search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துண்டுபிரசுரம்"

    அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக திமுகவினர் உள்பட 24 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ரெயில் நிலையம் பகுதியில் தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் தலைமையில் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    ‘‘கலெக்சன், கரப்‌ஷன், கமி‌ஷன்’’ என்ற வாசகங்கள் அந்த துண்டு பிரசுரத்தில் இடம்பெற்று இருந்தது.

    இதையடுத்து அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகித்ததாக தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் இஸ்ரேல் உள்பட 9 பேர் மீது திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.

    இதைப்போல் ஊத்துக்கோட்டையை அடுத்த தாராட்சி பஸ்நிலையம் பகுதியில் தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அரசுக்கு எதிராக துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை போலீசார், ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக், சண்முகம், பழனி, வேலு உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #DMK #TNGovernment
    பெண் குழந்தைகளை சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கீழக்கரை:

    மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சக திட்டத்தின்கீழ் சைல்டு லைன் அமைப்பு மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளை சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கும், ஆதரவில்லா பெண் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, குழந்தை திருமணம் தடுப்பு, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு திரும்ப செய்வது போன்றவற்றிற்கு பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி கீழக்கரை நகரில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், துண்டு பிரசுரம் மூலமும் பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் துணை மைய இயக்குனர் தேவராஜ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வின்சென்ட், ஆனந்தராஜ், காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், வர்த்தக சங்க தலைவர் சாலிகு, ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் அறிவுரையின்படி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பூபதி, செங்கோடன் ஆகியோர் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிந்து செல்வதால், விபத்தில் மரணத்தை தவிர்க்கலாம் என்பது குறித்தும், வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்வது பற்றியும், விபத்தில் உயிர் பலியை தடுக்க இரு சக்கர வாகனத்தை ஓட்டுச் செல்பவர்களின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். 
    ×