகிறது.

    இதுதவிர 1.5 MPi பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 6MT மற்றும் இண்டெலிஜண்ட் வேரியபில் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இரண்டு என்ஜின்களும் RDE விதிகளுக்கு உட்பட்டு E20 எரிபொருளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மாடல்களுக்கு போட்டியாக அமைய இருக்கிறது.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை மாற்றியமைக்கிறது.
    • எம்ஜி கார்களின் புதிய விலை எப்போது மாற்றப்பட வேண்டும் என்ற தகவல் விற்பனை மையங்களுக்கு கொடுக்கப்பட்டது.

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆண்டு துவக்கத்தில் தங்களின் வாகன விலையை உயர்த்துவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தின. தற்போது கடுமையான RDE விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்தியாவில் மீண்டும் வாகனங்கள் விலை உயரும் சூழல் உருவாகி இருக்கிறது.

    ஜனவரி மாத விலை உயர்வை அடுத்து எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அதன்படி இந்தியாவில் எம்ஜி கார்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை ஏற்கனவே கார்களை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

     

    விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மாடல் தற்போது ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்கிறது. இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த எஸ்யுவி வாகனங்கள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு டீசல் மாடல் ஆகும். ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்தது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை ரூ. 60 ஆயிரமும், எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 30 ஆயிரமும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 40 ஆயிரம் உயர்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே எம்ஜி கார்களின் புதிய விலை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    • 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
    • சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    பெங்களூரு:

    பெங்களூரு கஸ்தூரி நகரில் தனியாருக்கு சொந்தமான கார் பழுது பார்க்கும் மையம் உள்ளது.

    சந்த் பாஷா மற்றும் தபேராஸ் பாஷா ஆகியோருக்கு சொந்தமான இந்த மையத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ பற்றி எரிந்தது. மளமள என எரிந்த தீ அந்த மையம் முழுவதும் பரவியது.

    இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த விபத்தில் கார் ஷெட்டில் நின்ற ஏராளமான கார்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    ஊழியர் ஒருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே இதுபற்றி தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான 14 கார்கள் எரிந்து சேதம் அடைந்தன. தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் காயம் அடைந்த ஊழியர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஏற்கனவே கடந்த வாரம் பெங்களூரு மட்டிகெரே அருகே உள்ள தேவனாரப்பள்ளியில் உள்ள கார் கேரேஜில் தீ விபத்து ஏற்பட்டு 3 பழைய கார்கள் எரிந்து நாசமானது என்பது குறிபிடத்தக்கது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய i20 மாடல் வரும் வாரங்களில் அறிமுகமாகும் என தெரிகிறது.
    • தற்போது விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் i20 காரின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் விரைவில் நீக்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் புதிய பிஎஸ்6 2 மற்றும் RDE புகை விதிகளுக்கு பொருந்தும் வென்யூ, கிரெட்டா மற்றும் அல்கசார் மாடல்களை தொடர்ந்து விரைவில் புதிய i20 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதன் படி புதிய ஹூண்டாய் i20 மாடலில் பிஎஸ்6 2 மற்றும் RDE விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது.

    இதுகுறித்து தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூண்டாய் i20 மாடல் மேம்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின்கள் 82 ஹெச்பி பவர் மற்றும் 118 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன.

     

    இவற்றில் 1.2 என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 1.0 லிட்டர் என்ஜினுடன் DCT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய ஹூண்டாய் i20 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் விரைவில் நிறுத்தப்படும் என தெரிகிறது. இதே போன்ற அப்டேட் i20 N லைன் மாடலிலும் மேற்கொள்ளப்படலாம்.

    புதிய பிஎஸ்6 2 மாற்றங்களின் படி ஹூண்டாய் i20 விலை ரூ. 10 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை அதிகரிக்கப்படலாம். இத்துடன் புதிய கார் அம்சங்களிலும் ஹூண்டாய் நிறுவனம் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் என தெரிகிறது. இத்துடன் அனைத்து வேரியண்ட்களிலும் அதிகளவு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய சியாஸ் மாடல் ESP மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் வசதிகளை கொண்டுள்ளது.
    • மாருதி சியாஸ் மாடல் மூன்று டூயல் டோன் நிறங்கள், மேனுவல், ஆட்டோமேடிக் வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது சியாஸ் செடான் மாடலின் டூயல் டோன் வெர்ஷன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாருதி சியாஸ் விலை ரூ. 11 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய நிறங்கள் மட்டுமின்றி சியாஸ் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய மாருதி சுசுகி சியாஸ் மாடலை வாங்குவோர் தற்போது மூன்று டூயல் டோன் நிற ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இவைதவிர மாருதி சியாஸ் மாடல் ஏழு மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில்- பியல் மெட்டாலிக் ஒபுலண்ட் ரெட் மற்றும் பிளாக் ரூஃப், பியல் மெட்டாலிக் கிராண்டியர்கிரே மற்றும் பிளாக் ரூஃப், டிக்னிட்டி பிரவுன் மற்றும் பிளாக் ரூஃப் உள்ளிட்டவை அடங்கும்.

     

    அம்சங்களை பொருத்தவரை மேம்பட்ட சியாஸ் மாடலில் ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி ப்ரோகிராம் (ESP) உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மாருதி சுசுகி சியாஸ் மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் வெர்ஷன்கள் முறையே லிட்டருக்கு 20.46 கிலோமீட்டர் மற்றும் 20.04 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகின்றன. 

    • மஹிந்திரா நிறுவனம் புதிதாக 9 சீட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புதிய 9 சீட்டர் கார் மஹிந்திரா நிறுவனத்தின் TUV300 பிளஸ் காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

    மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது பொலிரோ நியோ எஸ்யுவி மாடலை 2021 வாக்கில் அறிமுகம் செய்தது. இந்த கார் மஹிந்திரா ஏற்கனவே விற்பனை செய்து வந்த TUV300 காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த நிலையில், மஹிந்திரா பொலிரோ பிளஸ் 9 சீட்டர் எஸ்யுவி மாடல் சாலைகளில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்கள் பொலிரோ நியோ பிளஸ் மாடல் கடுமையான போக்குவரத்து நெரிசலில் செல்லும் போது எடுக்கப்பட்டு இருக்கிறது. காரின் டெயில்கேட்டில் பொலிரோ பெயர் மறைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்பை காரில் மஹிந்திரா லோகோவும் மறைக்கப்பட்டே இருக்கிறது. அதன்படி இந்த காரிலும் மஹிந்திராவின் புதிய டுவின் பீக் லோகோ வழங்கப்படும் என தெரிகிறது.

     

    தற்போதைய தகவல்களின் படி பொலிரோய நியோ பிளஸ் மாடல் மூன்று வித வேரியண்ட்கள், 7-சீட்டர் மற்றும் 9-சீட்டர் என இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் 9 சீட்டர் வேரியண்ட் மூன்று அடுக்கு இருக்கைகள் - முதல் அடுக்கில் இரண்டு, இரண்டாவது அடுக்கில் மூன்று இருக்கைகள், பின்புறம் நான்கு இருக்கைகள் இருக்கும் என தெரிகிறது. 7 சீட்டர் வேரியண்டில் அனைத்து இருக்கைகளும் முன்புறம் பார்த்தப்படி இருக்கும்.

    என்ஜினை பொருத்தவரை தற்போது விற்பனை செய்யப்படும் பொலிரோ நியோ மாடல் 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 100 ஹெச்பி பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் நியோ பிளஸ் மாடலில் இதைவிட சற்றே பெரிய என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த என்ஜின் புதிய RDE விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும்.

    Photo Courtesy: Rushlane

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx எஸ்யுவி மாடல் பலேனோ, கிராண்ட் விட்டாரா மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
    • புதிய Fronx எஸ்யுவி 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx கிராஸ்ஒவர் மாடல் இந்திய விற்பனையகங்களை வரத்துவங்கி இருக்கிறது. புதிய Fronx மாடலின் இந்திய விலை விவரங்கள் மார்ச் மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. சப்காம்பேக்ட் கிராஸ்ஒவர் எஸ்யுவி மாடலான மாருதி Fronx மாருதி பலேனோ காரை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய Fronx மாடல் நிசான் மேக்னைட், ரெனால்ட் கைகர் மற்றும் பிரெஸ்ஸா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    இந்திய சந்தையில் மாருதி Fronx மாடல் மாருதியின் பிரீமியம் நெக்சா ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர புதிய மாருதி Fronx மாடல் தேர்வு செய்யப்பட்ட நெக்சா ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காரின் வெளிப்புறம் புதிய Fronx மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட்கள், கிராண்ட் விட்டாரா மாடலில் உள்ளதை போன்ற கிரில் டிசைன் கொண்டிருக்கிறது.

     

    காரின் பின்புறம் கனெக்டெட் எல்இடி டெயில்லைட்கள், ஸ்லோபிங் ரூஃப்லைன், ஃபௌக்ஸ் ஸ்கிட் பிளேட் பம்ப்பரின் கீழ்புறத்தில் உள்ளது. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. பலேனோ போன்றே Fronx மாடலிலும் 9 இன்ச் டச் ஸ்கிரீன், ஆர்கமிஸ் டியூன் செய்யப்பட்ட பிரீமியம் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, குரூயிஸ் கண்ட்ரோல், 6 ஏர்பேக், 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டு இருக்கின்றன.

    புதிய மாருதி Fronx மாடல் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் 90 பிஎஸ் பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கிடைக்கும் 1 லிட்டர் பூஸ்டர்ஜெட் என்ஜின் 100 பிஎஸ் பவர், 148 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய மாருதி Fronx விலை ரூ. 8 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×