search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 174123"

    • ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்
    • ஊர்வலத்தின் போது பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.

    நாகர்கோவில்:

    விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாவட்ட முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அரை அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.

    வீடுகளிலும், கோவில்களி லும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொரி கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை மாலை இரு வேளை களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்படு கிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வா கம் 10 இடங்களில் அனுமதி வழங்கி யுள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிகொண்டான் தடுப் பணை, குழித்துறை தாமிர பரணி ஆறு, திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, சின்ன விளை, மண்டைக் காடு, வெட்டுமணி, தேங்காய் பட்டிணம் மற்றும் மிடாலம் ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அந்த பகுதிகளில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.

    நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு அதன் பிறகு கடலில் கரைக்கப்படும். இதே போல் மேற்புறத் திலிருந்து கொண்ட செல்லப் படும் விநாயகர் சிலைகள் குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.

    நாளை மறுநாள் 3-ந்தேதி இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை கடலில் கரைக்கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப் பட்டு கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    4-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்குத்துறை கடலில் கரைக் கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆங் காங்கே இருந்து ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.

    சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை களை மூடுவதற்கும் நடவ டிக்கையை எடுக்கப்பட்டுள் ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி களை பயன்படுத்தக்கூடாது. பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி டெம்போக்கள் மற்றும் டிராக்டர்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள் துணிகள் அழகு சாதன பொருட்களை கரைப்பதற்கு முன்னதாக பிரிக்கப்பட வேண்டும்.

    விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது பட்டாசு கள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் சிலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • 1அடி முதல் 10 அடி உயரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
    • விநாயகருக்கு பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி உட்பட பல்வேறு இந்து அமைப்புகள்சார்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டசிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி,விஷ்வ இந்து பரிஷத்,இந்து மக்கள் கட்சி, இந்து முன்னேற்ற கழகம், சிவசேனா என பல்வேறு அமைப்புகள் மற்றும்பொதுமக்கள் சார்பில்,தங்கள் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்யஉள்ளனர்.இதில் முன்னணி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் சிலைகளை இன்றுபிரதிஷ்டை செய்துள்ளனர். வில் ஏந்திய விநாயகர், முருகன், சிவன் உடன் இருக்கும் வகையில், அனுமன் தூக்கிசெல்வது போல், ரத விநாயகர், சிம்ம வாகனம் விநாயகர், யானை வாகனம்,ஆஞ்சநேய விநாயகர்,கருட விநாயகர் என 1அடி முதல் 10 அடிஉயரங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ள விநாயகருக்கு பூஜைகள் நடத்தி தினசரி பொதுமக்களுக்கு அன்னதானமும்வழங்கப்படுகிறது.

    பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளவிநாயகர் சிலைகளை கரைக்கமாவட்டம் முழுவதும் 7இடங்கள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்கவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.நாளை, குன்னத்தூர், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கயம்,குண்டடம் பகுதியில் வைக்கப்படும் விநாயகர்சிலைகள், 2-ந் தேதி, அவிநாசி, தாராபுரம், வெள்ளகோவில்,பல்லடம்,மூலனூர்,உடுமலை,3-ந்தேதி மடத்துக்குளம், திருப்பூர் மாநகரம்ஆகிய நாட்களில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜனம்ஊர்வலம் நடக்கிறது.சிலைகளின்பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறுஅறிவுரைகளை இந்து அமைப்பினருக்குபோலீசார் வழங்கி உள்ளனர். 2 ஆண்டுகளுக்கு பின், விசர்ஜனம்ஊர்வலம் நடப்பதால் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

    • இந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.
    • களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.

    திருப்பூர் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை 31ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇந்து அமைப்பினர் பெரிய அளவிலான சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர்.

    பக்தர்கள் வீடுகளில், களி மண்ணால் செய்த விநாயகர் சிலைகளை வைத்து மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், அவல் பொரி உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து வழிபடுவார்கள். வழிபாட்டுக்கு வைக்கப்படும் மண் சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக எளிதில் கரையும் வகையிலான களிமண் சிலைகளை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.இதையடுத்து களிமண் விநாயகர் சிலைகள் திருப்பூரில் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் சதுர்த்தி வழிபாட்டுக்கு தேவையான பூஜை பொருட்கள் மற்றும் சிலைகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர். இதனால் திருப்பூரில் விநாயகர் சதுர்த்திக்கான வழிபாட்டு பொருட்கள், சிலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,2ஆண்டுகளாக, ஊரடங்கால் விழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந் தாண்டு உற்சாகத்துடன் கொண்டாட தயாராகிவிட்டனர். களிமண் சிலைகள் ரூ. 50 முதல் ரூ. 2000 வரை விற்பனைக்கு உள்ளன.கலர் செய்யப்படாத மண் சிலைகள், இயற்கையான காவி பூசிய சிலைகள், விதை விநாயகர் சிலைகளும் விற்பனைக்கு வந்துள்ளன என்றனர். திருப்பூர் கொங்கு மெயின்ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பலர் கடைகளில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்து வருகிறார்கள். அலகுமலை பகுதியில் தயாரிக்கப்பட்ட பெரிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பூஜைக்கு தேவையான வெற்றிலை, பாக்கு, இலை, பிரசாதம் செய்வதற்கான பொருட்கள் உள்ளிட்டவைகளை வாங்க பொதுமக்கள் பலர் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் குவிந்தனர். இது மட்டுமின்றி பூக்களும் வாங்கி வருகின்றனர். இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. 3 தினங்களுக்கு முன் கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ கிலோ 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை கிலோ 400, அரளி 200, செவ்வந்தி 120, சம்பங்கி 150 ரூபாய்க்கு விற்கிறது. பூ வியாபாரிகள் கூறுகையில், பூ வரத்து அதிகமாகி, சீசன் சூடுபிடித்துள்ள நிலையில், அவ்வப்போது மழை மிரட்டுவதால் பூக்களை வாங்கி இருப்பு வைக்க தயக்கமாக உள்ளது. இருப்பினும் நாளை (31ந் தேதி) விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினம் இணைந்து வருவதால், பூ விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • திருவள்ளுவர் சிலை 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
    • 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை எழுப்பப்பட்டு உள்ளது. இந்த சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த திருவள்ளுவர் சிலையை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று கண்டு களித்து வருகின்றனர்.

    இந்தசிலை கடல் உப்புக்காற்றினால் பாதிப் படையாமல் இருப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். கடந்த 2017 -ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசியாக ரசாயனகலவை பூசப்பட் டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் ரசாயன கலவை பூசஅரசுநடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பணி நடைபெற வில்லை.

    தற்போதுரூ.1கோடி செலவில்திருவள்ளுவர் சிலையில் இந்த ரசாயனக் கலவை பூசும் பணி நடைபெற்றுவருகிறது. இந்தப்பணி நடைபெற உள்ளதை தொடர்ந்து கடந்தஜூன்மாதம் 6-ந்தேதி முதல் வருகிற நவம்பர் மாதம் 2-ந் தேதி வரை 5மாதங்களுக்கு திருவள்ளுவர் சிலையைபார்வையிட சுற்றுலா பயணி களுக்கு அனுமதி இல்லை என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்து உள்ளது.

    இந்தநிலையில் இந்த பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடந்த ஜூன்மாதம் 6-ந்தேதி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக இந்த சிலையை சுற்றிலும் 145 அடி உயரத்துக்கு இரும்பு குழாய்கள் மூலம் சாரம் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக சென்னை மற்றும்தூத்துக்குடியில் இருந்து 80 டன் இரும்பு குழாய்கள் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. இவை படகுகள் மூலம் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள பாறைக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது ரசாயனக் கலவை பூசுவதற்காக சிலை முழுவதும் நல்ல தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சிலையின் ஒவ்வொரு பகுதியில் உள்ள சிமெண்ட் பாய்ண்ட்க ளில் படிந்திருக்கும் கடல் உப்பு தன்மை அகற்றப்பட்டு கடுக்காய், சுண்ணாம்பு, பனை வெல்லம் ஆகியவை கலந்த சிமெண்ட் கலவை பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக சிலையில் ரசாயன கலவை பூசும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பீங்கான் சிலை கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைப்பு
    • சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே நெட்டாங்கோடு என்ற இடத்தில் சில வாலிபர்கள் அய்யன்குளத்தில் நீராட சென்றனர். அப்பகுதியில் நீண்ட நேரம் குளித்தனர். அப்போது திடீரென ஒருவர் காலில் ஏதோ பொருள் இடறி விட்டது அதனை மூழ்கி எடுத்தபோது அது ஒரு பெண் தெய்வம் சிலை என்று தெரிய வந்தது.

    இதனையடுத்து குருந்தன்கோடு கிராம நிர்வாக அலுவலருக்கும், இரணியல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு அவர்கள் விரைந்து வந்து பீங்கான் சிலையினை கைப்பற்றி கல்குளம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அச்சிலை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது
    • 1 அடி முதல் 15 அடி வரை பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து, கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது.

    அவினாசி :

    அவினாசியை அடுத்து காசி கவுண்டன்புதூரில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு வடிவங்களில் தத்ரூபமான வினாயகர் சிலை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிற்பி ஆனந்தகுமார் கூறுகையில்,ஆண்டுதோறும் நடைபெறும் வினாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக கடந்த 15 ஆண்டுகளாக வினாயகர் சிலைகளை வடிவமைத்து வருகிறோம்.

    கடந்த ஒரு மாதமாக எனது தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர்கல் மாவு, பேப்பர் மாவு, கிழங்கு மாவு ஆகிய மூன்று கலவைகள் மூலம் 1 அடிமுதல் 15 அடிவரை கற்பக வினாயகர், தாமரை வினாயகர், யானைமுக வினாயகர், காளிமுகம், சிங்கமுகம், மயில்வாகனம், கருடவாகனம், ராஜ அலங்கார வினாயகர் முகம், உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வினாயகர் சிலை தயாரித்து அதற்கு ஏற்றார்போல் கண்கவர் வண்ணம் தீட்டப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட வினாயகர் சிலைகள் அவினாசி, அன்னூர், கருவலூர், கோபி நம்பியூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி, பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது என்று கூறினார்.

    • பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    பொதுவுடமை வீரர் ஜீவா பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் தில்லை செல்வம், தி.மு.க. மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசிலியான், மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செயலாளர் இசக்கிமுத்து தலைமையிலும் மாலை அணிவிக்கப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்புள்ள ஜீவா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    முன்னாள் அமைச்சர் பச்சைமால் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தரநாத் மற்றும் நிர்வாகிகள் முருகேஸ்வரன், ஜெவின்விசு, ஜெய கோபால், அய்யப்பன், பரமேஸ்வரன், வெங்கடேஷ், ஸ்ரீ மணி கண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூதப்பாண்டியில் உள்ள ஜீவா சிலைக்கும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    • ஏராளமான தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர்.
    • சிலை முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று காலை தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிலை முன்பு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கருணாநிதி சிலை அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, மாவட்ட பொருளாளர்

    எல்.ஜி.அண்ணா, மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இறைவன், ஜித்து, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்தசாமி, செல்வகுமார், கவுதமன், துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, யூனியன் சேர்மன் வைஜெயந்தி மாலா கேசவன், மாநகராட்சி கவுன்சிலர்கள் மேத்தா, உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் கருப்புசாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
    • பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது ஆற்று மணலில் இறங்கி நடந்து சென்ற போது, மணலில் புதைந்த நிலையில் கல் ஒன்று தென்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, சிலை போல தெரிந்துள்ளது. இது குறித்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் வருவாய்துறையினர் மற்றும் போலீசார் அங்கு வந்து, சிலையை முழுமையாக தோண்டி எடுத்தனர். அது ஒரு கை உடைந்த நிலையில் 2.5 அடி உயரம் கொண்ட கருப்புசாமி கற்சிலை என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிலை அப்பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவிலில் பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதி மக்கள் வந்து கருப்புசாமியை வழிபட்டு செல்கின்றனர்.

    • தொழிலாளர்கள் ஏரியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூர்வாரிக் கொண்டிருந்தனர்.
    • சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர்.

    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் உள்ள திருப்பனந்தாள் ஏரி தூர்வாரும் பணி தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தொழிலாளர்கள் ஏரியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூர்வாரிக் கொண்டிருந்தனர். அப்போது சேறு, சகதியுடன் சேர்த்து விளக்கு போன்ற அரிய பொருள் ஒன்றும் மேலே வந்தது.

    தொழிலாளர்கள், அந்த சிலையை எடுத்து சுத்தம் செய்து பார்த்த போது, அது சுமார் ஒன்றரை அடி உயரத்தில், 5 கிலோ எடை கொண்ட பித்தளை குத்து விளக்கு சிலை என்பது தெரிய வந்தது.

    உடனடியாக தொழிலாளர்கள் அதனை வருவாய் ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி சிவகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது, அந்த குத்து விளக்கு சிலை பம்மல், அண்ணா சாலையில் அமைந்துள்ள சூரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது.

    கடந்த 2018-ம் ஆண்டு கொள்ளையர்கள் சூரியம்மன் கோவிலில் சுவர் ஏறிக் குதித்து, இந்த குத்து விளக்கு சிலையை திருடிச் சென்றனர். பின்னர் சிலையின் எடை அதிகமாக இருக்கவே, அதனை கொண்டு செல்ல சிரமப்பட்டு, திருப்பனந்தாள் ஏரியில் வீசிச் சென்றனர்.

    இந்த அரிய குத்து விளக்கு சிலையை தமிழக அரசின் கருவூலத்தில் ஒப்படைக்க வருவாய் துறை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மதுரையில் வெண்கல சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு மு.க அழகிரி கடிதம் எழுதியுள்ளார். #DMK #Karunanidhi #MKAzhagiri
    மதுரை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பின் கட்சியின் தலைவராக மு.க ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். ஸ்டாலினுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்த மு.க அழகிரி, கடந்த 5-ம் தேதி சென்னையில் கருணாநிதி சமாதியை நோக்கி பேரணி ஒன்று நடத்தினார். 

    இந்நிலையில், அடுத்தகட்டமாக மதுரையில் கருணாநிதிக்கு சிலை வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக அனுமதி கேட்டு அவர் மாவட்ட கலெக்டருக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.  'நான் 35 ஆண்டுகளாக வாழுகின்ற மதுரை மாநகரில் மதுரை பால்பண்ணை அருகே உள்ள சந்திப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் வெண்கல சிலை அமைக்க அனுமதி அளிக்க வேண்டுகிறேன்” என அழகிரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    இந்தியாவில் இருந்து 57 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டுப்போன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த வெண்கல புத்தர் சிலையை பிரிட்டன் போலீசார் இந்தியாடம் ஒப்படைத்தனர்.
    லண்டன் :

    வெண்கலத்தால் ஆன 12-ம் நூற்றாண்டை சேர்ந்த 14 புத்தர் சிலைகள் பீகார் மாநிலம் நாளந்தாவில் உள்ள தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த சிலைகள் 1961-ம் ஆண்டு திருட்டுப் போனது.

    இந்த சிலைகளில் ஒரு புத்தர் சிலை மட்டும் பல கைகள் மாறி இறுதியில் லண்டனில் உள்ள கலை மற்றும் பழம்பொருட்கள் கூடத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏலத்துக்கு விடப்பட இருந்தது. இந்த சிலை இந்தியாவில் இருந்து திருடப்பட்டது என்பது அறியாமலேயே அது ஏலத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

    இதற்கிடையே, இங்கிலாந்து கலைப்பொருட்கள் குற்றப்பிரிவு போலீசாரும், இந்தியா பிரைட் புராஜெக்ட் என்னும் அமைப்பைச் சேர்ந்த விஜய் குமார் என்பவரும் இந்த வெண்கல புத்தர் சிலை நாளந்தாவில் இருந்து திருட்டுப்போன அதே புத்தர் சிலைதான் என்பதை கடந்த மார்ச் மாதம்  உறுதி செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, இந்த சிலையை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் இந்த சிலையை லண்டன் நகரின் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் சட்டரீதியாக மீட்டனர்.



    இந்த புத்தர் சிலை லண்டனில் நேற்று நடந்த இந்திய சுதந்திர தினவிழாவின்போது முறைப்படி அங்குள்ள இந்திய தூதரக அதிகாரி ஒய்.கே. சின்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.
    ×