search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • அரபிக் கடல் சூடேற்றம் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுவுக்கான காரணமாக சூழலியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
    • ஐதராபாத்தில் உள்ள நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து சாட்டிலைட்டைகள் அனுப்பப்ட்டன

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கனமழை பெய்தது. மேக வெடிப்பு காரணமாகக் கனமழை கொட்டித் தீர்த்ததால் வயநாடு மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. முண்டகை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்கள் இதில் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    தேசிய பேரிடர் மீட்புப்படை,தீயணைப்புப் படை வனத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணியில் அயராது ஈடுபட்டு வருகின்றனர். தோண்டத் தோண்ட சடலங்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. அரபிக் கடல் சூடேற்றம் என பல்வேறு காரணிகள் இந்த கனமழை மற்றும் அதனைதொடர்ந்த நிலச்சரிவுக்கான காரணமாக சூழலியல் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

    நிலச்சரிவில் மக்கள் சிக்கித் தவிக்கும் காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி மனதை ரணமாக்கி வரும் நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ, வயநாடு பகுதிகளில் முந்தைய காலங்களில் ஏற்பட்ட  நிலச்சரிவுகளையும் தற்போதய நில்சசரிவையும் ஒப்பிடும்  சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

     

    இஸ்ரோ தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாதிப்புகளை இஸ்ரோவின் ஐதராபாத் தளமான நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர்(NRSC) தளத்தில் இருந்து நவீன கார்டோசாட்-3 ஆப்டிகல் சாட்டிலைட் மற்றும் மேகங்களின் ஊடாக தெளிவாக பார்க்கக்கூடிய RISAT சாட்டிலைட்களை வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு கடந்த ஜூலை 31 ஆம் தேதி அனுப்பி, அங்கு எடுத்த படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் NRSC அறிக்கைபடி, சூரல்மலை பகுதிகளில் பெய்த அதீத மழையே அதிகப்படியான நிலச்சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.   

     

     

    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
    • நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம்.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இந்த பள்ளியில் தான் அவர் பள்ளிப்படிப்பை படித்தார். பின்னர் மயில்சாமி அண்ணாதுரை 'தினத்தந்தி'க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ''நிலவை பற்றிய ஆராய்ச்சியில் அங்கு நீர் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டோம். நிலவில் மெதுவாக துருவ பகுதியில் இறங்கமுடியும் என சொல்லிவிட்டோம். தற்போது உலக நாடுகள் எல்லாம் நிலவில் சிறு குடியிருப்புகளை உருவாக்க முடியுமா? என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது. இதைத்தொடர்ந்து நிலவிலேயே சர்வதேச விண்வெளி மையம் அமைக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மிக ஆழம் குறைந்த பகுதியில் பாலம் இருப்பதால் கப்பல்கள் மூலம் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ய முடியாது.
    • மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே 2-3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்களும் கண்டறியப்பட்டு உள்ளன.

    சென்னை:

    இந்தியாவின் ராமேசுவரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் மன்னார் தீவில் உள்ள தலைமன்னாரின் வடமேற்கு முனை வரை ராமர் பாலம் பரவியுள்ளது. ராமர் பாலம் அல்லது ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ராமேசுவரம் தீவுக்கும், இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    இது நீருக்கடியில் உள்ள மலைமுகடு, சுண்ணாம்புக் கற்களின் சங்கிலியால் ஆனது. இதிகாசமான ராமாயணத்தில், சீதையை ராமன் மீட்பதற்காக ராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய ராமரின் படையால் கட்டப்பட்ட ராமர் சேது என இது விவரிக்கப்பட்டுள்ளது. ராமரின் காலத்தால் அழியாத கதையில் பாலம் மையமாக இருப்பதால், இது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பா? என்பதை கண்டறிய கடந்த காலங்களில் பல ஆய்வுகள் உள்ளன.

    இதற்கிடையே அமெரிக்க நாசாவின் ஐ.சி.இ.சாட்-2 லேசர் அல்டிமீட்டரை கொண்ட செயற்கைக்கோள், கடலின் ஆழமற்ற பகுதிகளில் நீரில் ஊடுருவும் போட்டான் அல்லது ஒளித் துகள்களை தண்ணீரில் ஊடுருவ செய்து, நீரின் அடியில் உள்ள எந்தவொரு கட்டமைப்பையும் படம் எடுக்கும் சக்தி படைத்தது.

    இந்த செயற்கைக்கோள் எடுத்த ராமர் பாலம் தொடர்பாக பெறப்பட்ட தரவுகளை பயன்படுத்தி, இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ராமர் பாலத்தின் மிக விரிவான வரைபடத்தை உருவாக்கி உள்ளனர்.

    இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தேசிய தொலையுணர்வு மையத்தின் ஜோத்பூர் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ராமர் பாலம் பற்றிய பல நுணுக்கமான விவரங்களை கண்டறிய நாசா செயற்கைக்கோள் எடுத்த படங்களை ஆய்வு செய்தனர். அவர்களின் ஆராய்ச்சியின் படி பாலத்தின் 99.98 சதவீத பகுதிகள் ஆழமற்ற மற்றும் மிக ஆழமற்ற நீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது. குறிப்பாக 29 கி.மீ. நீளம் கொண்ட ராமர் பாலம், கடற்பரப்பில் இருந்து 8 மீட்டருக்கு கீழே இருப்பதை வரைபடமாக உருவாக்கப்பட்டு உள்ளது.

    மிக ஆழம் குறைந்த பகுதியில் பாலம் இருப்பதால் கப்பல்கள் மூலம் சென்று அப்பகுதியை ஆய்வு செய்ய முடியாது. அத்துடன், மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே 2-3 மீட்டர் ஆழம் கொண்ட 11 குறுகிய கால்வாய்களும் கண்டறியப்பட்டு உள்ளன. அத்துடன் புவியியல் சான்றுகள், இந்தியா மற்றும் இலங்கையின் தோற்றம் நெருங்கிய தொடர்புடையது என்று தெரியவருகிறது.

    கி.பி. 9-ம் நூற்றாண்டில், பாரசீக கடற்படையினர் இந்த அளவை 'சேது பந்தாய்' அல்லது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் கடலில் உள்ள பாலம் என்று குறிப்பிட்டு உள்ளனர். கடந்த 1480-ம் ஆண்டு வரை பாலம் தண்ணீருக்கு மேல் இருந்ததாகவும், புயலின்போது நீரில் மூழ்கியதாகவும் ராமேசுவரத்தில் இருந்து கோவில் பதிவுகள் தெரிவிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறினர்.

    • உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.
    • எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது.

    சென்னை:

    சிறிய வகையிலான மைக்ரோ மற்றும் நானோ வகை செயற்கைக்கோள்களை தயாரித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முன்பு பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் பொருத்தி விண்ணில் ஏவி வந்தது. இதற்கு அதிக பொருட்செலவு ஏற்படுவதால் சிறிய வகை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக, 'சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்' (எஸ்.எஸ்.எல்.வி.) ரக ராக்கெட்டுகளை இஸ்ரோ தயாரித்தது.

    இவை செலவு குறைந்த ராக்கெட்டாகும். தொழில் துறை உற்பத்திக்காக இந்த வகை ராக்கெட்டுகள் அதிகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. சிறிய வகை செயற்கைக்கோள்கள் தேவைக்கு ஏற்ப தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவுகிறது.

    தனித்துவமான இந்த வகை ராக்கெட்டுகள் 3 நிலை கட்டமைப்புகளை கொண்டிருக்கும். உந்துவிசைக்காக 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இவை வேகத்தை பயன்படுத்தி துல்லியமான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்தும் சக்தி படைத்தது.

    இந்தவகையில் முதல் எஸ்.எஸ்.எல்.வி.டி.-1 ராக்கெட், ஆந்திர மாநிலம் நெல்லூர் மாட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்த பணி அதன் நோக்கத்தை அடையவில்லை.

    எனினும் இஸ்ரோ இந்த ராக்கெட்டில் இருந்து மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டு, அடுத்து வந்த ராக்கெட்டில் அவற்றை பயன்படுத்தவும் திட்டமிட்டது. தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி. டி-2 ராக்கெட் வகையில் மேம்படுத்தப்பட்ட ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. இதை கடந்த பிப்ரவரி 10-ந் தேதி வெற்றிகரமாக இஸ்ரோ விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-07, ஜானஸ்-1 மற்றும் ஆசாதிசாட்-2 ஆகிய செயற்கைக்கோள்கள் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக பூமியில் இருந்து 450 கி.மீ. தூரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்டை, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். இதன் மூலம் தொழில்துறையினருக்கு செலவு குறைந்த ராக்கெட்டுக்களுக்கான கதவு திறக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது
    • நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.

    விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். சமீபத்தில் அமரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், இதுவரை மனிதர்களால் கண்டறியப்படாத விண்கலம் ஒன்று பூமியை நோக்கி நகர்வதாகவும் இன்னும் 14 வருடகங்களில் துல்லியமாக 2038 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி பூமியை தாக்கி அதிக சேதங்களை ஏற்படுத்த 72 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இதிலிருந்து  தற்காத்துக்கொள்ள போதுமான பாதுகாப்பை இன்னும் நாம் ஏற்படுத்தவில்லை என்றும் பீதியைக் கிளப்பியிருந்தது.

    இந்நிலையில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக விண்கல் தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத் பரபரப்பு கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

     

    அந்த நிகழ்ச்சியில் நடந்த கலந்துரையாடலில் அவர் பேசுகையில்,அபோபிஸ் [Apophis] என்ற ராட்சத அளவிலான விண்கல் ஒன்று 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி பூமியைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2036 இல் மீண்டும அது பூமியைத் தாக்கலாம். 370 மீட்டர் விட்டம் கொண்ட இந்த விண்கல் பூமிக்கும் மனித குலத்துக்கும் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் பலமுறை இதுபோன்ற சமபவங்கள் நடந்துள்ளது. எனவே இது ஏற்படாது என்று எந்த உத்தரவாதமும் இல்லை

     

    பூமித்த தாய்க்கு எதுவும் ஆகக்கூடாது என்றே நாம் விரும்புகிறோம். உலகத்தில் மனித குளம் என்றென்றும் வாழவேண்டும் என்பதே நமது விருப்பம் ஆனால் நடக்க உள்ளதை நம்மால் தடுக்க முடியாது. அசம்பாவிதங்களுக்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் தயாராக இருக்க வேண்டும். நடக்க உள்ளதை எதிர்க்க நாம் மாற்று வழிகளை யோசித்தாக வேண்டும். பூமிக்கு அருகில் வரும் ஆபத்தை நம்மால் சில சமயங்களில் மட்டுமே கணிக்க முடிகிறது. ஆபத்துகளை கண்டறிய நாம்  இன்னும் தொழிநுட்பத்தை முன்னேற்றியாக வேண்டும். விண் கற்களை குறித்த புரிதலை நாம் மேம்படுத்தியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

    • ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய வெடிப்பை படம்பிடித்து பூமிக்கு அனுப்பியது.
    • விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டபடி ஒளிவட்ட பாதையை நிறைவு செய்தது.

    புதுடெல்லி:

    ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து சூரியனை ஆய்வுசெய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.

    பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ. துாரம், 125 நாட்கள் பயணித்து சூரியனுக்கு அருகில் உள்ள எல் 1 எனப்படும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நடப்பு ஆண்டு ஜனவரியில் எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடைந்தது.

    கடந்த மே மாதம் 10 மற்றும் 12-ம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பியது.

    இந்நிலையில், ஆதித்யா எல்.1 விண்கலம் 178 நாட்கள் பயணித்து லாக்ராஞ்சியன் புள்ளி-1ல் தனது ஒளிவட்ட பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என இஸ்ரோ இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    • விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது.
    • பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

    விண்வெளித்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அடுத்தாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டடத்துக்கு தயாராகி வருகிறது. ககன்யான் திட்டத்தின்கீழ் அடுத்த வருட இறுதியில் முதல் சோதனை பயணம் நடப்பட்ட உள்ளது. இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் திட்டம் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

     

    இந்தியாவில் பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்கள் குறைவு என்பதால் முதலில் விண்வெளிக்கு யாரை அனுப்புவது என்ற சிக்கல் உள்ளது. முதல் முறையாக செய்யப்படும் சோதனை பயணம் என்பதால் வெறும் ஆர்வம் மட்டுமே உள்ளவர்களை விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியாது. முழுவதுமாக பாதுகாப்பானது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே விஐபிகளை விண்வெளிக்கு அனுப்ப முடியும். எனவே இதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்று சோம்நாத் தெரிவித்தார்.

     

    அப்போது அவரிடம், பிரதமர் நரேந்திர மோடியை விண்வெளிக்கு அனுப்புவீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடியை விண்வெளிக்கு அனுப்புவதில் நான் மட்டும் அல்ல இந்திய நாடே பெருமை கொள்ளும். அது மிகவும் சிறந்த தருணமாக இருக்கும். ஆனால் முழுமையாகி பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்ட பிறகே பிரதமர் போன்ற முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப முடியும் என்று தெரிவித்தார்.

     

    இதற்கிடையில் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் முதல் ககன்யான் சோதனை பயணத்தை மேற்கொள்ள பிரஷாந்த் நாயர், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபான்சு சுக்லா ஆகிய விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது.

    • கர்நாடகாவின் சித்ரதுர்கா ஏவுதளத்தில் நடைபெற்ற புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றது.
    • புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டியது.

    பெங்களூரு:

    விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் ஆர்.எல்.வி. புஷ்பக் என்ற ஏவுகலனை இஸ்ரோ ஏற்கனவே 2 முறை சோதனை செய்திருந்தது.

    இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏவுதளத்தில் இன்று காலை 7.10 மணிக்கு 3-வது முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.

    புஷ்பக் என பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட ஆர்.எல்.வி. வாகனம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.

    இதன்மூலம் செயற்கைக்கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ஏவுகலன் திட்ட பரிசோதனையை வெற்றிகரமாக செய்துகாட்டி உள்ளோம் என இஸ்ரோ தெரிவித்தது.

    எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெற்றிகரமான மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள் என இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.

    • இன்று காலை 7.10 மணிக்கு இந்த சோதனை நடத்தப்பட்டது.
    • ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    கர்நாடகா மாநிலம் சித்தர்துங்காவில் இருக்க கூடிய ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேன்ஜில் இன்று காலை 7.10 மணிக்கு ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

    இதன் மூலம் செயற்கை கோளையோ, விண்கலங்களையோ சுமந்து செல்லகூடிய ராக்கெட் மீண்டும் பூமிக்கு வரும் ஏவுகணையை இஸ்ரோ பரிசோதனை செய்யகூடிய வகையில் இந்த திட்டம் என்பது மேற்கொள்ளப்பட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    'புஷ்பக்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையானது விமானப்படையுடைய ஃபிலிப் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.

    ஏற்கனவே இரண்டு முறை நடைபெற்ற சோதனை வெற்றி பெற்ற நிலையில், இன்று 3வதாக நடைபெற்ற சோனையில் இந்த ஏவுகணையானது பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதன்மூலம் மீண்டும் பயன்படுத்த கூடிய ஏவுகணையை தயாரித்து வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    • பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவுப் புள்ளிகளை கண்காணிக்கும்.
    • நிலத்தில் இருந்து வெப்ப உமிழ்வு, மேற்பரப்பு ஆற்றல், நகர்ப்புற வெப்பத்தீவுகள் மற்றும் பிற உலகளாவிய அளவுருக்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற 'திரிஷ்ணா' திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.

    இது உயர்- தெளிவு இயற்கை வள மதிப்பீட்டிற்கான வெப்ப அகச்சிவப்பு - சிவப்பு 'இமேஜிங்' செயற்கைக்கோள் என்று அழைக்கப்படுகிறது.

    உலகம் முழுவதும் உள்ள மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை இந்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.

    இந்தியா, ஐரோப்பா கடுமையான வெப்பத்தால் தாக்கப்பட்டு இருக்கும்போது, பூமியில் ஏற்படும் காலநிலை தாக்கங்களுக்கான தரவுப் புள்ளிகளை கண்காணிக்கும். அத்துடன், இது நிலத்தில் இருந்து நீர் ஆவியாதலை அளவிடுகிறது.

    இந்த பணி மூலம் நீர் இருப்பு மற்றும் உருகும் பனிப்பாறைகள் உள்ளிட்ட இயக்கவியல் நடவடிக்கைகள், உயிர்க்கோளத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நிலத்தில் பயன்படுத்தப்படும் நீரை அளவிடுவது எப்படி என்பதை அறிய முடியும். அத்துடன், இந்த செயற்கைக்கோள் வெப்ப முரண்பாடுகள் மற்றும் கூர்முனை, நிலத்தில் இருந்து வெப்ப உமிழ்வு, மேற்பரப்பு ஆற்றல், நகர்ப்புற வெப்பத்தீவுகள் மற்றும் பிற உலகளாவிய அளவுருக்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

    இந்த செயல்பாட்டில், செயற்கைக்கோள், நீராவி மற்றும் உலகம் முழுவதும் உள்ள வளிமண்டலத்தில் உள்ள மேகங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்யும். இது தற்போது 2025-ம் ஆண்டில் இருந்து 5 ஆண்டுகள் ஆயுட்காலத்துடன் இயங்குவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டு வருகிறது.

    செயற்கைக்கோள் 2 முதன்மை ஆய்வு கருவிகள் (பேலோடுகள்) சுமந்து செல்லும். 'தெர்மல் இன்பிரா-ரெட்' (டி.ஐ.ஆர்.) ஆய்வு கருவியை பிரான்ஸ் விண்வெளி நிறுவனம் வழங்க உள்ளது. இது 4 'சேனல்' நீண்ட அலைநீள அகச்சிவப்பு 'இமேஜிங் சென்சார்' ஆகும். இது உயர்-தெளிவு மேற்பரப்பு வெப்பநிலையை அறிய முடியும். இதுதவிர வெவ்வேறு பகுதிகளில் நிலத்தில் இருந்து வெளிப்படும் வெப்பத்தின் அளவையும் இது வரைபடமாக்கும்.

    காணக்கூடிய அகச்சிவப்பு- சிவப்பு குறுகிய அலை அகச்சிவப்பு- சிவப்பு (வி.என்.ஐ.ஆர்- எஸ்.டபிள்.யூ.ஐ.ஆர்.) என்ற ஆய்வு கருவி இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வருகிறது. பூமியின் மேற்பரப்பின் பிரதிபலிப்பு அல்லது 'ஆல்பிடோ'வை 7 பட்டைகளில் வரைபடமாக்கும். இது பூமியின் மேற்பரப்பில் பிரதிபலிக்கும் வெப்பத்தின் அளவை அளவிடுகிறது. பல்வேறு உயிர் இயற்பியல் மற்றும் கதிர்வீச்சுகளை கணக்கிடும். இந்த பணியின் எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த பணியானது 'ரிமோட் சென்சிங்' தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுப்பாதையில் தொலைவில் இருந்து பூமியை கண்காணிக்கிறது. அதீத வெப்பநிலை மற்றும் வானிலை நிகழ்வுகள் பூகோளத்தை பிடித்துக் கொள்வதால் செயற்கைக்கோள் மற்றும் அது வழங்கும் தரவு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நீர்நிலை, விவசாயத்தொழில்கள் மற்றும் இந்தியாவில் உள்ள விவசாய சமூகம் மத்தியில், நீரில் புதிய நிலையான கொள்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய தரவுகளை வழங்குவதன் மூலம் முக்கியமான நீர் மற்றும் உணவு பாதுகாப்பு பிரச்சனைகளை இந்த பணி தீர்க்கும்.

    காலநிலை மாற்றம் தணிப்பு முயற்சிகள், காலநிலை மாற்றத்தின் மானுடவியல் அல்லது மனிதனால் தூண்டப்பட்ட தாக்கங்களை மையமாகக் கொண்டு, முக்கியமான நீர் மற்றும் உணவுப் பாதுகாப்பு சவால்களை 'திரிஷ்ணா' பணி எதிர்கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

    • அக்னிபான் ராக்கெட் செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    ஐஐடி சார்பில் உருவாக்கப்பட்ட அக்னிபான் ராக்கெட் சோதனை முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

    அக்னிபான் ராக்கெட் செயற்கைகோள் எதுவும் இன்றி விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

    தனியார் பங்களிப்புடன் புதிய வகை ராக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

    திரஸ்ட் வெக்டார் கன்ட்ரோல்ட், ஜிம்பல்டு மோட்டார் தொழில்நுட்பத்தில் அக்னிபான் ராக்கெட் இயங்குகிறது.

    இந்தியாவின் முதல் அரை கிரையோஜெனிக் இயந்திரத்தை அக்னிபான் ராக்கெட் கொண்டுள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.

    • ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
    • எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    பிரபஞ்சத்தின் ரகசியமாக கருதப்படும் கருந்துளைகளின் முக்கிய தரவுகளை இஸ்ரோ சேகரித்துள்ளது.

    கருந்துளைகளை ஆராய்ச்சி செய்வதற்காக ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆஸ்ட்ரோ சாட் செயற்கைக்கோள் 2015 செப்டம்பர் 28ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    Swift J1727.8-1613, என்கிற கருந்துளையில் இருந்து வெளியே வரும் எக்ஸ்ரே புரோட்டான் துகள்கள் குறித்தான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    இந்த தரவுகள் கருந்துளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என கண்டறிவதற்கு முக்கிய படியாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    ×