search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிகள்"

    • தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன.
    • அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் 11, 12 பொதுத்தேர்வு நடந்து முடிந்து உள்ளன. அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 20-ந் தேதி முடிகிறது.

    1 முதல் 9-ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடியும் நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு தொடங்குகிறது.

    அரசு, உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 28-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

    காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் வகுப்பு வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது.

    தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன.

    அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.

    இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டப்படி எவ்வித மாற்றமும் இல்லாமல் இறுதித்தேர்வு நடைபெறுகிறது.

    அரசு பள்ளிகளுக்கு 28-ந்தேதி கடைசி வேலை நாளாகும். 29-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ந்தேதி திறக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. கோடை வெப்பம் அப்போது அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளி திறப்பதை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு 220 வேலை நாட்கள் இந்த ஆண்டில் பள்ளிகள் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் புதன்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 5-ந் தேதி தொடக்கம்
    • தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடந்து முடிந்தது. பின்னர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி இன்று (2-ந்தேதி) முதல் 4 -ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ந்தேதி திறக்கப்படும். மேலும் இந்த நாட்களில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இடம்பெறாதவர்கள் பள்ளிகளில் உள்ள அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளுக்கான விடுமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே இன்று (2-ந்தேதி) அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    • திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 2021 - 22ம் கல்வியாண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்காக 5 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வாகியுள்ளனர்.இதற்கான பாராட்டு விழா தமிழக அரசின் கல்வித்துறை ஆணையரகம் சார்பில் சென்னையில் நடந்தது. இதில் திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், உத்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மனோன்மணி, கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மெரின் மற்றும் எலையமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாலன் ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    பள்ளியின் உட்கட்டமைப்பு வசதி மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 2023 - 24-ம் நிதியாண்டிற்கு, தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளுக்கு தலா 25 லட்சம் வீதம் ரூ. 1.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
    • பள்ளிகள் திறப்பு குறித்து சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    தொடர் மழை பெய்தபோது, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அவ்வப்போது விடுமுறை விடப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

    அவ்வகையில் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வரும் சனிக்கிழமை (டிசம்பர் 3) வேலை நாள் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

    • சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட வேண்டும்.

    திருப்பூர் : 

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து அரையாண்டு தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும். பொது வினாத்தாள் பாணியில் இத்தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு இன்னும் 3வாரங்களே உள்ள நிலையில் பாடங்களை முடிக்க, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் இரண்டாம் பருவ தேர்வு முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வியை தழுவியிருந்தால், உடனடியாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியை தழுவியோருக்கு பாடங்களை பகுதி பகுதியாக பிரித்து, சிறு சிறு தேர்வுகள் நடத்த வேண்டும். சிறப்பு வகுப்புகள் மூலம் கூடுதல் கவனம் செலுத்தி, 100 சதவீத தேர்ச்சிக்கு வகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், அரையாண்டு தேர்வு நெருங்கியுள்ள நிலையில் பாடத்திட்ட அழுத்தம் காரணமாக கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், படிக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். புளூ பிரின்ட் வெளியிடாததால் முக்கிய பகுதிகளை மட்டும் படிக்க வைக்க முடிவதில்லை. குறைந்தபட்ச கற்றல் கையேடு, வினா வங்கி ஆகியவற்றை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • 2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர்:

    பள்ளிகளில் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் தேசிய, சர்வதேச விருது பெற்ற, திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்கள் பார்ப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.படம் முடிந்ததும், மாணவர்களின் பின்னோட்டம் பெறப்படும். கதைக்களம், கதாநாயகர்கள், கதைக்கரு, தொழில்நுட்ப யுக்திகள் குறித்து ஆசிரியர்களுடன் மாணவர்கள் விவாதிக்க வேண்டும்.

    2008ல் தேசிய விருது பெற்ற கன்னட திரைப்படம் குப்பாச்சிகலு இம்மாதம் திரையிட உத்தரவிடப்பட்டுள்ளது.பெரும்பாலான பள்ளிகளில் இத்திரைப்படம் குழந்தைகள் தினம் முதல் திரையிடப்பட்டு வருகிறது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பகுதி வாரியாக பிரித்து இந்த வார இறுதி வரை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.காணாமல் போன சிட்டுக்குருவியை, இரு குழந்தைகள் தேடும் போது அவர்களின் பயணத்தில் சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள், அனுபவங்கள் குறித்து இப்படம் விளக்குவதாக உள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான படங்கள் மாதந்தோறும் பள்ளிகளில் திரையிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது.
    • 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2022-2023) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வுகள் கடந்த மாதம் நடந்தது. தேர்வு முடிந்து 1-ந்தேதி முதல் விடுமுறை விடப்பட்டது.

    இதில் 9 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்பட்டன.

    பயிற்சி

    ஆனால், அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1-ந்தேதி முதல் இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

    விடுமுறை நாட்களில் அரசு ெதாடக்கப்பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளுக்கு எண்ணும் எழுத்தும் 2-ம் கட்ட பயிற்சி நடந்தது. . இதில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்றனர்.

    நாளை பள்ளிகள் திறப்பு

    இந்த பயிற்சி நிறைவடைந்ததை அடுத்து 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அரசு, அரசு பெறும் தொடக்கப் பள்ளிகள் 12 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நாளை (13-ந் தேதி) திறக்கப்படுகிறது.

    • சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுகிறது
    • அரசின் விடுமுறை நீட்டிப்பு அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு கடந்த மாதம் (செப்டம்பர்) 30ஆம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விடுமுறைகளுடன் சேர்த்து அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு 6ம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால், கடந்த கோடை விடுமுறை நாட்களின்போது, தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் அதற்கு ஈடுசெய்யும் பணி விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று, தமிழகத்தில் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும், 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    அதன்பின்னர் மெட்ரிகுலேஷன் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பானது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. அதேசமயம், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெறுவதால், பள்ளிகள் நாளை திறக்கப்படுமா அல்லது தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, 10ஆம் தேதி திறக்கப்படுமா அல்லது 13ஆம் தேதி திறக்கப்படுமா என்ற குழப்பம் நீடித்தது.

    இதுபற்றி மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள 9ம் தேதி வரை விடுமுறை என்பது, மெட்ரிக் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். எனவே, சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை செயல்படும். 

    • பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலக்கூட்டம் பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

    செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலர் செல்வி பிளாரன்ஸ் விளக்க உரையாற்றினார்.

    அப்போது அவர் குழந்தைகளை தொழிலாளர் ஆக்குதல், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுத்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுத்தல், குழந்தைகள் நலனுக்கான இலவச தொலைபேசி எண் 1098 மற்றும் அவர்களின் சட்டதிட்ட பாதுகாப்பு பற்றியும் பேசினார்.

    வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவின் மூலம் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பலகையை பேரூராட்சி அலுவலகத்தில் வைப்பது எனவும், பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகாராஜன், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவர் டாக்டர் கென்னடி, மாவட்ட தலைவர் ராஜ்கமல், துணைத் தலைவர் உதயகுமார், கா.ஆ. மேல்நிலைபள்ளியின் ஆசிரியர் கண்ணன் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • காலை 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் காலை சிற்றுண்டி உணவு வழங்கினார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து இன்று முதல் தமிழகத்தின் அனை த்து மாவட்டங்களிலும் முதலமை ச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மற்றும் கும்பகோணம் மாநகராட்சிகளில் உள்ள 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டது.

    தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள தொடக்கப் பள்ளியில் இன்று காலை 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ -மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் வரவேற்று பேசினர். அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் காலை சிற்றுண்டி உணவு வழங்கினார். தொடர்ந்து மாணவர்கள் சிற்றுண்டி சாப்பிட்டனர்.

    முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் தஞ்சை மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவ- மாணவிகளும், கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளிகளில் 1067 மாணவ -மாணவிகள் என மொத்தம் 21 மாநகராட்சி தொடக்க பள்ளிகளில் 1442 மாணவ- மாணவிகள் பயனடைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, கவுன்சிலர்கள் மேத்தா, நீலகண்டன், மாணவ- மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இத்திட்டம் ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது
    • ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 14000 பள்ளிகளை ரூ.27360 கோடி செலவில் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ், கேந்திரிய வித்யாலயாக்கள் மற்றும் நவோதயா வித்யாலயாக்கள் உட்பட 14,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் எழுச்சிமிகு இந்தியாவிற்கான பிரதமரின் பள்ளிகளாக மேம்படுத்தப்படும் என அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், அனுராக் தாக்கூர் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளை வலுப்படுத்தும் திட்டமாகும். ஐந்தாண்டுகளுக்கு மொத்த திட்டச் செலவு ரூ.27,360 கோடியாக இருக்கும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடியாக இருக்கும். இத்திட்டத்தின் மூலம் 18.7 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.

    ×