search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடன் உதவி

    தமிழ்நாடு பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படா தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்க ளுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்ப டுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் ஆய்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப் பினர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

    விண்ணப்பம்

    ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். புதிய கடன் திட்டங்களாக இளம் தொழிற்கல்வி பட்டதாரி களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவி னைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

    விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பின், திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன், தூத்துக்குடி இணை பதிவா ளர் (கூட்டுறவு சங்கங்கள்) மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் வெண்மைப்புரட்சி ஏற்படு த்தும் வகையில் கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொரு ளாதாரத்தை மேம்படுத்து மாறும் கேட்டுக் கொள்கி றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது.
    • தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    தூத்துக்குடி:

    சர்வதேச பல்லுயிர் பெருக்க தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் 'முத்து நகர் பல்லுயிர் பூங்கா' என்ற பெயரில் பல்லுயிர் பூங்கா ஒன்றை அமைக்க ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தொடக்க விழா ஸ்டெர்லைட் அனல்மில் நிலைய பகுதியில் நடைபெற்றது. புதுச்சேரி அருகே 100 ஏக்கர் தரிசு நிலத்தை காடுகளாக மாற்றிய தமிழகத்தின் காடு மனிதர் என்று அழைக்கப்படும் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மரக்கன்றுகளை நட்டு பல்லுயிர் பூங்கா அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ஆலை ஊழியர்களிடம் காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார். தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சித் தலைவர் பாலசுப்ரமணியன் மற்றும் சாமிநத்தம் ஊராட்சியை சேர்ந்த நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுமதி கலந்து கொண்டு பேசுகையில், இந்த பல்லுயிர் பூங்கா தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பெருமையாக விளங்கும். இந்த திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ் சங்க இலக்கியங்களில் குறிப்படப்பட்டிருக்கும் தாவரங்களை மீட்டெடுத்து ஒரு பூங்காவை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

    மேலும் தமிழகத்தில் முதன் முறையாக ஐந்திணைப் பூங்கா (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை) நிறுவப்பட உள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கும் 'டை-மெத்தில்-சல்பைடு' என்ற ரசாயனத்தை காற்றில் கலக்கும் பெரிய இலை மகோகனி மரங்களை அதிகளவில் நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். தொடர்ந்து மூலிகைத் தோட்டம், அரிய வகை தாவரங்களை மீட்டெடுத்தல், நட்சத்திர வனம், மூங்கில் தோட்டம் மற்றும் இன்னும் பிற தனித்துவமான பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

    ஸ்டெர்லைட் ஆலை ஆரம்பித்த நாள் முதல் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காலவாய்களை புணரமைத்தல், கிராமப்புறங்களில் உள்ள குளங்களைத் தூர்வாறுதல் போன்ற பணிகளின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்துக்கும், பல்லுயிர் பெருக்கத்துக்கும் சேவை செய்து வருகிறது. 10 லட்சம் மரங்களை நடும் வகையில் 'பசுமை தூத்துக்குடி' என்ற திட்டம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 1.25 லட்சம் மரங்களை நட்டுள்ளோம். சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரங்களை நடுவதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தின் காடுகளின் பரப்பளவு 5.25 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வளர்ச்சி அடையும்.

    மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளில் 35 சதவீதம் காடுகளை உருவாக்க தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கிராமப் ஊராட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் 8870477985 என்ற செல்போன் எண்ணிலும், Sterlite.communication@vedanta.co.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தன்னார்லர்கள், கிராம மக்கள், ஸ்டெர்லைட் அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • நிலக்கரி யார்டு அருகே செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி செல்டன் மீது மோதியது.
    • பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கீழவைப்பார் சிப்பிகுளத்தைச் சேர்ந்தவர் செல்டன் (வயது 45). இவர் துறைமுகத்தில் உள்ள தனியார் ஷிப்பிங் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நிலக்கரி யார்டு அருகே செல்லும் போது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி செல்டன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வழக்குப்பதிவு செய்து லாரியை ஒட்டி வந்த புதுக்கோட்டை நடுக்கூட்டன்காட்டை சேர்ந்த ரமேஷ்குமார் (47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரையூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் பல்வேறு கோவில்களின் கொடை விழாக்கள் நடை பெற்ற நிலையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் தற்போது மேலும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு தலைவன்வடலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரை அடுத்து ஆவரை யூர் விலக்கு, கீரனூர் விலக்கு, தலைவன்வடலி விலக்கு ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவ்வழியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணி யிலும் ஈடுபட்டு வருகின்ற னர்.

    இதனிடையே தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று ஆத்தூருக்கு வருகை தந்து போலீசாரின் பாது காப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து அறிவுரை களை வழங்கினார்.

    அப்போது திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பால முருகன், திருச்செந்தூர் தனிப்பிரிவு சப்-இன்ஸ் பெக்டர் ரகு ஆகியோர் உடன் சென்றனர்.

    • முகமது ஆரோன் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல்நகரை சேர்ந்தவர் முகமது ஆரோன் (வயது 27). கட்டிட தொழிலாளி. இவர் கதிர்வேல் நகர் பூங்கா அருகே தனது நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு மது போதையில் கும்பலாக வந்த 5 வாலிபர்கள் முகமது ஆரோனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரை கைகளால் தாக்கி விட்டு மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டினர். இதில் தலை, காது உள்ளிட்ட இடங்களில் காயம் அடைந்த முகமது ஆரோன் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்பசாமி (25), செல்வகணேஷ் (21) ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 வாலிபர்களை பிடிப்பதற்காக தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தூத்துக்குடி மில்லர்புரம் சிலோன் காலனியை சேர்ந்த மனீஸ்வரன்(20), மகாராஜன்(22) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும், ரவுடிகள் பட்டியலில் இவர்கள் பெயர் இருப்ப தாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை வழங்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. முன்னாள் செய லாளர் என். பெரியசாமியின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதில் பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி, அசோக் பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள், ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர் 10 பேருக்கு சைக்கிள், 500 பேருக்கு வேஷ்டி, 500 பேருக்கு சேலை, மற்றும் அசைவ உணவு பொதுமக்களுக்கு வழங்கி மரக்கன்று நட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.

    மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, துணைத்தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், துணை மேயர் ஜெனிட்டா, முன்னாள் எம்.எல்.ஏ ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பால குருசாமி, நிர்மல்ராஜ், அன்ன லட்சுமி, கலைச்செல்வி, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோ ரன்ஸ், மாநில நெசவாளர் அணி துணைச்செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்;சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணைச்செய லாளர்கள் கீதா முருகேசன், கனக ராஜ், பிரமிளா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், துணை அமைப்பாளர் ராமர், பொறியாளர் அணி அமைப்பாளர் அன்பழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ஜெபசிங், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சித்திரை செல்வன், நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கர நாராயணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், துணை அமைப்பாளர் சுபேந்திரன், பகுதி செய லாளர்கள் ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், ஓன்றிய செயலாளர்கள் முருகேசன், காசி விஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதி கண்ணன், சின்ன பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், நாராயணன்,

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் ராமஜெயம், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சுப்பிரமணி,

    உள்பட பலர் மரியாதை செலுத்தி னார்கள்.

    தொழிலதிபர்கள் ராமசாமி, முருகேசன், டேவிட், வழக்கறிஞர் சங்க தலைவர் செங்குட்டுவன், நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆகியோர் மரியாதை செய்தனர்.

    • புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
    • சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் மேலூரில் நின்று சென்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம், 2-வது ரெயில்வே கேட் அருகே இருந்து புதிய பஸ் நிலையம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் நின்று சென்றது. அதில் இருந்து மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர். அனைத்து ரெயில்களும் மேலூா் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது மகன் மணிகண்டன்(வயது 21). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் மணிகண்டன் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் தாளமுத்துநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக மோட்டார் சைக்கிள் சாலை பள்ளத்தில் விழுந்து சறுக்கியபடி சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது.
    • குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் இருந்து வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் கலியாவூர் நீர்த்தேக்கம் பகுதியில் இருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த வருடம் பருவ மழை குறைவாக பெய்துள்ளதால் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்ககூடிய பாபநாசம் அணை முழுமையாக நிரம்பவில்லை. கோடைகாலம் ஆரம்பமாகி உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை கொஞ்சம் இருந்து வருகிறது.

    இந்த சூழ்நிலையிலும் தூத்துக்குடி மாநகர 60 வார்டு பகுதி மக்களும் பாதிக்காத வகையில் குடிதண்ணீர் முறைப்படுத்தி சூழற்சி முறையில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி வல்லநாடு, கலியாவூர் ஆகிய பகுதிகள் மட்டுமன்றி தாமிரபரணி நதிக்கரை பகுதியில் கிணறு அமைக்க ப்பட்டு அதன் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யும் முறைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற் கொண்டார். அப் போது அவர் கூறுகையில்,

    தாமிரபரணி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் அளவு குறைவாக இருப்ப தால் மழை குறைந்துள்ள தால் மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. 10 நாட்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என கூறப்படுகிறது. எனவே மக்கள் கூடுமானவரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கோடைகாலம் ஆரம்பமாகி இருப்பதால் மக்களின் தாகம் தீர்க்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மாநகராட்சியின் கடமையாகும். ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சி பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றுபவர்களை உங்களுக்கு கொடுத்தி ருப்பது பதவி அல்ல மக்களுக்கு பணி செய்யும் பொறுப்பு என்று கூறியது மட்டுமின்றி எல்லோரும் முறையாக பணி செய்கிறார்களா என்பதை கண்காணிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    எனவே அதன் அடிப்படையில் மக்கள் பணியை நாங்கள் தொடர்ந்து செய்வதற்கான முயற்சி களை அதிகாரி களுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.

    24 மணி நேரமும் தூத்துக்குடி மாநகர மக்கள் என்னை தொடர்பு கொண்டு பேசலாம் மக்கள் தேவைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அப்போது அவர் கூறினார்.

    • தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.
    • தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர முத்தையாபுரம் பகுதி தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் முத்தையாபுரம் பஜாரில் நடைபெற்றது. பகுதி செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் தங்கசேகர், மனோகர், தமிழ்ச் செல்வி, முத்துராஜா, கமாலுதீன், தீபக்ராஜா, ஸ்டாலின், ஆரோக்கியராபின், அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும், மாநகராட்சி தெற்கு மண்டல சேர்மனுமான பாலகுருசாமி வரவேற்றார்.

    அமைச்சர் கீதாஜீவன்

    கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தலைமைக் கழக பேச்சாளர் போலீஸ் ஆல்பர்ட் தாஸ், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசினர். தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    ரூ. 2 லட்சம் கோடி முதலீடு

    தமிழகத்தில் தொழில் தொடங்க உலக முதலீட்டாளர்கள் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர். அந்த நிறுவனங்கள் உற்பத்திகளை தொடங்கும் போது தமிழ்நாட்டில் உள்ள படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

    நான் முதல்வன் திட்டத்தில் ஒரு மாணவன் என்ன படிக்க விரும்புகிறானோ? அதற்கு ஏற்ற தகுதியை உருவாக்க வழி செய்கிறது. தமிழகத்தில் ஆளுநராக இருக்கக்கூடிய ரவி குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் பா.ஜ.க.வின் நிர்வாகி போல செயல்படுகிறார். சாதி, மதத்தின் பெயரால் ஓட்டுக்களை பெற பா.ஜ.க. திட்டம் போட்டுகிறது.

    தமிழகத்தில் அனைவரும் அனைத்து மதத்தையும் வழிபட உரிமை இருக்கிறது. இந்தியாவின் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் சனாதன தர்மம் புதைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டானின் தலைமையில் தமிழ்நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி பேசும் போது, கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தை சின்னா பின்னமாக ஆக்கி வைத்திருந்தனர். அதனை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்-அமைச்சராகிய பின்னர் சீராக்கி 2 ஆண்டுகள் முடிந்து 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிருக்கிறார்.

    மாதம் ரூ. 1000

    படித்த மகளிருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைதொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏழை- எளிய மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் 2,617 பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் சிறப்பான முறையில் அனைத்து வகையான வளர்ச்சிபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, சிங்கப்பூரைப் போல தூத்துக்குடியையும் மிகச்சிறந்த நகரங்கமாக உருவாக்க திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார்.

    கூட்டத்தில் மாநகர தி.மு.க. கவுன்சிலர்கள் முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ், மற்றும் மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வட்ட செயலாளர்கள் செல்வராஜ், நடேசன் டேனியல், கந்தசாமி, விஜயகுமார், பிரசாந்த், சக்திவேல், முள்ளக்காடு கிளை செயலாளர் பக்கிள்துரை, சில்வர் சிவா, பொட்டல்காடு கிளைச் செயலாளர் சந்தனராஜ், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர மகளிர் அணி அமைப்பா ளர் ஜெயக்கனி விஜயகுமார் நன்றி கூறினார்.

    • ஜோசப் இரும்பு கம்பிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வந்தார்.
    • தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 60). இவர் இரும்பு கம்பிகள் மற்றும் காப்பர் போன்றவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தும், சில்லரை வியாபாரமும் செய்து வந்தார்.

    இந்நிலையில் மில்லர்புரத்தை சேர்ந்த துரை என்பவருடன் சேர்ந்து இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது காப்பர் லோடு எடுத்து வியாபாரம் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என கூறியதாகவும், அதன் அடிப்படையில் வியாபாரம் செய்த போது தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தன்னுடைய தொழில் நஷ்டத்திற்கு துரை தான் காரணம் எனவும், இதனால் அதிக பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கி விட்டதாகவும் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜோசப் எட்டையாபுரம் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள இரும்பு குடோனில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். ஜோசப் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லாததால் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர். இது குறித்து போலீசார், ஜோசப் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன் தலைமை தாங்கினார்.
    • கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி வழங்கினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தர விட்டிருந்தார். அதன்படி வடக்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட பகுதி முழுவதும் தண்ணீர் பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்,மோர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் 14-வது வார்டுக்குட்பட்ட சின்னக்கண்ணுபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர துணைச் செயலாளரும், மாநகராட்சி பணிக்குழு தலைவருமான கீதாமுருகேசன் தலைமை தாங்கினார். தண்ணீர் பந்தலை தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலா ளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்து பொது மக்க ளுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு, அன்னாசி பழம், மோர் மற்றும் பல்வேறு வகையான குளிர்பா னங்களை வழங்கி னார்கள்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, காசிராஜன், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×