search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 158947"

    • சிட்ரோயன் நிறுவனத்தின் C3 ஹேச்பேக் மாடல் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து துவங்கி இருக்கிறது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் சிட்ரோயன் C3 ஹேச்பேக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த C3 ஹேச்பேக் மாடலை ASEAN மற்றும் ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது. சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் காமராஜர் துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்கிறது. முதற்கட்ட யூனிட்கள் காமராஜர் துறைமுகத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட சிட்ரோயன் C3 ஹேச்பேக் மாடல் - 1.2 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இருவித எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் சிட்ரோயன் முழுமையாக உற்பத்தி செய்த முதல் கார் இது ஆகும்.

     

    "2019 ஆண்டு முதல் எங்களது ஓசூர் ஆலையில் இருந்து பவர்டிரெயின்களை ஏற்றுமதி செய்ய துவங்கினோம். புதிய C3 மாடல்களை சிபியு யூனிட்களாக ஏற்றுமதி செய்ய துவங்கியதில் இருந்து இந்தியாவில் புதிதாக மிகமுக்கிய மைல்கல்லை துவங்குகிறோம்."

    "நாங்கள் உருவாக்கி இருக்கும் 360 டிகிரி அமைவு எங்களின் விற்பனையில் பிரதிபலிக்க துவங்கியுள்ளது. இதை கொண்டு எதிர்காலத்திலும் வளர்ச்சி பெறுவோம்." என்று ஸ்டெலாண்டிஸ் இந்தியா தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோலண்ட் பௌச்சாரா தெரிவித்து இருக்கிறார்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் 19 கார்கள் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்யும் 22 வாகனங்களில் புதிய மாடல்கள் மற்றும் மேம்பட்ட மாடல்கள் இடம்பெற்று இருக்கும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் 2023 ஆண்டில் மட்டும் 19 கார்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்து இருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் வாகனங்களும் அடங்கும். இந்திய சந்தை விற்பனையில் இருமடங்கு வளர்ச்சியை பதிவு செய்யும் வகையில், இந்த திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவு அதிக விற்பனையை ஈட்டிக் கொடுப்பதாக பிஎம்டபிள்யூ ஏற்கனவே தெரிவித்து இருந்தது. கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனையில், 15 சதவீதம் வாகனங்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும். பிஎம்டபிள்யூ அறிவித்து இருக்கும் 22 வாகனங்களில் 19 கார்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் அடங்கும்.

     

    இதில் முற்றிலும் புதிய வாகனங்கள் மற்றும் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் வாகனங்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் இடம்பெற்று இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பிஎம்டபிள்யூ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் 20 வாகனங்களை அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதிலும் புதிய வாகனங்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்கள் அடங்கும்.

    இத்தனை வாகனங்களை அறிமுகம் செய்வதன் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் 11 சதவீத வளர்ச்சியை பெற்று இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் வளர்ச்சியை 15 சதவீதமாக அதிகரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. 

    • மஹிந்திரா நிறுவனத்தின் தார் 4x4 மாடல் 2020 வாக்கில் பாதுகாப்புக்கு நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது.
    • மஹிந்திரா தார் 4x2 வெர்ஷன் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யுவி உற்பத்தியில் ஒரு லட்சம் யூனிட்களை எட்டியது. மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் உற்பத்தி ஆலையில் இருந்து ஒரு லட்சமாவது யூனிட் வெளியிடப்பட்டது. இரண்டாம் தலைமுறை மஹிந்திரா தார் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட 2.5 ஆண்டுகளில் இந்த மைல்கல்லை எட்டி அசத்தியுள்ளது.

    அக்டோபர் 2020 வாக்கில் மஹிந்திரா தார் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 2010 வாக்கில் அறிமுகமான முதல் தலைமுறை மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய மஹிந்திரா தார் மாடல் அறிமுகமான முதல் மூன்று வாரங்களில் சுமார் 15 ஆயிரம் முன்பதிவுகளையும், முதல் ஆண்டிற்குள் 75 ஆயிரம் முன்பதிவுகளை பெற்றது.

     

    அறிமுகம் செய்யப்பட்ட ஒரே மாதத்தில் தார் 4x4 மாடல் குளோபல் NCAP பாதுகாப்பு பரிசோதனையில் நான்கு நட்சத்திர குறியீடுகளை பெற்றது. எனினும், இது பழைய டெஸ்டிங் வழிமுறைகளின் கீழ் பரிசோதனை செய்யப்பட்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் தார் மாடலின் 4x2 வெர்ஷனை அறிமுகம் செய்தது.

    மஹிந்திரா தார் மாடல் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 118 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 152 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 130 ஹெச்பி பவர், 300 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியக்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டீசல் எஞ்சின் 4WD ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. பெட்ரோல் மாடல் 4WD மற்றும் 2WD ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து சுமார் 100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்கிறது.
    • இந்தியாவில் இருந்து அதிக வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மாருதி சுசுகி உள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் உலகம் முழுக்க சுமார் 25 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை எட்டி அசத்தி இருக்கிறது. மாருதி சுசுகி நிறுவனம் 1986 முதல் 87 முதல் இந்தியாவில் இருந்து வாகனங்களை ஏற்றுமதி செய்ய துவங்கியது. முதற்கட்டமாக வங்கதேசம் மற்றும் நேபால் நாடுகளுக்கு மாருதி கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

    அதன்படி 1987 வாக்கில் ஹங்கேரி நாட்டுக்கு 500 கார்களை முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்பட்டது. தற்போது மாருதி சுசுகி நிறுவனம் ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகள் உள்பட உலகின் சுமார் 100 நாடுகளுக்கு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் கிரண்ட் விட்டாரா மாடலை லத்தீன் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியது.

    புதிய மைல்கல் எட்டியது பற்றி மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவன தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹிசாஷி டக்யுச்சி கூறியதாவது..

    "ஏற்றுமதியில் 25 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல் இந்திய உற்பத்தி திறமைக்கு சான்றாக அமைந்துள்ளது. மத்திய அரசின் மேக்-இன்-இந்தியா திட்டம் மற்றும் வாகன ஏற்றுமதி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க மாருதி சுசுகி மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்துரைக்கிறது. எங்களின் தாய் நிறுவனம் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் தொடர் ஆதரவு இன்றி இது சாத்தியமாகி இருக்காது."

    "தலைசிறந்த தொழில்நுட்ப உதவி வழங்கியதோடு, சர்வதேச நெட்வொர்க் மூலம் இந்த மைல்கல்லை நாங்கள் அடைய சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் உதவியுள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு எங்களது குழுக்களின் அயராத முயற்சி மற்றும் கடின உழைப்பும் மிக முக்கிய காரணம் ஆகும். எங்களின் சர்வதேச வாடிக்கையாளர்கள் மற்றும் சர்வதேச வினியோகஸ்தர்கள் எங்களுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் நம்பிக்கைக்கு எங்களது நன்றிகள்."

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் X3 மாடல் வேரியண்ட்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பிஎம்டபிள்யூ X3 சீரிசில் லக்சரி எடிஷன் நீக்கப்பட்டு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது X3 சீரிசில் இரண்டு புதிய டீசல் வேரியண்ட்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவை பிஎம்டபிள்யூ 20d Xலைன் மற்றும் 20d M ஸ்போர்ட் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 67 லட்சத்து 50 ஆயிரம் என்றும் ரூ. 69 லட்சத்து 90 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டிசைனை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ X3 டீசல் வேரியண்ட்களில் பாரம்பரியம் மிக்க கிட்னி கிரில், செங்குத்தான ஏர் இண்டேக், அடாப்டிவ் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகிறது. இதன் M ஸ்போர்ட் பேக்கேஜ்-இல் காரின் முன்புற குவாட்டர் பேனல், டெயில்பைப்களில் கிளாஸ் க்ரோம் ஃபினிஷ், முன்புற அப்ரனில் பெரிய ஏர் இன்லெட்கள், விண்டோ கிராஃபிக்ஸ், ரூஃப் ரெயில்கள், பிஎம்டபிள்யூ கிட்னி ஃபிரேம், 19-இன்ச் வை ஸ்போக் M அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

     

    காரின் உள்புறம் மல்டி-பன்ஷன் M ஸ்போர்ட் ஸ்டீரிங் வீல், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், ஆம்பியண்ட் லைட்டிங், 3-ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், HUD, வயர்லெஸ் சார்ஜிங், 360 டிகிரி கேமரா, 464 வாட் ஹார்மன் கார்டன் 16 ஸ்பீக்கர் மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    பிஎம்டபிள்யூ X3 டீசல் வேரியண்ட்களில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின், 190 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 7.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 213 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    • சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
    • புதிய சிட்ரோயன் மிட்சைஸ் எஸ்யுவி மாடல் இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    சிட்ரோயன் நிறுவனத்தின் முற்றிலும் புதிய எஸ்யுவி மாடல் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எஸ்யுவி குறித்து சிட்ரோயன் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த கார் டிசைன் மற்றும் பொறியியல் பணிகள் முழுக்க முழுக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டது என சிட்ரோயன் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் சிட்ரோயன் நிறுவனத்தின் அடுத்த மாடல் மிட்சைஸ் எஸ்யுவி-ஆக இருக்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. மேலும் இந்த கார் C3 ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. ப்ரோடக்ஷன் வடிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய எஸ்யுவி மாடல் C3 ஏர்கிராஸ் எனும் பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

     

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ, 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இது அதிகபட்சம் 110 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் தற்போது விற்பனை செய்யப்படும் C3 ஹேச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கார் இருவித இருக்கை அமைப்புகள்: ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கும். அந்த வகையில், புதிய மாடல் ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். இதன் 7 சீட்டர் மாடல் கியா கரென்ஸ், மாருதி சுசுகி XL6 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    Photo Courtesy: Rushlane

    • ஸ்கோடா நிறுவனத்தின் இரு கார்களில் சக்திவாய்ந்த எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • சக்திவாய்ந்த எஞ்சினுடன் இருவித கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் 1.5 லிட்டர் TSI எஞ்சின் கொண்ட ஆம்பிஷன் வேரியண்ட்களை அறிமுகம் செய்தது. புதிய ஸ்கோடா குஷக் ஆம்பிஷன் விலை ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம் என்றும் ஸ்லேவியா ஆம்பிஷன் மாடல் விலை ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    இந்த எஞ்சின் முன்னதாக குஷக் மற்றும் ஸ்லேவியா மாடல்களின் டாப் எண்ட் ஸ்டைல் வேரியண்டில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இதே எஞ்சின் தற்போது மிட் வேரியண்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சக்திவாய்ந்த எஞ்சினை எதிர்பார்க்கும் அதிக வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

     

    புதிய வேரியண்டில் உள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 150 ஹெச்பி பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது 1.0 லிட்டர் எஞ்சினை விட 34 ஹெச்பி மற்றும் 72 நியூட்டன் மீட்டர் டார்க் அதிகம் ஆகும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் சிலிண்டர் டிஆக்டிவேஷன் வசதி வழங்கப்படுகிறது. இது எரிபொருளை மிச்சப்படுத்த இரண்டு சிலிண்டர்களை முழுமையாக ஆஃப் செய்துவிடும். குஷக் ஆம்பிஷன் 1.5 லிட்டர் MT மாடலின் விலை அதன் 1.0 லிட்டர் வேரியண்டை விட ரூ. 1.8 லட்சம் அதிகம் ஆகும்.

    விலை விவரங்கள்:

    ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 99 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 79 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் MT 1.5 TSI ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம்

    ஸ்கோடா குஷக் AT 1.5 TSI ரூ. 16 லட்சத்து 24 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சிட்ரோயன் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மிட்சைஸ் எஸ்யுவி இருவித இருக்கை அமைப்புகளில் கிடைக்கும் என தெரிகிறது.
    • புதிய சிட்ரோயன் 7 சீட்டர் மாடல் கியா கரென்ஸ், மாருதி XL6 கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    சிட்ரோயன் நிறுவனம் முற்றிலும் புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல் சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலின் டிசைன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட C5 ஏர்கிராஸ் எஸ்யுவி மற்றும் C3 ஹேச்பேக் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இந்த மாடல் இருவித இருக்கை அமைப்புகள்: ஐந்து மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வகையில் கிடைக்கும். அந்த வகையில், புதிய மாடல் ஹூண்டாய் கிரெட்டா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    ஏழு பேர் பயணிக்கக்கூடிய மாடல் கியா கரென்ஸ் மற்றும் மாருதி சுசுகி XL6 போன்ற மாடல்களுக்கும், இதன் எம்ஜி ஹெக்டார் பிளஸ், ஹூண்டாய் அல்கசார் மற்றும் டாடா சஃபாரி மாடல்களின் பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்களுக்கு போட்டியாக அமையும்.

    புதிய சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலில் 1.2 லிட்டர் டர்போ, 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் யூனிட் வழங்கப்பட இருக்கிறது. இது அதிகபட்சம் 110 ஹெச்பி பவர், 190 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் என தெரிகிறது. இதே எஞ்சின் தற்போது விற்பனை செய்யப்படும் C3 ஹேச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹூண்டாய் நிறுவனத்தின் 2023 வெர்னா டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.
    • புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடலுக்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது.

    ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ஆறாவது தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா மாடல் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 17 லட்சத்து 38 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 வெர்னா மாடலின் விலை அறிவிக்கும் போதே இதனை வாங்க சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். தற்போது 2023 ஹூண்டாய் வெர்னா கார் முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் அதிக கடந்துள்ளது. கடந்த மாதம் 13 ஆம் தேதி புதிய ஹூண்டாய் காருக்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும்.

     

    2023 ஹூண்டாய் வெர்னா மாடல் EX, S, SX, மற்றும் SX(O) என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றுடன் இரண்டு பெட்ரோல் என்ஜின்கள், அதிக டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. முற்றிலும் புதிய 2023 ஹூண்டாய் வெர்னா மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இதில் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் T-GDi யூனிட் ஆகும். இது 158 ஹெச்பி பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் NA பெட்ரோல் என்ஜின் 113 ஹெச்பி பவர், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் யூனிட், IVT யூனிட், 7 ஸ்பீடு DCT யூனிட் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் வெர்னா மாடல் மாருதி சுசுகி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • மாருதி சுசுகியின் நெக்சா பிராண்டு இந்திய விற்பனையில் புதிய மைல்கல் எட்டி அசத்தியுள்ளது.
    • 2022-23-இல் மாருதியின் ஒட்டுமொத்த விற்பனையில் நெக்சா பிராண்டு 20 சதவீத பங்குகளை எட்டியது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரீமியம் விற்பனை பிரிவான நெக்சா இந்திய விற்பனையில் 20 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது. தற்போது நாட்டின் 280-க்கும் அதிக நகரங்களில் சுமார் 440 விற்பனை மையங்களை நெக்சா கொண்டிருக்கிறது. 2015 ஆம் ஆண்டு 5 சதவீதத்தில் துவங்கி 2022-23 ஆண்டு நெக்சா விற்பனை 20 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.

    தற்போது இந்திய சந்தையில் இக்னிஸ், பலேனோ, சியாஸ், XL6 மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்கள் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றுடன் முற்றிலும் புதிய ஜிம்னி மற்றும் Fronx மாடல்கள் விரைவில் இணைய உள்ளன. இரு மாடல்களும் ஆட்டோ எக்ஸ்போ 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    "வித்தியாசமான அனுபவங்கள், புதுமை-மிக்க, அதநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் நோக்கில் 2015 வாக்கில் நெக்சா துவங்கப்பட்டது. ஒவ்வொரு நெக்சா வாகனமும் அதிநவீன தொழில்நுட்பம், டிசைன் மற்றும் அம்சங்கள் மூலம் வாடிக்கையாளர்களை கவரும் வகையிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது."

    "நெக்சா பிராண்டு 20 லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது, வாடிக்கையாளர்கள் எங்களின் உயர் ரக மற்றும் அதிக அம்சங்கள் நிறைந்த வாகனங்கள், பிரீமியம் அனுபவத்திற்கு வழங்கிய அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. மாருதி சுசுகியின் ஒட்டுமொத்த விற்பனையில் நெக்சா மட்டும் 20 சதவீத பங்குகளை பெற்றுள்ளது."

    "சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிம்னி மற்றும் Fronx மாடல்கள் முன்பதிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இரு மாடல்களை வாங்க இதுவரை சுமார் 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஆண்டை நெக்சா பிராண்டு வெற்றிகரமாக நிறைவு செய்யும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறோம்," என மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி சஷான்க் ஸ்ரீவஸ்தவா தெரிவித்து இருக்கிறார். 

    • மெர்சிடிஸ் AMG GT 63 S E பெர்ஃபார்மன்ஸ் மாடல் 843 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.
    • புதிய மெர்சிடிஸ் AMG மாடல் போர்ஷே பனமெரா டர்போ S E-ஹைப்ரிட் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    மெர்சிடிஸ் AMG பிராண்டின் முற்றிலும் புதிய AMG GT 63 S E பெர்ஃபார்மன்ஸ் மாடல் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பெர்ஃபார்மன்ஸ் பிரான்டு அறிமுகம் செய்யும் முதல் ஹைப்ரிட் கார் எனும் பெருமையை இந்த சூப்பர் செடான் பெற இருக்கிறது.

    இதுதவிர மெர்சிடிஸ் AMG இதுவரை உற்பத்தி செய்ததில், அதிக சக்திவாய்ந்த மாடலாக இந்த செடான் கார் உருவாகி இருக்கிறது. இதில் 639ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் டுவின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட V8 எஞ்சினுடன் 2-4 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 843 ஹெச்பி பவர், 1400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

     

    புதிய மெர்சிடிஸ் AMG GT 63 S E மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 2.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 316 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இதில் உள்ள 6.1 கிலோவாட் ஹவர், 400 வோல்ட் பேட்டரி வெறும் 89 கிலோ எடை கொண்டிருப்பதாக மெர்சிடிஸ் தெரிவித்துள்ளது.

    இதில் உள்ள PHEV 12 கிலோமீட்டர் வரை மட்டுமே செல்லும், எனினும், இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மட்டும் மணிக்கு அதிகபட்சம் 130 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரில் ரிஜெனரேடிவ் பிரேக்கிங் வசதி உள்ளது. சில பகுதிகளில் ஒற்றை பெடல் மூலம் காரை இயக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் Fronx மாடல் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
    • புதிய Fronx மாடல் நாடு முழுக்க விற்பனை மையங்களுக்கு வரத் துவங்கி உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் முற்றிலும் புதிய Fronx மாடலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. பின் இந்த மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய மாருதி Fronx மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில், மாருதி Fronx மாடல் இதுவரை சுமார் 15 ஆயிரத்து 500-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்று இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்துள்ளது. விற்பனையகம் வரத் துவங்கி இருக்கும் நிலையில், மாருதி Fronx மாடலின் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

     

    2023 மாருதி Fronx மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் NA பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை முறையே 99 ஹெச்பி பவர், 147 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 89 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இவற்றுடன் 5 ஸ்பீடு மேனுவல் யூனிட், AMT யூனிட் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய மாருதி Fronx மாடல் சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், சீட்டா மற்றும் ஆல்ஃபா என ஐந்து விதமான வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இத்துடன் ஆர்க்டிக் வைட், கிராண்டியுர் கிரே, ஏர்தன் பிரவுன், ஒபுலண்ட் ரெட், ஸ்பிலெண்டிட் சில்வர், ஏதர்ன் பிரவுன் - புளூயிஷ் பிளாக் ரூஃப், ஒபுலண்ட் ரெட் - புளூயிஷ் பிளாக் ரூஃப் மற்றும் ஸ்பிலெண்டிட் சில்வர் - புளூயிஷ் பிளாக் ரூஃப் என எட்டுவிதமான நிறங்களில் கிடைக்கிறது.

    ×