search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • பிரீமியம் ஹேச்பேக் மாடலில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • காரின் பக்கவாட்டு பகுதிகளில் 17 இன்ச் அளவில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    ஹூண்டாய் நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மேம்பட்ட வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் மற்றும் புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்த காரின் முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்டு, புதிய டிசைன் கொண்ட பம்பர் மற்றும் இருபுறங்களிலும் முக்கோண வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன. காரின் கிரில் பகுதியில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஹூண்டாய் லோகோ கிரில் பகுதியில் இருந்து நீக்கப்பட்டு, பொனெட்டின் கீழ்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

    இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் பக்கவாட்டு பகுதிகளில் 17 இன்ச் அளவில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல்: லுமென் கிரே, மெட்டா புளூ பியல், லைம் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

    புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ரூஃப் காண்டிராஸ்ட் நிற கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த கார் டூயல் டோன் தோற்றத்தில் கிடைக்கிறது. புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும். ஆனால், எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    • ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா நிறுவனம் ஹேரியர் EV கான்செப்ட்-ஐ காட்சிக்கு வைத்தது.
    • சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கிரில் அப்ரைட் தோற்றம், புதிய பம்ப்பர் வழங்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட சஃபாரி மாடலை சமீபத்தில் தான் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், சஃபாரி மாடலுக்கு மற்றொரு மிட்-சைக்கிள் அப்டேட் வழங்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருவதாக தெரிகிறது. புதிய சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    ஸ்பை படங்களில் இந்த காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மாற்றங்கள் பற்றி தெரியவந்துள்ளது. டெஸ்டிங் செய்யப்படும் யூனிட் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் நிலையில், சஃபாரி ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கிரில் அப்ரைட் தோற்றம், புதிய பம்ப்பர் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. புதிய பம்ப்பர் ஹேரியர் EV கான்செப்டில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.

    Photo Courtesy: Drivespark

    Photo Courtesy: Drivespark

    ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் EV மாடலை கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. இதில் மெல்லிய எல்இடி லைட் கிளஸ்டர்கள் வழங்கப்படுகின்றன. பம்ப்பரின் கீழ்புறம் லோயர் ஏர் வெண்ட்களும் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டு பகுதிகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    காரின் உள்புறத்தில் ரிவைஸ்டு இருக்கை மேற்கவர்கள், புதிய ட்ரிம் இன்சர்ட்கள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் வெளியான மற்ற ஸ்பை படங்களில் இந்த காரின் கேபின் அளவில் பெரியதாக இருக்காது என்று தெரியவந்தது.

    • இந்த குறைபாடு பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் கொண்டது.
    • ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கியது.

    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகளின் உயிரை பறிக்கச் செய்யும் ஏர் பேக் கோளாறு காரணமாக சுமார் பத்து லட்சம் எஸ்யுவி-க்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதில் 2014 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட புய்க் என்க்லேவ், செவர்லட் டிராவெர்ஸ் மற்றும் ஜிஎம்சி அகாடியா போன்ற மாடல்கள் அடங்கும்.

    பாதிக்கப்பட்ட கார்களில் உள்ள ஏர்பேக்-ஐ செயல்பாட்டுக்கு வரச் செய்யும் உபகரணம் வெடிக்கும் அபாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு வெடிக்கும் பட்சத்தில் கூர்மையான மெட்டல் பாகங்கள் கேபினுள் வீசப்படும். இது பலத்த காயம் அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    2017 செவரலட் டிராவெர்ஸ் மாடல் விபத்தில் சிக்கும் போது ஏர்பேக் சரியாக வேலை செய்யவில்லை. இதை தொடர்ந்து தான், இந்த பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்தது. மே 10, 2023 அன்று ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது விற்பனை மையங்களுக்கு ரிகால் பற்றிய அறிவிப்பை வழங்கி இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கார்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஜூன் மாத வாக்கில் அதுபற்றிய அறிவிப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. தங்களது கார் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பயனர்கள் NHTSA ரிகால்ஸ் வலைதளம் சென்று பார்க்கலாம்.

    • ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன.
    • இந்திய சந்தையில் ஜீப் காம்பஸ் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம் தனது காம்பஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட் விற்பனையை அதிகாரப்பூர்வமாக நிறுத்திவிட்டது. காம்பஸ் பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஜீப் இந்தியா நிறுவனம் டீசல் பவர்டிரெயின் மற்றும் மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் என்ஜின் ஆப்ஷன்களில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த அறிக்கை காரணமாக ஜீப் இந்தியா நிறுவனம் காம்பஸ் பெட்ரோல் வேரியண்டை மீண்டும் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளை குறைத்து இருக்கிறது. இது குறித்து ஜீப் இந்தியா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது..

    "பிரீமியம் எஸ்யுவி பிரிவில் டீசல் என்ஜினுக்கு இன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. ஜீப் இந்தியா நிறுவனம் 2.0 லிட்டர் மல்டிஜெட் டர்போ டீசல் பவர்டிரெயினை மேம்படுத்த முதலீடு செய்யும். புதிய வெர்ஷன்கள் அதிக டார்க், குறைந்த மாசு அளவுகளை வெளிப்படுத்துவதோடு, எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்."

    "எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஜீப் இந்தியா திட்டமிட்டுள்ளது. அனைத்து விதமான என்ஜின் மற்றும் எரிபொருள் ஆப்ஷன்களையும் முயற்சி செய்து, பயனர்களுக்கு ஏற்ற பவர்டிரெயினை வழங்குவோம்," என்று தெரிவித்துள்ளது.

    பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தப்பட்டதை அடுத்து ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்ட்கள் மட்டுமே இந்திய சந்தையில் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31 லட்சத்து 64 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஜீப் காம்பஸ் டீசல் வேரியண்டில் 2.0 லிட்டர், இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட, டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 172 பிஎஸ் பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் 4x4 சிஸ்டமும் வழங்கப்படுகிறது. 

    • சமீபத்தில் டாடா ஹேரியர் மாடல் பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டது.
    • மைல்கல் பற்றிய தகவல் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியுள்ளது. உற்பத்தி ஆலையில் இருந்து ஹேரியர் மாடலின் ஒரு லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டு இருக்கிறது. 2019 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, ஹேரியர் மாடல் ஒரு லட்சம் யூனிட்கள் விற்பனையாகி உள்ளது.

    இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் டாடா ஹேரியர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது 19 வெவ்வேறு வேரியண்ட்கள், ஆறு வித நிறங்களில் கிடைக்கும் எஸ்யுவி-யாக ஹேரியர் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்று துவங்குகிறது. டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 06 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    புதிய விற்பனை மைல்கல் பற்றிய தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் மாடலை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து இருந்தது. இதில் பானரோமிக் சன்ரூஃப், 6 வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, ஆட்டோ டிம்மிங் ரியர் வியூ மிரர் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அப்கிரேடு செய்யப்பட்டு, பெரியதாக 10.25 இன்ச் அளவில் டிஸ்ப்ளே, புதிய ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, iRA கனெக்டெட் வெஹிகில் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 200-க்கும் அதிக வாய்ஸ் கமாண்ட்களை, ஆறு வித்தியாசமான மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருக்கிறது. 

    • 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடல் ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது.
    • இந்த காரிலும் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபோக்ஸ்வேகன் இந்தியா தனது டிகுவான் எஸ்யுவி மாடலின் 2023 வெர்ஷனை அறிமுகம் செய்தது. புதிய 2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலின் விலை ரூ. 34 லட்சத்து 69 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட ரூ. 50 ஆயிரம் அதிகம் ஆகும்.

    2023 ஃபோக்ஸ்வேகன் டிகுவான் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதோடு, புதிய RDE விதிகளுக்கு ஏற்ற மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. காரின் வெளிப்புறம் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய டிகுவான் மாடல் நைட்ஷேட் புளூ, ஆரிக்ஸ் வைட், டால்ஃபின் கிரே, டீப் பிளாக் மற்றும் ரிஃப்ளெக்ஸ் சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

     

    காரின் உள்புறம் டூயல் டோன் கிரே இண்டீரியர் செய்யப்பட்டு, கேபின் ஆல் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் போன் சார்ஜர், பார்கிங் அசிஸ்டண்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒற்றை பட்டனை க்ளிக் செய்ததும் ஆக்டிவேட் ஆகும் பார்கிங் அசிஸ்டண்ட் மிகவும் குறுகிய பாதைகளில் காரை பார்க் செய்ய உதவுகிறது.

    இத்துடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்கள், 10-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன், ஹீடெட் முன்புற இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் சீட், 3 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு உள்ளது.

    புதிய 2023 டிகுவான் மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 188 ஹெச்பி பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    • வேகன்ஆர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் CNG மோடில் 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன் ஆர் ஹேச்பேக் மாடல் விற்பனையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 1999 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட வேகன்ஆர் மாடல் விற்பனையில் 30 லட்சம் யூனிட்களை கடந்து, புதிய மைல்கல் எட்டியுள்ளது.

    இந்திய சந்தையில் வேகன்ஆர் மாடலின் விலை தற்போது ரூ. 5 லட்சத்து 54 ஆயிரம் என்று துவங்கி அதிகபட்சம் ரூ. 7 லட்சத்து 42 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மூன்றாம் தலைமுறை கட்டத்தில் உள்ள வேகன்ஆர் மாடல் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹார்டெக்ட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

     

    மாருதி வேகன்ஆர் மாடல் 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என்று இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் CNG கிட் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த கார் CNG மோடில் 34.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. மாருதி சுசுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிக என்ஜின் ஆப்ஷன்களை வழங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக வேகன்ஆர் விளங்குகிறது. இதுதவிர மாருதி வேகன்ஆர் ஹேச்பேக் மாடலின் ஃபிலெக்ஸ் ஃபியூவல் ப்ரோடோடைப் வெர்ஷனை மாருதி சுசுகி நிறுவனம் காட்சிப்படுத்தி இருக்கிறது. இது காரின் விற்பனையை மேலும் அதிகப்படுத்தும் என்று தெரிகிறது.

    • இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யுவி மாடல் பெயரை அறிவித்தது.
    • இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல், எலிவேட் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     

    இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யுவி மாடல் பெயரை அறிவித்தது. இதைத் தொடர்ந்து எலிவேட் எஸ்யுவி ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. புதிய எலிவேட் மாடல் 360 டிகிரி கேமரா, பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெயின், ADAS சூட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது.
    • தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

     உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மனிகண்டன். இவரது மனைவிக்கு பிரசவசவலி ஏற்படவே உறவினரின் காரில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்.

    அரசு மருத்துவமனை வாயிலில் வரும்போது காரிலிருந்து லேசாக புகைவர அவசரமாக மனைவி கவிதா மற்றும் அவரது உறவினர்களுடன் இறங்கிய மணிகண்டன் அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு காரின் அருகே வருவதற்குள் காரில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

    • புதிய X3 M40i மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது.
    • இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய X3 M40i கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய X3 மாடலின் விலை ரூ. 86 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. சிபியு முறையில் இந்தியாவுக்கு கொண்டுவரப்படும் பிஎம்டபிள்யூ X3 M40i மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது.

    புதிய X3 M40i மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவு பிஎம்டபிள்யூ ஆன்லைன் தளத்தில் மட்டுமே நடைபெறுகிறது. புதிய X3 M40i மாடல்: ப்ரூக்லின் கிரே மற்றும் பிளாக் சஃபையர் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் உள்புறம் சென்சடெக் பெர்ஃபோரேட் செய்யப்பட்ட இருக்கை மேற்கவர்கள் உள்ளன.

     

    இந்த காரில் 3.0 லிட்டர், 6 சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 360 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.

    காரின் வெளிப்புறம் ஹை-கிலாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்ட இரண்டடுக்கு கிட்னி கிரில் மற்றும் M லோகோ உள்ளது. இத்துடன் மேட்ரிக்ஸ் ரக எல்இடி ஹெட்லேம்ப்கள், ஹை கிலாஸ் ORVM-கள், பிளாக் க்ரோம் டெயில்பைப்கள், 20-இன்ச் M லைட் அலாய் வீல்கள், M ஸ்போர்ட் பிரேக் மற்றும் ரெட் கேலிப்பர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • புதிய பிஎம்டபிள்யூ i5 மாடல் - இடிரைவ்40 மற்றும் M60 எக்ஸ்டிரைவ் என்று இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.
    • புதிய கார் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற சவுகரியத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது முற்றிலும் புதிய i5 மாடலின் சர்வதேச வெளியீடு மே 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் 5 சீரிஸ் மாடல் எட்டாம் தலைமுறை ஐசி என்ஜின் வெர்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கார் வெளியீட்டை ஒட்டி பிஎம்டபிள்யூ நிறுவனம் டீசர் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    டீசரின் படி பிஎம்டபிள்யூ காரில் முற்றிலும் புதிய கிரில் வழங்கப்படும் என்றும், அது சுற்றிலும் இலுமினேட் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் ஃபுளோடிங் டிஸ்ப்ளே டேஷ்போர்டு முழுக்க நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் மேம்பட்ட 3 சீரிஸ் மற்றும் ஃபிளாக்ஷிப் 7 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    அறிமுகத்தின் போது i5 மாடல் - இடிரைவ்40 மற்றும் M60 எக்ஸ்டிரைவ் என்று இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய காரின் பேட்டரி அம்சங்கள் அல்லது செயல்திறன் பற்றிய விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய காரின் சவுகரியத்தை அதிகப்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் டுவீக் செய்யப்பட்டு இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கிறது.

    இத்துடன் அடாப்டிவ் சஸ்பென்ஷன் வழங்கப்பட இருக்கிறது. இது 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற சவுகரியத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த கார் தவிர எட்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலின் உற்பத்தி வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது. இந்த காரின் உற்பத்தி பவேரியாவில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் டிங்கோல்ஃபிங் ஆலையில் நடைபெற இருக்கிறது.

    • முந்தைய திட்டப்படி இந்த காரின் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருந்தது.
    • மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜிம்னி மாடலின் விலை விவரங்கள் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த எஸ்யுவி மாடலின் சர்வதேச அறிமுகம் நடைபெற்றது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஜிம்னி மாடலின் விற்பனை நெக்சா விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது.

    முந்தைய திட்டப்படி இந்த காரின் வெளியீடு இம்மாத இறுதியில் நடைபெற இருந்தது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி முற்றிலும் புதிய ஜிம்னி மாடல் வெளியீடு ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. புதிய ஜிம்னி மாடலை வாங்க இதுவரை 24 ஆயிரத்து 500-க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

     

    தற்போதைய தகவல்களின் படி இந்த காரின் மேனுவல் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் ஆறு மாதங்களாகவும், ஆட்டோமேடிக் வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் அதிகபட்சம் எட்டு மாதங்கள் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. முற்றிலும் புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடல் புளூயிஷ் பிளாக், கைனடிக் எல்லோ மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் என்று மூன்று நிறங்களில் கிடைக்கும்.

    மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய K15C யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஆஃப் ரோடர் என்பதால் இந்த காரில் 4WD சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×