search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 162808"

    • கட்டாலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
    • ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில், சேர்வைக்காரன் மடம், கட்டாலங்குளம் மற்றும் குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நோக்குடன் சட்டத்துக்கு புறம்பாக, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.

    இதனால் அதன் சுற்றுப்பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் இது குறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் சேர்ந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.

    தற்போது கட்டாலங்குளம் ஊராட்சியிலும் இது போன்று சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்(கிராம ஊராட்சி) ராமராஜ் (வட்டார ஊராட்சி) தாசில்தார் செல்வகுமார்,மண்டல துணை தாசில்தார் ரம்யா தேவி, வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்படை தலைமை காவலர் மைக்கேல்,கட்டாலங்குளம் ஊராட்சி செயலர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர், அப்போது அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட18 ஆழ்துளை கிணறுகளை மூடி முத்தரையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
    • திறப்பு விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இ-சேவை மையத்தை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், ஜெயக்கனி, துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செந்தில், அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், வைதேகி, ராஜதுரை, பட்சிராஜ், கந்தசாமி, சுயம்பு, வட்டச்செயலாளர்கள் செந்தில்குமார், பாலு, வன்னிராஜ், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, அற்புதராஜ், கருணா, மணி, அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
    • ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

    ஆறுமுகநேரி:

    தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரிக்கு நேற்று கள ஆய்வு பணிக்காக வருகை தந்தார்.

    அவருடன் தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோரும் வந்தனர். இவர்களை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணை தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் நகரின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    அப்போது, பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை அகற்றும் பணி முடிந்ததும் அங்கு வணிக வளாகம், பஸ் நிலையம், காய்கறி சந்தை ஆகியவற்றை அமைப்பது என்றும், பேரூராட்சியின் குப்பைகளை கொட்டுவதற்காக வெள்ளமடை அருகே 10 ஏக்கரில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மெயின் பஜாரில் உள்ள காமராஜர் பூங்கா மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

    மேலும் தார் சாலைகள் அமைக்கும் பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்படுவதாகவும், விரைவில் ஆறுமுகநேரி பேரூராட்சி நகராட்சியாக மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    கூட்டத்தில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், தீபா, சந்திரசேகர், சிவகுமார், சகாய ரமணி, நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஆறுமுகநேரி பகுதிகளில் குப்பைகளை சேகரிக்கும் பணிக்காக 15 நவீன பேட்டரி வாகனங்களை அமைச்சர் நேரு வழங்கினார்.

    பின்னர் அமைச்சர்கள் கே.என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் பஸ் நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டனர்.

    அப்போது ஆறுமுகநேரி நகர தி.மு.க. செயலாளர் நவநீத பாண்டியன், துணைச் செயலாளர் அகஸ்டின், மாவட்ட பிரதிநிதி ராதா கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராஜ்குமார் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.
    • கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48). இவர் புதுக்கோட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1½ லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புதுக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கொள்ளை யர்களை தேடிவருகின்றனர்.

    • ஸ்ரீவைகுண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.
    • ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    108 வைணவ திவ்ய தேசங்களில் ஸ்ரீவை குண்டத்தை சுற்றி தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற வைணவதிருப்பதிகளில் ஒன்றான நவதிருப்பதி கோவில்களில் ஸ்ரீவைகுண்டம் (கள்ளபிரான்), நத்தம் (எம்மிடர்கடிவான்), திருப்புளியங்குடி (காய்சினவேந்தபெருமாள்), தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), பெருங்குளம் (மாயக்கூத்தர்), தென்திருப்பேரை (நிகரில் முகில்வண்ணன்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), ஆழ்வார்திருநகரி (பொலிந்துநின்றபிரான்) ஆகிய கோவில்களில் வைகுண்ட ஏகாதசி மார்கழி திருஅத்யயன திருவிழா பகல்பத்து, இராபத்து திருவிழா என 21 நாட்கள் நடைபெறுகிறது.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் காலை 4மணி முதல் ஆதிசேஷ வாகனத்தில் சயன திருக்கோலத்திலும் தொலவில்லிமங்கலம் (செந்தாமரைக்கண்ணன்), இரட்டைத்திருப்பதி (தேவர்பிரான்), திருக்கோளுர் (வைத்தமாநிதி), நின்ற திருக்கோலத்திலும் பக்தர்களுக்கு சுவாமிகள் தாயார்களுடன் காட்சியளித்தனர்.

    நேற்று ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு சயனகுரடு மண்டபத்தில் சுவாமி கள்ளபிரான் தாயார்களுடன் சயன திருக்கோலத்தில் எழுந்தருளினார். காலை 5 மணி முதல் பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குடும்பத்துடன் வந்து நெய் விளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் 12 மணிக்கு விஸ்வரூபம், மதியம் 12.30 மணிக்கு திருமஞ்சனம் கோஷ்டி, மதியம் 2 மணிக்கு நித்தியல் கோஷ்டி, மாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசலுக்கு சுவாமி கள்ளபிரான் புறப்பாடு, 4.55 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இரவு 10.30 மணிக்கும், தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி மண்டகபடியின் சொர்க்க வாசல் இரவு 10.30 மணிக்கும் திறப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன் ஸ்ரீதேவி பூதேவியுடன் பரமபத வாசலுக்கு இரவு 10.30 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோபாலா என்ற கோஷத்துடன் எழுந்தருளினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவி பிரமசக்தி உமரிசங்கர், தி.மு.க. இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பாலமுருகன், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் செயல் அலுவலர் கோவல மணிகண்டன், கோவில் ஆய்வாளர் நம்பி, ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் செயல் அலுவலர் அஜீத், ஆழ்வார் திருநகரி முன்னாள் பேரூராட்சித் தலைவர்கள் கந்தசிவசுப்பு, ஆதிநாதன், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை மேலாளர் விஜயகுமார், முருகன், கள்ளபிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி, தேவராஜன், வெங்கடகிருஷ்ணன், மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.பொதுமக்கள் சிறப்பு தரிசன கட்டணத்திலும், இலவச தரிசனத்திலும் பெருமாளை வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ், ஆழ்வார்திருநகரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

    • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
    • ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

    தூத்துக்குடி:

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பகுதி அவைத் தலைவர் குமார் செய்திருந்தார்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார்.
    • இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    தென்திருப்பேரை:

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நவதிருப்பதி கோவில்களில் இன்று மாலை சுவாமி சயனக்கோலத்தில் எழுந்தருளிக்கிறார். இரவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான்

    மார்கழி- திருஅத்யயன திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கியது. நவதிருப்பதி கோவில்களில் பரமபத வாசல் திறப்பு என்று அழைக்கப்படும். சொர்க்கவாசல் திறப்பு இன்று மாலை நிகழ்ச்சி நடைபெறும்.

    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவில், தென்திருப்பேரை மகரநெடுகுழைகாதர் கோவில், ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் ஆகியவற்றில் பகல் பத்து திருவிழா, இராப்பத்து திருவிழா வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் கோவிலில் நடைபெறும் பகல் பத்து திருவிழா நாட்களில் தினமும் காலையில் சுவாமி எழுந்தருளலும், மாலை 6 மணிக்கு சேர்த்தியில் ராஜாங்கம், நவநீத கிருஷ்ணன், நாச்சியார் திருக்கோலம், மாரிசன் வதை, கஜேந்திர மோட்சம், கன்றுகொன்டு விளாகண்ணி எறிதல், கோபியர் துகில் பறித்தல், கோவர்த்தன கிரியை குடைபிடித்தல், வாமானா ஆவதாரம், ஆண்டாள் திருக்கோலங்களில் சுவாமி கள்ளப்பிரான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான இன்று காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சுவாமி கள்ளப்பிரான் சயானக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

    மாலை 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு பக்தி உலா, படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது. இராப்பத்து திருவிழாவில் 2-ம் நாளில் இருந்து தினமும் இரவு 7 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு, பக்தி உலா, 9 மணிக்கு படியேற்றம் கற்பூர சேவை நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை

    இதேபோல் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவிலில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை சுவாமி சயனதிருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரவு 10.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தென்திருப்பேரை ஸ்ரீ மகரநெடுங்குழைக்காதர் கோவில் மார்கழி திரு அத்யயன உற்சவம் - திருவாய்மொழி முதல் திருநாள் மூத்த வேலியார் குடும்ப டிரஸ்டுக்கு பாத்தியப்பட்ட வைகுண்ட ஏகாதசி மண்டகப்படியின் சேஷ சயனம் மிக சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்க்கு கோவில் செயல் அலுவலர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் மூத்தவேலியார் குடும்ப டிரஸ்டு தலைவர் ரா.சுந்தர ராஜன், தோழப்பர் கண்ணன் சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    • இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது.
    • தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது.

    ஆறுமுகநேரி:

    இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் தற்கொலைகளை தடுப்பதில் பெற்றோர்களின் கடமை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆறுமுகநேரியில் நடைபெற்றது. கிராம உதயம் அமைப்பின் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியை தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    தற்போது உள்ள சூழ்நிலையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிமாகியுள்ளது. இதற்கான காரணங்களில் கோபம் மிக முக்கிய ஒன்றாகும். எந்த சூழ்நிலையிலும் கோபத்தை கட்டு படுத்தினால் மட்டுமே நமது வாழ்க்கை சிறப்பானதாக அமையும். உடலை ஆரோக்கிய மானதாக வைத்து கொள்ள விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்பதை பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டும். நீங்களும் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்று கொடுத்து அவர்களை எந்த சூழ்நிலையிலும் பிரச்சி னைகளை தைரியத்துடன் அணுக ஊக்கப்படுத்துங்கள். தோல்வியை கண்டு சோர்வைடையாமல் அந்த தோல்வியே அடுத்த வெற்றிக்கான படிக்கட்டு என்பதை தெரிந்து கொண்டாலே தற்கொலை எண்ணங்களை கைவிட்டு வாழ்க்கையில் சாதிக்க முடியும். ஆகவே குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையோடு பொது நலத்தையும் கற்றுகொடுத்து வெற்றி யாளர்களாக மாற்றுவது பெற்றோர்களது கடமை என்பதை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 2000 மரக்கன்றுகளும், மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டன. இதனை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடை யப்பன், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன், திருச்செந்தூர் தொழில்துறை ஆய்வாளர் ஜோதிலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்துறை உதவி ஆணையாளர் திருவள்ளுவன், தன்னார்வ தொண்டு தனி அலுவலர் ராமச்சந்திரன், பகுதி பொறுப் பாளர்கள் பிரேமா, ஆறுமுகவடிவு, முத்துச்செல்வன், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம உதயம் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுந்தேரசன், நிர்வாக கிளை மேலாளர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • நட்டாத்தி ஊராட்சியில் பல்வேறு துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.
    • ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமையில் நடந்த கிராமசபையில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    சாயர்புரம்:

    நட்டாத்தி ஊராட்சியில் 2023-24-ம் நிதி ஆண்டுக் கான கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டமிடுதல் மற்றும் அங்கீக ரித்தல் குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு நட்டாத்தி ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணை தலைவர் எஸ். வி.பி. எஸ். பண்டாரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகாயராணி கலந்து கொண்டார். வார்டு உறுப்பினர்கள்

    ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், பிரியா , ஊராட்சி செயலர் முத்துராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
    • 12 தீர்மானங்கள் மாநகராட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொட ங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

    கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஸ்மார்ட்சிட்டி அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகளை அளவிடு செய்யவும், செலவின பட்டியல் தயார் செய்யவும், பார்வையிடவும் போதிய பணியாளர்கள் இல்லாததால் இளநிலை பொறியாளர்களுக்கு உதவிட ஒவ்வொரு நிலையிலும் என 11 தொழில் நுட்ப உதவியாளர்கள் நகர்ப்புற வாழ்வாதார மையம் மூலம் நியமனம் செய்தல்.

    மாநகராட்சிக்கு உட்பட்ட பாண்டுரங்கன் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட போதிய இடம் இல்லாததால் சத்திரம் தெரு அம்மா உணவகம் பின்புறம் உள்ள மாநகராட்சி இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 8 ஆரம்ப சுகாதார மையங்களில் நகர்புற வாழ்வாதார மையம் மூலம் பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் ஊதியம் வழங்குதல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி, குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு செய்தல் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இயற்கை இடர்பாடுகள் காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் 12 சிப்பங்களாக பிரித்து ரூ.20 கோடியே 35 லட்சத்தில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டம் 2022-2023-ன் கீழ் மேற்கொள்ளுதல்.

    மாநகராட்சி துணை மேயருக்கு அலுவலக பயன்பாட்டிற்கு ஒதுக்கப்ப ட்டுள்ள வாகனத்தை ஓட்டுவதற்கு தற்காலிக அடிப்படையில் ஓட்டுனர் நியமனம் செய்தல், இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி 2017 -ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் திட்ட நிதி மற்றும் பொது நிதியின் கீழ்மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான சரக்கு மற்றும் சேவை கட்டணம் 12 சதவீதம் வழங்க தெரிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கடந்த ஜூலை 13-ந்தேதி அறிவிப்பின்படி சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் 47-வது கூட்டத்தில் ஒப்பந்ததாரர்களின் 12 சதவீதத்திலிருந்து வரி 18 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 18-ந்தேதி . முதல் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பணியின் தொகைக்கு ஏற்ப உயர்த்தி வழங்குதல் உட்பட 12 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், பாலகுருசாமி, நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ்,ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் சரவணன், காந்திமதி, பிரின்ஸ்,சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முத்தையாபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி நகரில் சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது.
    • உண்டியல் பூட்டை மர்மநபர் ஒருவர் கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஆதிபராசக்தி நகரில் சக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் அய்யப்பன் விக்ரஹம் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற நிலையில் நேற்று நள்ளிரவு மர்மநபர் ஒருவர் கோவிலுக்குள் புகுந்துள்ளார். அவர் உண்டியல் பூட்டை கடப்பாறையால் உடைத்து திறக்க முயன்றுள்ளார்.

    ஆனால் அவரால் உடைக்க முடியவில்லை. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் கோவிலுக்கு வரவே, அங்கிருந்து மர்மநபர் தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரில் முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
    • கலெக்டரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் வழங்கினார்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவரை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம், துணைத் தலைவர் கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆலோசனை நடத்தினார். இதில் வார்டு கவுன்சிலர்கள் வெங்கடேசன், மாரியம்மாள், புனிதா, தீபா, புனிதா சேகர், சந்திரசேகர், தயாவதி, ஜெயராணி, ஜெபமணி, மரிய நிர்மலா தேவி, சிவகுமார், சகாயரமணி, ஆறுமுகநயினார் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களிடம் வார்டுகளின் தேவைகள் பற்றி கலெக்டர் கேட்டறிந்தார்.

    ஆறுமுகநேரி காமராஜர் பூங்காவை நவீன வசதிகளுடன் சீரமைக்க வேண்டும். ஆறுமுகநேரிக்கு குரங்கணியில் இருந்து தனி குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள குப்பை மேடு அகற்றப்பட்டு வருகிறது. வருவாய்த்துறை வசம் உள்ள அந்த இடத்தை தினசரி சந்தை அமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகத்திற்கு தர வேண்டும்.

    மேலும் பேரூராட்சியின் குப்பை களை கொட்டுவத ற்காக 5 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை ஒதுக்கி தர வேண்டும். காயல்பட்டினம் வருவாய் கிராம அலுவலகத்தின் கீழ் உள்ள ஆறுமுகநேரியின் 10 வார்டு பகுதிகளை ஆறுமுகநேரி வருவாய் கிராம நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் கலெக்டரிடம் வழங்கினார்.

    அவரிடம் மனுவில் கூறியுள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.

    இதனைத் தொடர்ந்து காமராஜர் பூங்காவை கலெக்டர் பார்வையிட்டார். ஆறுமுகநேரி ெரயில் நிலையம் அருகே தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டார். திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப் பட்டுள்ள வளாகம், வேளாண்மை விரிவாக்க மையம், அங்கன்வாடி ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் மாலா, நகர தி.மு.க செயலாளர் நவநீத பாண்டியன் ஆகி யோரும் உடன் இருந்தனர்.

    ×