search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபோன்"

    • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மாடல்களுக்கு இந்தியாவில் 5ஜி சப்போர்ட் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
    • முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவையை வெளியிடும் பணிகளை துவங்கி விட்டன.

    இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் மாடல்களுக்கு எப்போது 5ஜி நெட்வொர்க் சப்போர்ட் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான மாடல்களுக்கு 5ஜி சப்போர்ட் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் 12 மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் விரைவில் 5ஜி சேவையை அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது.

    ஐபோன்களில் 5ஜி வசதியை வழங்கும் முன் பாதுகாப்பான டெஸ்டிங் மற்றும் வேலிடேஷன் பணிகளை மேற்கொள்ள ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மென்பொருள் அப்டேட் மூலம் 5ஜி வசதி ஆக்டிவேட் செய்யப்படும். ஆப்பிள் ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்க பாரதி ஏர்டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    5ஜி சப்போர்ட் உடன் ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் அனைத்து ஐபோன் மாடல்களிலும் இரண்டு சிம் ஸ்லாட்களிலும் 5ஜி வசதியை பயன்படுத்த முடியும். அதன்படி 5ஜி வசதி கொண்ட குறைந்த விலை ஐபோன் மாடல்களாக ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் SE 2022 உள்ளன. ஐபோன்களில் 5ஜி வசதி வழங்குவதற்கான அப்டேட்டை வெளியிடுவது தொடர்பாக பல்வேறு ஐயங்கள் குறித்து ஆப்பிள் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளன.

    முன்னதாக வெளியான தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி நெட்வொர்க்கில் ஐபோன்களை பரிசோதனை செய்யும் பணிகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த சோதனைகள் டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஐபோன் SE 2022 மாடல்களை வைத்திருப்போர் அதிவேக 5ஜி சேவையை இந்த ஆண்டு இறுதியில் அனுபவிக்க முடியும்.

    • ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் புது ஸ்மார்ட்போன் மாடலாக ஐபோன் 14 இருக்கிறது.
    • 2017 முதல் ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது.

    சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஆப்பிள் நிறுவனம் 2017 முதல் இந்தியாவில் தனது ஐபோன் உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. முதன் முதலில் ஐபோன் SE மாடல் தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த வரிசையில், ஐபோன் 12, ஐபோன் 13 மாடல்களுடன் ஐபோன் 14 தற்போது புதிதாக இணைந்துள்ளது. இம்மாத துவக்கத்தில் ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் மேம்பட்ட கேமரா, சக்திவாய்ந்த சென்சார்கள், செயற்கைக்கோள் மெசேஜிங் என ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஐபோன் 14 சீரிசில்- ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த மாடல்களில் ஐபோன் 14 உற்பத்தி இந்தியாவில் அடுத்த சில தினங்களில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஐபோன்கள் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    இந்தியாவில் தமிழகத்தின் சென்னை அருகில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில் புது ஐபோன் 14 மாடல்கள் உற்பத்தி நடைபெற உள்ளன. சர்வதேச சந்தையில் முன்னணி மின்சாதன உற்பத்தியாளர் மற்றும் மிக முக்கிய ஐபோன் உற்பத்தியாளர் என்ற பெருமையை ஆப்பிள் பெற்று இருக்கிறது.

    • அமேசான் வலைதளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது.
    • இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்பட உள்ளன.

    ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் 14 மாடல்களை அறிவித்ததை தொடர்ந்து பழைய ஐபோன் மாடல்களின் விலையை குறைத்து இருக்கிறது. அதன்படி ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஐபோன் 12 மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 900 என மாறி இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 57 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


    இந்த நிலையில், ஐபோன் 12 மாடல் விலை அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் சிறப்பு விற்பனையின் போது ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக மாறும் என அமேசான் அறிவித்து இருக்கிறது. இதே தகவலை உறுதிப்படுத்தும் டீசர் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஐபோன் 12 மாடலின் விலை ரூ. 40 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 (64ஜிபி) மாடலுக்கான விலையாக இருக்கும் என தெரிகிறது.

    ஐபோன் 12 மாடலில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்ப்ளே, ஆப்பிள் ஏ14 பயோனிக் சிப்செட், 4 ஜிபி ரேம், ஐஒஎஸ் 14, டூயல் 12MP பிரைமரி கேமராக்கள், 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 12 மாடலில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. 2020 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட போது ஐபோன் 12 மாடல் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வருடாந்திர பிளாக்‌ஷிப் சலுகை விற்பனையை அடுத்த வாரம் நடத்த இருக்கிறது.
    • இந்த விற்பனையில் ஐபோன்களுக்கு வழங்கும் சலுகை விவரங்களை டீசர்களாக வெளியிட்டு உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ், ஐபோன் 12 மினி மற்றும் ஐபோன் 11 சீரிஸ் மாடல்களுக்கு பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையில் அசத்தல் சலுகைகளை வழங்க இருக்கிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு சலுகை விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. சிறப்பு விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு அசத்தல் தள்ளுபடி வழங்கப்பட இருக்கிறது.

    அந்த வகையில் ஐபோன் மாடல்களுக்கு ப்ளிப்கார்ட் வழங்க இருக்கும் சலுகை விவரங்களை டீசர்களாக தனது வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது. வலைதளம் மட்டுமின்றி ஸ்மார்ட்போன் செயலியிலும் ஐபோன்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் டீசர்களாக வெளியிடப்பட்டு இருக்கின்றன.


    சலுகை விவரங்கள்:

    டீசர்களின் படி ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 சிறப்பு விற்பனையில் ஐபோன் 13 மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 990 என துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஐபோன் 13 ப்ரோ மாடலின் விலை ரூ. 89 ஆயிரத்து 990 என்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 990 என என்று துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐபோன் 13 மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது.

    ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 26 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் 2022 விற்பனையின் போது ஐபோன் 12 மினி விலை ரூ. 39 ஆயிரத்து 990 அல்லது குறைவாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஐபோன் 11 மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 990-க்கு கிடைக்கும். ஐபோன் 12 மினி மாடலின் விலை ரூ. 55 ஆயிரத்து 359 என்றும் ஐபோன் 11 விலை ரூ. 43 ஆயிரத்து 990 என கிடைக்கும் என்று ப்ளிப்கார்ட் டீசர்களில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மாடல்கள் விற்பனையை நிறுத்த பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டு இருக்கிறது.
    • பயனர்களுக்கு முழுமையற்ற சாதனங்களை விற்பனை செய்வதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்து உள்ளது.

    பிரேசில் நாட்டு அரசாங்கம் சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்யக்கூடாது என ஆப்பிள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் முழுமை பெறாத நிலையில் இருப்பதாக அந்நாட்டு அரசு மேலும் தெரிவித்து உள்ளது.

    ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.38 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து இருப்பதோடு சார்ஜர் இல்லாமல் ஐபோன் 12 மற்றும் அதற்கு பின் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்களின் விற்பனையை நடத்தக் கூடாது என பிரேசில் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மிகவும் அத்தியாவசியமான சாதனம் இன்றி ஐபோன் விற்பனை செய்யப்பட்டு வந்தது என அந்நாட்டு அரசிதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.


    சார்ஜர் இல்லாமல் ஐபோன் விற்பனை செய்வதால் காற்று மாசு குறைக்கப்படுவதாக கூறும் ஆப்பிள் கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை என பிரேசில் நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சார்ஜர் இல்லாமல் ஸ்மார்ட்போன் விற்பனை செய்வதால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்த்தவும் எந்த ஆதாரமும் இல்லை என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

    இன்று (செப்டம்பர் 7) இரவு நடைபெற இருக்கும் ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக பிரேசில் அரசு இத்தகைய உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இது பற்றி ஆப்பிள் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை மிக விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • 2007 ஆம் ஆண்டு வாக்கில் முதல் ஐபோன் மாடலை ஸ்டீவ் ஜாப்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்தார்.

    ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தலைமுறை 2007 ஐபோன் மாடல் 35 ஆயிரம் டாலர்கள், ரூ. 28 லட்சம் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் பிரிக்கப்படாத 2007 ஐபோன் மாடல் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டது. 2007 ஜனவரி 9 ஆம் தேதி அப்போதைய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை அறிமுகம் செய்தார்.

    முதல் தலைமுறை ஐபோன் மாடலில் தொடுதிரை வசதி, ஐபாட், கேமரா, பிரவுசிங் வசதி மற்றும் பல்வேறு இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஐபோன் அறிமுக நிகழ்வு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மேக்வொர்ல்டு கன்வென்ஷனில் நடைபெற்றது. இந்த மாடலில் தொடுதிரை, 2MP கேமரா, விஷூவல் வாய்ஸ் மெயில், வெப் பிரவுசர் போன்ற அம்சங்கள் உள்ளன.


    2007 ஜூன் மாத வாக்கில் ஐபோன் மாடல் விற்பனைக்கு வந்தது. ஐபோன் 4ஜிபி மாடல் விலை 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 39 ஆயிரத்து 884 என்றும் 8 ஜிபி மாடல் விலை 599 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 47 ஆயிரத்து 877 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆர்ஆர் ஆக்‌ஷன் நிறுவனம் சிறிதளவும் பிரிக்கப்படாத ஐபோன் பாக்ஸ்-ஐ ஏல விற்பனைக்கு அறிவித்து இருந்தது. இந்த ஐபோன் ஸ்கிரீனில் 12 ஐகான்கள் இடம்பெற்று இருந்தது. ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற ஏலம் "ஆப்பிள், ஜாப்ஸ் மற்றும் கம்ப்யுட்டர் ஹார்டுவேர்" தலைப்பில் நடைபெற்றது. இதில் மொத்தம் 70-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.

    இதே ஏலத்தில் ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியக் தனது கையால் சோல்டரிங் செய்த 1 சர்கியுட் போர்டு, 6 லட்சத்து 77 ஆயிரத்து 196 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. இத்துடன் திறக்கப்படாத முதல் தலைமுறை ஐபாட் 5ஜிபி மாடல் 25 ஆயிரம் டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

    • ஐபோன், ஐபேட் மற்றும் மேக் சாதனங்களுக்கு ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருந்தது.
    • அப்டேட் வெளியானதன் பின்னணியில் இப்படியொரு காரணம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஹேக்கர்கள் சாதனத்தை முழுமையாக இயக்க வழி செய்யும் பாதுகாப்பு குறைபாடு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக் போன்ற சாதனங்களில் தீர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரச்சினையில் பயனர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆப்பிள் நிறுவனம் இரண்டு செக்யுரிட்டி அப்டேட்களை வெளியிட்டு உள்ளது. பாதுகாப்பு பிரச்சினை குறித்த தகவல் முதலில் வெளியாகமல் தான் இருந்தது.


    எனினும், அப்டேட் வெளியிட்டதாக ஆப்பிள் அறிவித்த தகவல் தற்போது தீயாக பரவி வருகிறது. ஆப்பிள் வெளியிட்ட தகவல்களில், இந்த பாதுகாப்பு பிழையானது ஹேக்கர்களுக்கு சாதனத்தை முழுமையாக இயக்க செய்வதற்கான வசதியினை வழங்கி விடும். இதன் மூலம் அவர்கள் பயனர்கள் சாதனங்களில் எந்த மென்பொருளையும் இயக்க முடியும், என சோஷியல் ப்ரூஃப் செக்யுரிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரக்கேல் டோபாக் தெரிவித்தார்.

    ஐபோன் 6எஸ் மற்றும் அதன் பின் வெளியான மாடல்களை பயன்படுத்துவோர் தங்களின் சாதனங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என செக்யுரிட்டி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐபேட் ஜென் 5 மற்றும் அதன் பின் வெளியான மாடல்கள், அனைத்து ஐபேட் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐபேட் ஏர் 2, மேக் ஒஎஸ் மாண்டெரி கொண்டு இயங்கும் அனைத்து மேக் கம்ப்யூட்டர்களும் இந்த பிரச்சினையில் சிக்கியுள்ளன.

    • ஒரிஜினல் ஐபோன் ஒரு புரட்சிகரமான சாதனமாக இருந்தாலும், அதில் கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சம் இடம்பெறவில்லை.
    • முதல் ஐபோன் வெளியானதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புதுமையான கைபேசிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபோனை கடந்த 2007-ம் ஆண்டு வெளியிட்டார். அது வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. அந்த சாதனம் தான் நவீன ஸ்மார்ட்போன் கான்செப்டின் துவக்கமாக இருந்தது என்றே கூறலாம். முதல் ஐபோன் வெளியானதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மிகவும் புதுமையான கைபேசியை உருவாக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வருகின்றன.


    ஒரிஜினல் ஐபோன் ஒரு புரட்சிகரமான சாதனமாக இருந்தாலும், அதில் கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சம் இடம்பெறவில்லை. ஆப்பிளின் முதல் ஐபோன் உருவாக்கத்தில் பணியாற்றிய கென் கொசிண்டா என்கிற பொறியாளர், அதற்கான உண்மை காரணத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: "முதல் ஐபோனை உருவாக்கும் போது கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சங்களை அதில் புகுத்த எங்களுக்கு போதுமான நேரம் இல்லை. ஐபோனின் கீபோர்டு, ஆட்டோகரெக்‌ஷன் மற்றும் டெக்ஸ்ட் சிஸ்டத்தில் வேலை செய்வதில் மிகவும் பிஸியாக இருந்தோம். வடிவமைப்பு குழுவிற்கு கூட அதை செயல்படுத்த நேரம் இல்லை, அதனால்தான் இந்த அம்சம் ஆப்பிளின் முதல் ஐபோனில் இடம்பெறவில்லை. பின்னரே அது அறிமுகப்படுத்தப்பட்டது" என அவர் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு புதிய ஐபோன் மற்றும் இழப்பீடு வழங்காத புகாரில், ஆப்பிள் நிறுவன பொதுமேலாளர் உள்பட 5 பேருக்கு நெல்லை நுகர்வோர் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. #Apple #iPhone #NellaiConsumerCourt
    நெல்லை:

    நெல்லையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஆப்பிள் ஐபோன் ஒன்றை சில மாதங்களுக்கு முன் வாங்கினார். ஆனால், மொபைல் அதிகளவில் சூடானதால் மொபைலை சரி செய்யுமாறு சர்வீஸ் சென்டரிடம் கொடுத்து இருந்தார். 

    ஆனால், பல்வேறு காரணங்களை கூறி போனை சரி செய்யாமல்  காலம் தாழ்த்தி வந்து இருக்கிறார். பலமுறை சர்வீஸ் சென்டர் சென்றும் உரிய பதிலளிக்காமல்  நிர்வாகம் அலைக்கழித்ததால், கடும் மனஉளைச்சலுக்கு ஆளான அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் புகார் அளித்தார்.

    கடந்த ஜூன் மாதம் வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு புதிய ஆப்பிள் ஐபோன் மற்றும் நஷ்ட ஈடாக ரூ.9ஆயிரம் வழங்குமாறு செல்போன் நிறுவனத்திற்கு உத்தரவி்ட்டார். ஆனால், இந்த உத்தரவை செல்போன் நிறுவனம் பின்பற்றவில்லை. இதனை அடுத்து மீண்டும் செந்தில் குமார் கோர்ட்டை நாடினார்.

    இன்று அவரது புகார் மனுவை விசாரித்த நெல்லை நுகர்வோர் கோர்ட், ஆப்பிள் நிறுவன பொதுமேலாளர் உள்பட 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். 
    உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை தொட்டுள்ளது. வியாபார உலகில் இந்த சாதனையை எட்டும் முதல் நிறுவனம் என்ற பெயரை ஆப்பிள் பெற்றுள்ளது. #Apple
    நியூயார்க்:

    உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூன் காலாண்டில் 30 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. 

    அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாயும் 17 சதவீதம் உயர்ந்து 53.3 பில்லியன் டாலர் வரையில் சென்றது. இன்றைய பங்குச்சந்தை தொடங்கியதும் ஆப்பிளின் சந்தை மதிப்பு எகிறிக்கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற உச்சத்தை ஆப்பிள் நிறுவனம் எட்டியது.

    இந்த அளவுக்கு ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது இதுவே முதன்முறையாகும். கடந்த ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 41.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
    ×