search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசா"

    • இஸ்ரேல் மூன்று வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்வைத்துள்ளது.
    • போர் நிறுத்தத்திற்கான நேரம் இது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.

    இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ரஃபா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேல் ராணுவம் மூன்று வடிவிலான போர் நிறுத்தத்தை முன்வைத்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்திருந்தார். மேலும், போரை நிறுத்துவதற்கான நேரம் இது. இஸ்ரேல் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கான திறன் ஹமாஸிடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். இதனால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவும் மற்றும் திங்கட்கிழமை காலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சனிக்கிழமை நள்ளிரவு புரைஜி முகாம் அருகில் உள்ள வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நுசெய்ரத் முகாமில் தாக்குதப்பட்ட தாக்குதலில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி கடத்தி செல்லப்பட்டதாக கருதப்படும் பிணைக்கைதிகளில் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    காசாவில் மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள ரஃபா நகரின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் உணவு, மருத்துவ வசதி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    காசா மீது நடத்தப்படும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 250 பேரை ஹமாஸ் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றது.

    • ரஃபாவின் மத்திய பகுதியில் ஹமாஸ் சுரங்கங்களை அழிக்கப்பட்டது.
    • ஹமாஸ் ஆயுத கிடங்கு நகர் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்குப் பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.

    கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி படைகளை நகர்த்தி வந்தது. தற்போது ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் சீர்குலைத்துள்ளது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் தொடுத்ததன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது.

    எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 10 லட்சம் பேர்) வசித்து வருகிறார்கள். இதனால் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகள் ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றமும் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தடைவிதித்தது, ஆனால் முழு அளவில் தரைவழி தாக்குதல் நடத்தமாட்டோம் ஒரு குறிப்பிட்ட அளவில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கடந்த வார இறுதியில் தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இதனால் ரஃபா நகர் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் யோசிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஃபாவின் மத்திய பகுதியில் ராணுவம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஃபாவின் மத்திய பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் மற்றும் ஆயுத கிடங்கு நகரை அகற்றியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் கடந்த 6-ந்தேதி ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. எகிப்து எல்லையுடன் உள்ள கிழக்கு மாவட்டங்கள் மீது தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கு மாவட்டமான டெல் அல்-சுல்தானில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது.

    இங்கு இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ்க்கும் இடையில் கடுமையான சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியள்ளது.

    மத்திய ரஃபாவின் எந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

    • ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
    • இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.

    ரஃபா நகரில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 50 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு. இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    ரஃபாவில் உள்ள முகாமில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்தது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர், "இஸ்ரேல் ஹாமாஸ் தாக்குதலில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மதிக்க வேண்டும் இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்தது வருகிறது.இது ஒரு சோகமான சம்பவம் என்று இஸ்ரேலிய தரப்பு ஏற்கனவே பொறுப்பேற்று, சம்பவம் குறித்து விசாரணையை அறிவித்துள்ளது என்பதையும் நாங்கள் கவனிக்கிறோம்.

    அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் 1980 ஆம் ஆண்டே பாலஸ்தீனத்தை ஒரு நாடாக இந்தியா அங்கீகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ரஃபா நகரில் காசாவின் 50 சதவீத பாலஸ்தீன மக்கள் வசித்து வருகிறார்கள்.
    • பெரும்பாலான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது காசாவின் தெற்கு பகுதியில் எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரஃபா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. முழு அளவில் இல்லாத ஒரு குறைந்த அளவிலான தரைவழி தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. காசாவின் வடக்கு பகுதியில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் ரஃபா நகரில் குவிந்துள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் 13 லட்சம் மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த நிலையில்தான் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஏவுகணைகள் தற்காலிக முகாம் மீது விழுந்தது. இதில் தற்காலிக முகாம் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர சம்பவத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகள் இஸ்ரேல் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக காசா மீது அனைத்து கண்களும் என்ற வாசகத்துடன் போட்டோ ஒன்று வெளியானது.

    இந்த போட்டோவை ஷேர் செய்து காசா மக்களுக்கு (பாலஸ்தீன மக்கள்) பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால், ஏவுகணை தாக்குதலின்போது ஹமாஸ் வெடிப்பொருட்கள் தீப்பற்றி எரிந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருந்த போதிலும் ஹமாஸ் முற்றிலுமாக ஒழிக்க இன்னும் ஏழு மாதங்கள் தாக்குதல் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பப்படும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியபோது உங்களுடைய கண்கள் எங்கே இருந்தன என்ற வாசகத்துடன் ஒரு குழந்தை முன் ஹமாஸ் பயங்கரவாதி துப்பாக்கியுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் 1200 பேரை கொலை செய்த ஹமாஸ், 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தற்போது வரை இந்த தாக்குதலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.
    • இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    டெல் அவிவ்:

    பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 36 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். காசாவின் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

    காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று ஐ.நா. சபை, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் ஏற்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் காசா மீதான போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டீசச்சி ஹனேஜிபி கூறும்போது, ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்கும். எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துகிறது.

    ஹமாசின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காசாவில் சண்டை குறைந்தது இந்த ஆண்டு முழுவதும் தொடரும். பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஹமாஸ் கோரியபடி போரை முடிவுக்கு கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. காசாவின் ரபா நகரில் சண்டையிடுவது அர்த்தமற்ற போர் அல்ல. காசாவில் ஹமாஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அதையும் அதன் கூட்டாளிகளும் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்துவதே நோக்கம் என்றார்.

    இதற்கிடையே காசா மீதான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுக்கான தூதரை பிரேசில் திரும்ப பெற்றுள்ளது. மெக்சிகோ நாட்டில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது. தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தூதரகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • காசா மீதான தாக்குதலை பிரேசில் அதிபர் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.
    • காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிரான இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    பிரேசில் அதிபர் இனாசியோ லுலா டா சில்வா தொடர்ந்து இஸ்ரேலை விமர்சனம் செய்து வந்தார். காசா மீதான தாக்குதலை ஹொலோகாஸ்ட் உடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.

    இதனால் பொது கண்டனம் தெரிவிக்க பிரேசில் தூதருக்கு இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி சம்மன் அனுப்பியிருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கான பிரேசில் பிரதமரை திரும்பப் பெறுவதாக பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரேசில் அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    காசா மீதான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராகவும், தற்போது வரை அதில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்பதால் பிரேசில் தூதரை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
    • உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது. 

     

     

    பல்ஸாதீனம் மீது இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

     

    • சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது.
    • இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக 'ALL EYES ON RAFAH' என ஸ்டோரி வைத்து, சிறிது நேரத்தில் அதனை டெலீட் செய்துள்ளார்.

    தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • ரஃபாவில் உள்ள முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதில் 35 பேர் உயிரிழப்பு.
    • தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக நேதன்யாகு அறிவிப்பு.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்த தடைவிதித்துள்ளது.

    இதற்கிடையே நேற்றுமுன்தினம் இஸ்ரேல் ரஃபா நகர் மீது வான்தாக்குதல் நடத்தியது. அப்போது ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

    இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, இந்த தாக்குதல் துரதிருஷ்டவசமான தவறு. இஸ்ரேல் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ரஃபா மீது தாக்குல் நடத்திய நிலையில் இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை கிடையாது என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைத்திடவும், ஹமாஸ் பிடித்துச் சென்ற பிணைக்கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தேவை என அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருவதுடன், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

    அமெரிக்கா, எகிப்து, கத்தார் முயற்சியால் கடுமையான சண்டை நடைபெற்றபோது ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதேபோல் இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர்.

    • இஸ்ரேல் வான்தாக்குதலில் ரஃபா நகரில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
    • இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குல் நடத்தி வருகிறது. ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை தடம் தெரியாத அளவிற்கு அழித்து விட்டது. ஹமாஸ்க்கு எதிராக போர் தொடங்கியதற்கான இலக்கை எட்ட வேண்டுமென்றால் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்று இஸ்ரேல் தெரிவித்தது.

    ரஃபா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேல் அறிவித்தது. இதற்கு பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஐ.நா. நீதிமன்றம் ரஃபா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நேற்று திடீரென ரஃபா நகர் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 35 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட்டது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எனத் தெரிவித்துள்ளார்.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    • போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.
    • ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த 8 மாதங்களாக கடும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இந்த சண்டையில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். காசா நகரமே மொத்தமாக உருக்குலைந்து போய் விட்டது. அப்பாவி மக்கள் உயிர் இழந்து வருவதால் போரை நிறுத்த பல நாடுகள் சமரச முயற்சிகள் மேற்கொண்டன. ஆனாலும் போர் முடிவுக்கு வராமல் நீடித்து வருகிறது.

    இது வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா கூட உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொண்டது.

    ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை ஓய மாட்டோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் சிக்கி தவிக்கும் பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பின் ஆயுத படை பிரிவினர் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது. காசாவில் இருந்து இந்த ஏவுகணைகள் சரமாரியாக வீசப்பட்டன.

    இதையடுத்து இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்துள்ளது. ஆனாலும் சேத விவரம், உயிர் சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் படையினர் ஹமாசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதலில் ஈடுபட்டது.

    போருக்கு பயந்து வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்கள் மீது தான் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தியது.

    இந்த சண்டையில் 35 பாலஸ்தீனர்கள் உயிர் இழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதனால் காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எற்கனவே ரபா எல்லையில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் நிவாரண பொருட்கள் எதுவும் கிடைக்காததால் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர். தற்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

    இதற்கிடையில் தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களில் இஸ்ரேல் படையினர் நடத்திய புதிய தாக்குலுக்கு 8 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    • 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
    • கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது.

    பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் பொரும்பாலனோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். இந்த தாக்குதல்களின் கோரத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் ஊடகவியலாளர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் ஈடுபட்டு வருகின்றனர்.

     

     

     

     

    இதுவரை பல்வேறு கட்டங்களில் நடந்த தாக்குதல்களில் சுமார் 107 பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஏராளமானவர்கள் தங்களது உடல் உறுப்புகளை இழந்துள்ளனர். இந்நிலையில் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் (RSF) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

     

    கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இதுவரை 9 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்களை சித்திரவதை செய்து போர் குற்றத்தில் ஈடுபட்டதாக ஆர்எஸ்எப் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அதன் புகாரில், இந்தப் பத்திரிகையாளர்களில் பலர் வேண்டுமென்றே இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வழக்கம்போல் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×