search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 168147"

    • புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்யலாம்.
    • இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் கம்பேனியன் மோடு (companion mode) பெயரில் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. புதிய வாட்ஸ்அப் ஐஒஎஸ் 23.10.76 வெர்ஷன் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிகபட்சம் நான்கு ஐபோன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும்.

    புதிய கம்பேனியன் மோடு அம்சம் கொண்டு பயனர்கள் ஒற்றை அக்கவுண்டினை அதிக ஐபோன்களில் லாக் இன் செய்து கொள்ளலாம். இந்த அம்சம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது. இந்த அம்சம் கொண்டு வாட்ஸ்அப் செயலி இரண்டாவது சாதனத்திலும் இயங்க செய்ய, வலதுபுறம் இருக்கும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்ய வேண்டும்.

    அடுத்து லின்க் டிவைஸ் (link device) ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி கியூஆர் கோடு திரையில் தோன்றும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் பிரைமரி சாதனத்தில், செட்டிங்ஸ் மற்றும் லின்க்டு டிவைசஸ் (linked devices) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதற்காக ஐபோனில் கேமராவை இயக்குவதற்கான அனுமதியை வழங்க வேண்டும்.

    இவ்வாறு செய்த பின் இரண்டு சாதனங்களிலும் வாட்ஸ்அப் சின்க் செய்யப்பட்டு விடும். பிரைமரி சாதனத்தில் இண்டர்நெட் இணைப்பு இல்லாத சமயத்திலும், இரண்டாவது சாதனத்தில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியும். இரண்டாவது ஐபோனில் வாட்ஸ்அப் வீடியோ / ஆடியோ அழைப்புகளை மேற்கொண்டு மற்ற அம்சங்களை இயக்கலாம்.

    சில சாட்கள் முழுமையாக லோடு ஆகாமலோ அல்லது, கால் லாக்ஸ் சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போதிலும், அனைத்தும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்அப்-இன் தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்து உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன.
    • முன்னதாக குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டது.

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை WABetainfo தெரிவித்து இருக்கிறது. வாட்ஸ்அப் யூசர்நேம் (Whatsapp Username) மற்றும் ரிடிசைன்டு செட்டிங்ஸ் இண்டர்ஃபேஸ் உள்ளிட்ட அம்சங்கள் விரைவில் வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட இருக்கிறது.

    சமீபத்தில் தான் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.

    வாட்ஸ்அப் யூசர்நேம்:

    புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- ப்ரோஃபைல் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.

    இந்த அம்சம் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மொபைல் நம்பர் மூலம் காண்டாக்ட்களை அறிந்து கொள்வதற்கு மாற்றாக யூசர்நேம் மூலம் அறிந்து கொள்ள செய்கிறது. பயனர்கள் தாங்கள் விரும்பும் வித்தியாசமான அல்லது எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் யூசர்நேமை செட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் தங்களது மொபைல் நம்பர் இல்லாமல், காண்டாக்டை மற்றவர்களுக்கு ஷேர் செய்ய முடியும்.

    ரிடிசைன்டு செட்டிங்ஸ்:

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு 2.23.11.16 மற்றும் 2.23.11.18 வெர்ஷன்களில் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கம் உள்ளது. இதில் மூன்று ஷாட்கட்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஷாட்கட்-ஐ க்ளிக் செய்ததும், பயனர்கள் ரிடிசைன்டு செட்டிங்ஸ் பக்கத்தை பார்க்க முடியும். தற்போது இந்த பக்கத்தில் ப்ரோஃபைல் போட்டோ மற்றும் கியூஆர் கோடுகளை பார்க்க முடியும்.

    மேம்பட்ட இண்டர்ஃபேசில்: ப்ரோஃபைல், பிரைவசி மற்றும் காண்டாக்ட்கள் உள்ளன. வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பக்கத்தில் ஸ்டார்டு மெசேஞ்சஸ் ஷாட்கட் வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் செட்டிங்ஸ் பகுதியில் சிறு மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • தற்போது இந்த அம்சம் டெக்ஸ்ட் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
    • முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

    வாட்ஸ்அப் செயலியில் மெசேஞ்ச்களை எடிட் செய்யும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப்-இல் மெசேஞ்ச்களை அனுப்பிய 15 நிமிடங்களில் அவற்றை எடிட் செய்து கொள்ள முடியும். இந்த வசதி வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, 'edited' என்று வார்த்தை இடம்பெற்று இருக்கும்.

    பயனர்கள் ஏற்கனவே அனுப்பிய மெசேஞ்ச்களை எடிட் செய்யும் போது, அதற்கான நோட்டிஃபிகேஷன் தனியாக அனுப்பப்படாது. தற்போது இந்த அம்சம் மெசேஞ்ச்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இது புகைப்படம், வீடியோக்கள் மற்றும் இதர மீடியா அல்லது அவற்றுக்கான தலைப்பு (கேப்ஷன்) உள்ளிட்டவைகளுக்கு பொருந்தாது.

    வாட்ஸ்அப் மெசேஞ்ச்-ஐ எடிட் செய்வது எப்படி?

    - எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்ச்-ஐ அழுத்திப் பிடிக்க வேண்டும்

    - இனி ஆண்ட்ராய்டில் மோர் (More) ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள்

    - ஐபோனில் எடிட் (Edit) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    - எடிட் செய்ய வேண்டிய மெசேஞ்சில் மெனு (Menu) - எடிட் மெசேஞ்ச் (Edit Message) ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

    - எடிட் ஆப்ஷனில் மெசேஞ்ச்-ஐ அப்டேட் (Update) செய்யுங்கள்

    - மெசேஞ்ச்-ஐ அப்டேட் செய்து முடித்ததும், அதனை அப்டேட் செய்தால் குறுந்தகவல் எடிட் செய்யப்பட்டு விடும்.

    முதற்கட்டமாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது. இன்று முதல் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு, ஐபோன், டெஸ்க்டாப் தளங்களில் வரும் நாட்களில் வழங்கப்படும். 

    • கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க 9700041114 என்ற வாட்ஸ்-அப் புகார் எண் அறிமுகம் செய்யப்பட்டது.
    • கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் சுத்தமாக செயல்படவில்லை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட புதிய கலெக்டராக கிறிஸ்துராஜ் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. மாநில இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- திருப்பூர் மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க 9700041114 என்ற வாட்ஸ்-அப் புகார் எண்ணுக்கு வாட்ஸ்-அப் செய்தியாக தெரிவிக்க அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக வேலை செய்யாத மாவட்ட கலெக்டர் அலுவலக வாட்ஸ் அப் புகார் எண் சுத்தமாக செயல்படவில்லை. எனவே உடனடியாக வாட்ஸ்அப் எண்ணை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் விரைவாக தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட புதிய கலெக்டர் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் எண் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்காலிகமாக தடைபட்டுள்ளது. ஓரிரு நாளில் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம் போல் மாவட்ட கலெக்டர் அலுவலக எண்ணில் தொடர்ச்சியாக பொது மக்கள் புகார் அளிக்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம்.
    • வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயில்களில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என தினமும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் பயணத்துக்கு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கலாம். மேலும் பயணிகளுக்கு அட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2,500-ல் மாத பயணம் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலி மூலம் மெட்ரோ ரெயில் டிக்கெட் பெறும் வசதி இன்று தொடங்கப்பட்டது.

    இந்த வசதியை திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார். 83000 86000 என்ற எண்ணில் CMRL Live எனும் சாட் வழியே டிக்கெட்டை பதிவு செய்யலாம். செல்ல வேண்டிய இடத்திற்கான கட்டணத்தையும் வாட்ஸ்அப் மூலம் செலுத்தி உடனே டிக்கெட்டை பெறலாம்.

    இந்த புதிய வசதி மூலம் ஒரு செல்போனில் இருந்து 6 டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் பதிவு செய்யலாம். வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பதிவு செய்தால் 20 சதவீதம் தரப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    பயணர்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருந்தோ புறப்படும் போது, மெட்ரோ நிர்வாகம் கொடுத்த எண்ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேறும் இடத்தை அனுப்பி கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம். பயணரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வரும் 'கியூஆர்' கோடை பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம்.

    மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் கூறும்போது, "மெட்ரோ ரெயிலில் 2-ம் கட்ட திட்ட பணியில் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் சுரங்கப்பாதை தோண்டும் பணி தொடங்கி உள்ளது. இப்பணி 2026-ம் ஆண்டு முடிவடைந்து ரெயில்கள் இயக்கப்படும். மெட்ரோ ரெயிலில் தினமும் 2 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். உலகிலேயே அதிக பயணிகள் பயணம் செய்யும் மெட்ரோவாக சென்னை உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே மெட்ரோ ரெயில் அமைக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் மெட்ரோ ரெயிலில் ஏ.சி.யில் பயணம் செய்ய பலர் ஆர்வத்துடன் உள்ளனர் என்றார்.

    • முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன.
    • பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

    சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம் இ-டிக்கெட்களை வினியோகம் செய்யும் பணிகளை சிஎம்ஆர்எல் துவங்கி இருக்கிறது.

    பயனர்கள் வாட்ஸ்அப் மூலம் சென்னை மெட்ரோ ரெயில் டிக்கெட் எடுக்க மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள வாட்ஸ்அப் எண்ணிற்கு மெசேஞ்ச் அனுப்ப வேண்டும். இவ்வாறு செய்ததும், அந்த எண்ணில் இருந்து மெட்ரோ ரெயில் நிலைய விவரங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். அதில் செல்ல வேண்டிய ரெயில் நிலையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

     

    இனி, டிக்கெட்டுக்கான பணம் செலுத்தும் ஆப்ஷன்கள் திரையில் தோன்றும். அதன்படி பயனர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் அல்லது கூகுள் பே போன்ற சேவைகளை பயன்படுத்தி பணம் செலுத்தலாம். புதிய வசதி மூலம் பயனர்கள் அவசர கால பயணத்திற்கோ அல்லது, எப்போதாவது பயணம் செய்பவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்ரோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில், முதற்கட்டமாக டோக்கன் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளே டிக்கெட்களாக வினியோகம் செய்யப்பட்டு வந்தன. பின் டோக்கன்கள் வரிசையில், ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து கியூஆர் கோடு முறையில் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வரிசையில் தான் தற்போது வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. "கியூஆர் கோடு டிக்கெட்களை தவிர வாட்ஸ்அப் சார்ந்த இ டிக்கெட்கள் அவசர கதியில் மெட்ரோ சேவையை பயன்படுத்துவோருக்கும், வரிசையில் நின்று டிக்கெட் வாங்க நேரமில்லாத பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். பயண அட்டையை ரிசார்ஜ் செய்ய நேரமில்லாதவர்களும் அவசரத்திற்கு இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்," என்று மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

    மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.

    தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

     

    "இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

    வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.

    எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.

    • மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது.
    • கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    நாகர்கோவில்:

    விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்திற்கு பலியானவர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். குமரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை எதுவும் நடைபெறுகிறதா என்பது குறித்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மலையோர கிராமங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்குகள் உள்ளது. அந்த பகுதிகளில் போலீசார் மீண்டும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் கள்ளச்சாராயம் எதுவும் சிக்கவில்லை.

    கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 70103 63173 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

    • இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார்.
    • இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.

    வாட்ஸ்அப் செயலி பயனர்களின் ஸ்மார்ட்போன் மைக்ரோபோனினை இயக்கியதாக எழுந்த சர்ச்சையில் அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பயனர் தனியுரிமை விவகாரத்தில் இதுபோன்ற செயலை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார். தனியுரிமை மீறப்பட்ட விவகாரத்தை அரசு முழுமையாக ஆய்வு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

    "தனியுரிமை விவகாரத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத விதிமீறல் ஆகும். டிஜிட்டல் தனியுரிமை தரவு பாதுகாப்பு மசோதா தயாரிக்கப்பட்டு வரும் போதிலும், இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து ஆய்வு செய்து விதிமீறல் உறுதியாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுப்போம்," என்று மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் டுவிட்டர் பிதிவில் தெரிவித்து இருக்கிறார்.

     

    முன்னதாக வாட்ஸ்அப் நிறுவனம் பயனர் அனுமதியின்றி அவர்களது ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கியதாக டுவிட்டர் பொறியாளர் ஒருத்தர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் ஆதாரமாக வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து டுவிட்டர் தலைவர் எலான் மஸ்க், 'யாரையும் நம்பாதீர்கள்' என்று டுவிட் செய்திருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளித்த வாட்ஸ்அப், "பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப் இடையே குறைபாடு இருப்பதை சுட்டிக் காட்டி குற்றச்சாட்டு தெரிவித்த டுவிட்டர் பொறியாளருடன் கடந்த 24 மணி நேரமாக பேசி வருகிறோம். இது ஆண்ட்ராய்டு பிழையாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூகுளை கேட்டுக் கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தது.

    இது தொடர்பாக தொடர்ந்து விளக்கம் அளித்த வாட்ஸ்அப், "அனுமதி அளிக்கப்பட்டால், பயனர் அழைப்புகளை மேற்கொள்ளும் போது, வாய்ஸ் நோட் அல்லது வீடியோ பதிவிடும் போது மட்டுமே வாட்ஸ்அப் சம்பந்தப்பட்ட ஸ்மார்ட்போனின் மைக்ரோபோனை இயக்கும். அப்போதும் கூட இந்த தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும். இதனால் வாட்ஸ்அப் சார்பில் கூட யாராலும் அவற்றை கேட்கவே முடியாது," என்று தெரிவித்து இருக்கிறது. 

    • தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
    • புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.

    வாட்ஸ்அப் தளத்தின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் நேவிகேஷன் பார் போன்ற அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த நேவிகேஷன் பார் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டிலும் வழங்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

    இது பற்றி WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு செயலியின் கீழ்புறம் நேவிகேஷன் பார் வழங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்த அம்சம் மேலும் அதிக டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

     

    வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனின் கீழ்புறம் உள்ள நேவிகேஷன் பார் கொண்டு செயலியின் பல்வேறு ஆப்ஷன்களை எளிதில் இயக்கிவிட முடியும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை ரிடிசைன் செய்து - புதிதாக நேவிகேஷன் பார் போன்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது.

    புதிய அம்சம் குறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி, புதிய இண்டர்ஃபேஸ் கீழ்புறத்தில் பல்வேறு டேப்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சாட், கம்யுனிடிஸ், கால்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன. புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.

    தற்போது இந்த அம்சத்திற்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்த அம்சம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் மேலும் அதிக பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும். வாட்ஸ்அப்-இன் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

    Photo Courtesy: WABetaInfo

    • புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.
    • உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஸ்கிரீனில் பல்வேறு சாட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.

    புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது. ஒரே சமயம் பலருக்கு குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கொண்டிருப்போருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். எனினும், இவ்வாறு செய்யும் போது உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

     

    இந்த அம்சம் வேண்டாம் என்பவர்கள் அதனை டிசேபில் (செயலிழக்க) செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்ய வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- சாட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். புதிய அம்சத்திற்கான அப்டேட் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    வரும் நாட்களில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதவிர வாட்ஸ்அப்-இல் மல்டி-டிவைஸ் லாக்-இன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த முடியும். இந்த அம்சம் உலகளவில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும்.
    • இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது.

    பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) சார்பில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறும் தகவல் வாட்ஸ்அப்-இல் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆண்டு விழா கொண்டாட்டங்களின் அங்கமாக உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று வைரல் தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வைரல் குறுந்தகவலுடன் இணைய முகவரி ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

    வைரல் தகவலில் உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யும் பட்சத்தில் பயனர்கள் தங்களின் டேட்டா, பணம் அல்லது மிகமுக்கிய தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும். பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிரஸ் இன்ஃபர்மேஷன் பியூரோ சார்பில் வைரல் தகவலில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    வாட்ஸ்அப் குறுந்தகவல் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், அதில் துளியும் உண்மையில்லை. முற்றிலும் புதிய பஞ்சாப் நேஷனல் வங்கி விளம்பர யுக்தியின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ. 6 ஆயிரம் வரை வென்றிட முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 130-வது ஆண்டு விழாவை கொண்டாடுவதால், அரசாங்கம் சார்பில் உதவித்தொகை வழங்கப்படுவதாக குறிப்பிடப்பபட்டுள்ளது.

    இந்த தகவலுடன் இணைக்கப்பட்டு இருக்கும் இணைய முகவரியில் உள்ள வலைதளம் பார்க்க பஞ்சாப் நேஷனல் வங்கி வலைதளம் போன்றே காட்சியளிக்கிறது. அந்த வகையில், பயனர் போலி இணைய முகவரியை க்ளிக் செய்யும் பட்சத்தில் பணம், தனிப்பட்ட தகவல்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வாட்ஸ்அப்-இல் நீங்கள் சேமிக்காத எண்ணில் இருந்து வரும் குறுந்தகவல்களை பிளாக் மற்றும் ரிப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றை பிளாக் செய்யும் பட்சத்தில் இதுபோன்ற குறுந்தகவல்கள் இதே எண்ணில் இருந்து மீண்டும் வராது.

    ×