search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • கியா இந்தியா நிறுவனம் தனது சொனெட் மாடல் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல் 2020 செப்டம்பர் மாத வாக்கில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    கியா இந்தியா நிறுவனம் சொனெட் X லைன் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு இருக்கிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் 2020 செப்டம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், கியா சொனெட் X லைன் மாடல் விலை விவரங்கள் அந்நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு விழாவின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    கியா சொனெட் X லைன் மாடல் எக்ஸ்க்ளூசிவ் மேட் கிராபைட் நிறத்தில் கிடைக்கிறது. இந்த மாடல் முதன் முதலில் செல்டோஸ் X லைன் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டீசரின் படி X லைன் பேட்ஜிங் காரின் பின்புறமாக வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காரில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு பெரிய அலாய் வீல்கள், ஆரஞ்சு அக்செண்ட்கள், பிளாக்டு அவுட் எலிமெண்ட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    காரின் உள்புறம் சொனெட் X லைன் மாடலில் புளூ நிற ஷேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிறத்தை கியா நிறுவனம் இண்டிகே பெரா என அழைக்கிறது. புதிய X லைன் வேரியண்ட் சொனெட் டாப் எண்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதால், இதில் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    கியா சொனெட் X லைன் மாடலிலும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். சமீபத்தில் கியா நிறுவனம் தனது சொனெட் மாடல் விலையை ரூ. 34 ஆயிரம் வரை உயர்த்தியது.

    • மஹிந்திரா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்கார்பியோ கிளாசிக் இந்திய விலை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • இந்த எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் புதிய ஸ்கார்பியோ N மாடல் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ஸ்கார்பியோ கிளாசிக் பெயரில் அதன் பழைய மாடலை அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் விலை ரூ. 11 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    இந்த எஸ்யுவி மாடல் இந்தியாவில் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய ஸ்கார்பியோ கிளாசிக் S11 வேரியண்ட் விலை ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் முற்றிலும் புதிய முகம் கொண்டிருக்கிறது. இதன் முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், புதிய முன்புற பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.


    இத்துடன் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டிஆர்எல்-கள், 17 இன்ச் ரிடிசைன் செய்யப்பட்ட வீல்கள், டூயல் டோன் தோற்றம் கொண்டிருக்கிறது. பின்புறம் டவர் எல்இடி டெயில் லேம்ப்கள், பக்கவாட்டில் கிளாசிக் பேட்ஜிங் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் புதிய ஜென் 2 எம்ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த கார் பெட்ரோல், ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் 4x4 போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படவில்லை. பாதுகாப்புக்கு இந்த கார் ஏபிஎஸ், 2 ஏர்பேக் உள்ளிட்டவைகளை ஸ்டாண்டர்டு அம்சமாக பெற்று இருக்கிறது. புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் ரெட் ரேஜ், நபோலி பிளாக், சாட் சில்வர், பியல் வைட் மற்றும் கேலக்ஸி கிரே என ஐந்து விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    • போர்ஷே நிறுவனத்தின் புது ஸ்போர்ட்ஸ் கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
    • இந்த கார் பெருமளவு டிராக் சார்ந்த அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ஜெர்மனி நாட்டை சேர்ந்த முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்தியாளரான போர்ஷே முற்றிலும் புதிய 911 GT3 RS மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய போர்ஷே கார் விலை ரூ. 3 கோடியே 25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட 911 மாடல்களில் அதிக திறன் மற்றும் டிராக் சார்ந்த அம்சங்களுடன் உருவான மாடலாக GT3 RS இருக்கிறது.

    புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் மற்றும் கூலிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் ரிஷேப் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஸ்பிட்டர், பொனெட்டில் பெரிய வெண்ட்கள், வீல் ஆர்ச்கள், ரூப் மீது செங்குத்தான பின்கள், கதவுகளின் பின் ஏர் இன்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன.


    காரின் ஸ்பாயிலர் செட்டிங்களை மாற்ற ஸ்டீரிங் வீல் மீது DRS ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய 911 GT3 RS மாடல் முந்தைய 911 GT3 RS மற்றும் 992 ஜென் 911 GT3 மாடல்களை விட முறையே இருமடங்கு மற்றும் மும்மடங்கு டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது.

    முற்றிலும் புதிய போர்ஷே 911 GT3 RS மாடலில் 4 லிட்டர், ஆறு சிலிண்டர்கள் கொண்ட NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 518 ஹெச்பி பவர், 465 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் PDK ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 296 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் பலேனோ காரை தழுவி புது காம்பேக்ட் எஸ்யுவி மாடல் உருவாக்கப்பட்டு வருகிறது.
    • இந்த கார் ஹூண்டாய் வென்யூ, கியா சொனெட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் மாருதி பலேனோ பிரீமியம் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய காம்பேக்ட் எஸ்யுவி மாடல் YTB எனும் குறியீட்டு பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த கார் பிரெஸ்ஸா மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    புதிய மாருதி YTB மாடல் பியுச்சுரோ இ கான்செப்ட் மாடலை தழுவி டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த காம்பேக்ட் எஸ்யுவி கூப் எஸ்யுவி ஆகும். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போ விழாவில் மாருதி YTB அறிமுகம் அல்லது காட்சிப்படுத்தப்படலாம்.


    மாருதி சுசுகி ஆலை அமைந்து இருக்கும் குருகிராம் பகுதியில் தான் புது காரின் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த காரின் பின்புறம் மெல்லிய டெயில் லேம்ப்கள், ஷார்க் பின் ஆண்டெனா, ரூப் ரெயில்கள், ரியர் ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. முந்தைய தகவல்களில் பின்புற வைப்பரில் வாஷர் வழங்கப்படும் என கூறப்பட்டது.

    காரின் முன்புறம் எப்படி இருக்கும் என தெளிவாக தெரியவில்லை. எனினும், இந்த மாடலில் எல்இடி டிஆர்எல்கள், ஹெட்லேம்ப் மீது பம்ப்பரில் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம்.

    • மஹிந்திரா நிறுவனத்தின் 5-டோர் தார் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
    • இதனை உறுதிப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    மஹிந்திரா தார் 5-டோர் வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், 5-டோர் கொண்ட மஹிந்திரா தார் ஸ்பை வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. தோற்றத்தின் படி இந்த கார் ப்ரோடக்‌ஷன் வடிவம் பெற சில மாதங்கள் வரை இருக்கும் என்றே தெரிகிறது.


    Photo Source: Instagram | moto._tourer

    புதிய மஹிந்திரா தார் 5 டோர் வேரியண்ட் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் போர்ஸ் குர்கா 5-டோர் எஸ்யுவி மற்றும் மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் எஸ்யுவி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    மஹிந்திரா தார் 5-டோர் எஸ்யுவி மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ N பிளாட்பார்மை சார்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது. காரின் ஒட்டுமொத்த எடை அதிகரிக்கும் என்பதால் தார் 5-டோர் மாடலில் 2.2 லிட்டர், டர்போ சார்ஜ் செய்யப்பட்ட, நான்கு சிலண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போதைய தார் 3-டோர் மாடல் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் N லைன் மாடல்களை அறிமுகம் செய்வதில் கவனத்தை திருப்பி இருக்கிறது.
    • இந்த காரில் டர்போ பெட்ரோல் என்ஜின், டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் N லைன் மாடல்கள் எண்ணிக்கையை இந்திய சந்தையில் அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி-யின் N லைன் மாடலை அறிமுகம் செய்ய ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என்றும் இது செப்டம்பர் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடலில் i20 N லைன் மாடலில் வழங்கப்பட்டு இருப்பதை போன்றே 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. i20 N லைன் மாடலில் இந்த என்ஜினுடன் iMT மற்றும் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வென்யூ N லைன் மாடலில் DCT யூனிட் மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 118 ஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.


    இந்த காரில் ஸ்போர்ட் தோற்றம் கொண்ட அலாய் வீல்கள், ரிவைஸ்டு பம்ப்பர்கள், ரெட் இன்சர்ட்கள், டூயல் டிப் எக்சாஸ்ட், புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இவை வென்யூ N லைன் மாடலை அதன் வெண்ணிலா வெர்ஷனை விட வித்தியாசமாக காட்சிப்படுத்த செய்யும். உள்புறம் ஆல் பிளாக் இண்டீரியர், காண்டிராஸ்ட் நிறமான ரெட் ஸ்டிட்சிங், பேடில் ஷிப்டர்கள், N லைன் 3 ஸ்போக் ஸ்டீரிங் வீல், லெதர் கவர் மற்றும் கியர் லீவர் மீது N லைன் மோடிப் வழங்கப்படுகிறது.

    புதிய ஹூண்டாய் வென்யூ N லைன் மாடல் N6 மற்றும் N8 என இரண்டு வேரிண்ட்களில் கிடைக்கும். இந்த கார் டாப் எண்ட் SX(O) சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய ஹூண்டாய் i20 N லைன் மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 96 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஆல்டோ K10 மாடல் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • இந்த கார் அதிகளவு மாற்றங்களுடன் புது தோற்றம் பெற்று இருக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் 2022 ஆல்டோ K10 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஆல்டோ K10 துவக்க விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் நான்கு வேரியண்ட்கள், ஆறு மோனோடோன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த காருக்கான எண்ட்ரி லெவல் மாடலுக்கு முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    ஹார்டெக்ட் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஆல்டோ K10 மாடல் முழுக்க முழுக்க புது மாற்றங்களை பெற்று இருக்கிறது. இந்த காரின் வெளிப்புறம் புதிய முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், ஸ்வெப்ட்பேக் ஹாலோஜன் ஹெட்லேம்ப்கள், சிங்கில் பீஸ் கிரில், பிளாக் ஸ்டீல் வீல்கள், சதுரங்க வடிவம் கொண்ட டெயில் லைட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ஸ்பாயிலர்கள், ஹை மவுண்ட் செய்யப்பட்ட ஸ்டாப் லேம்ப், ஃபெண்டரில் டர்ன் இண்டிகேட்டர்கள் உள்ளன.


    புதிய மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலின் உள்புறம் பிளாக் நிற இண்டீரியர் செய்யப்பட்டு சில்வர் அக்செண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ஏழு இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் சாலிட் வைட், சில்கி சில்வர், கிராணைட் கிரே, சிஸ்லிங் ரெட், ஸ்பீடி புளூ மற்றும் எர்த் கோல்டு என ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    2022 மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலில் 1.0 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 66 ஹெச்பி பவர், 89 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட் அல்லது AMT யூனிட் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 83 ஆயிரத்து 500, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    • வால்வோ கார் இந்தியா நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் புது 2023 வால்வோ XC40 மாடலை இந்தியா கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
    • இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    வால்வோ கார் இந்தியா நிறுவனம் 2023 வால்வோ XC40 மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. மேலும் முன்பதிவு செய்த இரண்டு மாதங்களில் கார் டெலிவரி செய்யப்பட்டு விடும் என வால்வோ இந்தியா தெரிவித்து உள்ளது. அந்த வகையில் 2023 வால்வோ XC40 மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம்.

    மேம்பட்ட வால்வோ XC40 மாடல் C40 கூப் எஸ்யுவி-யை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் டிஃபைன்டு ஹெட்லேம்ப்கள், ஃபிரேம்லெஸ் கிரில், புதிய முன்புற பம்ப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலில் உள்ளதை போன்றே புதிய XC40 மாடலிலும் லெதர் இல்லா இருக்கைகள் வழங்கப்படலாம்.


    இத்துடன் இந்த கார் முற்றிலும் புதிய எக்ஸ்டீரியர் நிற ஆப்ஷன்கள், அலாய் வீல் ஆப்ஷன்களுடன் கிடைக்கும். 2023 வால்வோ XC40 மாடல் அதிக மைலேஜ் வழங்குகிறது. இதில் உள்ள மைல்டு ஹைப்ரிட் என்ஜின் ஆப்ஷன்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. வால்வோ நிறுவனத்தின் எதிர்கால திட்டப்படி மைல்டு ஹைப்ரிட், பிளக்-இன் மற்றும் முழுமையான எலெக்ட்ரிக் மாடல்களை மட்டுமே அறிமுகம் செய்ய இருக்கிறது.

    முன்னதாக 2030 வாக்கில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன பிராண்டாக மாற இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக வால்வோ நிறுவனம் அறிவித்து இருந்தது. இதே காரின் முழுமையான எலெக்ட்ரிக் வெர்ஷன் ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் எத்தனால் கொண்டு இயங்கும் வகையிலான என்ஜின்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ஏற்கனவே மாருதி சுசுகி தனது கார்களை தொடர்ந்து CNG கிட் கொண்ட வேரியண்ட்களில் அறிமுகம் செய்து வருகிறது.

    ஆட்டோமொபைல் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் யுத்திக்கு மாறி வருவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பலரும் எதிர்பாராத வகையில் மாருதி சுசுகி மாற்று எரிபொருள் பக்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஏர்கனவே CNG மூலம் இயங்கும் கார்களை அறிமுகம் செய்து வரும் மாருதி சுசுகி தற்போது எத்தனால் மூலம் ஓடும் என்ஜின்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் E85 அதாவது 85 சதவீத எத்தனால் மூலம் இயங்கும் என்ஜின்களை உருவாக்கும் பணிகளை துவங்கி விட்டது. இந்த என்ஜின்கள் ஏப்ரல் 2023 வாக்கில் பயணிகள் வாகனங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என மாருதி சுசுகி நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்ப அதிகாரி சிவி ராமன் தெரிவித்து இருக்கிறார்.


    இத்தனை ஆண்டு காலமாக மாருதி சுசுகி நிறுவன வாகனங்களில் மிக முக்கிய அம்சமாக மைலேஜ் விளங்கி வருகிறது. அந்த வரிசையில் E20 எரிபொருள் பயன்படுத்துவது நல்ல பலன்களை கொடுக்கும். உலகின் E85 ரக என்ஜின்களை பிஎஸ் 6 புகை விதிகளுக்கு உட்பட்டு பயன்படுத்தும் முதல் நாடாக இந்தியா இருக்கும். உலகின் மற்ற நாடுகளில் E85 என்ஜின்கள் பிஎஸ் 4 புகை விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

    தற்போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் எரிபொருள்களில் 10 முதல் 15 சதவீதம் எத்தனால் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனினும், 20 முதல் 25 சதவீத எத்தனால் மூலம் இயங்க வைக்க என்ஜின்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக ECU ரிமேப்பிங், இன்ஜெக்‌ஷன் மற்றும் இக்னிஷன் சிஸ்டம் உள்ளிட்டவைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

    • மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் காலணி வீச்சு சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஏற்று கொள்ள முடியாத விஷயம் தான்.
    • எங்கள் தலைவரை பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுப்பார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் பா.ஜ.க. மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாஸ்கர் திரு.வி.க. கல்லூரியில் நடந்த திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வில் தனக்கு பதிலாக வேறு ஒருவரை ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத வைத்ததாக தவறான தகவல் பரபரப்பட்டு வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானது . கடந்த 2020 பி.ஏ. தேர்வு எழுத அவர் விண்ணப்பித்துள்ளார். முதல் ஆண்டு தேர்வு ஆன்லைன் மூலம் எழுதியுள்ளார். இந்த ஆண்டு இரண்டாமாண்டு தேர்வு எழுதுவதற்கு தேர்வுக்கான எந்தவித கட்டணமும் அவர் கட்டவில்லை.

    ஆனால் அவருக்கு பதிலாக ஒருவர் தேர்வு எழுதினார் என்பது புரியவில்லை. எனவே இதுகுறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்துள்ளோம். நியாயமான நேர்மையான விசாரணை நடத்தப்படும் என காவல்துறை எங்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இந்த பிரச்சனை குறித்து மாநில தலைவர் அண்ணாமலை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

    எங்கள் தலைவரை பொறுத்தவரை யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை நிச்சயம் எடுப்பார். பா.ஜனதா மீது அவப்பெயர் ஏற்படுத்திட வேண்டும் என்கிற நோக்கத்தில் தி.மு.கவினர் செய்த சதியாக இருக்குமோ என நினைக்கிறோம்.

    மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.க.வினர் காலணி வீச்சு சம்பவம் என்னைப் பொறுத்தவரை ஏற்று கொள்ள முடியாத விஷயம் தான். எங்களது கட்சியும் கூட அதை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. அமைச்சர் எதோ பேசியதாக கூறுகிறார்கள். இது எப்படி இருந்தாலும் இப்படிப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாது நடந்திருக்கக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யுவி மாடல் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
    • இந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா நிறுவனம் இந்தியாவில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

    கியா இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது செல்டோஸ் கார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான யூனிட் கள் விற்பனையாகி இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் முடிவதற்குள் இந்த இலக்கை எட்டி இருப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்து இருக்கிறது.

    ஆகஸ்ட் 22 ஆம் தேதி கியா இந்தியா தனது மூன்றாவது ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. இது தவிர கியா செல்டோஸ் அறிமுகமாகியும் மூன்று ஆண்டுகள் முடிகிறது. இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் அதிக பிரபலமான கார் மாடலாக கியா செல்டோஸ் விளங்குகிறது.


    இந்தியாவில் கியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. விற்பனையில் மூன்று லட்சம் யூனிட்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் 91 நாடுகளுக்கு 1 லட்சத்து 03 ஆயிரத்து 033 செல்டோஸ் யூனிட்களை ஏற்றுமதி செய்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் கியா நிறுவனம் இந்திய விற்பனையில் ஐந்து லட்சம் யூனிட்களை கடந்து இருந்தது. இதில் செல்டோஸ் மாடல் மட்டும் 60 சதவீத பங்குகளை பெற்று இருந்தது. செல்டோஸ் ஒட்டுமொத்த விற்பனையில் டாப் எண்ட் மாடல் மட்டும் 58 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    செல்டோஸ் பாடலை வாங்கிய பத்து பேரில் ஒருவர் iMT வேரியண்டை தேர்வு செய்து இருக்கின்றனர். செல்டோஸ் பாடலை பொருத்தவரை பெட்ரோல், டீசல் வேரியண்ட்கள் சம அளவு விற்பனையை பெற்றுள்ளன. 

    • மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ கிளாசிக் கார் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • இந்த காரின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் தான் ஸ்கார்பியோ N காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. முற்றிலும் புது தோற்றம் கொண்ட ஸ்கார்பியோ N காருடன் விற்பனை செய்ய ஏதுவாக ஸ்கார்பியோ கிளாசிக் காரை மஹிந்திரா தற்போது அறிவித்து இருக்கிறது.

    புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் கிளாசிக் S மற்றும் கிளாசிக் S11 என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். ஸ்கார்பியோ கிளாசிக் மாடல் முற்றிலும் புது முகம் பெற்று இருக்கிறது.

    ரி-டிசைன் செய்யப்பட்ட கிரில் நடுவே மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ பொருத்தப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஃபாக் லேம்ப்கள் மற்றும் டிஆர்எல்-கள் உள்ளன.


    இந்த காரில் ரி-டிசைன்டு 17 இன்ச் அலாய் வீல்கள், டூயல் டோன் லுக் அழகாக காட்சியளிக்கின்றன. பின்புறம் டவர் எல்இடி டெயில் லேம்ப்-கள் நீண்ட இடைவெளிக்குப் பின் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டு கதவுகளில் கிளாசிக் பேட்ஜ் உள்ளது.

    மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை ஜென் 2 எம் ஹாக் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 128 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த காரில் பெட்ரோல் என்ஜின், ஆட்டோ அல்லது 4x4 வெர்ஷன் வழங்கப்படவில்லை. பாதுகாப்பிற்கு ஏபிஎஸ், 2 ஏர்பேக் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் அம்சமாக உள்ளது.

    ×