search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகொரியா"

    • வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • இன்றும் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதித்தது என ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    டோக்கியோ:

    உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

    ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது என ஜப்பான் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

    அணு ஆயுதப் போருக்கு தயார் என வடகொரிய அதிபர் அறிவித்த சில தினங்களுக்கு பின்னர் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    • வடகொரிய தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
    • முதன்முறையாக அணுஆயுத தயாரிப்பதற்கான பொருட்களை உருவாக்கும் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

    உலகின் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு வடகொரியா கடும் சவாலாக விளங்கி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அணுஆயுதம்தான். எப்போதெல்லாம் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் போர்ப்பயிற்சி மேற்கொள்கிறதோ, அப்போதெல்லாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து பதிலடி கொடுப்போம் என வடகொரியா அச்சுறுத்தும்.

    அமெரிக்காவின் மையப்பகுதியை சென்று தாக்கும் அளவிற்கு தங்களிடம் அணுஆயுதம் இருப்பதாக வடகொரியா சொல்லி வருகிறது. எங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுஆயுதங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டமாட்டோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சமீபத்தில் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் பணிகளை இன்னும் துரிதப்படுத்துமாறு கிம் ஜாங் உன் வலியுறுத்திருந்தார். இது வழக்கம் போல் கிம் ஜாங் உன்னின் மிரட்டலாக இருக்கும் என உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்தன.

    இந்த நிலையில் யுரேனியம் செறிவூட்டல் அதிக அளவில் உற்பத்தி செய்யும் வசதிகளை வடகொரிய அதிபர் பார்வையிடுவது போன்ற படம் வெளியாகியுள்ளது.

    யுரேனியம் செறிவூட்டல் மையத்திற்கு அவர் தற்போது சென்றாரா? என்பது உறுதியாகவில்லை. என்றபோதிலும் வடகொரிய அணு ஆயுதங்களை அதிக அளவில் பெருக்குவதில் உறுதியாக உள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

    அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியம் செறிவூட்டல் முக்கியமானதாகும். இதற்கிடையே அணுஆயுத இன்ஸ்டிடியூட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எந்த தேதியில், இந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை.

    வடகொரியாவின் தற்பாகாப்பிற்கான அணுஆயுதங்களை அதிகரிக்க வேண்டும் என்பதால், யுரேனியம் செறிவூட்டலை வசதிகளை அதிகரிக்க கிம் ஜாங் உடன் வலியுறுத்தியுள்ளார். இதன் தொடர்ச்சியாகவே அந்த இடங்களுக்கு சென்றுள்ளார் எனத் தகவல் கூறப்படுகிறது.

    யுரேனியம் செறிவூட்டல் முதல் அணுஆயுதம் தயாரிப்பது வரை கிம் ஜாங் உன்னுக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

    யுரேனியம் செறிவூட்டலுக்கான புதிய வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டும். இது அணுஆயுதம் தயாரிப்பதற்கான பொருட்களை உற்பத்தியை செய்வதில் மேலும் வலுவடையச் செய்யும், அணுஆயுத பொருட்களை தயாரிப்பதில் தங்களுடைய நீண்ட காலம் இலக்கை நிர்ணயம் செய்வது அவசியம் என்பதை கிம் ஜாங் உன் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

    2006-ம் ஆண்டு முதன்முறையாக வடகொரிய அணுஆயுத சோதனை மேற்கொண்டது. அப்போது ஐ.நா. வடகொரியாவுக்கு தடைவிதித்தது. அதன்பின் முதன்முறையாக யுரேனியம் செறிவூட்டல் வசதியை வடகொரியா தற்போது வெளியிட்டுள்ளது.

    நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த இந்த படத்தை பதிவிட்டிருக்கலாம். வரவிருக்கும் அமெரிக்க அரசு வடகொரியாவை அணுஆயுதமற்ற நாடாக்குவது சாத்தியமற்றது என்பதை உணர வைக்க இப்படி செய்திருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    எங்களிடம் அணுஆயுதம் உள்ளது என்பதை மற்ற நாடுகளில் அறிந்து கொள்வதற்கான தகவலாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    • வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என அதிகாரிகள் கூறினர்.
    • அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா செயல்படுகிறது.

    சியோல்:

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், வடகொரியா வடகிழக்கு கடற்பகுதியை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை இன்று செலுத்தியது என தென்கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்தனர்.

    அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் போருக்கு தனது அணுசக்தியை முழுமையாக தயார்படுத்துவதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்குவதாக வடகொரிய அதிபர் உறுதியளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஏவுகணை சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கொரிய தீபகற்ப பிராந்தியம் பதற்றநிலையில் காணப்பட்டு வருகிறது.
    • அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது.

    பியாங்காங்:

    தென் கொரியா தலைநகரான சியோல் அருகே வடகொரியா எல்லையையொட்டி அமெரிக்க ராணுவம் போர்த்தளம் அமைத்து அந்த நாட்டு ராணுவத்துடன் பணியாற்றி வருகிறது. இதனை தொடர்ந்து வடகொரிய ராணுவம் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்டவற்றை அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை தயாரித்து தொடர் சோதனையில் ஈடுபடுகிறது.

    இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இருப்பினும் வடகொரிய ராணுவம் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு அடாவடி காட்டுகிறது.

    இதற்கு பதிலடி தரும் வகையில் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்க ராணுவம் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் இந்த செயல்பாடு கோபம் மூட்டி வருவதாக வட கொரியா தலைவர் கிம் ஜங் அன் கூறி வருகிறார்.

    மேலும் தென்கொரியாவை எதிரி நாடாக அறிவித்து அதன் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் பகிரங்கமாக அறிவித்தார். இதனால் கொரிய தீபகற்ப பிராந்தியம் பதற்றநிலையில் காணப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வடகொரியாவில் 76-வது நிறுவன ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. தலைநகர் பியாங்காங்கில் ராணுவ அணிவகுப்புடன் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் வடகொரியா தலைவர் கிம் ஜங் அன் தலைமையேற்று ராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பின்னர் அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது கிம் ஜங் அன், அமெரிக்காவுடன் அணு ஆயுத போருக்கு தயார் என பேசினார். அவர் கூறுகையில், "அமெரிக்காவின் செயல்பாடு நாளுக்கு நாள் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் அமெரிக்காவுடன் எப்போது வேண்டுமானாலும் போருக்கு தயாராக இருக்க வேண்டும். போரில் அதிகளவிலான அணு ஆயுதங்கள் தேவை இருக்கும் என்பதால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்" என்றார்.

    • போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது.
    • இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உக்ரைன் உடன் போரிடுவதற்காக வடகொரியா ரஷியாவிற்கு ஆயுதங்கள் வழங்கியதாகவும் அதற்கு பரிசாக குதிரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தென் கொரியா தெரிவித்து உள்ளது. இது குறித்து தென் கொரியா தெரிவித்து இருப்பதாவது: ரஷியா உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    இந்த போரில் ரஷியாவுக்கு உதவிடும் வகையில் வடகொரியா ஆயுதங்களை வழங்கி உள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ரஷியாவில் இருந்து ஓர்லோவ் டிராட்டர் வகையை சேர்ந்த 24 குதிரைகள் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங்-க்கு குதிரைகள் என்றால் கொள்ளை பிரியமாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்கனவே புதின் 30 குதிரைகளை அனுப்பி உள்ளார். இவை அனைத்தும் வடகொரியா அனுப்பிய ஆயுதத்திற்கான பணம் என தென் கொரியா தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்து இருப்பதாவது:

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஷிய அதிபர் புதின் வடகொரியாவுக்கு வந்திருந்தார். அப்போது இருநாடுகளுக்கிடையே கூட்டு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில் ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ஜோடி நாய்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு பதிலாக ஆகஸ்ட் மாதத்தில் 447 ஆடுகளை புதின், கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

    • 2021-ம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜாங் உன், உடல் எடையைக் குறைத்தார்.
    • தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உடல்பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. அவர் உடல் எடை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார் என்றும், அவரது அதிகாரிகள் வெளிநாட்டில் புதிய மருந்துகளை கொண்டு வர முயற்சிக்கிறார்கள் என்றும் தென் கொரியாவின் உளவு நிறுவனம் தெரிவித்தது.

    2021-ம் ஆண்டில் தனது உணவை மாற்றியமைத்த கிம் ஜாங் உன், உடல் எடையைக் குறைத்தார். ஆனால் தற்போது அவரது உடல் எடை மீண்டும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே கிம் ஜாங் உன் அதிபர் பொறுப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக உள்ளதாகவும், தனது 12 வயது மகளை நாட்டின் அடுத்த அதிபராக்க திட்டமிட்டு இப்போதே பயிற்சி அளித்து வருகிறார்.

    பொது இடங்களுக்கு தன் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார் என்றும் தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    • பலூன்கள் தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்தன.
    • தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.

    தென் கொரிய தீபகற்ப பகுதியில் சமீப காலமாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனால் தென் கொரியா-வடகொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே சில நாட்களாக வடகொரியா, ராட்சத பலூன்களில் குப்பைகளை நிரப்பி தென் கொரியாவுக்குள் அனுப்பி வருகிறது. இதற்கு தென் கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.


    இந்த நிலையில் குப்பை பலூன்கள் தென் கொரியாவின் அதிபர் அலுவலக வளாகத்தில் விழுந்தன. வட கொரிய பலூன்கள் இன்று காலை எல்லையைத் தாண்டி தலைநகர் சியோலுக்கு வடக்கே பறந்தன.

    அந்த பலூன்கள் தென் கொரியாவின் அதிபர் அலுவலக வளாகத்தில் விழுந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • அமெரிக்காவுடன் இணக்கமாக உள்ளதாகல் தென்கொரியா மீது வடகொரியா கோபத்தில் உள்ளது.
    • இரு நாட்டின் ராணுவ ஒத்திகைக்கு எதிராக ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம்.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.

    தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்துள்ளது. அதிலும் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.

    இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ள தென்கொரியா பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த பலூன்கள் சுமந்து கொண்டு வந்த பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.

    வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெளிவாக தெரிகிறது. மேலும், தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்தள்ளது.

    எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    அந்த பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தற்போது தரையிறங்கியுள்ள பலூன்களால் சேதம் ஏதும் ஏற்பட்டது குறித்து தென்கொரியா தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    • வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது.
    • என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்துச் சிதறியதாக வடகொரியா தெரிவித்துள்ளது.

    பியாங்யாங்:

    தென் கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரியா தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதற்கிடையே, கடந்த நவம்பரில் வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பியது. இதற்கு தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. விரைவில் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்று வடகொரியா அறிவித்தது.

    இந்நிலையில், வடகொரியாவின் 2-வது உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வி அடைந்தது. உளவு செயற்கைக் கோளை ஏற்றிச்சென்ற ராக்கெட் நடுவானில் வெடித்துச் சிதறியது.

    வடகொரியாவின் வடமேற்கு விண்வெளி மையத்தில் இருந்து புதிய ராக்கெட்டில் உளவு செயற்கைக்கோள் ஏவப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக நடுவானில் ராக்கெட் வெடித்ததாக வடகொரியாவின் அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    திரவ ஆக்சிஜன்,பெட்ரோலிய இயந்திரத்தில் வெடிப்பு ஏற்பட்டது முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்ததாக தேசிய விண்வெளி தொழில்நுட்ப நிர்வாகத்தின் துணை இயக்குனர் தெரிவித்தார். இதற்கிடையே வடகொரியா ஏவிய ஏவுகணை கடலில் விழுந்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    • ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
    • இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக.

    உலகில் மர்மமான நாடு என்றால் அது வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். வடகொரியாவின் முக்கியமான வேலை ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி கூட எழுந்தன.

    கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு தகவல் வெளியாகுவது சகஜம்தான். ஆனால் தற்போது வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர், ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிம் ஜாங் உன் தனக்காக இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த பெண் கூறியதாக மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.

    தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

    அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பள்ளிக்கூடத்திற்குக் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள்.

    ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான். அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.

    ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக. இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    இந்த கொடூரமான பரிசோதனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பெண்கள் பியாங்யாங் அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுடைய ஒரே நோக்கம் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்-ஐ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான்.

    இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும்.

    3-வது குரூப் சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும். இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்.

    மிகவும் கவரக்கூடிய வகையிலான கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் குறைந்த ரேங்க் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்பிப்படுத்த ஒதுக்கப்படுவார்கள்.

    இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.

    இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளதாக மிர்ரர் தெரிவித்துள்ளது.

    • கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது.
    • வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சியோல்:

    வடகொரியா- தென்கொரியா நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருவதால் கொரியா தீபகற்ப பகுதியில் எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருந்து வருகிறது. இரு நாட்டு படைகளும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் வடகொரியா ஆத்திரமடைந்துள்ளது.

    இதனால் கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிடிக்ஸ் ஏவுகணை, நீருக்கடியில் அணு ஆயுத சோதனை என பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் வடகொரியா புதிய ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் பியோல்ஜி-1-2 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை நடத்தியது. குறிப்பிட்ட இலக்கை நோக்கி இந்த சோதனை நடத்தப்பட்டது.

    இதனால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் இந்த சோதனை மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி 11 நாட்கள் நடைபெற்றது.
    • இந்த ராணுவ பயிற்சியை தங்களது நாட்டிற்கு எதிரான போர் ஒத்திகை என வடகொரியா பார்க்கிறது.

    தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன. இதை தங்களது நாட்டிற்கு எதிராக போர் தொடுப்பதற்கான ஒத்திகை என வடகொரியா கருதுகிறது.

    இதனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை மிரட்டும் வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது.

    இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

    ஜப்பானை ஒட்டியுள்ள கடற்கரையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருவது அந்த நாட்டிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனையின்போது ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்திற்கும், ஜப்பான் கடல் பகுதிக்கும் இடையில் விழுகின்றன. இது அனைத்தும் ஜப்பான் பொருளாதார மண்டத்திற்கு வெளியில்தான் நடக்கிறது. இதனால் ஜப்பானுக்கு காயமோ, சேதமோ இல்லை என பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்திருந்தார்.

    ஆனால், வடகொரியாவின் தொடர் சோதனை நாட்டின அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு மிரட்டல் என அவர் கூறவில்லை. அதேவேளையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை மீறுவதாக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    இன்று காலை ஏராளமான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததை கண்டறிந்துள்ளோம் என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இது கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு மிரட்டல் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா உதவியுடன் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.

    மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    11 நாட்கள் கொண்ட அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி கடந்த வியாழக்கிழமை முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

    ×