search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 163679"

    • தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.
    • ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை.

    உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தீவிரமைடந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனின் மிகமுக்கிய நதி டினிப்ரோ ஆற்றில் கட்டப்பட்ட ககோவ்கா அணை மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் உடைந்து போன அணையில் இருந்து வேகமாக நீர் வெளியேறி வருகிறது.

    அணை உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இன்றைய தாக்குதல் மக்கள் மீதான போருக்கு கொடுக்கும் கொடூர விலைக்கு மற்றும் ஓர் உதாரணம். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பாதிக்கப்படுவோரின் அவலக்குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இது நிறுத்தப்பட வேண்டும், என்று தெரிவித்தார்.

    ஒரு விஷயம் மட்டும் தெளிவாக இருக்கிறது. இது உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிக பயங்கரமான தாக்குதல் ஆகும். குடிநீர், நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் மற்றும் இதர உதவிகள் வழங்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதநேய தொண்டு அமைப்புகள் உக்ரைன் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன, என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    ரஷியாவின் வெடுகுண்டு தாக்குதலில் அணை உடைந்து, தண்ணீர் வேகமாக வெளியேறி வருவதால் கரையோரம் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேலும் சுமார் 42 ஆயிரம் பேர் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    • கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.
    • ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன.

    ஜெனீவா:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

    அதில் ஜெனீவாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன. அவர் சில கருத்துகளையும் பதிவு செய்திருந்தார்.

    இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

    அதில் அவர், 'கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர்.

    அவர்கள் கூறியதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

    • உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான்.
    • இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை, ஏழை குழந்தையாக உள்ளது.

    நியூயார்க் :

    ஐ.நா. மேம்பாட்டு திட்டம் மற்றும் ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டமும் இணைந்து புதிய வறுமை குறியீட்டு எண் பட்டியலை வெளியிட்டன. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    உலகத்தில் 111 நாடுகளில் 120 கோடிபேர், அதாவது 19.1 சதவீத மக்கள் வறுமையின் பிடியில் வாழ்கிறார்கள். அவர்களில் பாதிப்பேர், அதாவது 59 கோடியே 30 லட்சம்பேர், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர்.

    இந்தியாவை பொறுத்தவரை, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 41 கோடியே 50 லட்சம்பேர், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.

    குறிப்பாக, 2005-2006 நிதிஆண்டில் இருந்து 2015-2016 நிதிஆண்டுக்குள் 27 கோடியே 50 லட்சம் பேரும், 2015-2016 நிதிஆண்டில் இருந்து 2020-2021 நிதிஆண்டுக்குள் 14 கோடி பேரும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டார்கள். இது ஒரு வரலாற்றுசிறப்புமிக்க மாற்றம்.

    2030-ம் ஆண்டுக்குள், வறுமையில் வாழும் ஆண், பெண், குழந்தைகள் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இதே ரீதியில் சென்றால், அந்த இலக்கை எட்டுவது சாத்தியமானதுதான்.

    இந்த முன்னேற்றத்தையும் மீறி, 2020-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி, உலகிலேயே அதிகமான ஏழைகள் இருப்பது இந்தியாவில்தான். அங்கு 22 கோடியே 89 லட்சம் ஏழைகள் இருக்கிறார்கள். அதற்கு அடுத்த இடத்தில்தான் நைஜீரியா (9 கோடியே 67 லட்சம்) உள்ளது.

    இந்த 22 கோடியே 89 லட்சம் ஏழைகளை குறைப்பது கடினமான பணியாகவே இருக்கும். கொரோனா தாக்கம், எரிபொருள் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய நாடாக இந்தியா இருக்கிறது.

    உலகிலேயே அதிகமான ஏழைக்குழந்தைகள் இருப்பதும் இந்தியாவில்தான். 9 கோடியே 70 லட்சம் ஏழைக்குழந்தைகள் உள்ளனர். மற்ற நாடுகளின், அனைத்து வயதினரை சேர்ந்த மொத்த ஏழைகளின் எண்ணிக்கையை விட இது அதிகம். இந்தியாவில் 5-ல் ஒரு குழந்தை, ஏழை குழந்தையாக உள்ளது.

    இந்தியாவில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், காஷ்மீர், ஆந்திரா, சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடந்த 7 ஆண்டுகளில் வறுமை குறைந்துள்ளது.

    இந்தியாவில் கிராமப்புற பகுதிகளில்தான் அதிக ஏழைகள் வசிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அவர்கள் எண்ணிக்கை குறைவுதான். அதுபோல், பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் வறுமை அதிகமாகவும், ஆண் தலைமை தாங்கும் குடும்பத்தில் வறுமை குறைவாகவும் உள்ளது.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும்.
    • இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.

    ஜெனீவா:

    இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே இறுதிக்கட்ட போர் நடந்தது. அப்போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள்.

    இதுதொடர்பாக இலங்கை அரசை ஐ.நா.வும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2012, 2013, 2014, 2015, 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இருப்பினும், இலங்கை அரசிடம் மாற்றம் ஏற்படாததால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் இத்தகைய வரைவு தீர்மானத்தை உருவாக்கின. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 51-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

    அதில், அந்த வரைவு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கை இறுதிக்கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு காரணமானவர்களை பொறுப்புக்கு உள்ளாக்க வேண்டும். இலங்கையில் மனித உரிமைகளையும், நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்.

    மேலும், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட முன்னாள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது வழக்கு தொடர வேண்டும். பாரபட்சமற்ற, சுதந்திரமான விசாரணைக்கு நாங்கள்உதவுவோம்.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானம் மீது நேற்று வாக்கெடுப்பு நடந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் மொத்தம் 47 நாடுகள் உள்ளன. வாக்கெடுப்பில், தீர்மானத்துக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட 20 நாடுகளும், எதிராக சீனா, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளும் வாக்களித்தன.

    இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. இந்தியா, ஜப்பான், நேபாளம், கத்தார் உள்பட 20 நாடுகள் புறக்கணித்தன.

    பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

    வாக்கெடுப்புக்கு இடையே இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்கி, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் இந்திரா மணி பாண்டே ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13-வது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது. இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல.

    இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும்.

    இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.

    இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு மறுவாழ்வு பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது.

    இவ்வாறு இந்திய தூதர் கூறியுள்ளார்.

    • இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

    கொழும்பு:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உரங்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே தடை விதித்தார். இதைத் தொடர்ந்து அங்கு உணவு தானிய உற்பத்தி குறைந்துள்ளது. டாலர் தட்டுப்பாட்டால் உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதனால் இலங்கையில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.நா. உலக உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லேவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இலங்கை நிலைமையை நேரில் கண்டறிய வருமாறு அவருக்கு ரணில் விக்ரமசிங்கே அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அவரும் ஏற்று, இலங்கை வர முன்வந்துள்ளார். இதை ரணில் விக்ரமசிங்கே டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

    இலங்கைக்கு உயிர் காக்கும் உதவிகள் வழங்குவதற்கு 47.2 மில்லியன் டாலர் (ரூ.354 கோடி) நிதி வேண்டும் என்று கூறி நன்கொடைகளை ஐ.நா. சபை கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ரோஹிங்கியா அகதிகள் 7 பேரை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்தியதற்கு ஐநா மனித உரிமைகள் ஆணையம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. #UN #Rohingya
    ஜெனீவா:

    இந்தியாவில் சட்டவிரோதமாக சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்க மாநில அரசுக்களிடம் கேட்டுகொண்டிருந்தது. சமீபத்தில், முதல் கட்டமாக 7 பேர் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டனர்.

    மணிப்பூரில் உள்ள மொரே எல்லையில், மியான்மர் நாட்டு அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் 7 பேரையும் ஒப்படைத்தனர். இந்தியா வந்த ரோஹிங்யாக்கள் நாடு கடத்தப்படுவது, இதுவே முதல் முறையாகும். முன்னதாக, தாங்கள் மியான்மருக்கு சென்றால் இனப்படுகொலைக்கு ஆளாவோம் என்பதால் தங்களை நாடு கடத்தக்கூடாது என 7 பேர் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் தலையிட மறுத்து விட்டது.
    இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு அசாமில் சட்ட விரோதமாக குடியேறினர். இவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்து சிலிசார் சிறையில் அடைத்து இருந்தனர். இவர்களை நாடு கடத்த உள்ளூர் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், இந்தியா 7 ரோஹிங்யாக்களை மியான்மருக்கு நாடு கடத்தியதற்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மியான்மரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக ராணுவம் ஏற்கனவே கொடூரமான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் இப்போது அங்கு செல்பவர்களும் அதே நிலைதான் நேரிடும் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்த நிலையிலும் இந்தியா நடவடிக்கையை எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 

    மியான்மருக்கு நாடு கடத்தப்பட்ட 7 பேரின் பாதுகாப்பு குறித்து அதீத கவலைக்கொள்வதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகள் தங்களுடைய எச்சரிக்கைக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் ஐ.நா. சபை கவலையை தெரிவித்துள்ளது.
    அண்டை நாடுகளில் இருந்து அகதிகளாக நுழைய முயன்ற சுமார் 13 ஆயிரம் பேரை உணவு, தண்ணீர் இன்றி சஹாரா பாலைவனத்தில் துரத்தி விட்டதாக அல்ஜீரியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    அல்ஜீர்ஸ்:

    சோமாலியா, நைஜீரியா, மாலி மற்றும் லிபியா போன்ற பகுதிகளில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரனமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பகுதிகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் அண்டை நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைய முயற்சிக்கின்றனர்.

    ஆனால், அவர்கள் உள்ளே நுழைய விடாமல் தடுக்கப்பட்டு சஹாரா பாலைவனத்திற்கு துரத்தப்படுகின்றனர். 48 டிகிரி வெயில் கொளுத்தும் பாலைவனத்தில் அகதிகள் இறக்கிவிடப்படும் அவலம் கடந்த பல மாதங்களாகவே அரங்கேறியுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் சுமார் 13 ஆயிரம் அகதிகள் அவ்வாறு இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. 

    அவர்களில் கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பசி, தாகம் மற்றும் வெயிலின் தாக்கத்தால் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த அகதிகள் பாலைவனத்தில் தஞ்சமடைந்துள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



    அகதிகளில் பலரை ஐ.நா மீட்புக்குழு மீட்டுள்ளது. அல்ஜீரிய அரசின் இந்த செயலை ஐ.நா கடுமையாக கண்டித்துள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என தனது மீதான குற்றச்சாட்டை அல்ஜீரிய அரசு மறுத்துள்ளது. 

    இருப்பினும் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை அகதிகள் மேம்பாட்டுக்காக ஐரோப்பாவில் இருந்து சுமார் 111.3 மில்லியன் டாலர் உதவித் தொகையை அல்ஜீரியா பெற்றுள்ளது. 

    இதுவரை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளின் எண்ணிக்கையை அல்ஜீரியா வெளியிடவில்லை என்றாலும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை 2,888 என அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    காஸா எல்லையில் பாலஸ்தீனியர்கள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வகை செய்யும் தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு சபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்கா அதனை நிராகரித்தது. #GazaStrip
    நியூயார்க்:

    இஸ்ரேல் - பாலஸ்தீன எல்லையான காஸா முனைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீன மக்கள் இடையே மோதல் நடந்து வருகிறது. நேற்று, இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் பாலஸ்தீன் செவிலியர் பெண் பலியானததை தொடர்ந்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது.

    இதனை அடுத்து, குவைத் மற்றும் சில வளைகுடா நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. காஸா எல்லை மற்றும் மேற்குக்கரை மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது, அங்கு சர்வதேச பாதுகாப்பு குழுவை ஐ.நா பார்வையில் அமைப்பது ஆகியன அந்த தீர்மானத்தின் சிறப்பு அம்சமாகும்.

    நேற்று, இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா இந்த தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய அமெரிக்க பிரதிநிதி நிக்கி ஹாலே, ‘இஸ்ரேல் மீது எல்லா குற்றச்சாட்டுகளையும் சுமத்த ஐ.நா உறுப்பு நாடுகள் விரும்புகின்றன. ஆனால், ஹமாஸ் மீது குற்றம் சாட்ட யாருக்கும் விருப்பமில்லை’ என கூறினார்.

    சீனா, பிரான்ஸ், ரஷியா இந்த தீர்மானத்தை ஆதரிக்க பிரிட்டன் வாக்கெடுப்பை புறக்கணித்தது. பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்தி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 
    ஸ்டைர்லைட் ஆலை திறப்புக்கு யார் காரணம்? என விவாதிக்க தயார் என ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், ஒருநாள் அல்ல ஆண்டு முழுவதும் விவாதிக்க தயார் என அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். #Sterlite #DJayaKumar #MKStalin
    சென்னை:

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டதாக சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கருத்து தெரிவித்த மு.க.ஸ்டாலின், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் விவாதிக்க நானும், திமுக எம்எல்ஏக்களும் தயாராக உள்ளோம். முதல்வர் தயாராக உள்ளாரா என்பதை தெரிவிக்கட்டும்” என கூறியிருந்தார்.

    மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவு எடுத்தால், சட்டமன்ற கூட்டத் தொடரில் திமுக பங்கேற்க தயார்” எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், இது தொடர்பாக இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஸ்டெர்லைட் ஆலை தொடங்க யார் காரணம் என்பது குறித்து, வருடம் முழுவதும் விவாதிக்க தயாராக உள்ளோம். ஸ்டாலின் தயாராக உள்ளாரா?. சட்டப்பேரவைக்கு வந்து திமுக பேசட்டும். அவர்களது துரோகத்தை நாங்கள் கூறுகிறோம்” என்றார்.

    மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை மூடியது மூடியதுதான், அரசாணை எங்கே போனாலும் செல்லும். ஐநா சபைக்கே சென்றாலும் இனி ஆலையை திறக்க முடியாது” என ஜெயக்குமார் கூறினார்.
    ×