search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரோ"

    • லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
    • நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    இதன் பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இதனை லேண்டர் ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

    ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது. தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை.

    இதனால் இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும்.

    14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் இன்று சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும்.

    இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது கூடுதலான அறிவியல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    இந்நிலையில், நிலவில் உள்ள விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரிடம் இருந்து இதுவரை சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    லேண்டர் மற்றும் ரோவரை தொடர்பு கொள்ளும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. 14 நாள் உறக்கத்துக்கு பிறகு இன்று விழித்தெழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்தவித சிக்னலும் கிடைக்கவில்லை.

    நிலவில் இன்று முதல் மீண்டும் சூரிய ஒளிபட்டபோதிலும், விக்ரம் லேண்டர் செயல்பட தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


    • ரோவரில் உள்ள ‘லிப்ஸ்' எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.
    • 14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்டு 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

    அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. இதனை லேண்டர் ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

    ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி', நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

    தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத தொடக்கத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது. இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை.

    ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி செயல்பாட்டிற்கு வரும். இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது கூடுதலான அறிவியல் தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.
    • லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கி ஆய்வு செய்த சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், ரோவர் கருவிகள் கடந்த 15 நாட்களாக உறக்க நிலையில் உள்ளன.

    சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும் போது, அவற்றின் செயல்பாட்டு நிலைமைகள் மேம்படும். 14 நாட்கள் நீடித்த சந்திர இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் கிட்டத்தட்ட 200 டிகிரி உறைபனி தட்பநிலையால் சூழப்பட்டு இருக்கும்.

    இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை. ஆகவே தான் அவற்றை உறக்க நிலைக்கு இஸ்ரோ கொண்டு சென்றது. இந்நிலையில், நிலவின் அடுத்த சூரிய உதயம் நாளை(வெள்ளிக்கிழமை) நிகழ்கிறது. இதையொட்டி லேண்டர் மற்றும் ரோவர் நாளை உறக்க நிலையில் இருந்து எழுப்பப்பட்டு விழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சோலார் பேனல் ஒளியைப் பெற்று, பேட்டரி சார்ஜ் ஆகி, செயல்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதற்கான பணிகளை விஞ்ஞானிகள் தொடங்கி உள்ளனர். லேண்டர், ரோவர் மீண்டும் விழித்து ஆய்வில் ஈடுபடும் பட்சத்தில் நிலவின் தென் துருவம் தொடர்பான கூடுதல் தகவல்கள் உலகுக்கு இஸ்ரோ மூலமாக கிடைக்கும்.

    • சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது இரவு நேர பகுதியாக உள்ளது.
    • விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாளை மறுநாள் (22-ந்தேதி) சூரிய ஒளி வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்தது.

    இந்த சாதனையை செய்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது. திட்டமிட்டப்படி விக்ரம் லேண்டர் மற்றும் அதன் உள்ளிருந்த பிரக்யான் ரோவர் ஆகியவை தனது பணிகளை தொடங்கியது.

    எனவே விஞ்ஞானிகள் திட்டமிட்டப்படி லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை தனது பணிகளை செய்து பூமிக்கு இதுகுறித்த தகவல்களை அனுப்பி வைத்தது.

    லேண்டர், ரோவர் ஆகியவை சூரிய மின் சக்தியால் இயங்கும் திறன் கொண்டவையாக வடிவமைக்கப்பட்டன. இதனால் அது நிலவில் சூரிய ஒளி இருக்கும் நேரம் மட்டுமே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டது.

    விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய அடுத்த 14 நாட்களுக்கு அது தரையிறங்கிய இடத்தில் சூரிய ஒளி இருந்தது. அதனை பயன்படுத்தி லேண்டரும், ரோவரும் செயல்பட்டது.

    சந்திரனின் 14 நாட்கள் பகல், 14 நாட்கள் இரவு இருக்கும். இதை கணக்கீட்டு 14 நாட்கள் தனது பணியை செய்த லேண்டர் மற்றும் ரோவர் சூரிய ஒளி மறையும் தருவாயில் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தற்போது சந்திரனில் விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது இரவு நேர பகுதியாக உள்ளது. எனவே லேண்டரும், ரோவரும் உறக்க நிலையில் இருக்கிறது. இதனால் அவை தற்போது இஸ்ரோவுடன் தொடர்பு இல்லாத நிலை உள்ளது.

    எனவே இஸ்ரோ விஞ்ஞானிகள் அங்கு பகல் வருவதற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் லேண்டரையும், ரோவரையும் வடிவமைக்கும் போதே, மீண்டும் சூரிய ஒளி வரும்போது அவை தன்னை தானே செயல்படுத்தி கொள்ளும் வகையில் உருவாக்கி உள்ளனர்.

    அதன்படி தற்போது விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியில் நாளை மறுநாள் (22-ந்தேதி) சூரிய ஒளி வரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்னும் 2 நாட்களில் சூரிய ஒளி வரும்போது விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் தன்னை புதுப்பித்து கொண்டு தனது ஆய்வு பணிகள நிலவில் தொடங்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.

    திட்டமிட்டபடி அனைத்தும் நடந்து வரும் நிலையில் லேண்டரும், ரோவரும் உறக்கத்தில் இருந்து விழித்து கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மேலும் லேண்டர், ரோவர் மீண்டும் ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும் தரவுகள் மூலம் விஞ்ஞானிகள் நிலவு குறித்து மேலும் ஆழமான புரிதல்களை மேற்கொள்ள முடியும் என்றும், இந்த தரவுகள் மூலம் எதிர்காலத்தில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக சந்திரயான்-3 திட்டத்தின் இவ்வார் ராவ் செயற்கைகோள் மைய இயக்குனர் சங்கரன் கூறுகையில், இதுவரை நிறைய தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் கிடைக்க சில மாதங்கள் அல்லது 2 வருடங்கள் கூட ஆகும்.

    ஆனால் இந்த தரவுகள் சில புதிய விஷயங்களுக்கு வழி வகுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விக்ரம் லேண்டர், ரோவர் மீண்டும் விழித்தெழுந்தால் அதிக தரவுகள் கிடைக்கும். அது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

    • ஆதித்யா எல்-1 விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும்.
    • சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என இஸ்ரோ தெரிவித்தது.

    பெங்களூரு:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

    ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 19-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

    இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் இன்று 5-வது முறையாக அதிகரிக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    அதன்படி, இன்று அதிகாலை 2.00 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டு சூரியனின் எல்1 புள்ளியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்துள்ளது. சுற்று வட்டப்பாதை உயர்வு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் சீராக உள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • விண்கலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும்.
    • 19-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    பெங்களூரு:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

    ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 15-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

    இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 4-வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 19-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • பணத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளால் உந்தப்பட்டவர்கள்
    • ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காகவும் தங்கள் பணியை செய்கிறார்கள்

    ஆர்.பி.ஜி. குழுவின் சேர்மன் ஹர்ஷ் கோயங்கா. இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மக்களை உத்வேகம் அளிக்கும் வகையிலான மற்றும் சுவாரஸ்யமான கருத்துகளை பதிவிடுவது வழக்கம்.

    அந்த வகையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் சம்பளம் குறித்த பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் சோம்நாத் மாதம் 2.5 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார். அவர் அர்பணிப்பிற்கு தான் தலைவணங்குகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ''சோமநாத்தின் மாத சம்பளம் 2.5 லட்சம் ரூபாய். இது சரியா அல்லது நியாயமா?. அவரைப் போன்றவர்கள் பணத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளால் உந்தப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வோம்.

    அவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் மீதான ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்காகவும், தங்கள் நாட்டின் பெருமைக்காகவும், தங்கள் நாட்டின் பங்களிப்பிற்காகவும், தங்கள் நோக்கத்தை அடைவதில் தனிப்பட்ட நிறைவுக்காகவும் செய்கிறார்கள். அவரைப் போன்ற அர்ப்பணிப்புள்ள மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்ரோ தலைவரின் சம்பளம் இவ்வளவுதான? என விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், சோம்நாத் போன்ற தலைவர்களின் அர்ப்பணிப்பு குறித்து நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    இஸ்ரோ நிலவின் தென்துருவத்திற்கு ரோவரை அனுப்பி சாதனைப்படைத்தது. நிலவில் கால் பதித்த 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் கிடைத்தது என்றால் அது மிகையாகாது.

    • ரோவரில் உள்ள ‘லிப்ஸ்' எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப்’ கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.
    • தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி பகல் 2.35 மணிக்கு 'எல்.வி.எம்.3 எம்.4' ராக்கெட் மூலம் 'சந்திரயான்-3' விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

    இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து கடந்த மாதம் 23-ந்தேதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த 'விக்ரம் லேண்டர்' 40 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அடுத்த 2 மணி நேரத்திற்கு பிறகு 'விக்ரம் லேண்டரில்' இருந்து 'பிரக்யான் ரோவர்' வெளியே வந்தது. இதனை 'லேண்டர்' ஒரு குழந்தையைப் போல் கண்காணித்து வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

    ரோவரில் உள்ள 'லிப்ஸ்' எனப்படும் 'ஸ்பெக்ட்ரோஸ்கோப்' கருவி, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. தொடர்ந்து, அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேற்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

    தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் கடந்த வாரம் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் 'பிரக்யான் ரோவர்' உறக்க நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இதனைத்தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நிலவில் முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலார் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வருகிற 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சூரியன் உதிக்க இருக்கிறது. அப்போது மீண்டும் உறக்க நிலையில் இருக்கும் ரோவரில் உள்ள பேட்டரி உதவியுடன் தட்டி எழுப்பி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் லேண்டரையும் உறக்கத்தில் இருந்து எழுப்பி, ஆய்வுப்பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

    தற்போதைய நிலையில் அதன் பேட்டரியில் முழு சார்ஜ் இருக்கிறது. அதில் உள்ள சோலார் பேனல் வருகிற 22-ந் தேதி நிலவில் அந்த இடத்தில் மீண்டும் சூரியன் உதயமாகும்போது சூரிய சக்தியை பெறும். ரோவர் அடுத்தக்கட்டப் பணிகளுக்கு மீண்டும் 'சுவிட்ச் ஆன்' ஆகி மீண்டும் ஆய்வுப்பணியில் ஈடுபடும் என்று நம்புகிறோம். அதுவரையிலும் நிலவுக்கான இந்தியாவின் தூதராக அது அங்கேயே நிலைகொண்டிருக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    • பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது.
    • 3-வது முறையாக, பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புவிவட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு உள்ளது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற விண்கலம், கடந்த 2-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது பூமியில் இருந்து 125 நாட்கள் பயணம் செய்து, 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'லாக்ராஞ்சியன் புள்ளி-1'-ஐ சென்றடையும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் இந்த விண்கலம் ஈடுபடும்.

    அதற்கு முன்னதாக ஆதித்யா-எல்1 விண்கலம் 16 நாட்கள் பூமியைச் சுற்றி வரும்போது 5 முறை சுற்றுப்பாதையின் அளவு உயர்த்தப்படுகிறது. அந்தவகையில் பூமியின் சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான முதல்கட்டப் பணி கடந்த 3-ந் தேதி நடந்தது. அதன்படி, சுற்றுப்பாதை பூமியில் இருந்து குறைந்தபட்சம் 245 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 22 ஆயிரத்து 459 கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்தது.

    தொடர்ந்து அடுத்து 2-ம் கட்டமாக கடந்த 4-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மீண்டும் சுற்றுப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. அதன்படி குறைந்தபட்சம் 282 கிலோ மீட்டர், அதிகபட்சமாக 40 ஆயிரத்து 225 கிலோ மீட்டர் என்ற நீள்சுற்றுவட்டப் பாதையில் ஆதித்யா விண்கலம் சுற்றிவந்தது.

    பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இவ்வாறு சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நடந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணி நேற்று நடந்தது.

    இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா-எல்1 விண்கலத்துக்கு 2 முறை வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று (நேற்று) 3-வது முறையாக, பெங்களூரு தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து புவிவட்டப்பாதையில் இருந்து வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி, புதிய சுற்றுப்பாதையின் குறைந்தபட்ச உயரம் 296 கி.மீ., அதிகபட்சமாக 71 ஆயிரத்து 767 கி.மீ. என்ற அளவில் உள்ளது. தொடர்ந்து அடுத்த சுற்றுவட்டப்பாதை உயர்த்தும் பணியை வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணி அளவில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து மொரீஷியஸ், பெங்களூரு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து ஆதித்யா-எல்1 விண்கலத்தை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்த விண்கலம் 125 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 பகுதி அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்து சூரியனின் வெளிப்புற பகுதியை ஆதித்யா-எல்1 விண்கலம் ஆராய்ச்சி செய்யும்' என்றனர்.

    • விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி அதன் இலக்கை அடையும்.
    • 15-ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    பெங்களூரு:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2-ம் தேதி அன்று காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

    இந்த விண்கலம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 4 மாத பயணத்திற்கு பின்னரே விண்கலம் சென்று சேரும் என்றும், அந்த இடத்தில் இருந்து கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனைக் கண்காணித்து ஆய்வு பணியில் இந்த விண்கலம் ஈடுபடும் என்றும் இஸ்ரோ தெரிவித்தது.

    ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை வரும் 10-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

    இந்நிலையில், சூரியனை நோக்கி பயணிக்கும் ஆதித்யா எல்-1 விண்கலம் 3வது புவி சுற்று வட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், 15ம் தேதி அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றம் செய்யப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.
    • சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகிறது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.

    இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    இதையடுத்த, 14 நாட்கள் தனது ஆய்வு பணிகளை முடித்துக் கொண்ட ரோவர் உறக்க நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நிலவில் இருக்கும் சந்திரயான்- 3ன் லேண்டரை, சந்திரயான்- 2 ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது. இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    லேண்டரின் புதிய படமானது, சந்திரயான்- 2ன் டிஎப்எஸ்ஏஆர் என்ற ரேடர் கருவி மூலம் கடந்த 6ம் தேதி எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இருள் சூழ்ந்துள்ள நிலவின் தென்துருவ பகுதியில், லேண்டரின் இருப்பிடத்தை சந்திரயான் 2 படம் பிடித்துள்ளது.

    சந்திரயான்-2ன் இந்த ரேடர் கருவிதான், சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் எங்கு தரையிறங்க வேண்டும் என்பதை தொடர்ந்து புகைப்படும் எடுத்து அனுப்பியது.

    • பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது.
    • ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

    பெங்களூரு:

    நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஜூலை மாதம் 14-ம் தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலனின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    இந்நிலையில், நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்யான் ரோவரில் இருந்து எடுக்கப்பட்ட முப்பரிமாண வடிவ புகைப்படத்தை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் புகைப்படத்தை சிவப்பு மற்றும் சியான் எனப்படும் நீல நிற கண்ணாடிகள் மூலம் முப்பரிமாண வடிவத்தில் பார்க்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அனாக்லிஃப் என்பது ஸ்டீரியோ அல்லது மல்டி-வியூ படங்களிலிருந்து முப்பரிமாணங்களில் பொருள் அல்லது நிலப்பரப்பை எளிய முறையில் காட்சிப்படுத்துவதாகும். பிரக்யான் ரோவரில் உள்ள கேமராவில் இடது மற்றும் வலது பக்கங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பயன்படுத்தி இந்த அனாக்லிஃப் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சேனல் புகைப்படத்தில், இடது பக்க புகைப்படம் சிவப்பு சேனலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வலது பக்க புகைப்படம் நீலம் மற்றும் பச்சை (சியான்) சேனல்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு இடையிலான கண்ணோட்டத்தில் உள்ள வேறுபாடு ஸ்டீரியோ விளைவை ஏற்படுத்துகிறது. இது மூன்று பரிமாணங்களின் காட்சி தோற்றத்தை அளிக்கிறது. இதை முப்பரிமாணத்தில் பார்க்க சிவப்பு மற்றும் சியான் கண்ணாடிகள் பரிந்துரைக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.

    ×